search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    • தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது.

    துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 2 பிரிவில் வருகின்றன.

    இதேபோன்று, உதவியாளா்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன. 2 பிரிவுகளிலும் சோ்த்து மொத்தமாக 2,327 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது.

    குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் நாளை (சனிக்கிழமை) எழுத உள்ள னா். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    தோ்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவ லா்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவா். தோ்வை கண்காணிக்க, துணை கலெக்டர் நிலையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலா் ஒருவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளாா். மொத்தமுள்ள 2,763 தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    தோ்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு நடைபெறும் நாளன்று அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

    தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குள் நாளை காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9 மணி வரை அவா்கள் வருவதற்கு அனுமதி உண்டு. அதற்குப் பிறகு தோ்வு மையத்தில் நுழைய அனு மதியில்லை.

    தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் உள்பட வேறு எந்தவகை சாதனங்களையும் எடுத்துச் செல்லக் கூடாது.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.

    சென்னை:

    வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது.

    இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் நேற்றிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை கணிப்பின் படி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று இன்று மாலைக்குள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை ஒடிசா புரி மற்றும் சத்தீஷ்கர் இடையே கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் புயல் காலை 8 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குயதாகவும், மேலும் 11 மணி அளவில் வடகிழக்கு பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும் வேளையில் புவனேஸ்வர் மற்றும் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாய் மாறி உள்ளது.

    இதனால் மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    • 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம்.
    • வருகிற 29, 30, அக்டோபர் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் முற்றுகை போராட்டம்.

    சென்னை:

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர் மட்டக் குழுக் கூட்டம் 8-ந்தேதி காணொலி வழியே நடைபெற்றது.

    கூட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளருமான (பொறுப்பு) ஈ.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி. ரக்ஷித், வின்சென்ட் பால்ராஜ், மயில், தாஸ், சேகர், தியோடர் ராபின்சன், மன்றம் நா.சண்முகநாதன், வி.எஸ்.முத்துராமசாமி, கோ.காமராஜ், ஜெகநாதன், டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10-ந்தேதி) நடத்த உள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29-ந்தேதி, 30-ந்தேதி, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தொடர் கோட்டை முற்றுகை போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 6-ந்தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தை சுமூக மாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளி யிடபப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர் மட்டக் குழு, டிட்டோஜாக் கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு நாளை (10-ந்தேதி) அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும், வருகிற 29, 30, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    இதுகுறித்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கும்படி கோரிக்கை வைத்தோம்.

    பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைபடுத்துதல் அரசாணை 243-ஐ ரத்து செய்ய கேட்டிருந்தோம்.

    இது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எதுவும் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதால், தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக நாளை காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்" என்றார்.

    • 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
    • நவம்பர் மாதம் 25-ந் தேதி வெளியிட உள்ளதாக தகவல்.

    மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களை இந்தி மொழியில் உத்தரபிரதேச மாநிலம் மொழி பெயர்த்தது.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதேபோல் தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, மருத்துவப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான 5 புத்தகங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் மொழி பெயர்க்கப்பட்டன. இதில் மருத்துவ உடற்செயலியல் உள்ளிட்ட 2 புத்தகங்கள் அதிக பக்கங்களையும், 3 புத்தகங்கள் குறைந்த பக்கங்களையும் கொண்டவையாக இருந்தன.

    அதன்படி, மருத்துவ உடற்செயலியல் புத்தகம் முதலில் வெளியிடும் போது, முதல் தொகுதி மட்டும் வெளியிடப்பட்டது.

    தற்போது அதன் 2-வது தொகுதியையும் சேர்த்து முழு புத்தகமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 36 மருத்துவக்கல்லூரிகள், நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றன.

    இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் மருத்துவப்படிப்புக்கான 700 முதல் 800 பக்கங்களை கொண்ட 'மருத்துவ நுண்ணுயிரியியல்', 'மகப்பேறு மருத்துவம்' ஆகிய 2 புத்தகங்கள், என்ஜினீயரிங் படிப்புக்கான 4 புத்தகங்கள், இதுதவிர அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான ஆங்கில வழி புத்தகங்கள், தமிழ்வழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

    அதேபோல், ஆங்கில இலக்கியங்கள் தமிழிலும், தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    அந்தவகையில் 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் இருப்பதாகவும், வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்த புத்தகங்களை சசிதரூர் எம்.பி. வெளியிட உள்ளதாகவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோன்ற உயர்கல்விச் சார்ந்த 200 பாடப்புத்தகங்களை ஒவ்வொரு ஆண்டும் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொள்கிறது.

    அதன்படி, தற்போது வரை 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்து நவம்பரில் வெளியிட உள்ள நிலையில், மீதமுள்ள புத்தகங்கள் வருகிற ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

    • சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

    வடமேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கோபால்பூரில் (ஒடிசா) இருந்து தெற்கு- தென்மேற்கு திசையில் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    நாளை மறுநாள் முதல் முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 -ந்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

    • 125 ஆண்டுகள் பழமையானது முல்லைப் பெரியாறு அணை.
    • தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

    கோழிக்கோடு:

    கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

    இதுதொடா்பாக கோழிக்கோடில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதரன் பேசியதாவது:

    முல்லைப் பெரியாறு அணை குறித்த தகவல்களை விக்கிபீடியாவில் படித்தேன். அப்போதுதான் அது கேரளத்தில் இருப்பதும் அதிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் வழங்கப்படுவதையும் தெரிந்து கொண்டேன்.

    முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு தவறான புரிதல்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு 120 மீட்டருக்கும் பாதுகாப்பு தூண்களை அமைத்தும் சிறிய வாய்க்கால்களைக் கட்டமைத்து தண்ணீரை சேமிப்பதாலும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அணையை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

    எனவே, அங்கு புதிய அணை கட்டுவதைவிட ஏற்கெனவே உள்ள அணையை முறையாக பராமரிப்பதே போதுமானதாக இருக்கும் என்றாா்.

    முன்னதாக, பாராளுமன்றத்தில் அண்மையில் இந்த விவகாரத்தை எழுப்பிய இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ், முல்லைப் பெரியாறு அணை 'தண்ணீா் வெடிகுண்டு' போல் உள்ளது என்று குறிப்பிட்டாா்.

    அதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த மத்திய இணைய மந்திரி சுரேஷ் கோபி அணை உடைந்தால் யாா் பொறுப்பு? என கேள்வி எழுப்பி இருந்தாா். ஆனால் அணை பாதுகாப்பாக இருப்பதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்திருந்தாா்.

    2021 கேரள பேரவைத் தோ்தலில் பா.ஜ.க. சாா்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் தோல்வி அடைந்து, அரசியலை விட்டே விலகினார்.

    • கோலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார்.
    • உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

    வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறுப் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில், உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 குறித்து விளக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட கோலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • முடா விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டி வருகின்றன.

    முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது முடா விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார். அதற்கு கார்கே கன்னடத்தில் பதில் தெரிவித்தார். அதற்கு இந்தியில் பதில் தெறிக்குமாறு அந்த செய்தியாளர் தெரிவித்தார். இதனை கேட்டதும் கடுப்பான கார்கே, கேள்வியை கன்னடத்தில் கேட்குமாறு காட்டமாக தெரிவித்தார்.

    "கர்நாடகாவுக்கு வரும் போது சிறிதாவது கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் தமிழ்நாட்டிற்குச் சென்று இந்தியில் கேள்வி கேட்க முடியுமா? கர்நாடகாவுக்கு வரும் போது கொஞ்சமாவது கன்னட மொழியை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டு கார்கே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

    மல்லிகார்ஜுன கார்கே பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இந்தியாவில் குரங்கம்மை நோய் இல்லை.
    • குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சைதாப்பேட்டை மருத்துவமனை, கொளத்தூர் புறநகர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளை மேம்படுத்தி தந்து கொண்டிருக்கிறார்.

    வருகிற ஜனவரி மாதம் பணிகள் நிறைவடைந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறக்க உள்ளார்.

    இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பயன்பாட்டில் உள்ளது .

    கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனையில் இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 864 புறநோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

    உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டு உள்ளது மத்திய மந்திரி நட்டா இந்தியாவில் குரங்கம்மை நோய் இல்லை என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை.

    தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஆடைகள் தவிர்த்து தெரிகிற உடல் பகுதியில் முகம் போன்ற பகுதியில் குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள். யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள்.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் செய்த சாதனையே தெரிந்து வைத்திருக்கவில்லை. அம்மா கிளினிக் இருந்தது. அம்மா மருந்தகம் என்று இல்லை. அம்மா உப்பு கடை என்று வைத்திருந்தார்கள்.

    ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது, அம்மா மருந்தகம் என்று எந்த காலத்திலும் வைக்க வில்லை, ஜெயக்குமார் எந்த நினைப்பில் சொல்கிறார் என்று தெரியவில்லை.

    அம்மா கிளினிக் இருந்தது, ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ஆதாரத்தோடு ஒரு வருடத்திற்கு உண்டான அரசாணை பெற்று ஒரே ஒரு மருத்துவர் நியமனம் பெற்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக மருத்துவமனைகளை வைத்தார்கள்.

    அம்மா கிளினிக், பெரிய கட்டமைப்போடு விளங்கி யது போலவும், நூற்றுக் கணக்கான மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் வேலை செய்தது போலவும், அம்மா கிளினிக் மூடி விட்டதால் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிதைந்ததைப் போல எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    அம்மா கிளினிக்கும், அம்மா மருந்தகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் காலத்தில் வந்தது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறார்.

    தைப்பொங்கல் அன்று ஆயிரம் இடங்களில் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும், இந்த திட்டத்திற்கும் அம்மா மருந்தகம் என்ற பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் ஜெயலலிதா அம்மையார் திறந்து வைத்து கல்வெட்டு வைத்துக் கொண்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
    • பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

    தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) வரை தமிழ்நாட்டில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை (ஆகஸ்ட் 15) நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு காரணமாக ரெயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.
    • வந்தே பாரத் ரெயில் அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன.

    சென்னை:

    சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்களாகிவிட்டது.

    இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்குவதாக இருந்தது.

    பிரதமா் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் தமிழகத்துக்கு 2 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    ஆனால், மேற்கு வங்காளத்தில் ஜூன் 17-ந்தேதி நிகழ்ந்த மோசமான ரெயில் விபத்து மற்றும் சென்னை, தாம்பரம், மதுரையில் ரெயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த 2 ரெயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.

    மேலும் நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கான வழித்தடம் கண்டறியப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இந்த புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் ரெயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இது குறித்து ஐ.சி.எப். அதிகாரி ஒருவா் கூறியதாவது:-

    சென்னை பெரம்பூா் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தற்போது வரை 70 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 51 ரெயில்கள் இயக்கத்திலும், 9 ரெயில்கள் அவசர தேவைக்காகவும் உள்ளன. மேலும், 10 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்குத் தயாா் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவா் கூறினார்.

    இந்த நிலையில் சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவைகள் அடுத்த (செப்டம்பா்) மாதம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன. ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.

    தற்போது ராமேசுவரம் புதிய பாம்பன் பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் திறப்பு விழாவை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளதால், இதனுடன் சோ்த்து புதிய வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விரைவில் இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியாகும்' என்றனர்.

    ×