search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • திருப்பரங்குன்றம் கோவில் நிலத்தில் ஏர் பூட்டி உழவு செய்த விவசாயிகள்.
    • இந்த ஆண்டுக்கான விவ சாய கூலியை நிர்ணயம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரம ணிய சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப் பட்டது.

    மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சித்திரை திருநாளான இன்று திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி இன்று விவசாயம் செழிக்க வேண்டி தார் குச்சியில் பூச்சூடி திருப்பரங் குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலத்தில் உழுது சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கிரிவலமாக வந்து மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குகை கோயில் பகுதியில் விவசாயி கள் அனைவரும் அமர்ந்து இந்த ஆண்டுக்கான விவ சாய கூலியை நிர்ணயம் செய்தனர்.

    தங்களது பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினை களை பேசி தீர்த்தனர். தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கிரிவலம் சுற்றி கோவில் வாசலில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    • பல்லடம்,பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது.
    • 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார்.

    பல்லடம் :

    பல்லடம்,பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த கார்த்திகை மாதத்தில் விதைக்கப்பட்ட தக்கா ளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் தக்காளிகளை விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து வருகின்றனர்.

    இதற்கிடையே பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்புச்சிபா ளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்ற விவசாயி இவரது தோட்டத்தில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- பரம்பரை பரம்பரையாக விவசாயம்செய்து வருகிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால் தக்காளி பயிர் சாகுபடி செய்தோம்.கார்த்திகை பட்டத்தில்விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது.இந்த நிலையில்வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தக்காளி வருகையால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். தக்காளி பயிரிட உழுவதற்கு ரூ.13 ஆயிரமும், நாற்றுக்கு ரூ.26 ஆயிரமும், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரமும், மருந்து மற்றும் உரத்திற்கு ரூ.40 ஆயிரமும் செலவாகிறது. தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 3 ரூபாயும் செலவு ஆகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    இதனால் தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் போனது. தக்காளி ஒரு கிலோ ரூ.22க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

    • பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள உலக்குடியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 49). சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்தது.

    உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூமிநாதனின் மனைவி ஆறுமுகம் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • முருங்கை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக நடக்கிறது
    • ஒரு கிலோ முருங்கை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவாயம் பஞ்சாயத்து கிராமங்களான இரும்பூதிப்பட்டி, கந்தன்குடி, சிவாயம், வேப்பங்குடி, தேசியமங்கலம் ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக முருங்கை சாகுபடி செய்துள்ளனர். இந்த செடிகளுக்கு கிணற்று பாசன முறையில் நீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது முருங்கை செடிகள் வளர்ந்து, காய்கள் பிடித்து வருகிறது. முதிர்ந்த முருங்கைக்காய்களை பறித்து உள்ளூர் வார சந்தைகளில் விவசாயிகள் விற்று வருகின்றனர். தற்போது முருங்கைக்காய் சீசன் துவக்கம் காரணமாக விற்பனை சீராக நடக்கிறது. ஒரு கிலோ முருங்கை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • கிராமம் வாரியாக விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
    • விவசாயிகள் குறித்த விபரங்கள், வங்கி கணக்கு, நில விபரம் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது.

    குடிமங்கலம் :

    மத்திய, மாநில அரசுகளின் திட்ட பயன்களை பெற கிரென்ஸ் திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டார விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேளாண் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கும், அனைத்து திட்டங்களும், அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணைய தளம் துவக்கி, கிராமம் வாரியாக விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் விவசாயிகளின் தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது :- அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்ட பயன்களும் கிடைக்கும் வகையில் கிரென்ஸ் (Grower online Registration of Agricultural Input System) என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை விபரம், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விபரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அலுவலர்களால் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதை சான்றுத்துறை, சர்க்கரை துறை உள்ளிட்ட அரசு துறைகளின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும், நேரடியாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் சென்றடையும் வகையில் புதிய இணைய தளமான கிரென்ஸ் துவக்கப்பட்டுள்ளது.

    இந்த இணைய தளத்தில் விவசாயிகள் குறித்த விபரங்கள், வங்கி கணக்கு, நில விபரம் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிட்டா, போட்டோ, ஸ்மார்ட் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன், வி.ஏ.ஓ., மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.வரும் நிதி ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு எளிதாக சென்றடையும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அரசு உதவிகளை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வங்கி கணக்கு எண் மற்றும் நில பட்டா விபரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மூலம் 1.4.23 முதல் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான வேளாண் அடுக்ககம் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயி கள் விபரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல், நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விபரம் - இனங்கள் குறித்து அறிந்துகொள்ள இயலும்.

    இதில் முக்கியமாக நில விபரங்களுடன் இணை க்கப் பட்ட விவசாயிகள் விபரம் அறிந்திட உருவாக்கப் பட்டுள்ள GRAINS வலை தளத்தில் பேரிடர் மேலா ண்மை துறை, வருவாய் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகள் இணைக்கப் பட்டுள்ளதால் அரசு திட்டங்களின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்.

    மேலும் இது ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயி கள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பயன் பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

    விவசாயிகள் தாங்களே நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் அரசு திட்டங்கள் மூலம் பயன்பெறலாம். விவசாயிகள் தாங்கள் இது வரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம். திட்டங்களின் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும்.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் GRAINS வலைதளத்தில் தங்களது ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் மற்றும் நில பட்டா விபரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது விபரங்களை தங்களது கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் மூலம் வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிணறு தோண்ட லஞ்சம் கேட்டதால் விவசாயி ஆத்திரமடைந்தார்.
    • இதனால் அவர் ரூ.2 லட்சம் பணத்தை அரசு அலுவலகம் முன் வீசி எறிந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் பணத்தை மாலையாகக் கட்டி தனது கழுத்தில் அணிந்து கொண்டு அரசு அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து கோஷமிட்டபடி தன்னிடம் இருந்த பணத்தை அந்த அலுவலக வளாகத்தின் முன்பு அவர் வீசி எறிந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது
    • விவசாயிகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

     உடுமலை :

    மழை இன்றி வறண்ட வானிலை காணப்படுவதால் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் ஓலைகள் கருகி மரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க முடியாமல் காய் உற்பத்தி திறன் குறைந்து வருகிறது. அரசு பரிந்துரைக்கும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வெள்ளை ஈ தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தென்னை வருமானம் குறைவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சிலர் கூறியதாவது :- நாட்டு ரக தென்னையை அவ்வளவாக நோய் பாதிப்பதில்லை. உயர்ரக தென்னையை அதிக அளவில் வெள்ளை ஈ தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிலர் உயர் ரக தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு நாட்டு ரகங்களை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அரசு உயர் ரகதென்னையை பயிரிட்டால் அதிக காய் உற்பத்தி கிடைக்கும் என்று பேராசையை தூண்டி விவசாயிகளை படுகுழியில் தள்ளி விட்டது. நோய் பாதித்த பின் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் உள்ளது. நோய் தாக்கிய மரங்களை வெட்டி விட்டு மறு நடவு செய்து வருமானம் பார்க்கும் வரை ஒரு மரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும். புதிய ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் முன் அரசு பல ஆண்டுகள் சோதனை செய்து வெற்றி அடைந்தால் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • 10 ஆயிரம் கிலோ பட்டுக்கூடு உற்பத்தியாகிறது.

    உடுமலை :

    தமிழகத்தில் 22 ஆயிரத்து 269 விவசாயிகள், பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து கூடு உற்பத்தி செய்து வருகின்றனர். பட்டுப்புழுவிற்கு உணவான மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் தினமும் சராசரியாக 10 ஆயிரம் கிலோ பட்டுக்கூடு உற்பத்தியாகிறது. பட்டு வளர்ச்சித்துறையால் அமைக்கப்பட்டுள்ள தர்மபுரி, ஓசூர், கோவை, சேலம், தேனி, வாணி யம்பாடி, உடுமலை, ராசிபுரம், ஸ்ரீ வில்லிபுத்தூர், சிவகங்கை ஆகிய அங்கா டிகள் மற்றும் கர்நாடக மாநில மார்க்கெ ட்களில் விவசாயிகள் விற்று வருகின்றனர்.கடந்த மாதம் ஒரு கிலோ பட்டுக்கூடு 850 ரூபாய் வரை விற்று வந்த நிலையில் தற்போது கிலோவுக்கு 300 ரூபாய் வரை குறைந்து சராசரியாக ரூ. 450 முதல் 540 வரை மட்டுமே விற்பதால் விவசாயிகள் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் செல்வராஜ் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், உற்பத்தி பாதித்துள்ள நிலையில் பட்டுக்கூடுகளுக்கான விலையும் சரிந்துள்ளது.கர்நாடகமாநிலத்தில் தமிழகத்தை விட 100 ரூபாய் வரை கூடுதல் விலைஉள்ளதோடு, அங்குள்ளஅரசு கிலோவுக்கு ரூ.50 ஊக்க த்தொகையும் வழங்குகிறது. தமிழகத்தில் வியாபாரிகள், நூல் உற்பத்தி நிலையங்கள் சிண்டிகேட் காரணமாக விலை குறைக்கப்ப ட்டுள்ளது. விலை குறைவை தடுக்க அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கடந்த 26-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக அதே பகுதியில் உள்ள பள்ளக்காட்டு தோட்டத்தில், விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், வடக்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 57), விவசாயி. இவர் கடந்த 26-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக அதே பகுதியில் உள்ள பள்ளக்காட்டு தோட்டத்தில், விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் வனப்பகுதி மற்றும் அந்தியூர் வன சரகத்துக்குட்பட்ட பர்கூர் வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது 103 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு வருகிறது. இதையொட்டி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படி வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையொட்டி யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க ஒரு சில பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களையொட்டி மின் வேலிகள் அமைத்துள்ளனர். அந்த மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது.

    ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 58). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த விவசாய தோட்டத்தில் யானைகள் வராமல் இருக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த ஒரு யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பலியானது. இதையடுத்து அவர் இறந்த யானையை வனத்துறையினருக்கு தெரியாமல் அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைத்து விட்டார்.

    இந்த நிலையில் பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பர்கூர் வன சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் அவர் மின்சாரம் தாக்கி பலியான யானையை புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து பணியாளர்கள் மூலம் வனத்துறையினர் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டினர். அப்போது அங்கு யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து யானையின் உடல் பாகங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

    இதையடுத்து வனத்துறையினர் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்று புதைத்தாக கூறி சடையப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி மாவட்ட கிளையில் அடைத்தனர்.

    • மாடு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • பாம்பு அவருடைய வலது கால் பெருவிரலை கடித்து விட்டது.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி அடுத்த இச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மனோகரன். மாடு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய தோட்டத்தில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் பால் கறக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பதுங்கி இருந்த பாம்பு அவருடைய வலது கால் பெருவிரலை கடித்து விட்டது. இதனை யடுத்து அவரை மீட்டு அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் பவானியில் உள்ள தனியார் மருத்துவ மனையில்முதலுதவி சிகிச்சைஅளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×