search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • உளுந்தூர்பேட்டை அருகே மாடு திருடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள ஆசனூரை சேர்ந்தவர் விஜய். விவசாயி. இவருக்கு சொந்தமாக மாடுகள் உள்ளது.அதனை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார். அதன்படி பசுமாடு ஒன்றை கட்டி வைத்து இருந்தார். அதனை அதெ பகுதியை சேர்ந்த பூமாலை (72), மடப்பட்டு நாகவள்ளி (47) செம்பானந்தல் அல்லி முத்து (57) ஆகியோர் திருடி சென்றனர்.இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து எைடக்கல் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் உளுந்தூர் பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • விவசாய சாகு படிக்கு வடகிழக்கு மற்றும் தென்மே ற்கு பருவமழைகள் ஆதார மாக உள்ளன.
    • சோளம் மற்றும் சில பகுதிகளில் கம்பு விதைக்கின்றனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்க ளுக்குட்பட்ட பகுதியில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் விவ சாயிகள் பயிர்கள், காய்கறி கள் சாகுபடி மேற்கொள்கி ன்ற னர்.உடுமலை சுற்றுப்ப குதிகளில் விவசாய சாகு படிக்கு வடகிழக்கு மற்றும் தென்மே ற்கு பருவமழைகள் ஆதார மாக உள்ளன. இந்த இரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாக மக்காச்சோ ளம், சோளம், தட்டைப்பயறு, கொத்த மல்லி, கொண்டை க்கடலை உள்ளிட்ட சாகு படிகள் மேற்கொள்ளப்படு கிறது. குறிப்பிட்ட சில பகுதி களில் கோடை கால மானா வாரி சாகுபடியும் மேற்கொ ள்கின்றனர். குறிப்பாக தீவன தேவை க்காக சோளம் மற்றும் சில பகுதிகளில் கம்பு விதைக்கி ன்றனர்.அவ்வகையில் சோளம் விதைப்பு செய்து ள்ள விவசாயிகள் கோடை மழை கைகொடுக்கும் என்ற எதிர்பா ர்ப்பில் உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- வடகிழக்கு பருவ மழைக்குப்பிறகு கோடை உழவு செய்து மழை நீரை சேகரிப்பது வழக்கம். அதே போல் மானாவாரி விதைப்பும் மேற்கொள்ள ப்படுகிறது.

    கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.உடுமலை பகுதியில் விரை வில் இம்மழை பெய்து மானா வாரி சாகுபடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.

    தற்போது மழை இல்லாத தால் வறட்சி நிலவி வருகிறது. பருவமழை அதிக அளவில் தொடர்ந்து பெய்ய வேண்டும் என உடுமலை பகுதி விவ சாயிகள் எதிர்பார்க்கின்ற னர்.

    • விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கூறினார்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 70 சதவீத நெற்பயிர்கள் வடகிழக்கு பருவ மழையையே நம்பி சாகுபடி செய்யப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.

    2022-ம் ஆண்டில் வட கிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால் ஏறத்தாழ 1 லட்சம் ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையின்றி கருகி வீணாகி உள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டுக்கடன் வசதிகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா கூறியதாவது:- திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதோடு கொள்முதல் செய்யப்படும் விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    வேளாண் விளைப்பொருட்கள் விலை வீழ்ச்சியடையும் போது விளைபொருட்களை குறைந்த வாடகையில் 6 மாதம் வரை பாதுகாப்பாக இருப்பு வைத்து விலை உயரும் போது விற்பனை செய்யும் வகையில் கிடங்கு வசதியும் உள்ளது.கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக 9 சதவீத வட்டியில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • லோகநாதனிடம் முனிராஜ் பணம் இருந்தால் கொடுங்கள் அந்த பணத்தை இருமடங்காக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு 2 பேரை கைது செய்தனர்.

    ராயக்கோட்டை:

    கோவை மாவட்டம், சவுரிபாளையம் வி.ஒ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது56). விவசாயி.

    இவருடைய நண்பர் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மல்லூப்பட்டி பகுதியை சேர்ந்த முனிராஜ் இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் லோகநாதனிடம் முனிராஜ் பணம் இருந்தால் கொடுங்கள் அந்த பணத்தை இருமடங்காக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதனை நம்பி கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் அருகே முனிராஜ் நண்பர்களுடன் காரில் வந்து பணத்தை வாங்கியுள்ளார்.

    இந்நிலையில் பணத்தை வாங்கிகொண்டு இது நாள்வரையிலும் எவ்வித பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதை அடுத்து பணத்தை லோகநாதன் திருப்பி கேட்டுள்ளார்.

    அதற்கு முனிராஜ் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ராயக்கோட்டை போலீசில் லோகநாதன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து முனிராஜ் நண்பர்களான பாலக்கோட்டை சேர்ந்த சக்திவேல் (26), ஜக்கசமுத்திரம் தமிழரசன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது.
    • அசோலா தீவன வளர்ப்பு முறையை விவசாயிகள் எளிதில் மேற்கொள்ள முடியும்.

    மங்கலம் :

    தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை பல்லடம் வட்டாரம் சார்பில் மாநில விரிவாக்கத்திட்டங்களின் உறுதுணை சீரமைப்புதிட்டம் மற்றும் மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா ) 2022-2023 திட்டத்தின் கீழ் சாமளாபுரம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் விவசாயிகளு க்கு அசோலா வளர்ப்பு முறை, உலர் தீவனம் தயாரிக்கும் முறை, பசுந்தீவன தயாரிப்பு முறைகள் குறித்து விவசாயி களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய பேராசிரியர் மதிவாணன் அசோலா வளர்ப்பு, கால்நடைக ளுக்கான பசுந்தீவன வளர்ப்பு குறித்து பேசுகையில், அசோலா தீவன வளர்ப்பு முறையை விவசாயிகள் எளிதில் மேற்கொள்ள முடியும் எனவும், அசோலா விதைகள் தேவைப்படுவோர் திருப்பூர் பழைய பஸ்நிலையத்திற்கு எதிரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை அணுகி பெற்றுக்கொள்ள லாம் என பேசினார்.

    மேலும் அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அக்ரிமனோகர், உதவி தொழில் நுட்ப மேலாளர் பாலாஜி, வேளாண் அலுவலர் அஜீத், உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார், சாமளாபுரம் பகுதியை சேர்ந்த அருணாசலம், சந்திரசேகர மூர்த்தி மற்றும் சாமளாபுரம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது.
    • கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    உடுமலை :

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து வறட்சிப்பகுதிகளை பசுமையாக்கும் வகையிலும், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.,) செயல்படுத்தப்பட்டது.

    கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது. திட்ட தொகுப்பு அணைகளான சோலையாறு, தூணக்கடவு, பெருவாரிபள்ளம், பரம்பிக்குளம், மேல்ஆழியாறு, ஆழியாறு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணைகள் வழியாகவும் மின் உற்பத்தி செய்து மலைப்பகுதியில் 49 கி.மீ.,தூரம் சுரங்கத்துடன் கூடிய சமமட்ட கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆசிய அளவில் சிறந்த பொறியியல் தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இப்பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் இரு ஆண்டுக்கு ஒரு முறை ஆறு மாதம் நீர் வினியோகிக்கப்படுகிறது.கேரள அரசு, இடைமலையாறு அணை கட்டியதும் தமிழக அரசு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணைகளை கட்டும் வகையில் ஒப்பந்தம் உள்ளது. ஆனால் கேரள அரசு 1997ல் இடைமலையாறு அணை கட்டிய நிலையில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டப்படாமல் இழுபறியாகி வருகிறது. நல்லாறு அணை கட்டினால் தற்போது மலைப்பகுதிகளில் 100 கி.மீ., தூரம் பயணம் செய்து, திருமூர்த்தி அணைக்கு வரும் நீர் 20 கி.மீ., தூர பயணத்தில் எளிதில் வந்தடையும். கூடுதலாக 7.5 டி.எம்.சி., நீரும் கிடைக்கும். அதே போல் ஆனைமலையாறு அணை கட்டினால் மழை காலத்தில் வீணாகி கடலை நோக்கி செல்லும் 2.5 டி.எம்.சி., நீர் சேமிக்கப்படும். மின் உற்பத்தி திட்டங்களும் செயல்படுத்த முடியும்.

    பி.ஏ.பி., திட்டம் தொடங்கப்பட்ட போது ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவாக இருந்த பாசன பரப்பு 3.77 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்ட நிலையில் பாசன நீர் அளவை அதிகரிக்க நிலுவையிலுள்ள இரு அணைகளுடன் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பாசன நிலங்களில் முறையான பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் சிறப்பான இத்திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலின் போது இத்திட்டம் குறித்து வாக்குறுதி மட்டுமே இடம் பெறுகிறது. இரு அணைகளையும் கட்ட வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை, அணைகள் கட்ட விரிவான ஆய்வறிக்கை தயாரிக்க தொழில் நுட்ப கமிட்டி என கடந்த 35 ஆண்டுகளாக திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த தேர்தலிலும் இரு அணைகளும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ள நிலையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் பேச்சு வார்த்தை என்று இல்லாமல் இரு மாநில முதல்வர்கள் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இத்திட்டத்தில் நிலுவையி லுள்ள அணைகளை கட்டி முழுமையான பாசனம் மற்றும் பயிர் சாகுபடி திட்டமாக பி.ஏ.பி., திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கேரளா அரசு இடைமலையாறு அணை கட்டியதும், ஆனைமலை யாறு, நல்லாறு அணைகள் தமிழகம் கட்டிக்கொள்ள ஒப்பந்தம் உள்ளது. கேரள அரசு, அணை கட்டி 30 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தி வரும் நிலையில், ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளது. ஆனால் திட்ட ஒப்பந்தம் அடிப்படையில் தமிழக பகுதியில் கட்ட வேண்டிய இரு அணைகளும் கட்டவில்லை.விவசாயிகள் போராட்டம் நடத்தினால், தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை, தொழில் நுட்ப கமிட்டி ஆய்வு என இழுத்தடித்து வருகின்றனர்.

    இரு மாவட்டத்திலுள்ள பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மாநில முதல்வர்களும் நேரடியாக பேசி தீர்வு காண்பதோடு நடப்பாண்டு பட்ஜெட்டில் இரு அணைகளும் கட்டுவதற்கான ஆய்வு மற்றும் திட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • பட்டு புழுவிற்கு உணவான மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • 22,269 விவசாயிகள் பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து, கூடு உற்பத்தி செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    தமிழகத்தில் பட்டு கூடு உற்பத்தி வளர்ச்சியடைந்து வரும் தொழிலாக உள்ளது. இங்கு 22 ஆயிரத்து 269 விவசாயிகள் பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து, கூடு உற்பத்தி செய்து வருகின்றனர்.பட்டு புழுவிற்கு உணவான மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உடுமலை, பொள்ளாச்சி, பழநி, பல்லடம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது.

    தமிழகத்தில் தினமும் சராசரியாக 10 ஆயிரம் கிலோ பட்டுக்கூடு உற்பத்தி யாகிறது. மாநில பட்டு வளர்ச்சித்து றை சார்பில் அமைக்க ப்பட்டுள்ள, 8 விற்பனை கூடங்கள் மற்றும் கர்நாடக மாநில மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்று வருகின்றனர்.

    கடந்த பிப்ரவரி ஒரு கிலோ பட்டுக்கூடு 700 முதல், 800 ரூபாய் வரை விற்றது. வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக திடீரென குறைந்த பட்டு நூல் விலையால், பட்டுக்கூ டுகளின் விலையும் கடும் சரிவை சந்தித்தது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவ சாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ் கூறிய தாவது:- பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல், நிலையில்லாத விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.தமிழகத்திலுள்ள பட்டுக்கூடு அங்காடிகளில் உரிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் கர்நாடக மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் சூழல் உள்ளது.கர்நாடக மாநிலத்தில் பட்டுக்கூடு, பட்டுநூல் உற்பத்தி பிரதானமாக உள்ள நிலையில் அம்மாநில அரசு, விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 50 ஊக்கத்தொகை வழங்கு கிறது.ஆனால் தமிழக மார்க்கெட்களில் பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஒரு கிலோவுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை குறைவாகவே கிடைத்து வருகிறது.

    இதனால் இங்குள்ள விவசாயிகள் 60 சதவீதம் பேர், கர்நாடக மார்க்கெ ட்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் தமிழக அரசு க்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதோடு விவ சாயிகளும் பல கி.மீ.,தூரம் கடந்து வேறு மாநிலத்திற்கு பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு செல்லும் அவலம் நீடிக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மார்க்கெட்டிலும், அதனை தொடர்ந்து தமிழகத்திலும், பட்டு நூல்விலை திடீரென குறைந்தது, பட்டுக்கூடு விலை கடுமையான சரிவை சந்தித்தது. கிலோ ரூ. 400-450 ஆக குறைந்தது.

    உடனடியாக கர்நாடக மாநில விவசாயிகளிடம், அம்மாநில அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கர்நாடக மாநில கச்சா பட்டு விற்பனை கமிட்டி வாயிலாக கச்சா பட்டு நூல் கொள்முதல் செய்யப்பட்டது.ஒரு சில நாட்களில் அம்மாநிலத்தில் பட்டுக்கூடு விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில், பட்டுக்கூடு விலை உயரவில்லை.

    தற்போதைய நிலவரப்ப டி, சராசரியாக ஒரு கிலோ, கோவை மார்க்கெட்டில் ரூ.469, உடுமலை ரூ.543, தேனி, ரூ.560 என்ற அளவிலேயே விலை காணப்பட்டது.

    இளம் புழு, இடு பொருள், மல்பெரி உரம், ஒரு மாதம் வளர்ப்பு மனை பராமரிப்பு, கூலி என உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் விலை சரிவால் பட்டு க்கூடு உற்பத்தி விவசாயி கள் கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளனர்.எனவே கர்நாடக அரசை, தமிழக அரசும் பின்பற்றி பட்டு க்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்கவும், ஊக்க த்தொகை வழங்கவும், வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக, பட்டு நூல் விலை சரிவை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி கரும்பு டன்னுக்கு ரூ.4000, நெல் டன்னுக்கு ரூ. 2,500 குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
    • விளை பொருட்களில் 40 சதவீதம் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.

     பல்லடம் :

    வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்புகள் மட்டுமே உள்ளன எனகட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    வேளாண்மை பட்ஜெட்,அறிவிப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பலனடைய கூடிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. உதாரணமாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி கரும்பு டன்னுக்கு ரூ.4000, நெல் டன்னுக்கு ரூ. 2,500 குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசின் ரூ.2821 தொகையுடன் கூடுதலாக ரூ.195 வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளனர்.

    விவசாயிகள் கரும்புக்கு ரூ.4000 கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையை பெற்றுத்தர என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறவில்லை. மேலும் நெல் கொள்முதல் அளவை அதிகரிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களில் 40 சதவீதம் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ளவை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்கப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மேலும் நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாமால், திறந்த வெளியில் வைக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதைத் தடுக்கவும் வழிமுறைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.மொத்தத்தில் இந்த வேளாண்மை பட்ஜெட் அறிவிப்பு அலங்காரமாக தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்,தேர்தல் அறிக்கை போல பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.14 ஆயிரம் கோடி பயிர்கடன், ரூ.1,500 கோடி வட்டிக்கடன், 77 லட்சம் பனங்கன்றுகள் 15 லட்சம் தென்னங்கன்றுகள், தரிசு நில மேம்பாட்டு, சிறுதானிய இயக்கம், ராமநாதபுரத்தில் மிளகாய் மண்டலம் கோவையில் கறிவேப்பிலை மண்டலம் என பல்வேறு அறிவிப்புகள் உள்ளது.ஆனால் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த கரும்பு டன்னுக்கு ரூ.4000, நெல் ரூ. 2,500, உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் வராதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு, கரும்பாலைகள் தரவேண்டிய ரூ. ஆயிரம் கோடிக்கும் மேலான நிலுவைத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தக்காளி, வெங்காயம் உற்பத்திக்கு 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தக்காளியும், வெங்காயமும், விளைவித்த விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் ரோட்டில் கொட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் தக்காளியை மதிப்பு கூட்டி ஜாம், உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க எந்த திட்டமும் இல்லை. அதே போல, குளிர் பதன கிடங்குகள் அமைப்பது குறித்தும் தகவல் இல்லை. உழவர் நலத்துறை என பெயர் மட்டும் வைத்துள்ளார்கள். ஆனால் உழவர்களுக்கு, விவசாய விளை பொருட்களுக்கு காப்பீட்டு திட்டங்கள் போன்ற அறிவிப்புகள் இல்லை. ஆக மொத்தத்தில் இந்த வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோஷங்கள் எழுப்பி போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
    • பசுமாட்டுப்பால் ரூ.30-க்கும், எருமைப்பால் ரூ.45க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருப்பது கால்நடை வளர்ப்பு, அவ்வகையில் விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை மட்டுமே. எனவே,விவசாயிகளின் நலன் கருதி அரசு பசுமாட்டுப்பால் லிட்டர் ரூ 60க்கும் எருமைப்பால் ரூ 75க்கும் கொள்முதல் செய்ய கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் வீரபாண்டி யில் உள்ள ஆவின் நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் பால் காய்ச்சும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு நடுரோட்டில் பால் காய்ச்சி தங்களது கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்ட த்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆர்ப்பாட்ட த்தின்போது கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது :- தமிழ்நாட்டில் விவசாயம் போதுமான அளவில் வருமானத்தை தராததால் விவசாயிகள் கால்நடைக ளை வளர்த்து அதன் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கால்நடை தீவனங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளன. இதற்கிடை யே தற்போது ஆவின் கூட்டுறவு சங்கத்தில் பசுமாட்டுப்பால் ரூ.30-க்கும், எருமைப்பால் ரூ.45க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் வாங்கும் பாலுக்கு விலையை உயர்த்திய ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. தனியார் பால் உற்பத்தியாளர்களுடன் ஆவின் நிர்வாகம் கூட்டு சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. ஆவின் நிர்வாகம் தனியார் மயமாக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. எனவே ஆவின் பால் கொள்முதல் விலையை, பசு மாட்டு பால் லிட்டர் ரூ.60க்கும், எருமைப்பால், ரூ.75க்கும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

    • விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை நரியம்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 53), விவசாயி. இதே பகுதியில் கணேஷ்குமார் (31) என்பவரும் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நரியம்பட்டி கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் வரி வசூல் செய்யப்பட்டது. அப்போது பணம் விவகாரம் தொடர்பாக சுகுமாறன்- கணேஷ்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சுகுமாறன் நரியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார் அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து கணேஷ்குமார் கல்லால் சுகுமாறனை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    இதுதொடர்பாக சுகுமாறன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.

    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி ஆறாகுளம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 55) விவசாயி. நேற்று இவர் பல்லடம் மாணிக்காபுரம் பகுதியில் உள்ள உறவினரை பார்க்க ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.ஸ்கூட்டர் பல்லடம்- மாணிக்காபுரம் ரோடு அம்மாபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவி தமாக இவர் மீது மோதியது.இதில், பலத்த காயமடை ந்தவரை அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளனர்.

    ×