search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • துறை ரீதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது.
    • சோதனை ஓட்டத்தின் போது வரப்பாளையம் பகுதியில் 5-வது நீரேற்ற நிலையத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.

    திருப்பூர் :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் 60 ஆண்டு கடந்த கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நிறைவு பெற்று தற்போது துறை ரீதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது.திறந்துவிடப்படும் தண்ணீர் பாப்பாங்குளம், குன்னத்தூர், வரையபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் வழிந்தோடுகிறது. இதனால் விவசாயிகள், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் மற்றும் அத்திக்கடவு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சோதனை ஓட்டத்தின் போது வரப்பாளையம் பகுதியில் 5-வது நீரேற்ற நிலையத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் செங்கோட்டையன் பார்வையிட்டார். நீர் வளத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் சோதனை ஓட்ட செயல்பாடு குறித்து விளக்கினர்.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) செயல்படுத்தப்படுகிறது.
    • விளை பொருளுக்குரிய தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டு கடன் திட்டங்களை பயன்படுத்தி பயன்பெறலாம் என திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதுடன், கொள்முதல் செய்த விளை பொருளுக்குரிய தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    வேளாண் விளைபொருட்களுக்கு விலை வீழ்ச்சியடையும் போது விளை பொருட்களை குறைந்த வாடகையில் 6 மாதம் வரை இருப்பு வைக்கும் வசதியும் உள்ளது. விலை உயரும் போது விற்பனை செய்யும் வகையிலான கிடங்கு வசதியும் உள்ளது. கிடங்குகளில் இருப்பு வைக்கும் விளைபொருட்கள் அடிப்படையில், பொருளீட்டுக்கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியில் அதிகபட்சம் மூன்று லட்சம் ரூபாய் வரையில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு பொருளீட்டு கடனாக 9 சதவீத வட்டியில் அதிகபட்சம் 2லட்சம் ரூபாய் வரை பொருளீட்டுக்கடன் வழங்கப்படும்.ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேவைகளை பயன்படுத்தி விவசாயிகளும் வியாபாரிகளும் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நொய்யல் அருகே காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் தங்கராஜ் இறந்து கிடந்தார்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை பகுதி யை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60). விவசாயி. இவர் நொய்யல் அருகே காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் இறந்து கிடந்தார்.

    இதை கண்ட பொது மக்கள் இது குறித்து அவரது மனைவி மல்லிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மல்லிகா மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு வீட்டுக்கு எடுத்து வந்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீ சார் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரது மனைவி மல்லிகா கூறும் போது, எனது கணவர் அடிக்கடி மது குடித்து விட்டு கீழே விழுவது வழக்கம்.

    அதே போல் எனது கணவர் மது போதை யில் நொய்யல் அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு செல்லும் போது நிலை த்தடுமாறி கீழே விழுந்து அவருக்கு அடிபட்டு இறந்து இருக்கலாம் என தெரி வித்தார்.

    இதையடுத்து தங்கராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீ சார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உரிய லாபம் இல்லாததால், சிலர் பூக்கள் விவசாயத்திற்கு மாறிவிட்டனர்.
    • றைவான நீரில் பூக்களை சாகுபடி செய்ய முடியும்.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சின்ன வெங்காயம், கத்தரி,பீட்ருட் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டு வந்த நிலையில், உரிய லாபம் இல்லாததால், சிலர் பூக்கள் விவசாயத்திற்கு மாறிவிட்டனர். பூ விவசாயத்திற்கு அதிக தண்ணீர் தேவையில்லை என்பதாலும்,குறைவான நீரில் பூக்களை சாகுபடி செய்ய முடியும்.அந்த வகையில், பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் செவ்வந்திப் பூ பயிரிட்ட விவசாயி பழனிச்சாமி கூறுகையில்,நான்1 ஏக்கர் பரப்பளவில் செவ்வந்தி பூ சாகுபடி செய்துள்ளேன்.

    இதற்கு சுமார் 40 ஆயிரம் வரை செலவாகி உள்ளது. தற்போது செவ்வந்திப் பூ கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை போதுமானதாக இல்லை ரூ.100 வரை விற்பனை செய்தால்தான் போட்ட முதலீடை திரும்ப எடுக்க முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களாக 500, 700 ரூபாய் என சொற்ப அளவிலேயே மின் கட்டணம் வந்துள்ளது.
    • ஒருவேளை அவர் தவறுதலாக வேறு மின் மோட்டாரை இயக்கி இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்துகிறோம் என தெரிவித்தனர்.

    வேலூர்:

    வேலூர் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர், வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    தொடர்ந்து, விவசாயம் செய்யலாம் என முடிவு செய்து, லத்தேரி அடுத்த காளாம்பட்டு பகுதியில் 2 ஏக்கர் நிலம் வாங்கினார். இதையடுத்து, அங்கு விவசாயம் செய்வதற்காக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், கிடைக்காததால் மும்முனை மின் இணைப்பு பெற்றார்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 500, 700 ரூபாய் என சொற்ப அளவிலேயே மின் கட்டணம் வந்துள்ளது. கடந்த மாதம் 8 யூனிட் மின்சாரம் மட்டுமே அவர் பயன்படுத்தி இருந்ததாக தெரிகிறது.

    ஆனால் அவருக்கு 7,275 ரூபாய் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து லத்தேரி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அவர் கேட்ட போது, அங்கிருந்த ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை அதுமட்டுமின்றி.

    பணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என திருப்பி அனுப்பியுள்ளனர்.

    இதனால் செய்வதறியாது தவித்த சுந்தர்ராஜன், குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தியதற்கு அதிக கட்டணம் செலுத்த கூறியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், மெத்தனமாக பதிலளிக்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் விசாரித்தபோது, விவசாய தேவைக்கு அனுமதி பெறும்போது மின் மோட்டாரின் வேகத்தை 5 எச்பி, 10 எச்பி என குறிப்பிட்டிருப்பார்கள்.

    பிறகு அதை மாற்றி பயன்படுத்தினால் மின்பளு அதிகரிக்கும். அதற்கான கட்டணத்தை டிஜிட்டல் மீட்டர் தானாகவே பதிவு செய்துவிடும்.

    ஒருவேளை அவர் தவறுதலாக வேறு மின் மோட்டாரை இயக்கி இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்துகிறோம்' என தெரிவித்தனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
    • கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய ஒச்சான். இவரது மகன் லோகநாதன் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் நக்கலப்பட்டி அருகே உள்ள நல்லமாபட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (58) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    நல்லமாபட்டி அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலமாக மோதிக்கொண்டன. இதனால் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்து மயக்க நிலையில் இருந்த லோகநாதனுக்கு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு பயிர் சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையின் விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க அப்பகுதிக்கு சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம், வரபாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாயத்திற்கு அப்பகுதி வழியே செல்லும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் தண்ணீர் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் வாய்க்கால் அருகே உள்ள விவசாய நிலங்களில் மோட்டார் வைத்து அருகே உள்ள கிணறுகளில் விடுவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து பி.ஏ.பி. வாய்க்கால் ஓரங்களில் உள்ள விவசாய கிணறுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க அரசு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதனை நிறைவேற்றும் வகையில் கேத்தனூர் மின்வாரிய உதவி பொறியாளர் சத்திய நாராயணன் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சில மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க அப்பகுதிக்கு சென்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் திரண்டு மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டும், சிறை பிடித்தும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மின் இணைப்பை துண்டிப்பதாக இருந்தால் ஒட்டுமொத்த விவசாயிகளின் மின் இணைப்பையும் துண்டித்துக் கொள்ளுமாறு கூறி அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.இதனால் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கும் பணியை நிறுத்தி துண்டிப்பு நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இயற்கை ஆதாரமான மழை நீரை கருத்தில் கொண்டே பல்வேறு பயிர்சாகுபடிகளை இதுவரை செய்து வருவதாகவும் இதுபோன்ற மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை மின்வாரிய அதிகாரிகள் கைவிட தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும் அதனை நம்பி வாழ்கிற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் உள்ளன.
    • புகைப்பட கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும், தமிழக அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இல்லம் தேடி கல்வி திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல்.

    விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் மற்றும் 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், காலை உணவு, புதுமைப்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம் உள்ளிட்ட திட்டப்படங்கள் விளக்கத்துடன் இடம்பெற்றிருந்தன.

    மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில்சார் கடனுதவிகள், மீண்டும் மஞ்சப்பை, புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் உள்ளன.

    இந்த புகைப்பட கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். விவசாயி. இவர் கடந்த 15 சென்ட் இடத்தை கிரயம் பெற்றார். இவர் தனது இடத்திற்கு பட்டா வேண்டி விருத்தாச்சலம் தாசில்தார் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.
    • ஊழியர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ,அவரை அலை கழித்ததாக கூறப்படுகிறது

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். விவசாயி. இவர் கடந்த 1968-ல் 15 சென்ட் இடத்தை கிரயம் பெற்றார். அந்த இடத்திற்கு பட்டா வேண்டி விருத்தாச்சலம் தாசில்தார் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.   விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை அலை கழித்ததாக கூறப்படுகிறது. தனது மனு மீது நடவடிக்கை எடுக்க துணை தாசில்தாரிடம் கோரியுள்ளளார். இதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் ரூ3 ஆயிரம் பணத்தை ராஜவேல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தான் அளித்த மனு குறித்து ராஜவேல் கேட்டபோது, மேலும் ரூ.3 ஆயிரம் தொகையை கொடுத்தால்தான் பணி நிறைவடையும் என துணை தாசில்தார் கூறியுள்ளார்

    இ்ந்நிலையில் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் ராஜவேல் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் எனது இடத்தை அளவீடு செய் ல அளவை மேற்கொள்ள அங்கு சென்ற சர்வேயரிடம், சர்வே எடுக்க வேண்டாம் என துணை தாசில்தார் தடுத்து விட்டதாகவும், நத்தம் பட்டா கோரிய மனுவை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ளதாகவும் சப் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில் மண்டல துணை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனக்கு நத்தம் பட்டா வழங்க கோரியும் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து ராஜவேல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த சப் கலெக்டரி்ன் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் ராஜவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்ட ராஜவேல் அங்கிருந்து சென்றார். இதனால் சார் ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • கால்நடைகளுக்கு மாவட்ட அளவிலான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் புகார் மனு அளித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடக்கு அவிநாசி பாளையத்தில், கால்நடைகளுக்கு மாவட்ட அளவிலான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைக்க வந்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- வேலம்பட்டி கால்நடை மருத்துவமனையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர் உரிய நேரத்திற்கு வருவதில்லை. விவசாயிகள் நேரில் சென்று அழைத்தாலும், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வர மறுக்கிறார். கால்நடைகளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துவதில்லை.

    மேலும் இது போன்ற முகாம் மற்றும் அறிவிப்புகளை விவசாயிகளுக்கு தெரிவிப்பதில்லை. கால்நடை மருத்துவமனை இருந்தும் தனியார் மருத்துவரிடம் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஏராளமான விவசாயிகள் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றனர்.
    • மொத்தம் 19 நாட்கள் நீதி கேட்டு நெடும்பயணம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட் டத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் வரை நீதி கேட்டு நெடும்பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இந்த பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் செல்லப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வின்ஸ் ஆண்டோ வரவேற்று பேசினார். இந்த நீதி கேட்டு நெடும் பயணத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தொடங்கி வைத்தார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பத்மதாஸ் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் புறப்பட்டு சென்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த நீதி கேட்டு நெடும்பயணம் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக வருகிற 20-ந்தேதி டெல்லி சென்று அடைகிறது. மொத்தம் 19 நாட்கள் இந்த நீதி கேட்டு நெடும்பயணம் நடக்கிறது. 

    • கடந்த ஆண்டு அதிக மழை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதித்தது.
    • சின்னவெங்காய நாற்றுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு இரு சீசன்களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும் சாகுபடியாக சின்னவெங்காயம் உள்ளது.இதனால் இச்சாகுபடியில் அதிக விளைச்சல் பெற விவசாயிகள் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். கடந்த ஆண்டு அதிக மழை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதித்தது. போதிய விலையும் கிடைக்கவில்லை.

    இருப்பு வைத்தும் விலையில் மாற்றம் இல்லாததால், ஏமாற்றத்துடன் சின்னவெங்காயத்தை விற்பனை செய்தனர். இந்நிலையில் இந்த கோடை சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    முன்பு சின்னவெங்காயத்தை நேரடியாக நடும் முறையை பின்பற்றினர். பின்னர் வீரிய ரக விதைகளை நட்டனர். தற்போது விதைகளை கொண்டு மொத்தமாக, நாற்று உற்பத்தி செய்து குறிப்பிட்ட நாட்கள் வளரச்செய்து அதன் பின்னர் போதிய இடைவெளி விட்டு நாற்றுகளை நடவு செய்கின்றனர்.முன்பு நாற்றுக்கு தட்டுப்பாடு அதிகரித்து ஒரு பாத்தி அளவிலான சின்னவெங்காய நாற்றுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சின்னவெங்காயத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதுடன் சாகுபடி செலவும் கூடுதலாகும். கோடை சீசனில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் சாகுபடி பரப்பு குறைவாகவே இருக்கும். எனவே தேவை அதிகரித்து விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். வீரிய ரக விதைகளை தோட்டக்கலைத்துறை வாயிலாக வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    ×