search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177592"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.
    • தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்காக 15 பேர் கொண்ட சென்னை நகர விற்பனைக் குழு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் அமைக்கப்படுகிறது.

    இதில் 6 பேர் தெருவோர வியாபாரிகளில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் இன்று நடைபெற்றது.

    இந்த தேர்தலில் 53 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 35 ஆயிரத்து 588 பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.

    இந்த தேர்தலுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. காலை முதலே வியாபாரிகள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்.

    சாலையோர வியாபாரிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் சான்றிதழை காண்பித்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

    திருவொற்றியூர் ஜெய் கோபால் கரோடியா அரசினர் உயர்நிலைப்பள்ளி, மணலி மண்டல அலுவலகம், மாதவரம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் உயர் நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல் அரசினர் மேல் நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட் டிருந்த வாக்குச்சாவடிகளில் நடைப்பாதை வியாபாரிகள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

    இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் வாக்கு எண்ணும் மையமான அண்ணாநகர் அம்மா அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில மூடி சீல் வைக்கப்படும்.

    நாளை (28-ந்தேதி) காலை 9 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    • ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
    • சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஊட்டி:

    தற்போது தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

    மேலும் பூங்காவில் உள்ள பெரிய புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தனர். அங்குள்ள மலர் செடிகள் முன்பு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    இதேபோல ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    இந்த சுற்றுலா தலம் மட்டுமின்றி தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், அவலாஞ்சி, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, கொடநாடு காட்சிமுனை, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    இதேபோல், ஊட்டியில் உள்ள பைன் மரக்காடுகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் உயர்ந்து நிற்கும் பைன்கள், மூச்சடைக்கக் கூடிய அழகு காட்சிகள் மற்றும் இனிமையான சூழ்நிலை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். மேலும் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அவர்களை நம்பி வியாபாரம் நடத்தி வரும் சாலையோர வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கேரட், பீட்ரூட், மக்காச்சோளம், கோஸ் மற்றும் அவிச்ச வேர்கடலை, மாங்காய் என சாலை ஓரங்களில் வியாபாரம் நடத்தி வருபர்களுக்கு வியாபாரம் களைகட்டி உள்ளது.

    சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி குன்னூர் சாலைகளில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்டேன்லி சாம்ராஜூடன் அறிமுகமாகி உள்ளார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம், ஸ்டேன்லி சாம்ராஜ் புகார் அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவருடைய மகன் ஸ்டேன்லி சாம்ராஜ் (வயது 47). இவர் சிமெண்ட், உப்பு மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

    ரூ.8 கோடி மோசடி

    இவரது பள்ளி நண்பரான தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்த சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகமாகி தான் உப்பு மற்றும் இரும்பு பொருட்களை வியாபாரம் செய்து வருவதாகவும், அவர் ஸ்டேன்லி சாம்ராஜூடன் சேர்ந்து வியாபாரம் செய்ய விரும்புவதாகவும் கூறி உள்ளார். மேலும் சீலன் செல்வராஜ் அவருடன் வியாபாரம் செய்துவரும் தூத்துக்குடியை சேர்ந்த விஜய் என்பவரையும் ஸ்டேன்லி சாம்ராஜ்க்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

    பின்னர் சீலன் செல்வராஜ், விஜய் ஆகியோர் ஸ்டேன்லி சாம்ராஜ் நிறுவனத்துக்கு உப்பு, இரும்புபொருட்கள் வாங்குவதாக போலியான கொள்முதல் ஆணையை காண்பித்தும், வியாபாரத்துக்காக பணம் தேவைப்படுவதாகவும் கூறி 2020-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை ரூ.8 கோடியே 29 லட்சத்து 18 ஆயிரத்து 741 பணத்தை பெற்றுக் கொண்டு, எந்தவித வியாபாரமும் செய்யாமல் ஏமாற்றி உள்ளனர்.

    கைது

    இதுகுறித்து அறிந்த ஸ்டேன்லி சாம்ராஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை நடத்தி சீலன்செல்வராஜ், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் இருவரும் இதுபோல வேறு யாரிடமும் மோசடி செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உணவகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது.
    • வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்ட த்தின் கீழ் கட்ட ப்பட்டுள்ள தென்னம்பா ளையம் மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உண வகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது. அதிலும் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆகையால் அந்த ஆக்கிரமி ப்புகளை அகற்றி தருவதோடு குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் இடத்தில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி மற்றொரு வழித்தடத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தற்போது உள்ள தற்காலிக மீன் மார்க்கெ ட்டில் வாடிக்கை யாளர்கள் மற்றும்எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும். அதே போல் எங்களை நம்பி 200க்கும் மேற்பட்டமீன் வெட்டும் தொழிலாளர்கள் அங்கு மீன் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.   

    • வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
    • சந்திப்பு பகுதியில் உள்ள கடைகள் ஆர்ப்பாட்டம் முடியும் வரை அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி பணிகள் நிறைவு பெற்ற பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கருப்பு கொடி போராட்டம்

    பஸ் நிலையம் திறக்கப்படாததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சந்திப்பு பகுதி வியாபாரிகள் பல்வேறு விதத்தில் பஸ் நிலையத்தை திறக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு வணிகள் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் செல்வ ராஜ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோ கஸ்தர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட செயலாளர் நயன்சிங், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், மாவட்ட பொருளாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோஷம்

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் அல்லது அதுவரை அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதில் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர், ராஜா பில்டிங் வியாபாரிகள் நலச்சங்கம், த.மு. கட்டிட வியாபாரிகள் சங்கம், சிந்துபூந்துறை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடைகளில் கருப்பு கொடி

    ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சந்திப்பு பகுதியில் உள்ள கடைகள் இன்று ஆர்ப்பாட்டம் முடியும் வரை அடைக்க ப்பட்டிருந்தது. மேலும் கோரிக்கைகளை வலிறுத்தி சந்திப்பு பகுதி களில் உள்ள கடைகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட இணைச்செயலாளர் சாலமோன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஸ்டீபன் பிரேம்குமார், அருள் இளங்கோ, முகம்மது அலி, மாவட்ட துணைச்செயலாளர் மீரான், தொகுதி செயலாளர் சேக்பரித், கருப்பசாமி, மாவட்ட செய்தி தொடர்பா ளர் பகவதிராஜன்,

    ராஜா பில்டிங் வியாபாரி கள் நலச்சங்க தலைவர் எர்னஸ்ட் பர்னாந்து, சிந்துபூந்துறை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆஞ்சீஸ், நெல்லை மாநகர் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் சங்கர நாராயணன், த.மு. கட்டிட வியாபாரிகள் சங்கத்தலை வர் ரவீந்திரன், நெல்லை மாநகர் சந்திப்பு வியா பாரிகள் சங்கசெயலாளர் ஜெயச்சந்திரன், புதிய பஸ்நிலைய வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் ஆனந்தமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    கையில் கருப்புகொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள்.

    கையில் கருப்புகொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள்.


    கடைகளின் முகப்பில் கருப்பு கொடி கட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    கடைகளின் முகப்பில் கருப்பு கொடி கட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.


     


     


    • திருமங்கலத்தில் சாலையோர வியாபாரிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
    • வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் பல்வேறு பகுதிகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் 12 மற்றும் 13 வது வார்டுகளில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த சாலை யோர வியாபாரிகள்

    100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    விழாவில் மணிமாறன் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது தி.மு.க.வை நாடிவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    விரைவில் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், நகர அவை தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிமாறன் ஒவ்வொரு வீடாக சென்று தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்தார்.

    • 168 தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கடற்கரை சாலையில் நிரந்தர கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன
    • 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடற்கரை சாலையின் இரு புறமும் உள்ள நடை பாதைகளில் ஏராளமான வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனை தீர்க்க 168 தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கடற்கரை சாலையில் நிரந்தர கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

    தற்போது இந்த கடைகளை ஏலம் நடத்தி வியாபாரிகளுக்கு கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனை கண்டித்தும் அந்த இடத்தில் அதே வியாபாரிகளுக்கு கடையை மீண்டும் வழங்க கோரியும் 150-க்கும் மேற்பட்ட தள்ளு வண்டி வியாபாரிகள் இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிஅலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. கவுன்சிலர் சுபாஷ், அ.தி.மு.க. கவுன்சிலர் நித்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த முற்றுகை போராட்டத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருநங்கைகள் புகுந்து கட்டாயமாக பணம் கேட்டு தொல்லை தந்து வருகின்றனர்.
    • வணிகர்கள் நிம்மதி இழந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் போலீஸ் நிலையத்தில் பல்லடம் அனைத்து வணிகர் சங்க தலைவர் ராம்.கண்ணையன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தனசீலன், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி, செயலாளர் லாலா கணேசன், மாநகர தலைவர் ஜான்வல்தாரிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    பல்லடம் நகரில் உள்ள கடைகள், வணிக நிறுவன ங்களுக்குள் திருநங்கைகள் புகுந்து கட்டாயமாக பணம் கேட்டு தொல்லை தந்து வருகின்றனர். அவர்களுக்கு பணம் தரவில்லை என்றால் கூட்டமாக வந்து மிரட்டுவது ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் வணிகர்கள் நிம்மதி இழந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 25ந் தேதி பல்லடத்தில் தள்ளு வண்டியில் துரித உணவு வியாபாரம் செய்து வரும் இசக்கிபாண்டி என்பவர் மீது திருநங்கைகள் கடுமையாக தாக்குதல் நடத்திபலத்த காயத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வியா பாரியை தாக்கியவர்க ளை கைது செய்ய வேண்டும். மேலும் பல்லடம் நகரில் உள்ள வியாபாரிக ளுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற விதமாக, அனைவரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முருங்கையில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமீன்கள் நிறைந்து காணப்படுகிறது.
    • மண் வளத்தால் தனி ருசி ஏற்படுகிறது.

    மூலனூர் :

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் மூலனூர் குட்டை முருங்கைகாய்க்கு இந்த ஆண்டு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியு ள்ளது. இதற்கு மூலனூர் முருங்கை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து ள்ளனர்.

    ஒரு தமிழ் சினிமாவில் நடிகர் பாக்கியராஜ் முருங்கைகாய் சாப்பிடுவ தால் என்ன விதமான பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி ருசிகரமான காட்சி ஒன்றை வைத்திருப்பார். அது மட்டுமல்ல முருங்கையில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமீன்கள் நிறைந்து காணப்படுகிறது. இதைத்தவிர மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் தொடர்பான நோய்கள், சிறுநீரகத்தை பலப்படுத்து வது என பயன் தரும் மருத்துவ தன்மை கொண்டது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்:- திருப்பூர் மாவட்டத்தில் மூலனூர், வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம் ஆகிய வட்டார பகுதிகளில் அதிக அளவில் முருங்கைக்காய் விளைவிக்கப்படுகிறது. அதில் மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்கு ஏற்ற மண் வளம், குறைவான நீர், மிக குறைவான பராமரிப்பு செலவு ஆகிய காரணத்தால் விவசாயிகளால் விருப்பத்து டன் சாகுபடி செய்யப்படு கிறது. ஆண்டில் பத்து மாதங்கள் மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு இதன் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

    மேலும் மூலனூர் முருங்கைக்கு ருசி அதிகம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் நுகர்வு அதிகம் உள்ளது. வெள்ளகோவிலில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழ மைகளில் நடைபெறும் முருங்கைக்காய் சந்தைக்கு மூலனூர் விவசாயிகளால் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    வெளியில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள், முருங்கைக்காய்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி சென்னை, திருச்சி, கோவை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- திருச்சி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலும் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்றாலும் மூலனூர் பகுதியில் சாகுபடி செய்யும் குட்டை ரக முருங்கைக்கே ருசி அதிகம். எங்கள் பகுதி மண் வளத்தால் தனி ருசி ஏற்படுகிறது. .அதனால் தான் மக்களால் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இந்திய அளவில் மூலனூர் முருங்கை க்கு கிராக்கி அதிகம். இந்த நிலையில் தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சிய ளிக்கிறது. இதனால் உற்பத்தியும் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு ள்ளது. தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம் செல்லூர் கண்மாய்கரை ரோடு லூர்து அன்னை பேப்பர் ஸ்டோர் வளாகத்தில் நாளை(19-ந் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது.

    மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார். தங்கராஜ், சில்வர்சிவா, குட்டி என்ற அந்தோணிராஜ், ஸ்வீட்ராஜன், ஜெயகுமார், தேனப்பன், வழக்கறிஞர் கண்ணன், சூசை அந்தோணி முன்னிலை வகிக்கின்றனர்.

    ஆன்லைன் வர்த்த கத்துக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் சுதேசி வணிகத்தை வலியுறுத்தும் வணிகர் தின சிறப்பு மாநாடு சென்னையில் நடத்துவது குறித்து ஆலோசனை பெறப்படுகிறது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நிர்வாகிகள் சுருளி, ஆனந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், பிச்சைப்பழம், சரவணன், தேனப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம் என்று மதுரை மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தெரிவித்தார்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனை நடைபெற்றது.
    • அனைத்து வியாபாரி நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெருமாநல்லூரில் நடந்தது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர்வடக்கு ஒன்றியம்அனைத்து வியாபாரி நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெருமா நல்லூரில்நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.இதில் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நீர்மோர் பந்தல் அமைப்பது மற்றும் மே 5ந்தேதி வணிகர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனை நடைபெற்றது.

    இதில் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் கண்ணன், துணைச் செயலாளர் சரவணன், ஒருங்கிணை ப்பாளர் பாலா, ஆலோசகர் மூர்த்தி, துணைத் தலைவர் வேலுச்சாமி, துணைப் பொருளாளர் சண்முகம் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் கொண்டப்பன், கோபால், ஜெயக்குமார், சங்கமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • காமராஜர் சாலையில் உள்ள பூங்காவினை வியாபாரிகள் சங்கம் சார்பில் பராமரித்து வருகிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    வியாபாரிகள் மனு

    கூட்டத்திற்கு செயற்பொறியாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். பெருமாள் புரம் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் டேனியல் ஆப்ரகாம், செயலாளர் ஆனந்தராஜ், மாநகர வர்த்தக கூட்டமைப்பு தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பெருமாள்புரம் காமராஜர் சாலையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு உள்ள பூங்கா மற்றும் கழிவறை களை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம். தற்போது இந்த பூங்கா மற்றும் கழிவறையை பூட்டி விட்டனர். எனவே அதனை திறக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    குண்டும், குழியுமான சாலை

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 20-வது வார்டு தலைவர் ஜெய்லானி அளித்த மனுவில், பேட்டை 20-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. 15 ஆண்டுகளாக இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே உடனடியாக தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    நெல்லை கால்வாய் நயினார் குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நெல்லையப்பன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், நயினார் குளம் பாசனத்தை நம்பி 586 ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளது. இதற்கு இடையூறாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றை தடுக்க வேண்டும். சில இடங்களில் தார்ச்சாலை புதிதாக போடப்பட்டு 3 மாதத்தில் சேதம் அடைந்து விட்டது. எனவே அவற்றை தரமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    டவுன் ஆனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் அளித்த மனுவில், 14-வது வார்டுக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் 360 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அம்மன் கோவிலுக்கு மேற்கே 3 தெருக்கள் உள்ளது.

    இந்த 3 தெருக்களுக்கும் சேர்த்து தனியாக ஒரு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ×