search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179048"

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
    • திட்டமிட்டு வன்முறையை பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று மதியம் சந்தித்தார்.

    அப்போது அவர் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி மனு ஒன்று அளித்தார். பின்னர் அவர் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்பினர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். அதுதொடர்பாகவும் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தேன்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். திருவள்ளுவர், பெரியார் சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பது, அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவித்து விபூதி பூசியது போன்ற செயல்களிலும் அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சமூகநீதி பயணம் மேற் கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் வாகனத்தை மறித்து திட்டமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மேலும் அந்த வகையிலான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

    ஆரணியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு காரணமாக தனிப்படைகள் அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கிராமம் கிராமமாக வேட்டையாடி கைது செய்துள்ளனர். இதேபோன்று திட்டமிட்டு வன்முறையை பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தனிப்பட்ட விமர்சனங்களுடன் ஆபாசமாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் பேசி வருகிறார்கள். எனவே அந்த கட்சியினரின் சதி திட்டத்தை முறியடிக்கும் வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும்.

    வட மாநிலங்களில் இது போன்ற அவதூறு பிரசாரங்கள் மூலமாக அவர்கள் ஆதாயம் தேடியதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.
    • தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

    2007ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, அசூரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்றார். தற்போது நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.
    • சிஎஸ்ஆர் என்கிற பொதுநிதி அந்த பகுதியை சார்ந்த கிராமங்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசியதாவது:

    என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணியில் ஈடுபட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் இதனால் இடம் பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எனது தொகுதியில் காட்டு மன்னார்குடி வரையில் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

    ஆனால் அவர்களுக்கு போதிய இழப்பீடு தருவதற்கு தயாராக இல்லை. என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    அதுமட்டுமில்லாமல் சிஎஸ்ஆர் என்கிற பொதுநிதி அந்த பகுதியை சார்ந்த கிராமங்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் என்எல்சி நிர்வாகத்தினுடைய சிஎஸ்ஆர் நிதி என்பது வடஇந்திய மாநிலங்களில் குறிப்பாக பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பயன்படுத்தபடுவது நிறுத்தப்படவேண்டும்.

    தமிழகத்தை சாராதவர்கள் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலையும் இருக்கிறது. இந்த அவலத்தை போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிஎஸ்ஆர் நிதியை அந்த பகுதியை மேம்படுத்துவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • அன்னை சத்தியவாணி முத்து சுயமரியாதை இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.
    • ஆதிதிராவிட மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான அன்னை சத்தியவாணி முத்து பிறந்தநாள் நூற்றாண்டு 2023 பிப்ரவரி 15-ம் நாள் ஆகும். அந்நாளை அரசு விழாவாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    அன்னை சத்தியவாணி முத்து சுயமரியாதை இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். அதன்பின்னர் 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்தே பேரறிஞர் அண்ணாவோடு அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1957, 1967,1971 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழ்நாட்டில் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி அவர்தான். 1967-ல் பேரறிஞர் அண்ணா அமைச்சரவையிலும் அதன்பின்னர் 'சமத்துவப் பெரியார்' கலைஞரின் அமைச்சர வையிலும் அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியும் அவர்தான். 1979-ம் ஆண்டு சரண்சிங் பிரதமராக இருந்தபோது ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழகத்தைச் சார்ந்த முதல் பெண்மணியும் அவரே ஆவார்.

    ஆதிதிராவிட மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். அன்னை என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தந்தை பெரியாரைப் போலவே புரட்சியாளர் அம்பேத்கரையும் தனது தலைவராக ஏற்றுப் போற்றியவர்.

    இத்தகைய பல்வேறு பெருமைகளைக்கொண்ட அன்னை சத்தியவாணி முத்துவின் பங்களிப்பைத் தமிழ்நாடு அரசு உரிய வகையில் அங்கீகரித்து அவரது நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழ்நாட்டில் மகளிர் கல்லூரி ஒன்றுக்கு அவரது பெயரை சூட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க.வை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள்.
    • பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைத்தனர்.

    ஆலந்தூர்:

    நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக கூறி, அதை கண்டித்து ஆலந்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சித்தீக், சையத் அலி முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜமாஅத் தலைவர் பாக்கர், திருமுருகன் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், பா.ஜ.க.வை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளாக ஒன்று சேர மறுக்கிறார்கள். அவர்களை ஓரணியில் திரள விடாமல் பாரதிய ஜனதா கட்சி செய்கிறது. அவர்களுக்கு எதிராக கூட்டணி சேரும் கட்சிகளை சிதறடித்து விடுவார்கள். அ.தி.மு.க. தற்போது மூன்று அணியாக சிதறி கிடப்பதற்கு பா.ஜனதா தான் காரணம். பா.ஜ.க. தலையிடாமல் இருந்து இருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அ.தி.மு.க.வாக இருந்து இருக்கும்.

    பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைத்தனர். தற்போது அவர்களையும் உடைத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள். அதற்குள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். தவறினால் மீண்டும் 2024-ல் ஆபத்து ஏற்படும் என கூறினார்.

    • வேங்கை வயல் சம்பவத்தில் முதலில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சாட்டுவதாக சென்றது.
    • யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தொடங்கி வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது:-

    வேங்கை வயல் சம்பவத்தில் முதலில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சாட்டுவதாக சென்றது. அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இருந்த போதிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

    யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தி.மு.க. அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை.

    பா.ஜ.க., சங்க பரிவார் அமைப்புகள் வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் சாதி,மத முரண்களை கூர்மையாக்கி அரசியல் செய்ய தொடங்கியிருக்கின்றன. எனவே வேங்கை வயல் சம்பவத்தினை இந்த கோணத்திலும் விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இவர் அவர் கூறினார்.

    மேலும் வேங்கை வயல் சம்பவத்தை கண்டித்து திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என சீமான் கூறியுள்ளது தொடர்பாக கேட்டபோது, சமூகப் பிரச்சனைகளுடன் அரசியலை முடிச்சு போட தேவையில்லை என பதில் அளித்தார்.

    • அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருப்பது, பா.ஜ.க.விற்கு சாதகமாக அமையும்.
    • சாதிவாரிய கணக்கெடுப்புக்கான குரல், வட மாநிலங்களில் வலுவாக உள்ளது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததில் இருந்து மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார். மேலும் ஒரு பொறுப்பு கவர்னர் நியமிக்க இருப்பதாக தகவல் வருகின்றது.

    அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருப்பது, பா.ஜ.க.விற்கு சாதகமாக அமையும். போட்டிபோட்டுகொண்டு காவடி தூக்குவது அ.தி.மு.க.விற்கும், தொண்டர்களுக்கும் நல்லதல்ல. பா.ஜ.க. வளர்வது, அ.தி.மு.க.விற்கு நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல.

    ஈரோடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பிலான மதசார்பற்ற கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

    சாதிவாரிய கணக்கெடுப்புக்கான குரல், வட மாநிலங்களில் வலுவாக உள்ளது. பீகாரில் இதுகுறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றார்.

    • 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டசபை தேர்தலை மையமாக வைத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை மாவட்டத்திற்கு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் தற்போது உள்ள 7 மாவட்டங்கள் 8 ஆக உயர்கிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட நிர்வாகிகளை மாற்றி சீரமைக்க கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முடிவு செய்தார்.

    7 ஆண்டுகளாக மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் மாவட்டங்கள் அதிகரிக்கப்படுகிறது.

    கட்சி ரீதியாக 100 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், பொருளாளர், ஊடக அமைப்பாளர் உள்ளிட்ட 10 பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

    தமிழகம் முழுவதும் இருந்து 4000 விண்ணப்பங்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த மனுக்களை உயர்மட்ட நிர்வாகிகள் பரிசீலனை செய்து தலைவர் திருமாவளவனிடம் கொடுத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

    இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கட்சியில் மாவட்ட அளவில் புதிய பொறுப்புகளுக்கு வருவதற்கு இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தலித் அல்லாத பிற ஜாதியினருக்கு 10 சதவீதமும், மகளிருக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.

    2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டசபை தேர்தலை மையமாக வைத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கட்சி பணிகளை முறையாக செய்யாதவர்கள், கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுபவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர்கள் பதவிக்காலம் 4 வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா தொற்று பாதிப்பால் 2 ஆண்டுகள் கூடுதல் வாய்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னை மாவட்டத்திற்கு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் தற்போது உள்ள 7 மாவட்டங்கள் 8 ஆக உயர்கிறது. கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புகள் மாற்றப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிக்கிறார்.

    • நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது இயலாது.
    • அ.தி.மு.க. கட்சி சின்னத்தினை இழந்து நிற்பதோடு, மட்டுமல்லாமல் அந்த கட்சி 2 பிரிவுகளாக உள்ளது. எனவே வெற்றி பெறுவது கடினம்.

    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் நடைபெற்ற குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இது போன்ற தவறுகளை தடுக்க கியூ பிரிவு போல் தனி உளவுப்பிரிவு அமைக்க வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கின்றேன். இரட்டை குவளை முறை அதிகமாக உள்ளது. எனவே அதனை ஒழிக்க சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். அதற்கு கூட்டணி கட்சிகள் வலுவாக பாடுபடுவோம்.

    நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது இயலாது. ஏனெனில் அந்த கட்சி சின்னத்தினை இழந்து நிற்பதோடு, மட்டுமல்லாமல் அந்த கட்சி 2 பிரிவுகளாக உள்ளது. எனவே வெற்றி பெறுவது கடினம்.

    தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு தாட்கோ லோன்கள் கொடுப்பதற்கு தேசிய வங்கிகள் முன்வராத நிலை தமிழகத்தில் உள்ளது.

    ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது. மத்திய அரசுதான் அது ராமர் பாலம் இல்லை என்று சொன்னது. இப்போது இப்படி சொல்வது அதிர்ச்சியாக உள்ளது.

    சேது சமுத்திர திட்டத்தில் மீனவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
    • இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா, ஏடிகே, கதிர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 5 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 101 நாட்களை நெருங்கியுள்ளது.


    திருமாவளவன் பதிவு

    நேற்றைய நிகழ்ச்சியில் பணப்பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு கதிர் வெளியேறினார். இந்நிலையில், இறுதி போட்டிக்கு சென்ற விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    திருமாவளவன் பதிவு

    அதில், "தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் DisneyPlusID  app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம்வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    • 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • திருமாவளவன் விழா மேடையில் கேக் வெட்டி தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள மல்லை கலங்கரை விளக்கு மக்கள் சேவை மையமும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் இணைந்து 15வது முறையாக பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.

    இதில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று, கோலம் போடுதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, சிலம்பம், கைப்பந்து, ஸ்லோ சைக்கிள், மியூசிக் சேர், கபடி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பரிசுகள் வழங்கினார்.

    பின்னர் அதே மேடையில் கேக் வெட்டி, தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.

    ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தொண்டரணி செயலாளர் கிட்டு, திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் இ.சி.ஆர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், சாலமன், சிவா, பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கவர்னருக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.
    • தடையை மீறி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி, உரையாற்றியபோது, அறிக்கையில் சில வார்த்தைகளை சேர்த்தும், சில வாக்கியங்களை விடுத்தும் வாசித்தார். மேலும், முதலமைச்சர் உரையின்போது பாதியில் எழுந்து சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

    கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற போராட்டத்தில், கவர்னருக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். அப்போது பேசிய திருமாவளவன், கேரளா, மேற்குவங்கம் மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிலும் கவர்னர் இல்லாமல் பேரவை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

    பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பாஜக ஆதரவாளர்களை ஆளுநராக நியமிக்ககூடாது என்று கூறிய அவர், கவர்னர் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்றார். இதையடுத்து போலீசார், தடையை மீறி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினரையும், திருமாவளவனையும் கைது செய்தனர்.

    ×