search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179048"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான்.
    • இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

    சென்னை:

    கவர்னரின் செயலை கண்டித்து முற்றுகை போராட்டத்தை விடுதலை சிறுத்தை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:-

    கவர்னரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்.எஸ்.எஸ். முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும்.

    அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

    கவர்னரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாய் என்றாலும், அம்மா என்றாலும் ஒரே பொருள்தான்.
    • கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

    நெல்லை :

    நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. தாய் என்றாலும், அம்மா என்றாலும் ஒரே பொருள்தான். தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல. இதில் சூசகமும், அரசியலும், சூழ்ச்சியும் உள்ளது. பிரதேசம் என்றாலும், ராஷ்டரியம் என்றாலும் நாடு என்றுதான் பொருள். இந்த தேசத்திற்கு இந்து ராஷ்டிரம் என பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.

    மகாராஷ்டிரம் என்று சொல்லக்கூடாது, பாரதம் என்றுதான் சொல்ல வேண்டும் என சொல்வதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா?. கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

    பண்டிகைகள் ஆட்டம், பாட்டம், கூத்து கொண்டாட்டம் என இழுத்துச்செல்லும். சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை சிந்திக்கவிடாமல் மயக்கும் மாயையை உருவாக்கும்.

    கல்வி, சுகாதாரத்தை, மருத்துவத்தை தந்தது கிறிஸ்தவம். இந்த மண்ணில் கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்தான் சேரிகளுக்குள்ளும், குப்பங்களுக்குள்ளும், குக்கிராமங்களுக்குள்ளும் வெளிச்சம் பரவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கோ, பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்கோ இப்படி பேசவில்லை. உண்மையை பேச வேண்டும், வரலாற்றை பேச வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசுகிறேன்.

    அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணி ஒப்புகை அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பப்புவா நியூகினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், கொக்கரையாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    • ஆளுநர் ஆர்.என். ரவி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை போன்று செயல்பட்டு வருகிறார்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.விற்கு சமூக நீதி தொடர்பான அனைத்து முயற்சிக்கும் ஒத்துழைப்பு தருகிறது.

    நெல்லையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆளுநர் ஆர்.என் ரவி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை போன்று செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜினமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். பணிகளை மேற்கொள்ளலாம். அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறார்.

    தமிழ்நாடு என்றாலும், தமிழகம் என்றாலும் ஒன்று தான், என்று கூறி தமிழ்நாடு என்ற சொல்லுக்கு தவறான தோற்றத்தை உருவாக்குகிறார்.

    ஆந்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ் என்றாலும் நாடு என்று தான் பொருள். உத்தரபிரதேஷ், மத்திய பிரதேஷ் இந்த மாநிலத்திற்கு சென்று பிரதேஷ், ராஷ்டிரா என்று இருக்கிறது என சொல்லுவாரா?

    தமிழ்நாடு, வட மொழியில் ராஷ்டிரம் என பொருள். வேண்டுமென்றே பெரியார், அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டுமென அதற்கு எதிரான கருத்து தோற்றம் உருவாக்க விரும்புகிறார்.

    சட்டப்பூர்வமாக காமராஜர் காலத்திலேயே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அண்ணா காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புகையோடு தமிழ்நாடு என்ற சொல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். தி.மு.க. அரசின் கொள்கைக்கும், திராவிட அரசியல் கோட்பாட்டிற்கும் கவர்னர் எதிரானவர்.

    புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த அந்த அநாகரிகமான செயல் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். நாட்கள் கடந்து விட்டது. எனவே அவர்களை கைது செய்ய வேண்டி வருகிற 11-ந் தேதி (புதன் கிழமை) அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.

    நல்லிணக்க கூட்டணியை முதலமைச்சர் வழி நடத்தி செல்கிறார். பொது மக்கள் பாராட்டும் வகையில் ஆட்சி செய்கிறார்.

    தலித் வன்கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். வன்கொடுமையை தடுக்க வழிகாட்டி தருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.விற்கு சமூக நீதி தொடர்பான அனைத்து முயற்சிக்கும் ஒத்துழைப்பு தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன.
    • மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'தமிழ்ச் சமூகத்துக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்' என நினைக்கும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்று சேர்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி அவர்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன.

    இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும்.

    மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம்பெறவில்லை. கல்வியில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும்.

    ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

    அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயக பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின் அநீதிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார்.
    • எளிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார். அன்பையும் கருணையையும் எடுத்துரைத்தார். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்தார்.

    சென்னை :

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டிசம்பர் 25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இயேசு பெருமான் பிறந்தநாளான இப்பெருநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின் அநீதிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார். எளிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார். அன்பையும் கருணையையும் எடுத்துரைத்தார். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்தார். ஆட்சியாளர்களின் மக்கள்விரோதப் போக்குகளை அம்பலப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் இயேசுபெருமானை சிலுவையில் அறைந்து மரண தண்டனை அளித்தனர். அதனையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார் இயேசுபெருமான்.

    எளியோருக்காக குருதி சிந்திய - தனது உயிரைக் கொடுத்த இயேசுபெருமான் சகோதரத்துவத்தையே உலக மாந்தருக்கான நற்செய்தியாக அளித்துச் சென்றார். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளாக மாறியிருப்பதற்கு அது போதிக்கும் சகோதரத்துவமே அடிப்படையாகும்.

    அத்தகைய சகோதரத்துவத்தை இந்திய மண்ணிலும் மலரச்செய்யவும் நிலைபெற வைக்கவும் இந்நன்னாளில் உறுதியேற்போம். சனாதனப் பாகுபாடு அரசியலை- மதவழி சிறுபான்மையினருக்கான வெறுப்பு அரசியலை மேலும் வலுப்பெறவிடாமல் தடுத்து வீழ்த்தவும் மதசார்பற்ற சனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவும் இப்பெருநாளில் உறுதியேற்போம்.

    சகோதரத்துவத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை அண்மையில் வெளியிட்டு உள்ளது.
    • குரூப்-1, 2 மற்றும் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடத்த வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை அண்மையில் வெளியிட்டு உள்ளது. அந்த ஆண்டு திட்டத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளும் துறை சார்ந்த தேர்வுகளாக அமைந்துள்ளன.

    மேலும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான தேர்வு 2024-ம் ஆண்டு தான் நடைபெறுமென்கிற சூழல் உருவாகி உள்ளது. 

    கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டி தேர்வினை எழுத தயாரான சூழலில், சமீபத்தில் வெளி வந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இந்த ஆண்டுத்திட்டம் போட்டித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் நிலையிலிருந்து விலகிச் செல்ல வழி வகுக்கும். இதன் காரணமாக வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.  

    அத்துடன் யு.பி.எஸ்.சி. மற்றும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின தேர்வர்களுக்கு அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் நிதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

    எனவே, தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவித் தொகையை விரைந்து வழங்கிட வேண்டும், குரூப்-1, 2 மற்றும் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடத்த வேண்டும்.

    மேலும், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கான நிரப்பபடாத பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
    • வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கானாத்தூர் பகுதியில் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்தவ பெருவிழா இன்று மாலை நடக்கிறது.

    விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்க செல்லும் திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

    இதில் வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், வி.ஜி.சந்தோசம் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    • பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு அரசியல் பிரிவு.
    • மீண்டும் பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் அனைவரும் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்.

    திருச்சி:

    அரசு ஊழியர் ஊழியர் ஐக்கிய பேரவை (மத்திய, மாநில பொதுத்துறை) சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் காப்பாளருமான தொல்.திருமாவளவன் எம்.பி.யின் மணிவிழா திருச்சி கருமண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. எம்.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஏற்புரை வழங்கி பேசியதாவது:-

    காமராஜரை போல, இன்னொரு வகையில் ராகுல் காந்தியை போல ஒட்டுமொத்தத்தில் புரட்சியாளர் அம்பேத்கரை போல திருமாவளவன் இந்த மண்ணிலே பணியாற்றுகிறார் என்று திருநாவுக்கரசர் என்னை பாராட்டி உள்ளார். இதில் ஒட்டுமொத்த மக்களுக்கான ஒரு தலைவர் உருவாகி இருக்கிறார் என கூறும்போது நான் பெருமைப்படுகிறேன். ஒரு நம்பிக்கையை தரக்கூடிய அளவுக்கு அனைவரின் உரையும் அமைந்திருக்கிறது.

    இன்றைக்கு இந்த மண்ணுக்கு மிகப்பெரும் ஆபத்து மதவெறியர்களால் உருவாகிறது. சனாதன சக்திகளால் உருவாகிவிட்டது. மீண்டும் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலில் அவர்கள் (பா.ஜனதா) வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார்களேயானால் அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். எதையும் துணிந்து செய்வார்கள்.

    அவர்களின் செயல் திட்டம் ஒவ்வொன்றாக இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவர்கள் விரும்பியதைப்போல குடியுரிமை சட்டம், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. என கொண்டு வந்து விட்டார்கள். இந்த ஆட்சி காலம் முடிவதற்குள் பொது சிவில் சட்டத்தையும் நிறைவேற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

    பல இனம், பல கலாசாரம் நிறைந்த இந்த தேசத்தில் மதச்சார்பற்ற அரசு இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு அரசியல் பிரிவு. பா.ஜ.க.வுக்கு என தனி செயல்திட்டம் எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.

    ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். கொள்கை ரீதியாக பா.ஜ.க.வை எதிர்க்கும் காங்கிரசுக்கு நாம் துணையாக இருக்கிறோம். மீண்டும் பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் அனைவரும் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தினார்
    • வறுமை ஒழிப்பு திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்திலே இல்லை என்பது தெரியவருகிறது.

    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    இந்திய அரசு, மதுரையில் எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் என்று அறிவிக்க வேண்டும். நிதி பகிர்வு செய்வதில் பதினைந்தாவது நிதிக்குழு மாநிலங்களுக்கு எவ்வாறு நிதியை பகிர்வது என்பதை குறித்து ஒரு வரையறையை தீர்மானித்து இருக்கிறது.

    2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை அடிப்படையில் நிதி பகிர்வு செய்வது என்கிற வரையறையால் தமிழ்நாடு பாதிப்புகுள்ளாகி இருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு தான் இந்திய ஒன்றிய அரசின் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறது. ஒப்பிட்டளவிலே உத்தரபிரதேசத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் அங்கு மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தினுடைய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்திய மாநிலங்களுள் தமிழ்நாடு முதன்மையான மாநிலம். அதனால் மக்கள் தொகை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

    இந்த மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து ஒரு வரையறையாக வைத்து நிதி பகிர்வு என்கிற நிலையை கையாள்வதால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது.

    எனவே அதிக நிதி வருவாயை வழங்குகிற தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்து டிபென்ஸ் காரிடாருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசு உறுதியளித்திருக்கிறது. தமிழ்நாட்டிலே ஏற்கனவே ஆவடியில் டாங்கி தொழிற்சாலை இருக்கிறது, அதை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்த ஒன்றிய அரசு இதுவரை பட்ஜெட்டில் மிக குறைவான முறையில் அளித்துள்ளது.

    ஒவ்வொரு முறையும் நதிகள் இணைக்கப்படும் என்கிற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட ஒன்று ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே நான் வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

    வறுமை ஒழிப்பு திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்திலே இல்லை என்பது தெரியவருகிறது. கடந்த 2020ம் ஆண்டிலே 4.6 கோடி பேர் வறுமையில் புதிதாக தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்திய அரசின் தவறாக பொருளாதார கொள்கை தான் காரணம் என்பது தெரியவருகிறது. இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்களில் 98 பணக்காரர்களின் சொத்து வரியிலே 4 சதவீதம் உயர்த்தினால் இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டத்தை 17 ஆண்டுகள் நடத்த முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. எனவே அவர்களுக்கான வெல்த் டாக்ஸை குறைக்காமல் வரியை வசூலிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சென்னை மதுரைக்கு இடையில் வந்தே பாரத் ரெயில் விட வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    • அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் காவி உடை அணிவது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவரை அவமதித்த இந்து மக்கள் கட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

    இந்து மக்கள் கட்சியினர் அண்ணல் அம்பேத்கரை வேண்டும் என்றே அவமதிப்பதாகவும், வரலாற்றை மாற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.

    தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களையும் இதே போல் இழிவுபடுத்தும் வகையில் அந்த அமைப்பு செயல்படுவதாகவும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • தமிழகத்தில் பா.ஜ.க.வினர் நிறைய காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
    • தமிழ்நாட்டை குறி வைத்து உள்ள பா.ஜ.க. இளையராஜா போன்றவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு காண்கிறார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன்.

    தமிழகத்தில் பா.ஜ.க.வினர் நிறைய காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. நகைச்சுவை செய்து, அவர்களே சிரித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை.

    தமிழ்நாட்டை குறி வைத்து உள்ள பா.ஜ.க. இளையராஜா போன்றவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு காண்கிறார்கள். காசியில் தமிழ்சங்கம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். தமிழக மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க. தற்போது 4 குழுக்களாக சிதறி இருப்பது அவருக்கு செய்யும் துரோகம். ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் செய்யும் துரோகம். அ.தி.மு.க.வை உடைப்பது, அக்கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாடு திராவிட அரசியலுக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். பா.ஜ.க. அதை பயன்படுத்தும் என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 2-வது இடத்துக்கு வர பா.ஜ.க. பகிரங்க முயற்சி எடுக்கிறது.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில் கட்சி கொடியை ஏற்றி வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    ஐ.நா.பேரவையும், சர்வதேச சமூகமும் ஈழத்தமிழர்களின் துயரை துடைக்க முன்வர வேண்டும். முள்ளிவாய்க்கால் இன படுகொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். தமிழகத்தில்அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு வர பா.ஜ.க. பகிரங்கமாக முயற்சி எடுக்கிறது.

    தமிழ்நாடு சமூகநீதிக்கான மண். இங்கு சனாதனத்துக்கு இடமில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என தொடர்ந்து தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் இல்லை. அது தேர்தலுடன் கலைந்து சிதறிவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும் எதிரானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×