search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்ரீத்"

    • இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
    • கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    முஸ்லீம்களின் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டி கையும் ஒன்று. இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது முஸ்லீம்களின் இறை தூதர் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்ப டுகிறது.

    இந்தியாவில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    நாகர்கோவில் இளங்கடை புதுதெரு அஷ்ரப் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இதுபோல தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டிலும் ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இதிலும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

    நாகர்கோவிலில் மற்றொரு தரப்பினர் நாளை பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை ஒட்டி நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை இன்னொரு பிரிவினர் இப்பண்டிகையினை கொண்டாடுகிறார்கள். இதற்காக கேரளாவில் நாளையும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    • குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
    • தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் :

    முஸ்லீம்களின் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது முஸ்லீம்களின் இறை தூதர் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்ப டுகிறது.

    இந்தியாவில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    நாகர்கோவில் இளங்கடை புது தெரு அஷ்ரப் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இதுபோல தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டி லும் ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இதிலும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். நாகர்கோவிலில் மற்றொரு தரப்பினர் நாளை பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை ஒட்டி நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். கேரளாவில் பக்ரீத் பண்டி கைக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை இன்னொரு பிரி வினர் இப்பண்டிகையினை கொண்டாடுகிறார்கள். இதற்காக கேரளாவில் நாளையும் விடுமுறை விட ப்பட்டு உள்ளது.

    • உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் காலை 8.30 மணியளவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
    • நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

    நாகப்பட்டினம்:

    இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் காலை 8.30 மணியளவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தும் உன்னத பண்டிகையை நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

    நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் புத்தாடை அணிந்த இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    • தமிழகமெங்கும் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம்.
    • நோன்புப் பெருநாளும், ஹஜ் பெருநாளும் ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மசூதிகள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லரியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபம் வளாகத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தஞ்சை மாநகர கிளையில் இமாம் சேக் அப்துல் காதர் பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசும்போது,

    இஸ்லாமிய மார்க்கத்தின் இரு பெருநாட்களும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாளும், ஹஜ் பெருநாளும் ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. இஸ்லாத்தின் இந்தப் போதனைகளைப் பின்பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு அறப் பணிகளைச் செய்து வருகின்றது.

    இந்த நாளில் ஏழைகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கட்டளையிட்டுள்ளது.

    இதை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழகமெங்கும் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு இறைச்சிகளை வழங்கி உள்ளோம் .

    மேலும் இந்த ஆடு, மாடுகளின் தோல்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழைகளுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்து வருகின்றோம் என்றார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமாக இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாநகர கிளை தலைவர்அப்துல்லாஹ்,

    செயலாளர் ஜியாவூதின், பொருளாளர் சலீம்,துணைதலைவர் ஹலித் ,துணை செயலாளர்

    சர்தார் பாட்ஷாமற்றும் அனைத்து நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் பாபநாசம், அய்யம்பேட்டை, வல்லம், அம்மாபேட்டை, கும்பகோணம், மதுக்கூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    • திருப்பத்தூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை செய்தனர்.
    • ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பெரிய பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்பு அங்கிருந்து நடை பயணமாக அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலிம் தலைமையில் இந்த தொழுகை நடைபெற்றது. ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைக்கு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10-ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

    இன்று காலை 7 மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத் சார்பில் ராமநாதபுரம் - மதுரை சாலையில் உள்ள ஈதுகா மைதானத்தில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழக்கரையில் உள்ள 13-க்கும் ேமற்பட்ட பள்ளிவாசல்களில் பெரு நாள் சிறப்பு தொழுகை நடந்தது. ஏர்வாடி, பெரிய பட்டினம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, ராம நாதபுரம் வெளிப்பட்டினம், பாரதி நகர், தங்கப்பா நகர் மதரஷா, பனைக்குளம், தேவிபட்டினம், இருமேனி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசு வரம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, அழகன்குளம், பெருங்குளம், சித்தார்கோட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல் களிலும் பெருநாள் தொழுகை நடந்தது.

    முன்னதாக பள்ளிவாச லில் பேஷ் இமாம்கள் பக்ரீத் பண்டிகையின் சிறப்புகளை பயான் (சொற்பொழிவு) செய்தனர். தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும், மழை வேண்டியும் சிறப்பு துவா நடந்தது. தொழுகை முடிந்ததும் உறவினர்களும், நண்பர்களும் ஒரு வருக்கொருவர் கட்டி யணைத்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல், மதரஸா மற்றும் வீடுகளில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வீடுகளில் ஆடு, மாடுகள் ஆயிரக்கணக்கில் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்க ளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர். மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமான இடங்களில் திறந்த வெளி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

    சொந்த ஊரில் நடை பெறும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வளைகுடா நாடுகளிலிருந்தும், மலே சியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் ஏராள மானோர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள மலுங்கு ஒலியுல்லா தர்ஹா வளாகத்திடலில் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தொழுகை நடத்தினர்.முன்னதாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைத்து இஸ்லாமியர்களும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து உற்சாகமாக தொழுகைக்கு வந்தனர். தொழுகை முடிந்து ஒருவரையொருவர் கட்டி அனைத்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து குர்பானி கொடுக்கப்பட்டது.

    • உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள்.
    • ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும்.புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் இறுதியில் கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகையாகும்.

    இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்–பட்டது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட் டது. அத–ன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார்.இறைக்கட்டளை என்ற தும் தனது மகனையே பலி கொடுக்க முயன்ற இந்தத் தியாகம் தான் இந்த பண்டிகையின் பின்னணியாகும்.

    இந்த தியாகத் திருநாளில் சிறப்பு தொழுகை நடத்தியும், கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்தும் கொண்டாடப்படும்.ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அைனத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசலில் திருப்பூர் மாநகர பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்காேனார் ஒன்று கூடி உலக அமைதி வேண்டி கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோல் திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பக்ரீத் பண்டிகை தொழுகையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் பெரிய பள்ளிவாசல், காதர்பேட்டை பள்ளிவாசல், கோம்பைத்தோட்டம் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. அதுபோல் பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடந்தது. சி.டி.சி. கார்னர் அல் அமீன் பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, குர்பானி கொடுத்து கொண்டாடினர்.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை
    • ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறி பக்ரித் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் இன்று பக்ரித் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையால் கழிந்த 2 ஆண்டுகளாக பள்ளி வாசல்களில் பக்ரித் பண்டி கை கூட்டு தொழுகை நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது கொண்டாட்டங்களுக்கு தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்

    100-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல் களில் சிறப்பு கூட்டு தொழு கையுடன் பக்ரித் பண்டி கையானது கொண்டாடப்பட்டது.

    அழகியமண்டபம், திருவி தாங்கோடு, குளச்சல், நாகர் கோவில், இளங்க டை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் குடும்ப த்தினர்களுடன் கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.தவ்ஹீத் ஜமாத் சார்பில் அழகியமண்டபம் அருகே திருவிதாங்கோடு பகுதியில் திரண்ட இஸ்லாமியர்கள் சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டதோடு ஒருவொ ருக்கொருவர் ஆரத்தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துக் களை பரிமாறி பக்ரித் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    • இந்த தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
    • உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினோம்.

    கோவை:

    கோவையில் ஜாக் கமிட்டி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர்.

    குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா திருமண மண்டபத்தில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. கோவையில் காலையில் இருந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மைதானத்தில் நடத்தாமல் திருமண மண்டபத்திற்கு வைத்து சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    இது குறித்து இஸ்லாமியர்கள் கூறியதாவது:- சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாட படுகிறது. அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ,ஆடு,மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை கொண்டாடி வருகிறோம்.

    உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
    • பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :-

    'தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்!

    அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்' என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டு தோறும் கொண்டாடுகிறார்கள்.

    நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்; கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக்கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி:-

    நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலை நிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இந்த இனிய திருநாளில் எல்லோரிடத்திலும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னத மாய் வழிகோலட்டும். எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    சமீப காலமாக, இஸ்லாமியர்கள் சந்தித்து வருகிற அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களது உடமைகள் புல்டோசர்கள் மூலமாக இடித்து தள்ளப்படுகின்றன. பா.ஜ.க.வின் புல்டோசர் கலாச்சாரம் சிறுபான்மையின மக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய அடக்குமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் எடுக்கின்ற நடவடிக்கைகள் கூட உரிய பலனைத் தர முடியாத சூழல் உருவாகி வருகிறது. இந்த அவல நிலையில் இருந்து சிறுபான்மையின மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும்.

    பக்ரீத் திருநாளை முன்வைத்து இஸ்லாம் சொல்லும் செய்தியைத் தான் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மதங்கள் கூறுகின்றன. அனைத்து மதங்களும் சொல்லும் செய்தி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்பது தான். இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற உணர்வுடன், அரபா பெரு வழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

    தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச்சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகை பக்ரீத் பண்டிகை. இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் 5-வது கடமையாக ஹஜ் புனித பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனித பயணத்தின் இறுதி கடமையாக இறைவனுக்கு பலியிட்டு அந்த இறைச்சியை ஏழை, எளியவர்களுக்கும், நண்பர்களுக்கும் அளித்து இந்நாளை கொண்டாடுவது இப்பண்டிகையின் தனிச்சிறப்பு.

    பக்ரீத் திருநாளில், நாட்டில் சமத்துவமும், சகோதரத்துவமும் தழைக்கவும், எல்லோருக்கும் எல்லா நன்மைகளும், வளமும், நலமும் பெறவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

    பக்ரீத் போதிக்கும் பாடத்தை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று கூறி, அத்தகைய நிலையை உருவாக்குவதற்கு உழைக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    அன்பு, அறம், அமைதி, ஈகை, இரக்கம், கருணை ஆகிய நற்பண்புகளுடன் மனிதகுலம் அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதையில் செல்வதற்கு விடாமுயற்சியுடன் ஒற்றுமையாக பாடுபடுவோம். மதநல்லிணக்கத்தை பேணி சமத்துவ, சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ்வில் மென்மேலும் உயரவும், இன்புற்று வாழவும் இந்த பக்ரீத் திருநாள் ஆசி புரியட்டும்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    மாபெரும் இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிப்பணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.

    தியாகத்திருநாளை கொண்டாடும் இத்தருணத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் சமூக நல்லிணக்கமும் நாட்டில் தழைத்தோங்குவதற்கும், கொடுங்கோன்மை, அடக்குமுறை, சர்வாதிகாரம் முதலிய தீமைகள் வீழ்வதற்கும் இறைவனை வேண்டுவோம். நாட்டில் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
    • இங்கு கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே கோவை மெயின் ரோட்டில் கால்நடை மற்றும் வார சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை கால்நடை சந்தையும் வியாழக்கிழமை வார சந்தையும் நடந்து வருகிறது.

    இந்த சந்தை பெள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தமிழகத்திலேயே 2-வது பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது. இந்த சந்தைக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், கோபி செட்டிபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

    மேலும் கரூர், நாமக்கல், கோவை, திருப்பூர் என பல பகுதிகளில் இருந்தும் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள். இங்கு கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    இதனால் வாரம் தோறும் இங்கு சுமார் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆடு மற்றும் மாடுகள் விற்பனை நடந்து வருகிறது. மேலும் பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். இதனால் ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனை நடக்கும்.

    இந்த நிலையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு குர்பானி கொடுப்பார்கள். இதற்காக அவர்கள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இதையொட்டி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் நடந்த சந்தைக்கு ஏராளமான கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும் விவசாயிகள் பலர் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.

    மேலும் புளியம்பட்டி சந்தைக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    இந்த சந்தையில் ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இங்கு சுமார் ரூ.50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • இன்று காலையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆட்டு வியாபாரிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    தென்காசி:

    பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    இன்று காலையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவுடையானூர், மேலப்பாவூர், கீழப்பாவூர், சாலைப்புதூர், திரவிய நகர், மருதடியூர், திப்பனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்ததால் அதனை வாங்குவதற்காக கடையம், சம்பன்குளம், தென்காசி, பொட்டல்புதூர், கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் மக்கள் குவிந்தனர்.

    ஒவ்வொரு ஆடுகளின் மதிப்பும் ரூ.6 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 25,000 வரையில் விற்பனையானது. மொத்தத்தில் பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச் சந்தையில் இன்று மட்டும் ரூபாய் 2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது.

    ×