search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள்"

    • திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் பூதலூரில் ெரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.
    • மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    பூதலூர்: திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் பூதலூரில் ெரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள், பஸ்கள், மணல் ஏற்றி வரும் லாரிகள் சென்று வருகின்றன.

    இந்த மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் அவற்றிலிருந்து விலகி பாதுகாப்பாக வாகனங்களை செலுத்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.

    வாகனங்களை வளைத்து நெளித்து ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    உடனடி யாக பூதலூர் ெரயில்வே மேம்பாலத்தில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    அதேபோல விண்ண மங்கலம் அருகே இதேசாலையில் வெண்ணாற்றில் அமைந்து ள்ள பாலத்திலும்குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது.

    செங்கிப்பட்டி- திருக்காட்டு பள்ளியை இைண ப்பதற்கு விண்ணமங்கலம் வெண்ணாற்றுபாலம் பிரதானமான பாலமாக உள்ளதால் இந்த பாலத்தில் மேற்பகுதியில் உள்ள சாலையில் குண்டும் குழியுமான பகுதிகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    பொங்கல் பண்டிகை காலத்தில் ஏராளமான வாகனங்கள் பூதலூர் ரெயில்வே மேம்பாலம், மற்றும் விண்ணமங்கலம் வெண்ணாற்று பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் சீரான முறையில் போக்குவரத்து நடைபெற இரண்டு பாலங்களின் மேல் உள்ள குண்டு குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.

    • போலீசார் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.
    • அதிகமானோர் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீசாரின் ரோந்து மோட்டார் சைக்கிள், மற்றும் கார்களை பரிசோதனை செய்வதற்கான வருடாந்திர ஆய்வு இன்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

    இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு செய்தார். மேலும் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

    அதைத்தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது போலீசார் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர். அதிகமானோர் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பின்னர் போலீசாரின் ரோந்து வாகனம் ஓட்டும் போலீசாரிடம் வாகனத்தை அரசு வாகனம் தானே என்று கருதாமல் தனது சொந்தம் வாகனத்தை போல் பராமரிக்க வேண்டும். அதேபோல் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக இயக்க வேண்டும். ஒரு சிறு விபத்து கூட ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.

    இந்த ஆய்வு நிகழ்ச்சியில் கூடுதல் துணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ராஜன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சி தீரன் நகரில் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.
    • மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.

    திருச்சி

    திருச்சி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள வளர்ந்து வரும் பகுதி தீரன் நகர். அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, வாரச்சந்தை என எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் மெயின் ரோட்டில் பொழுது சாய்ந்ததும் வெளியில் மேய்ந்து வரும் மாடுகள் ரோட்டுக்கு வந்து விடுகின்றன.

    இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாதசாரிகளும் மாடுகளுக்கு பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான கடைகளும் உள்ளன.

    கடைகளுக்கு வருபவர்களும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி போன்ற பொருட்களை வாங்கிச் செல்ல முடியவில்லை. மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வெளியே சுற்றி திரிந்தால் அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை யாரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இங்கு அபராதம் விதிக்கப்படாவிட்டாலும் மாட்டின் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்துக் கூறி மாடுகளை வீடுகள் அருகிலேயே கட்டி அல்லது தொழுவத்தில் கட்டி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மாடுகள் முட்டி பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக இந்த நடவடிக்கையை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் 580 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கார் மற்றும் வாகனங்களில் திரளாக புறப்பட்டு செல்கின்றனர்.

    இந்த வாகனங்கள் பெரும்பாலும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்கள் வழியாகவே செல்கின்றன.

    இந்த நிலையில் தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட போலீசார் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    அதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், போக்குவரத்து சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை வழியாக ராமநாதபுரம் செல்லும் ஒரு சில வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் டிரோன் காமிரா ஆகியவற்றின் காட்சிப்பதிவுகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை மாநகரில் மட்டும் விதிமுறைகளை மீறியதாக 494 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் சிலைமான், கருப்பாயூரணி ஆகிய பகுதிகள் வழியாகவும் தேவர் குருபூஜைக்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. எனவே அந்தப் பகுதியிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட 2 போலீஸ் சரகங்களிலும் 96 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிலைமான், கருப்பாயூரணி போலீசார் அந்த வாகனங்களின் பதிவு எண்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் இதுவரை 580 வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • தோண்டிய குழிகள், முறையாக மூடப்படாமல் வெறும் மண் போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
    • இப்பணி நடைபெறும் பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில் பிரதான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டிய குழிகள், முறையாக மூடப்படாமல் வெறும் மண் போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    தற்போது இந்த குழிகளில் ஜல்லி கலவை போட்டு நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் தற்போது குறுக்கு வீதிகளிலிருந்து குழாய் பதித்து, கழிவுநீர் பிரதான குழாய்க்கு செல்லும் வகையில், பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக இப்பணி நடைபெறும் பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • அதி நவீன வானங்கள் என 1300- க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 662 பேர் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் மருத்துவ ரீதியிலான அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை 2008 -ம் ஆண்டு செப்டம்பர் 15 -ல் 198 வாகனங்களுடன் பெருநகரங்களில் தொடங்கி தற்போது இச்சேவை விரிவுபடுத்தப்பட்டு தற்போது தமிழகத்தில் பச்சிளங்குழந்தை வாகனங்கள், இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள், அதி நவீன வானங்கள் என 1300- க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நாமக்கல் மாவட்டத்தில் 2 பச்சிளம் குழந்தை வாகனங்கள், 4 அதிநவீன வாகனங்கள் என மொத்தம் 29 வாகனங்கள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.

    3 லட்சம் பேர்

    நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 662 பேர் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டு நாள் முதல் இன்று வரை பிரசவத்திற்கு மட்டும் 52287 பேரும், சாலை விபத்திற்கு மட்டும் 66,769 பேரும் இதர அவசர தேவைகளுக்கு 192,106 பேரும் என மொத்தத்தில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 662 பேரின் உயிர்களை காப்பாற்றி உயிர்காக்கும் தோழனாய் இன்று வரை வெற்றி நடை போட்டுக் கொண்டுள்ளது 108 ஆம்புலன்ஸ் சேவை.

    2008 -ம் ஆண்டு முதல் அவசரம் என்றால் 108 ஆம்புலன்ஸை அழைக்கனும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே 108 எவ்வாறு வந்தது என்பதை பற்றி பார்ப்போம்.

    சூரியன், நிலா, பூமி

    பூமத்திய ரேகையில் பூமியின் விட்டம் 7926 மைல்கள். 

    • இலங்கையில் சீன ராணுவப்படை குவிக்கப்பட்டதால் நடவடிக்கை
    • மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் போலீசார் இரவு- பகலாக வாகன சோதனை நடத்திவருகிறார்கள். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.
    • லாட்ஜூகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கிஇருக்கிறார்களா? என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி,

    அக்.18-

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுவதை பயன்படுத்தி அங்கு சீன நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஏற்கனவே இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன நாட்டின் உளவு கப்பல் இலங்கைக்கு வந்தது. இந்த நிலையில் சமீப காலமாக இலங்கையில் சீன ராணுவ படை குவிக்கப்பட்டு சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே இலங்கையின் அண்டை நாடான இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த வகையில் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடற்கரை கிராமங்களிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இரவு-பகலாக போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி மற்றும் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் இந்த பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் ரோந்து சென்று சந்தேகப்படும்படியான படகுகள் ஏதாவது வருகிறதா? என்று தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

    மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் போலீசார் இரவு- பகலாக வாகன சோதனை நடத்திவருகிறார்கள். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    லாட்ஜூகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கிஇருக்கிறார்களா? என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • பேன்சி எண்களை ஆர்.டி.ஓ.க்கள் மூலம் பெற முடியாது.
    • முதல் 4 தொடர்களுக்கு பேன்சி நம்பராக பெற விரும்புபவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் செலுத்தி இருந்தால் இனி மேல் ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டியதிருக்கும்.

    சென்னை:

    சமீப காலமாக வாகனங்களுக்கான பேன்சி எண் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற வி.ஐ.பி.க்கள், நியூமராலஜி காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தங்களது வாகனங்களுக்கு பேன்சி எண்களை வாங்குகிறார்கள்.

    இதற்காக ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலுத்துகின்றனர். தமிழக அரசு 0001 முதல் 9999 வரையிலான 100 வாகன எண்களை சிறப்பு எண்களாக ஒதுக்கி உள்ளது.

    இந்த பேன்சி எண்களை ஆர்.டி.ஓ.க்கள் மூலம் பெற முடியாது. ஆனால் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை சிறப்புக் கட்டணமாக செலுத்தி பெறலாம்.

    இந்நிலையில் டி.என். மோட்டார் வாகன விதிகள் 1989-ன் வரைவு திருத்தத்தின்படி பேன்சி எண் கட்டணத்தை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர்த்த உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

    இதனால் விரைவில் பேன்சி எண்களுக்கான கட்டணம் இரு மடங்கு உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

    இதன்படி முதல் 4 தொடர்களுக்கு பேன்சி நம்பராக பெற விரும்புபவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் செலுத்தி இருந்தால் இனி மேல் ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டியதிருக்கும்.

    5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கு கட்டணம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1.2 லட்சம் ஆகவும், 9 முதல் 10 வரை எண்களுக்கு கட்டணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்கிறது.

    11 முதல் 12 வரையிலான தொடர்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகிறது.

    • குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
    • இதன் மூலம் அரசுக்கு பல லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 34 இரண்டு மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஏலம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இருசக்கர வாகனத்திற்கு விலையை நிர்ணயித்து ஏலம் தொடங்கியது.

    இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று ஏலம் எடுத்தனர். அதிகபட்ச விலையை கேட்கும் நபருக்கு வாகனம் வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு பல லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.

    • சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்திய வழக்கில் மதுவிலக்கு போலீசாரால்107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து ஏலத்தில் கொண்டனர்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மதுவிலக்கு போலீசார், அவிநாசி சரகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்திய வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுவிலக்கு போலீசாரால்107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வாகனங்கள் கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி இளங்கோவன்., மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அனுராதா, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுகுமாரன் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அவினாசி மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 99 இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என ரூ. 28 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அனுராதா தெரிவித்தார்.

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தகவல்
    • போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மூவேந்தர் நகரில் ரூ. 13 லட்சம் மதிப்பிலான சாலை பணியை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒயிட் ஹவுஸ் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.‌ ஏற்கனவே டதி பள்ளி பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது .இதை ஒழுங்குப்படுத்தும் வகையில் ஒயிட் ஹவுஸ் தெருவில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான முதல் கட்ட ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

    கோட்டார் சவேரியார் ஆலய பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட்டு வழக்கம் போல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ஆணையர் ஆனந்த மோகன் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர், மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தொடர்ந்து திருடு போகும் இரு சக்கர வாகனங்களை போலீசார் தேடிவருகின்றனர்
    • கொசுவலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    கரூர்:

    கரூர் அருகே, எஸ். சணப்பிரட்டி பகுதியைச் சேர்ந் தவர் மணிகண்டன் (வயது 26) டிரைவரான இவர், கடந்த, 26-ந் தேதி பூ மார்க்கெட் பகுதியில் தனது பைக்கை நிறுத் தியிருந்தார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது, பைக் காணவில்லை. இதேபோல கரூர், வெங்கமேடு, சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்( 60). கொசுவலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 28-ந் தேதி கரூர், உழவர் சந்தை முன், தனது பைக்கை நிறுத்தியிருந்தார். அவரது பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×