என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"
- மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும்.
- கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
திருத்தணி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலையும் நீடித்து வருகிறது.
சென்னையில் இன்று காலை பலத்த மழை கொட்டியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடிக்கிறது. ஆந்திராவிலும் கனமழை கொட்டி வருகிறது.
ஆந்திர பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சித்தூர் மாவட்டம் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 33 அடி உயரம் உள்ள இந்த அணை முழுவதும் நிரம்பியது.
இந்த நிலையில் மழை நீடித்து வருவதால் அம்மப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.
இதையடுத்து அம்மப்பள்ளி அணையில் இருந்து 200 கன அடி உபரி நீர் 2 மதகுகள் வழியாக திறக்கப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் அதிகம் தண்ணீர் பாயும்போது திருத்தணி அருகே உள்ள சமந்தவாடா, நெடியம், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கும். எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பா லங்களை பொதுமக்கள் கடக்கும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வழக்கமாக அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பள்ளிப்பட்டு, சமந்தவாடா, நெடியம், திருத்தணி பகுதி வழியாக கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பூண்டி ஏரிக்கு வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- பேச்சிப்பாறை அணைக்கு 589 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- பெருஞ்சாணி அணைக்கு 566 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருவட்டார்:
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மலையோர கிராமங்களான பேச்சிப்பாறை, கோதையாறு, மோதிரமலை, தச்சமலை, கல்லாறு போன்ற பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.
நேற்று குலசேகரம், திற்பரப்பு, சிற்றாறு, கடையாலுமூடு அருமனை, திருவட்டார் போன்ற பகுதிகளில் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது.
மலைப்பகுதியான கோழிப்போர்விளையில் 88.4 மில்லி மீட்டர் மழையும், இரணியலில் 63 மில்லி மீட்டரும், சிவலோகம் பகுதியில் 54.6, அடையாமடை 51.2, பெருஞ்சாணி 47, குளச்சல் 46.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
புத்தன் அணையில் 44.8, முள்ளங்கினாவிளை 32.8,சுருளோடு 30.4, பேச்சிப்பாறை 27, குருந்தன் கோடு 23, கன்னிமார் 21.2, நாகர்கோவில் 20, ஆனைகிடங்கு 16, கொட்டாரம் 15.6, பூதப்பாண்டி 15.4, சிற்றார் 15.4, மாம்பழத்துறையாறு 15, பாலமோர் 11.2, திற்பரப்பு 7.8, மைலாடி 7.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு 589 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 41.47 அடியாக உள்ளதால் 546 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு 566 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணைக்கு 37 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 62 கன அடியும் நீர்வரத்து இருந்த போதிலும் வெளியேற்றம் எதுவும் இல்லை. பொய்கை அணை, மாம்பழத்துறையாறு அணைகளில் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை.
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வருவதால் ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்று 3-வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது
- கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 6-ந்தேதி உருவாகிறது. இதனால் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித் துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது.கன்னியாகுமரி கொட்டாரம் மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
கொட்டாரம் பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிக பட்சமாக 70.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அங்கு தொடர்ந்து பெய்து வந்த மழையினால் மின்னல் தாக்கி பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் கோபுர கலசம் ஒன்று உடைந்து கீழே விழுந்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய் தது. இதனால் ரோடு களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரணியல், ஆரல் வாய்மொழி, கோழிப் போர்விளை, அடையா மடை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படுவதால் கோதை ஆறு, குழித்துறை ஆறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-52.2, பெருஞ்சாணி-57.2, சிற்றார்-1-28.4, சிற்றார்- 2-43.8, பூதப்பாண்டி-10.4, களியல்-43.7, கன்னிமார்- 9.2, கொட்டாரம்-70.4, குழித்துறை-34, மயிலாடி- 32.2, நாகர்கோவில்-2, சுருளோடு-28, தக்கலை-39.2, இரணியல்-4.6, பால மோர்-10.2, மாம்பழத்துறை யாறு-6.33, திற்பரப்பு- 47.4 ஆரல்வாய்மொழி- 2.2, கோழிப்போர்விளை- 18, அடையாமடை-29.4, குருந்தன்கோடு-2.8, முள்ளங்கினாவிளை- 12.6, ஆணைக்கிடங்கு-34.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 42.38 அடியாக உள்ளது. அணைக்கு 1175 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1016 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.07 அடியாக உள்ளது. அணைக்கு 1112 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணை யில் இருந்து 1872 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.61 அடியாக வும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.71 அடியா கவும், பொய்கை நீர்மட் டம் 16 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு நீர்மட்டம் 39.62 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 13.4 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் செங்கல் உற்பத்தி ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். செங்கல் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதையடுத்து செங்கல் விலை சற்று உயர்ந்துள்ளது.
- நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
- சென்னை, தூத்துக்குடி மற்றும் வெளியூர்களில் இருந்து நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்வதால் கடையம் அருகே உள்ள ராமநதி மற்றும் கடனா அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி நேற்று 6 அடி நீர்இருப்பு அதிகரித்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்துள்ளது. இதேபோல் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 61 அடியை எட்டி உள்ளது.
36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை 34.50 அடியை எட்டி உள்ளது. இதேநிலையில் மழை பெய்தால் இன்று இரவுக்குள் அந்த அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 18 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 17 மில்லிமீட்டரும், கடனா அணை பகுதியில் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் அந்த அணகளுக்கு வினாடிக்கு 1388 கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1204.75 கனஅடி நீர் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 425 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை.
மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, மூலக்கரைப்பட்டி, பாளை உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் நாற்று நடவு பணிகள், தொழி அடித்தல் உள்ளிட்ட பணிகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருகிறது. ஊர் பகுதிகளை விட உள்மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் களக்காடு தலையணையில் நேற்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்கிறது.
இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வன சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் தலையணையை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, தூத்துக்குடி மற்றும் வெளியூர்களில் இருந்து நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் தலை யணையை சுற்றி பார்த்து விட்டு, திரும்பி சென்றனர்.
தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் இன்று 2-ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் பெரும்பாலான இடங்களில் உப்பளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மாநகர பகுதியில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது.
சூரங்குடியில் அதிகபட்சமாக 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 18 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேலும் குலசேரகப்பட்டினம், காயல்பட்டினம், வைப்பார், வேடநத்தம், காடல்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
- தொடர் வெள்ளப்பெருக்கால் கொட்டக்குடி ஆற்றுக்கு செல்ல, ஆற்றை கடக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் மழை அதிகரித்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் சென்றது. தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு மேலப்பரவு பகுதியில் தோட்டம் உள்ளது. அங்கிருந்து மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு கொட்டக்குடி ஆற்றை கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது திடீரென டிராக்டர் தண்ணீரில் சிக்கி கொண்டது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்ததால் டிராக்டர் செல்ல முடியாமல் ஆற்றிலேயே அடித்து செல்லப்பட்டது. இதை பார்த்ததும் டிராக்டர் டிரைவர் சுதாரித்துக்கொண்டு குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். சுமார் ரூ.1லட்சம் மதிப்புள்ள மாங்காய் லோடு மற்றும் புதிய டிராக்டர் அடித்து செல்லப்பட்டதால் இளையராஜா வேதனைஅடைந்தார்.
தொடர் வெள்ளப்பெருக்கால் கொட்டக்குடி ஆற்றுக்கு செல்ல, ஆற்றை கடக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள்.
- ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன் மலை இயற்கை அழகுடன் விளங்கும் மலைப் பகுதி. இங்கு பெரியார், மேகம், செருக்கலூர் என பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள். விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை ரசிப்பது வழக்கம் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும், மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும், வெள்ளி மலையில் உள்ள பள்ளத்தாக்கில் படகு சவாரி செய்வதற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வருபவர்கள் நீர்வீ ழ்ச்சிகளில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. "பொதுமக்கள் நலன் கருதி நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்குத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக கல்வராயன் பகுதியில் பெய்ந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக குளிக்க தடை விதித்த போதிலும் அந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீர்வீழ்ச்சி பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைபகுதி சாலையில் வரும் பொழுது மிகவும் ஜாக்கிரதையாகவும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மழைக்காலம் என்பதால் சாலைகளில் பாறைகள் புரண்டு வரும் என்பதால் கவனமுடன் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், மழைக்காலம் முடிந்த பிறகும் நீர்வீ ழ்ச்சிகளில் குளிப்பதற்கும் மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த பாதுகாப்புடன் வந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கிறது.
- ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 170 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
திருவள்ளூர்:
வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிருஷ்ணாபுரம் பகுதியில் அம்மம்பள்ளி அணை உள்ளது. 33 அடி ஆழம் கொண்ட இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது.
இதனையடுத்து ஆந்திர மாநில அரசு கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 170 கன அடி உபரி நீரை இரண்டு மதகுகள் வழியாக திறந்துவிட்டது.
தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருக்கும் தரைப்பாலங்களைக் கடக்கும்போது பாதுகாப்பாக கடக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரானது பூண்டி நீர் தேக்கத்தை விரைவில் வந்தடையும். இதனால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 170 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பள்ளிப்பட்டு சுற்றுப்புற பகுதியான வெளியகரம், நெடியம், சாமந்த வாடா தரைப்பா லத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் பாலத்தை கடக்க முயல வேண்டாம். மேலும் பாதுகாப்பு பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலை கிராமங்கள் துண்டிப்பு
- 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது
வேலூர்:
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோவில் அருகே பாயும் நாகநதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் காற்று காரணமாக காத்தாளம்பட்டு, தெற்கு கொல்லைமேடு, சிங்கிரிகோவில் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.
அமிர்தி நீர்வீழ்ச்சியில் தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அமிர்தி சிறு மிருககாட்சி சாலைக்கு அருகே உள்ள தரைப்பாலும் முழுவதுமாக மூழ்கியுள்ளது.
தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால் ஜமுனா மரத்தூர், நாடனூர், நம்மியம்பட்டு, தொங்குமழை, கானமலை, பாலாம்பட்டு உள்ளிட்ட மலை குக் கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.தற்போதைக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை.
- பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளாவூர் பழைய சீவம் அணைக்கட்டில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் மற்றும் வாயலூர் தடுப்பணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் வழிந்தோடுகிறது.
மேலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறையுடன் இணைந்து பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம்.
மேலும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. கால்நடைகளான ஆடு, மாடு போன்றவற்றை பாலாற்றில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். வீட்டில் உள்ள சிறுவர்-சிறுமியர்களை ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்று பகுதியில் தற்போது வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கடலை நோக்கி பாய்ந்து வருகிறது.
மேலும் இன்று காலை முதலே மழையும் பெய்து வருவதால், நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் காரணமாக வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கூடுதலாக கண்காணித்து, கரையோர பகுதியில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
- அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, மெய்யூர், அணைக்கட்டு, ஜனப்பம் சத்திரம் வழியாக பாய்ந்து எண்ணூர் பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.
இந்தநிலையில் வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.
மேலும் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீரும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்தது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தரைப்பாலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
பொது மக்கள் தரைப் பாலத்தை கடப்பதை தடுக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன.
ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் வாகனங்கள் சீத்தஞ்சேரி, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வழியாக இயக்கப்படுகின்றன. அதேபோல் இதே மார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இதனால் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் இன்று 2-வது நாளாக ஒதப்பை தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.
- தொடர் கனமழை காரணமாக தற்போது கீழ்க்கதிர்பூர், மேல்கதிர்பூர், கீழம்பி, மேலம்பி, செவிலிமேடு உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.
- கடந்த 2015 க்கு பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்தபாலு செட்டிசத்திரம் பகுதியில் பாலாறில் இருந்து கிளை ஆறாக வேகவதி உருவாகி காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் 9 கிலோ மீட்டர் பாய்ந்து வாலாஜாபாத் அருகே உள்ள திருமுக்கூடல் பகுதியில் மீண்டும் பாலாற்றுடன் இணைகிறது. வேகவதி ஆற்றின் மொத்தம் நீளம் 18 கிலோமீட்டர் ஆகும்.
தொடர் கனமழை காரணமாக தற்போது கீழ்க்கதிர்பூர், மேல்கதிர்பூர், கீழம்பி, மேலம்பி, செவிலிமேடு உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரின் வேகவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நாகலத்துமேடு, முருகன்குடியிருப்பு, தாயராம்மன்குளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதையடுத்து தாழ்வான இடங்களில் வசித்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. வேகவதி ஆற்றில் 2500 கன அடி நீர் செல்வதால் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காஞ்சிபுரம் தாட்டி தோப்பு முருகன் காலனி, எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி நகர், நாகலத்து மேடு, தாயாரம்மன், குளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 1000 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. 4-வது நாளாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றின் குறுக்கே இருந்த 4 தரைப்பாலங்கள் முற்றிலும் உடைந்து உள்ளன. மேலும் 5 தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 2015 க்கு பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வேகவதி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு மேல் கதிருப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்களை குடியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- ஆக்லாந்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது.
- விமான நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கி குட்டி தீவு போல் காட்சியளித்தது.
ஆக்லாந்து:
நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக ஆக்லாந்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் பெய்யும் மொத்த மழை அளவில் 15 மணி நேரத்தில் மட்டும் 75 சதவீதம் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் அந்நகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆக்லாந்து விமான நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கி குட்டி தீவு போல் காட்சியளித்தது. விமான நிலைய கட்டிடத்தின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் மேல்தளத்திற்கு சென்று பணியாற்றுகின்றனர். எஸ்கலேட்டர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டன. இதனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
மீட்பு படையினருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர கால தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆக்லாந்தில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆய்வு செய்தார். இதன்பின்பு, அவசரகால படையினருடன் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'பருவகால மழையால் ஏற்பட்டு உள்ள உயிரிழப்பு அதன் பாதிப்பின் தீவிர தன்மையை எடுத்து காட்டியுள்ளது. தொடர் கனமழைக்கு 3 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவரை காணவில்லை' என்று கூறியுள்ளார்.