search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடை பெற்றது.

    விழாவையொட்டி தின மும் காலையில் யாக சாலை பூஜையும் அதைத் தொடர்ந்து அபிஷேகமும் பின்னர் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது. இரவு யாகசாலை பூஜையும் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு அருட்பிர சாதம் வழங்குதலும் நடை பெற்றது.

    10-ம்திருவிழாவான நேற்று காலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு பல வண்ண மலர்களால்அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். மறுநாளான இன்று காலை விவேகானந்தபுரம் கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை சிவஸ்ரீ டாக்டர் சங்கர் பட்டர் தலைமையில் 6 அர்ச்சகர்கள் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பால கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, பொதுச் செயலாளர் பானுதாஸ், நிர்வாகச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மூத்த ஆயுட்கால ஊழியர்கள் அங்கிராஷ், கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்
    • ஊர்வலத்தின் போது பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது.

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாவட்ட முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அரை அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    வீடுகளிலும், கோவில்களி லும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொரி கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தனர். இன்று காலையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. காலை மாலை இரு வேளை களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை முதல் 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நி லைகளில் கரைக்கப்படு கிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வா கம் 10 இடங்களில் அனுமதி வழங்கி யுள்ளது. கன்னியாகுமரி சொத்தவிளை, சங்குத்துறை, பள்ளிகொண்டான் தடுப் பணை, குழித்துறை தாமிர பரணி ஆறு, திற்பரப்பு, மணவாளக்குறிச்சி, சின்ன விளை, மண்டைக் காடு, வெட்டுமணி, தேங்காய் பட்டிணம் மற்றும் மிடாலம் ஆகிய பகுதிகளில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சிலைகள் கரைக்கப்பட உள்ள பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அந்த பகுதிகளில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் கடற்கரையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு அதன் பிறகு கடலில் கரைக்கப்படும். இதே போல் மேற்புறத் திலிருந்து கொண்ட செல்லப் படும் விநாயகர் சிலைகள் குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் 3-ந்தேதி இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை கடலில் கரைக்கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப் பட்டு கரைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    4-ந்தேதி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்குத்துறை கடலில் கரைக் கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஆங் காங்கே இருந்து ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கரைக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது.

    சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை களை மூடுவதற்கும் நடவ டிக்கையை எடுக்கப்பட்டுள் ளது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகளை அதற்காக ஒதுக்கப்பட்ட வழியாக மட்டுமே ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஊர்வலத்தின் போது கூம்பு வடிவ ஒலிபெருக்கி களை பயன்படுத்தக்கூடாது. பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. விநாயகர் சிலைகளை மினி டெம்போக்கள் மற்றும் டிராக்டர்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள் துணிகள் அழகு சாதன பொருட்களை கரைப்பதற்கு முன்னதாக பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது பட்டாசு கள் வெடிக்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. மேலும் சிலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கிடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • 31-ந்தேதி காலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகா னந்தகேந்திர வளா கத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் காலையில் யாக சாலை பூஜையும் அதைத் தொடர்ந்து அபிஷேக மும் பின்னர் அலங்கார தீபாராத னையும் பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கு தலும் நடந்து வருகிறது. இரவு யாகசாலை பூஜை யும் அலங்கார தீபாரா தனையும் பக்தர் களுக்கு அருட்பிரசா தம் வழங்குதலும் நடை பெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவை யொட்டி 108 கலச பூஜையும் அதைத்தொடர்ந்து கலசாபிஷேகமும்நடந்தது. இரவு 7 மணிக்கு அருகம்புல், தாமரை, அரளி, பச்சை கொழுந்து, மரிக்கொழுந்து, வில்வம் இலை, செவ்வந்தி, சம்பங்கி, பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ், கனகாம்பரம், நெத்தி பூ, பிச்சி, மல்லிகை, ஆகிய 14 வகையான வண்ண மலர்களால் விநாயகருக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது.

    9-ம் திருவிழாவை யொட்டி ஏகாட்சர மகா கணபதிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. இந்த புஷ்பா பிஷேகம் மற்றும் சங்காபி ஷேகத்தை டாக்டர் சிவஸ்ரீ சங்கர் பட்டர் தலைமையில் 6 அர்ச்சகர்கள் நடத்தி னார்கள். 10-ம் திருவிழாவான இன்று

    (31-ந்தேதி) காலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

    இதையொட்டி இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (1-ந்தேதி) காலை யில் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    மேலும் கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் இன்று 2-வது நாளாக திடீரான தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து வெகு நேரமாகி யும் தொடங்கப்ப டாமல் இருந்தது.

    இதனால் விவேகா னந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற் றத்துடன் கடற்கரையில் நின்றபடியே விவேகா னந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப் படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.

    இந்த நிலையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் சுற்றுலா பயணி கள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத் துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • பாறைகள் வெளியே தெரிந்தன
    • திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நேற்றிரவு திடீர் என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது.

    இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள்கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

    கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்வானதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை.

    இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிடவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 9மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 9 மணிக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். அதே சமயம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

    • 7-ந் தேதி பாத யாத்திரை தொடக்கம்
    • சுற்றுப்பயணம் முழு விவரம் வெளியீடு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    வருகிற 7-ந்தேதி கன்னி யாகுமரியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார். 3570 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் 12 மாநிலங்களை கடந்து காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார். ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கு வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசாரும், குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி களும் மேற்கொண்டு வரு கிறார்கள்.

    ராகுல் காந்தி செல்ல உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் ஆய்வு செய் யப்பட்டு வருகிறது.ஏற்க னவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் வந்து ஆய்வு செய்திருந்த நிலையில் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்லக்குமார், விஜய் வசந்த் ஆகியோர் இங்கேயே முகாமிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரு கிறார்கள்.

    7-ந்தேதி காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரிக்கு வரும் ராகுல்காந்தி மாலை கன்னி யாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கன்னியா குமரியில் பொதுக் கூட் டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடம் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட உள்ளது.

    7-ந்தேதி இரவு கன்னியாகுமரியில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து பாத யாத்திரை தொடங்குகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகா னந்தா கல்லூரி வரை பாதயாத்திரை மேற் கொள் கிறார். அன்று இரவு விவே கானந்தா கல்லூரியில் தங்கும் வகையில் ஏற்பா டுகள் செய்யப்பட்டு வரு கிறது.

    8-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கொட்டாரம் வருகிறார். அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து பொற்றையடி, வழுக்கம் பாறை வழியாக சுசீந்தி ரம் வந்தடைகிறார்.சுசீந்தி ரம் பள்ளியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    பின்னர் மாலை அங்கி ருந்து புறப்பட்டு நாகர் கோவில் சவேரியார் ஆலயம் டெரிக் சந்திப்பு வழியாக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியை வந்தடைகிறார். இரவு ஸ்காட் கல்லூரியில் தங்குகிறார். 9-ந்தேதி காலை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியில் இருந்து தனது பாத யாத்திரையை தொடங்கு கிறார்.

    சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக புலியூர்குறிச்சி செல்கிறார். அங்கு புலியூர்குறிச்சியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியத்திற்கு பிறகு புலியூர் குறிச்சியில் இருந்து மேட்டுக் கடை வழியாக மூளகுமூடு சென்றடைகிறார்.அன்று இரவு மூளகுமூடு சென்மேரிஸ் பள்ளியில் தங்குகிறார்.

    10-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு சாமியார் மடம் சிராயன்குழி வழியாக மார்த்தாண்டம் சென்றடைகிறார். மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பின்னர் மதியத்திற்கு பிறகு அங்கி ருந்து புறப்பட்டு குழித்துறை சந்திப்பு, படந்தாலுமூடு சந்திப்பு வழியாக தலைச்சன் விளை செல்கிறார். அன்று இரவு செருவாரக்கோணம் பள்ளியில் தங்குகிறார்.

    11-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கேரளா மாநிலம் செல்கிறார்.இந்த இடங்களை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

    இன்னும் ஒரு சில நாட்களில் ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொள்ள பாதைகள் இறுதி வடிவம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • டயருக்கு அடியில் வைத்த கல்லை எடுத்த போது மதில்சுவரில் மோதி உடல் நசுங்கியது
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன் குடியிருப்பை அடுத்த தேங்காய்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 43). டெம்போ டிரைவர்.

    இவர்நேற்றுமாலை சுமார் 3மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் கட்டிடக் கழிவுகளை ஏற்றுவதற்காக தனது டெம்போவை ஓட்டி வந்தார். அங்கு அவர் கட்டிட கழிவுகளை ஏற்றுவதற்காக டெம்போவை சாலை ஓரமாக நிறுத்தி வைத்து இருந்தார். அவர் தனது டெம்போவை நிறுத்தி வைத்திருந்த இடம் பள்ளமாக இருந்ததால் அந்த டெம்போ நகராமல் இருப்பதற்காக டயருக்கு அடியில் டிரைவர் ஜேக்கப் கல்ஒன்றை தடுப்பு கொடுத்து வைத்து உள்ளார்.

    லோடு ஏற்றிய பின்பு டயருக்கு அடியில் வைத்திருந்த கல்லை டிரைவர்ஜேக்கப் அகற்றினார். அப்போது டெம்போ "திடீர்" என்று நகர்ந்து ஜேக்கப்பை அருகில்உள்ள மதில் சுவருடன் சேர்த்து இடித்துள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேக்கப்பை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேயர் மகேஷ் பங்கேற்பு
    • நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட அரசு வழக்கறிஞராக ஜாண்சன் இன்று நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவரிடம் முன்னாள் அரசு வழக்கறிஞர் சந்தோஷ்குமார் பொறுப்பு களை ஒப்படைத்தார். உடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரிபிரின்சி லதா, முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன், குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட்,

    திற்பரப்பு பேரூர் கழக செ யலாளர் ஜாண் எபனேசர், திருவட்டார் தெற்கு ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதின், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே.எம். ஆர். ராஜா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினித் ஜெரால்ட்,

    ஒன்றிய துணை செயலாளர் காந்தி, பொன்மனை பேரூர் செயலாளர் சேம் பெனட் சதீஷ், திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் யோபு, மாவட்ட பிரதிநிதி பொன். ஜேம்ஸ், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ஜாஹீர் உசேன், தி.மு.க. உறுப்பினர் வெண்ட லிகோடு சூர்யகுமார், மகளிர் அணியை சேர்ந்த தங்கரமணி, புனிதா, குமாரி மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்துக்கொண்டனர்.

    • என்ஜினீயர் பலி ; மற்றொருவர் படுகாயம்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஏழுசாட்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர் பால்துரை. இவரது மகன் வருண் (வயது 27). இவர் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவரும் அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர் சித்தாந்த் (வயது 19) என்பவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மகாதானபுரம் ரவுண் டானா சந்திப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை வருண் என்பவர் ஓட்டி சென்றார். சித்தாந்த் அவருக்கு பின்னால் அமர்ந்தி ருந்தார். இவர்கள் தங்களது ஊரான ஏழுசாட்டுபத்துக்கு செல்வதற்காக அகஸ்தீஸ்வ ரத்துக்கு செல்லும் சாலை யில் திரும்பும்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது.

    இதில் இவர்கள் இரு வரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த வருணை108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வருண் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வருணின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ஏராள மானோர் படை எடுத்த வண்ணமாக உள்ளனர்.

    அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.காலை 7.45 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி யதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    இன்று காலை 11 மணி வரை 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில்சென்று பார்வையிட்டு இருந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள்படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியா குமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்கா ணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார்
    • போலீசார் ஒலி பெருக்கி மூலம் போதைக்கு எதிரான கோஷங்களை வலியுறுத்தி பிரசாரம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் உபகோட்டம் சார்பில் போதை இல்லாத மாவட்ட மாக குமரி மாவட்டத்தை மாற்றுவோம் என்பதை வலியுறுத்தி போதைக்கு எதிராக போலீசாரின் இரு சக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் நடை பெற்றது.

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு இருந்து போதைக்கு எதிரான இந்த பேரணி புறப்பட்டது.

    இந்த பேரணியை கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அங்குஇருந்து புறப்பட்ட இந்த பேரணி கன்னியா குமரி போலீஸ் நிலைய சந்திப்பு, சர்ச் ரோடு சந்திப்பு, ரெயில் நிலையம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, சுவாமிநாதபுரம் ஒற்றைப்புளிசந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்த லிங்கபுரம்,

    மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பஞ்சலிங்கபுரம், மாதவபுரம் சந்திப்பு, ஒற்றையால்விளை, சின்ன முட்டம், விவேகா னந்தபுரம் வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை சென்று அடைந்தது. இந்த பேரணியில் கன்னியாகுமரி போலீஸ் உப கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், சுசீந்திரம், தென்தாமரைகுளம், ஈத்தாமொழி, ராஜாக்க மங்கலம் ஆகிய6போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார், கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த பெண் போலீசார் இருசக்கர வாகனத்தில் கலந்து கொண்டு அணிவகுத்துச் சென்றனர்.

    இவர்களது இருசக்கர வாகனத்தில் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்ட ப்பட்டுஇருந்தன. மேலும் இந்த பேரணிக்கு முன்னால் போலீஸ் வாகனத்தில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் போதைக்கு எதிரான கோஷங்களை வலியுறுத்தி பிரசாரம் செய்தபடி சென்றனர்.

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள கனியாகுளம் பாறையடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 54).

    இவர் ஒற்றைக் காலை இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். பெயிண்டராக வேலைபார்க்கும்இவர் இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி இவரது சைக்கிள் பயணத்தின் தொடக்க விழா கன்னியா குமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு நடந்தது.

    இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வக்கீல் ஆர். மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவரது சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் டென்னிஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பய ணம் புறப்பட்ட இவர் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னையை அடுத்த மாதம் (செப்டம்பர்) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான 15-ந்தேதி சென்றடைகிறார். நாளொன்றுக்கு நூறு கிலோமீட்டர் வீதம் மொத்தம்1500 கிலோமீட்டர் தூரம் இவர் சைக்கிள் பணம் மேற்கொள்ள உள்ளார்.

    ×