search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்டாகிராம்"

    • கால் பந்து வீரர்கள் என்று கூறினாலே நமக்கு முதலில் மனதில் வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ.
    • இவரது முதல் கோல் போர்சுகளுக்காக ஜூன் 12 ஆம் தேதி 2004 அடித்தார்.

    கால் பந்து வீரர்கள் என்று கூறினாலே நமக்கு முதலில் மனதில் வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் போர்சுகல் கால்பந்து அணி வீரராவார். இவரது முதல் கோல் போர்சுகளுக்காக ஜூன் 12 ஆம் தேதி 2004 அடித்தார். இவர் இதுவரை கால் பந்து வரலாற்றத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார்,

    கடந்த 2022 டிசம்பரில், அல் நசர் என்ற கால்பந்து அணி 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஆண்டுக்கு $75 மில்லியன் தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரராக ரொனால்டோ மாறினார்.

    கடந்த வாரம் இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்திற்கு சுமார் 45 லட்சத்திற்கும் அதிக கமெண்டுகள் குவிந்தன. இது சமூக வலைதளத்தில் அதிக கமெண்டுகள் பெற்ற பதிவு என்ற சாதனையாக மாறியது.

    தற்பொழுது இவர் மற்றொரு சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் 2004 ஆம் ஆண்டில் இருந்து 2024 வரை தொடர்ந்து 21 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படத்தார்.

    • இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர்.
    • அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படைத்தை கீர்த்தி வெளியிட்டுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. சூப்பர் 30 என்கிற ஹிந்தி படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அதனை தொடர்ந்து உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் கீர்த்தி ஷெட்டி.

    அதன்பின் நானிக்கு ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழில் 'தி வாரியர்' என்கிற படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியது லிங்குசாமி. இந்த படம் தெலுங்கு, தமிழ் என இரண்டிலும் வெளியானது.

    இப்போது, வா வாத்தியாரே, லவ் டுடே புகழ் பிரதீப்புக்கு ஜோடியாக எல்.ஐ.சி மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜெனி ஆகிய படங்களிலும் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

    இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படைத்தை கீர்த்தி வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    அந்த புகைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி முத்துக்களால் ஆன உடையை அணிந்திருப்பார். இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல லட்சம் லைக்குகளை பெற்றது. 

    • சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.
    • பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார்.

    சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பூதாகரமாக மாறியுள்ளது.

    பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

    குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

    பலரும் அந்த பெண் காவலருக்கு வேலை வாய்ப்பும், ரொக்க பணமும், தங்க மோதிரமும் பரிசளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் மேலும் ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

    2022 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் வில் ஸ்மித் அவரது மனைவியை தரக்குரைவாக பேசியதால் காமெடியனை மேடையில் வைத்து அறைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அச்சம்பவம் மிகப்பெரிய வைரல் ஆகி பேசுப்பொருள் ஆனது. அச்சம்பவத்திற்கு 2022 ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் பதலளிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டது தற்பொழுது வைரலாகி வருகிறது.

    அப்பதிவில் "என் அம்மாவையோ தங்கையின் உடல்நல குறைவை வைத்து யாராவது ஒரு இடியட் கிண்டல் செய்தால் நானும் வில் ஸ்மித்தை போல் அவனை அடித்திருப்பேன் " என்று வில் ஸ்மித்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவு செய்து இருந்தார்.

    இப்பொழுது அதே சம்பவம் இவருக்கு நடக்கையில் அதை வேறு விதமாக கையாளுகிறார். இவரை அறைந்த பெண் காவலர் மீது புகாரளித்து, தீவிரவாதி, சீக்கியர்களே முரடர்கள் என பேசி வருகிறார். கங்கனாவின் பழைய இன்ஸ்டா பதிவை நெட்டிசன்கள் தற்போது பதிவிட்டு கமென்ட் செய்து வருகின்றனர்.

    • கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
    • சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம் மேயாத மான். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகினார் பிரியா பவானி சங்கர். மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

    இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து  பிரியா பவானி சங்கர் பல படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் சிம்பு, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். தமிழ் மட்டுமன்றி தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.  இதனிடையே தமிழில், இந்தியன் 2, டிமான்டி காலனி, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

     

    இதனிடையே அவர் தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலு என்பவருடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். தற்பொழுது அவருடன் ஜாலியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் வசித்து வருபவர் இர்ஃபான், இவர் இன்ஸ்டாகிராமில் பேசி பெண்களை கவர்வதை தொழிலாக பார்த்து வருகிறார்.
    • அந்த சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அந்த சிறுமியை மிரட்ட துவங்கினார்.

    ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் வசித்து வருபவர் இர்ஃபான், இவர் இன்ஸ்டாகிராமில் பேசி பெண்களை கவர்வதை தொழிலாக பார்த்து வருகிறார். இம்முறை 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் நண்பர் ஆனார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் தரவுகளை பெற்றுள்ளார்.

    பிறகு, அந்த சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அந்த சிறுமியை மிரட்ட துவங்கினார். மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க 5 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு இர்ஃபான் சிறுமியை மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி வீட்டிற்கு தெரியாமல் பணத்தை திருடி இர்ஃபானிடம் கொடுத்துள்ளார்.

    மார்ச் மாதம் இவ்வாறு இர்ஃபானிடம் பணத்தை கொடுக்கும் போது இர்ஃபான், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இச்செய்தி யாருக்கும் வெளியே தெரியாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார்.

    இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை காவல் துறையிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த காவல் துறை அதிகாரி, இர்ஃபான் மற்ற அவனது கல்லூரி மற்றும் பள்ளி பெண்களுடனும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

    இர்ஃபான் இதை தனியாளாக செய்யவில்லை இவருக்கு பின் ஒரு கூட்டமே செயல்பட்டு வந்துள்ளது. இர்ஃபானால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் விவரத்தை தெரிந்துக்கொள்ள காவல்துறை முயற்சித்து வருகின்றனர்.

    இர்ஃபானும் அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் கைது செய்த போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடா முயற்சி" படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
    • அதே சமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார்.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடா முயற்சி" படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் அஜித்குமார் நடித்து வருகிறார்.

    அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் தருவார்.

    இந்நிலையில், எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது. தயவு செய்து யாரும் அதனை பின் தொடர் வேண்டாம் என்று ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த போலியான எக்ஸ் பக்கத்தை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது.
    • இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    நமது தினசரி வாழ்க்கையில் நாம் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது, போஸ்ட் போடுவது மேலும் அதில் எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றது என்பதை பார்க்க நமக்கு வழக்கம் ஆகிவிட்டது.

    இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும் , பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

     

    இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட் , டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியாக கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளார்.
    • பதிவு இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.

    உலகின் பல நாடுகளில் 'டேட்டிங்' கலாச்சாரம் பெருகி வருகிறது. இதற்காகவே இணையத்தில் தனியாக செயலிகள் உள்ள நிலையில் அதன்மூலம் இளைஞர்கள் தங்கள் ஜோடியை தேடி வருகிறார்கள். வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாகி வரும் 'டேட்டிங்' கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா கிரி என்ற பெயர் கொண்ட பெண் பயனர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. அந்த வீடியோவில், இளம்பெண் கண்ணாடியில் தெரிகிறார். அதன் மேல் பகுதியில், நீங்கள் சிங்கிளா? 'டேட்டிங்' செல்ல விருப்பமா? என்னை டேட்டிங்கிற்கு வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். காபியுடன் டேட்டிங் செல்ல ரூ.1,500, இரவு விருந்து மற்றும் படம் பார்க்க- ரூ.2,000, கைகளை கோர்த்தபடி பைக் 'டேட்டிங்' செல்ல ரூ.4,000, 'டேட்டிங்' விபரங்களை பொது வெளியில் வெளியிட ரூ.6,000, வார விடுமுறையில் வெளியே செல்ல (2 நாட்கள்) ரூ.10,000 என ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியாக கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளார்.

    விரிவான விபரங்களுக்கு விமர்சன பகுதியில் தொடர்பு கொள்ளவும். நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவோம் என்றும் திவ்யா பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர். இவை அனைத்தும் மோசடிகள் என ஒருவர் எச்சரித்தார். மற்றொரு பயனர் தனது பதிவில், இது ஒரு தேன் பொறி. எனவே நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.
    • . இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

    உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். முக்கியமாக தென்னிந்தியாவில் வீட்டில் அணிந்து கொள்ளும் லுங்கிக்கு பதிலாக தற்போதுள்ள இளைஞர்கள் ஷார்ட்ஸ் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தெருக்களில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    பல ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் இந்தியத் தமிழரான வலேரி, @valerydaania என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோவில், வலேரி ஸ்டைலாக நீல நிற செக்டு லுங்கியும் டி-ஷர்ட்டும் அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து சென்று ஒருசூப்பர் மார்கெட்டுக்குள் நுழைகிறார். அவரின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

     

    இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வலேரியின் முயற்சியை பாராட்டினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.  

    • பாதம் வியாஸ் ஒரு அரங்கில், தனது உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தியிருந்தார்.
    • அவரது ஸ்டாலுக்கு பார்வையாளர்கள் யாரும் வரவில்லை.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு உணவு திருவிழா நடந்தது. அங்கு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சமையல் கலைஞரான 67 வயது பாதம் வியாஸ் ஒரு அரங்கில், தனது உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தியிருந்தார். ஆனால் அவரது ஸ்டாலுக்கு பார்வையாளர்கள் யாரும் வரவில்லை.

    இதையடுத்து "எங்கள் அன்பிற்குரிய தலைமை செப் சிட்னி மக்களுக்கு உணவு தயாரித்தார், ஆனால் யாரும் வரவில்லை" என்று உணவக குழு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டது. அந்த வீடியோ 4.71 கோடி பேரின் பார்வைகளைப் பெற்று வைரலானது. இதனால் சமையல் கலைஞர் பாதம் வியாஸ் உலகப் புகழ் பெற்றார். அவரது உணவுகளைப் பற்றிய விவாதமும், இந்திய உணவு தயாரிப்பு பற்றிய கருத்துகளும் அதிகம் பகிரப்பட்டன.


    • டுவிட்டரில் எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை
    • எனக்கு இன்ஸ்டாகிராம் பிடித்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இதனையடுத்து சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், துபாய் ஐ யூடியூப் சேனலில் டோனி பேட்டி அளித்துள்ளார். அதில், "டுவிட்டரை விட இன்ஸ்டாகிராமை பயன்படுத்தவே நான் அதிகம் விரும்புவேன். டுவிட்டரில் எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை. இந்தியாவை பொறுத்தவரை டுவிட்டரில் எதாவது பதிவிட்டால் அதை பல வகையில் திரித்து சர்ச்சை ஆக்கிவிடுவார்கள். அதில் ஏன் நான் இருக்க வேண்டும்?

    எனக்கு இன்ஸ்டாகிராம் பிடித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஏதாவது வீடியோவை பதிவிட்டு, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல்.
    • இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் கடந்த 17ஆம் தேதி வெளியானது.

    இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "மோடி பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதனாக இருக்கவும் தகுதியில்லாதவர். இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.

    அவரது வார்த்தைகள், செயல்பாடுகள் என அனைத்தும், உலகில் அவரை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, அதிக திமிர் கொண்டவர், மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், கீழ்த்தரமானவர், உணர்வற்றவர், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்பதை காட்டுகிறது.

    பாஜக ஆட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், விவசாயிகள், இராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளின் வளர்ச்சி குறித்தும், செய்த பணிகள் குறித்தும் பேசும் திறன் மோடிக்கு இல்லை. வெறும் பொய் சொல்லி வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மேலும் கற்பனையாக வாக்கு ஜிகாத், ஊடுருவல்காரர்கள், பாகிஸ்தானியர்கள் என்று இந்த நாட்டு மக்களை கூறி வருகிறார்.

    அதோடு பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள் என்றும், கோயில்களை பூட்டிவிடுவார்கள் என்றும் பேசி வருகிறார். இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக நடிகர் கிஷோர், மோடியை விமர்சித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

    ×