search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • முதலில் ஆடிய மதுரை 123 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய திண்டுக்கல் 124 ரன்கள் எடுத்து வென்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 19.3 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெகதீசன் கவுசிக் 45 ரன்கள் எடுத்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் அவுட்டானார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    திண்டுக்கல் அணி சார்பில் சரவணகுமார், சுபோத் பதி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்கள் விரைவில் அவுட்டாகினர். 32 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    அடுத்து இறங்கிய பாபா இந்திரஜித், ஆதித்ய கணேஷ் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பாபா இந்திரஜித் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் திண்டுக்கல் அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 48 பந்தில் 78 ரன் குவித்தார்.

    • ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    • 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.

    நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட்டிகள் இன்று முதல் திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சேலம் அணி திருச்சியை வீழ்த்தியது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    இதனால் மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக களமிறங்கிய எஸ்.கார்த்திக் மற்றும் ஹரி நிஷாந்த் ஆட்டத்தை தொடங்கினர்.

    எஸ்.கார்த்திக் 4 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்வர்ப்நில் சிங் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டத்தை இழந்தார்.

    தொடர்ந்து, தீபன் லிங்கேஷ் 9 ரன்களும், சுதன் கந்தீபன் பூஜ்ஜியம் ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும், ஸ்ரீ அபிஷேக் ஒரு ரன்னும், முருகன் அஷ்வின் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    19 ஓவர்களில் தேவ் ராகுல் 14 ரன்களில் எடுத்திருந்தார். குரஜ்ப்நீத் சிங் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஒரு ரன்னிலேயே ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது.

    இதன்மூலம், 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.

    • கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார்.
    • 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர்.

    இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்கின.

    முதலில் பேட்டிங் செய்த ஆகாஷ் சும்ரா 10 ரன்கள் மற்றும் அமித் சத்விக் 22 ரன்களும் எடுத்தனர்.

    தொடர்ந்து, மான் பாஃனா 16 ரன்களும், மோகித் ஹரிஹரன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அபிஷேக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதி வரை விளையாடிய கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார். கடைசி பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து சேலம் அணியின் வெற்றி வாகையை சூடினார்.

    முகமது அத்னான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

    • மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார்.
    • இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

    அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர். இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்க உள்ளது.

    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 120 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய சேப்பாக் அணி 121 ரன்கள் எடுத்து வென்றது.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடந்தது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது திருப்பூர் அணி.

    அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்தனர்.

    சேப்பாக் அணி சார்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரதோஷ் பால் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இந்த தொடரில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. பாபா அபராஜித் 46 ரன்னும், ஹரீஷ் குமார் 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணிக்கு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    • சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
    • திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்தது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும். டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    அதேசமயம், திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையிடம் தோல்வி அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    • கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துக்கு இருமுறை ரிவ்யூ கேட்க்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
    • திருச்சி அணி பேட்டிங் செய்த போது அஸ்வின் ஓவரில் ராஜ்குமாருக்கு அவுட் என கள நடுவர் தீர்ப்பு அளித்தார்.

    கோவை:

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய திருச்சி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    திண்டுக்கல் அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், அஸ்வின், சரவண குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து விளையாடிய திண்டுக்கல் அணி 14.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஒரே பந்துக்கு இரு முறை ரிவ்யூ கேட்ட அரிய நிகழ்வு நடந்துள்ளது. திருச்சி அணி பேட்டிங் செய்த போது அஸ்வின் ஓவரில் ராஜ்குமாருக்கு அவுட் என கள நடுவர் தீர்ப்பு அளித்தார். உடனே ராஜ்குமார் ரிவ்யூ எடுத்தார். அதில் அவுட் இல்லை என 3-வது நடுவர் தெரிவித்தார். 3-வது நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த அஸ்வின் மீண்டும் ரிவ்யூ எடுத்தார். அப்போதும் நாட் அவுட் என தீர்ப்பு வந்தது.


    கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துக்கு இருமுறை ரிவ்யூ கேட்க்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    • திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையுடன் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த போராடும்.
    • சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    கோவை:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ந் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை தோற்கடித்தது. நேற்று முன்தினம் நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 52 ரன் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தியது.

    நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட்டில் மதுரை பாந்தர்சையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியையும் வென்றன.

    டி.என். பி.எல். போட்டியின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும்.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    தொடக்க ஆட்டக்காரரான பிரதோஷ் ரஞ்சன் பால், கேப்டன் ஜெகதீசன், சஞ்சய் யாதவ் ஆகியோர் பேட்டிங்கிலும் , ஹரீஷ்குமார், ராக்கி பாஸ்கர், விஜூ அருள், ரஹில் ஷா ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பணியில் பாபா அபராஜித் சிறப்பான நிலையில் இருக்கிறார். இது தவிர ஆர்.சதீஷ், சசிதேவ் போன்ற திறமையான வீரர்களும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உள்ளனர்.

    திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஆட்டத்தில் கோவையுடன் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த போராடும். முதல் வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

    கேப்டன் சாய் கிஷோர் , விஜய் சங்கர் போன்ற சிறந்த வீரர்கள் திருப்பூர் அணியில் உள்ளனர்.

    • மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
    • ஆட்டத்தின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 13.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றிப்பெற்றது.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கேப்டன் ஹரி நிசாந்த் களமிறங்கினர். கார்த்திக் ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபன் லீங்கேஷ் 6 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து நிசாந்த்- வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடி வந்த சுந்தர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிசாந்த் அரை சதம் கடந்தார்.

    இவர் 64 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் முறையில் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் பொய்யாமொழி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    தொடர்ந்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, அருண் கார்த்திக் 32 ரன்களும், ஸ்ரீ நிரஞ்சன் 15 ரன்களும், குருசுவாமி அஜிதேஷ் 14 ரன்களும், சோனு யாதவ் 13 ரன்களும், எஸ்ஜே அருண் குமார் 11 ரன்களும் எடுத்தனர்.

    இதில், நிதிஷ் ராஜகோபால் மற்றும் குருசுவாமி அஜிதேஷ் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 13.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அசத்தலாக வெற்றிப்பெற்றது.

    • மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி மதுரை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கேப்டன் ஹரி நிசாந்த் களமிறங்கினர். கார்த்திக் ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபன் லீங்கேஷ் 6 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து நிசாந்த் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

    நிதானமாக விளையாடி வந்த சுந்தர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிசாந்த் அரை சதம் கடந்தார். இவர் 64 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் முறையில் விக்கெட்டை இழந்தார்.

    கடைசி ஓவரில் பொய்யாமொழி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • கோவை மற்றும் திண்டுக்கல்லில் நடைபெறும் போட்டிகளுக்கு ஆனலைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
    • டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது. மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    டி.என்.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. கோவை மற்றும் திண்டுக்கல்லில் நடைபெறும் போட்டிகளுக்கு ஆனலைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    கோவையில் ஜூன் 12 முதல் 16 வரை 6 ஆட்டங்களும், திண்டுக்கல்லில் ஜூன் 18 முதல் 22 வரை 7 ஆட்டங்களும் நடைபெறுகிறது.

    இன்று மதியம் 2 மணி முதல் பேடிஎம் (Paytm Insider) வெப்சைடில் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் டிக்கெட் விற்பனையை பொறுத்தே கவுண்டர் டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று டி.என்.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சேலம் மற்றும் நெல்லையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும்.

    ×