search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    டிப்பர் லாரி மீது வேன் மோதிய விபத்தில்பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேர் காயம்

    குன்னம்,  

    விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஆரோவில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 11 மாணவா்கள், 2 மாணவிகள் என மொத்தம் 13 பேர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற குராஷ் தற்காப்பு கலை போட்டியில் விளையாட தங்களது ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுடன் ஒரு வேனில் புறப்பட்டு வந்துள்ளனர். இந்த வேன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை பிரிவு சாலையை தாண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது டீசல் இல்லாமல் ஜல்லிக்கற்களுடன் சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனின் டிரைவர், மாற்று டிரைவர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி காயமடைந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகி நின்ற வேனின் மீது மோதியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பாடாலூர் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வேனின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், டிரைவர்கள் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதில் மாணவர்கள் அகத்தியன் (வயது 13), கேசவ் சரண் (14) இன்பராஜன் (14), ரமணன் (14), நிர்மல் (14), டிரைவர் குமார் (40), பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி (51), மற்றும் அவர்களுடன் வந்திருந்த ஹரி கிருஷ்ணன் (47), பூபதி (20) உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.

    பின்னர் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மருத்துவமனையில் அகத்தியன், ஹரிகிருஷ்ணன், ராமமூர்த்தி ஆகிய 3 பேரும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்நிலையில் கோவில் கோபுரம் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் திரு கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இங்கு ராமதாஸ் (வயது 50), துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கோவில் கோபுரம் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமதாசை, விருத்தாசலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    குளித்தலை அருகே பைக் மோதி 3 பேர் காயம்

    கரூர்,  

    குளித்தலை அடுத்த, இனுங்கூர் ஊராட்சி காசா காலனியை சேர்ந்தவர் சுகனேஷ் (வயது 31). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் சொந்த வேலையாக பெட்டவாய்த்தலைக்கு சென்றார். அப்போது பங்களா புதுார் இனுங்கூர் நெடுஞ்சாலையில், இனுங்கூர் நோக்கி வந்த மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதியது.

    இதில் சுகனேஷ் பலத்த காயமடைந்தார். எதிரே வந்து மோதிய பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த யுவராஜ் (20), பைக் ஓட்டி வந்த அதே ஊரை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    3 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.
    • சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

    திருமானூர்:

    தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரை சேர்ந்தவர் அருண். இவருக்கு விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.

    இந்த ஆலையில் நாட்டு வெடிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வாணவெடிகள் மற்றும் தீபாவளி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    வழக்கம் போல் இன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் வெடித்து சிதறிய பட்டாசுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா்.

    அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் கிளம்பி பட்டாசு ஆலை முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது போல பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகுதான் துள்ளியமாக தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.

    சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

    பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்த பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டும் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    புகளூர் அருகே பள்ளி சிறுமி மீது டிராக்டர் ஏறியதில் கால்கள் நசுங்கி படுகாயம்

      வேலாயுதம் பாளையம் 

    கரூர் மாவட்டம் மசக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 44 ).இவரது மகள் அக் ஷயா ( 10) இவர் புகளூர் காகித ஆலை பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி அக் ஷயா புகலூர் நானபரப்பு ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் எழுது பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பிய போது டிராக்டர் ஓரமாக நின்று கொண்டிருந்த அக் ஷயா மீது டிராக்டர் ஏறியது. இதில் அக் ஷயாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் விபத்து ஏற்படுத்திய வேலாயுதம்பாளையம் அருகே வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த அல்லிமுத்து (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பார்த்திபனும் பிளம்பர் வேலை செய்து வருகின்றனர்.
    • முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தேவா (வயது 19). இவரும் இவரது நண்பர் பார்த்திபனும் பிளம்பர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் வேலையை முடித்துவிட்டு புதுவையில் இருந்து செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் வரும்போது முன்னாள் சென்ற லாரி மீது இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் தேவா படு காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவருடன் வந்த பார்த்திபன் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரியை நடுரோட்டில் விட்டுவிட்டு டிரைவர் தப்பிச் சென்றதால் நடுரோட்டில் நின்ற லாரியால் சென்னை-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டிவனம் போலீசார் போக்குவரத்தை சரி செய்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • சீனிவாசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் ஆட்டோ மொபைல்ஸ் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இங்குள்ள கூலிங் செய்யும் கம்ப்ரசர் எந்திரத்தை சர்வீஸ் செய்யும் பணியில் பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகரை சேர்ந்த சீனிவாசன்(46) அதே பகுதியை சேர்ந்த விநாயக மூர்த்தி(40), கூடுவாஞ்சேரி காந்தி நகரை சேர்ந்த பொன்ராஜ்(45) ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சீனிவாசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனை ரும் பொத்தேரிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசஉதயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குபதிவு செய்து அசன்அலியை கைது செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அத்திக்கடை அண்ணா தெருவை சேர்ந்தவர் அல்லா பிச்சை (வயது 60). இவரது மகன் அசன்அலி (வயது 37). இந்நிலையில் அல்லா பிச்சை குடிபோதையில் அருகில் குடியிரு ப்பவர்களி டம் தகராறு செய்தார். இதனை அசன்அலி தட்டி கேட்டுள்ளார்.

    அப்போது தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டது. சண்டையில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டனர்.

    அப்போது அல்லாபிச்சை சுவரில் மோதியுள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அல்லாபிச்சையை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அல்லாபிச்சை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக அல்லா பிச்சையின் மனைவி ஹபிப்நிஷா கொடுத்த புகாரி பேரில், கொரடாச்சே ரி இன்ஸ்பெ க்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து மகன் அசன்அலியை கைது செய்தார்.

    • சாலையோர தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • விபத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்.இவரது மனைவி பிரபா. இந்த தம்பதிக்கு வர்ஷா (4), நிஷாலினி(7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் காமேஸ்வரத்திலிருந்து திருப்பூண்டிக்கு மோட்டார்சைக்கிளில் அருள், பிரபா மற்றும் வர்ஷா ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர்.

    தென்னம்பிள்ளை சாலையோரத்தில் கீழ்க்குமிழி தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நாகை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் 4 வயது குழந்தை வர்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்க ள்தெரிவித்தனர். மேலும் அருள், பிரபா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • அமுதா டிராக்டரில் இருந்து சாவியை எடுத்துகொண்டு தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார்.
    • அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அமுதா (வயது 42) இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (56) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அமுதாவின் நிலத்தில் இருந்த பருத்திச் செடியை, அருணாச்சலம் டிராக்டர் மூலம் உழவு ஓட்டி அழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அமுதா டிராக்டரில் இருந்து சாவியை எடுத்துகொண்டு தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஏன் பயிரை அழித்து டிராக்டரை ஓட்டுகிறீர்கள் என அருணாச்சலத்திடம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அருணாச்சலம் டிராக்டரில் இருந்த கட்டையை எடுத்து அமுதாவின் உறவினர் பாலகிருஷ்ண னை தாக்க முயன்றுள்ளார்.

    அப்போது அமுதா தடுக்க முயன்ற போது அவரது தலையில் அடிபட்டு காயம் அடைந்தார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அமுதா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

    • சிறிது நேரம் கழித்துதான் அவர்களுக்கு பஞ்சர் கடையில் மின்மோட்டார் வெடித்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர், அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் லதீப் (வயது38) என்பவர் மாற்றுத்திறனாளி சொந்தமாக பஞ்சர் கடையை நடத்தி வருகிறார். அங்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகன் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த டிரைவர்கள் லிங்கப்பா, முத்து ஆகிய 2 பேர் லாரியை ஓசூருக்கு ஓட்டிவந்தனர். அப்போது அவர்கள் லதீப் கடையில் லாரியின் டயர்களுக்கு பஞ்சர் போடுவதற்காக நிறுத்தினர். உடனே லதிப் அந்த லாரியின் இருந்து சக்கரங்களை கழற்றி பஞ்சர் போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஏர் கம்பிரஷர் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு கடையின் மேற்கூரை பறந்தது. இதனால் திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால், அசம்பாவிதம் ஏதோ நடந்து விட்டதாக கருதி அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர்.

    சிறிது நேரம் கழித்துதான் அவர்களுக்கு பஞ்சர் கடையில் மின்மோட்டார் வெடித்தது தெரியவந்தது.

    இந்த வெடிவிபத்தில் பஞ்சர் கடையின் உரிமையாளர் லதீப், முருகன், முத்து, லிங்கப்பா ஆகிய 4 பேர் கை, கால்கள் முறிந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தனர்.

    அதன்பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஓசூர் அரசு மருத்துவமனையில் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு கை,கால்கள் முறிந்து ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயங்களுடன் இருந்த 4 பேருக்கும் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த 4 பேரில் டிரைவர்கள் 2 பேரை பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லதீப், முருகன் ஆகிய 2 பேருக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாகலூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டபகலில் திடீரென்று கம்ப்ரசர் மின்மோட்டார் வெடித்து 4 பேர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் ஜோய்ஆண்டனி (வயது 50), முரளி தாஸ் (48). இருவரும் நண்பர்கள். இவர்கள் திண்டிவனத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஜோய்ஆண்டனி பலத்த ரத்த காயங்களுடன் தனியார் தங்கும் விடுதி வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக சென்ற போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக அவரது நண்பர் முரளி தாசை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் மது அருந்தியபோது, ஏற்பட்ட தகராறில் ஜோஸ்ஆண்டனி பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது. இருவருமே மது போதையில் இருப்பதால், போலீசாரால் சரியான முறையில் விசாரணை நடத்தமுடியவில்லை. அவர்களின் போதை தெளிந்தபின்னர் விசாரணை நடத்த போலீ சார் திட்டமிட்டுள்ளனர். காயமடைந்த ஜோஸ்ஆண்டனியில் கழுத்தில் காயம் உள்ளதால் அவ ரால் பேசமுடியவில்லை. அவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×