search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • சம்பவத்தன்று இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • சிறிது நேரத்தில் சந்தியா உடலில் நிறம் மாற்றம் ஏற்பட்டது.

    கறம்பக்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மலையூர் மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரின் மகள் சந்தியா(வயது 15). அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அலறி துடித்துள்ளார். பெற்றோர்கள் கேட்ட போது, ஏதோ கடித்து விட்டதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சந்தியா உடலில் நிறம் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்தியாவை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்ட போது, சந்தியாவை பாம்பு தீண்டியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சந்தியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா?

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பிரித்திங்கா ( வயது 15).

    இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இருந்து மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு செல்வதாக, சக மாணவிகளிடம் கூறிவிட்டு சென்றார்.

    நேற்று மாலை நீண்ட நேரமாகியும் பிரித்திங்கா வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

    குருநாதபுரம் ரெயில் தண்டவாளம் அருகே மாணவியின் புத்தகப் பை மற்றும் செருப்பு உள்ளிட்டவை கிடந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், விரைந்து சென்று அவற்றை பறிமுதல் செய்து தேடி வந்தனர்.

    மேலும் குடியாத்தம் டவுன் போலீசில், மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குடியாத்தம்-மேல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே மாணவி பிரித்திங்கா பள்ளி சீருடையில் ரெயிலில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார்.
    • சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (58). இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சேலம் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் செல்வம் மருத்துவ விடுப்பில் இருந்தார். மேலும் சீல நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீலநாயக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. 

    மணம்தவிழ்ந்தபுத்தூர் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35), இவர் தற்போது பண்ருட்டி அடுத்த திருவதிகை வள்ளி கந்தன் நகரில் தங்கி இருந்து தனது மூன்று சக்கர ஆட்டோவில் பண்ருட்டி, விழுப்புரம் பகுதிகளில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது மணம்தவிழ்ந்தபுத்தூர் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓடும் வாகனத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    • கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கவுரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் கவுரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதற்காக அவர் மாதம் தோறும் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.

    அப்போது கவுரியை உடல் பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை பிறக்கும் தேதி வந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதையடுத்து அன்று மாலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கவுரியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கவுரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

    இதனையடுத்து குழந்தைக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது. எனினும் குழந்தை உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த ஒரு நாளே ஆன பெண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலில் பிணமாக மிதந்த அந்த நபர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்.
    • கயத்தாறு போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை அருகில் உள்ள வாவத்துறை கடலில் கடந்த 1-ந்தேதி மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த பிணத்தை மீட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் யார்? என்று அடையாளம் தெரியாததால் அங்கு உள்ள குளிரூட்டப்பட்ட பிண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து கடலில் பிணமாக மிதந்த அந்த நபர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்.

    விசாரணையில் கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த அந்த நபர் யார்? என்பது பற்றி 5 நாட்களுக்கு பிறகு நேற்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சின்ன அய்யனார் ஊத்து பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 48) என்பதும், அவர் பழையபொருட்கள் விற்கும் ஆக்கர் வியாபாரி என்பதும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும், இதனால் அவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் சின்னமாத்தூர் அருளானந்தம் நகர் பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வந்ததாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக கன்னியாகுமரி கட லில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

    மேலும் இந்த தகவல் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ் காணாமல் போனது குறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • உடல் நிலை பாதித்து இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரேத பரிசோதனை முடிவில் புலி எப்படி இறந்தது என்பது குறித்த காரணங்கள் தெரியவரும் என அமராவதி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகம் கல்லாபுரம் சுற்று கழுதகட்டி ஓடை பகுதியில் இன்று காலை புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு 9வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதன் வாயில் காயங்கள் இருந்தது. அந்த புலி எப்படி இறந்தது என்று தெரியவில்லை. உடல் நிலை பாதித்து இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக வனத்துறையினர் உயிரிழந்த புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் புலி எப்படி இறந்தது என்பது குறித்த காரணங்கள் தெரியவரும் என அமராவதி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 2 மாதத்தில் 11 புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் புலிகள் இறப்பு குறித்து தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி சென்றனர். இந்தநிலையில் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மற்றொரு புலி உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர் அவர்.
    • கடந்த 2021-ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன்.

    சென்னை:

    தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் வட எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தை கட்டிக் காத்த தீரர் அருமை சகோதரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயர செய்தி கேட்டுத் துடி துடித்து போனேன். எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர் அவர்.

    இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கமான மிசாவை நெஞ்சுரத்தோடு எதிர்க் கொண்டு சிறை ஏகிய போராளி அவர். மிசா சிறை வாசத்தில் என்னோடும், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு கலைஞரோடும் சிறையில் வாடியவர் அவர்.

    கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான் என்று சொல்லுமளவுக்கு, அந்தத் தொகுதி மக்களிடமும் ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட மக்களிடமும் அன்பு காட்டி நற்பெயர் பெற்ற அவரை இன்று இழந்து தவிக்கிறோம் என்று எண்ணுகையில் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

    பரந்து விரிந்த ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட கழகத்தின் செயலாளராக அவர் இருந்தபோது, அந்த மாவட்டத்தை முழுவதுமாக வலம் வரவே ஓரிரு நாட்களாகும். அந்த மாவட்டத்தில் இருந்த ஒவ்வொரு ஊரிலும்-வீட்டிலும் தனது காலடித் தடத்தை பதிய வைத்து விட்டே வீடு திரும்புவார் அவர்.

    இப்படி கழகப் பணிகளே தன் உயிர் மூச்சென வாழ்ந்த அவர், உடல் நலிவுற்று இருந்த போதும் என்னைக் காண அண்ணா அறிவாலயம் வருவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை மருத்துவமனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தபோது, ஓய்வெடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவரோ, தான் விரைவில் நலம்பெற்று அடுத்த கழக நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வேன் என்றார். இப்படி எந்நேரமும் கழகமே அவரது சிந்தையில் நிறைந்திருந்தது.

    இத்தகைய அர்ப்பணிப் புணர்வாலும் ஆற்றல்மிக்க அவரது செயல்பாடுகளாலும், கழகத்தின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து, ஒன்றிய கழக செயலாளராக, மாவட்ட கழக செயலாளராக, இரு முறை சட்டமன்ற உறுப்பினராக, கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக என முத்திரை பதித்த அவரது உழைப்பும் தியாகமும் கழகத்தின் வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துகளால் நிரம்பியிருக்கும்.

    கடந்த 2021-ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசினேன். அதற்குள் அவரது மறைவுக்கு இரங்கல் சொல்லும் நாள் வந்துவிட்டதை எண்ணி மனம் வாடுகிறேன்.

    கும்மிடிப்பூண்டி வேணுவின் பிரிவால் வாடும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும், கும்மிடிப்பூண்டி தொகுதி வாழ் மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்ள முயல்கிறேன். கும்மிடிப்பூண்டி வேணு என்றும் நம் நினைவுகளிலும் நெஞ்சங்களிலும் வாழ்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மிக அதிக வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியானவர் என்ற பெருமையை கார்த்திகாயினி அம்மா பெற்றார்.
    • நாரீ சக்தி என்ற விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகாயினி அம்மா. 101 வயது மூதாட்டியான இவர், குடும்ப ஏழ்மை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு சென்றார். இதனால் அவர் தனது இளமை பருவத்தில் பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் தனது 96 வயதில் அவருக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே கடந்த 2018-ம் ஆண்டு 4-ம் வகுப்பு படித்தார். மிகவும் ஆர்வமாக படித்த அவர், தேர்வில் 98 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

    இதன்மூலம் மிக அதிக வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியானவர் என்ற பெருமையை கார்த்திகாயினி அம்மா பெற்றார். அப்போது அவருக்கு நாரீ சக்தி என்ற விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வழங்கினார். இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி கார்த்திகாயினி அம்மா ஹரிப்பாட்டில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கேரள மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றினர்.
    • ஆணின் உடல் காரில் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியின் மஹிபால்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை 8-ல் நபர் ஒருவரின் உடல் கிடக்கிறது என வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு தொலைபேசி வழியே தகவல் சென்றது. அடையாளம் தெரியாத ஆணின் உடலில் காயங்கள் இருந்துள்ளன.

    இதனை தொடர்ந்து, போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றினர். இதுபற்றி நடந்த விசாரணையில், அரியானாவின் பரிதாபாத் நகரை சேர்ந்த பிஜேந்தர் (வயது 43) என்பதும் டாக்சி ஓட்டுநராக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

    இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதில், அந்த நபரின் உடல் காரில் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு உள்ளது. அந்த வீடியோ பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

    டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புது வருட தினத்தன்று, ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண் மீது அதிகாலையில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது. அந்த காரில் அஞ்சலி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார். காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்து உள்ளார்.
    • கோவை வடவள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    கோவை:

    சென்னையை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. இவர் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பல பதக்கங்களை வென்று உள்ளார்.

    குறிப்பாக கடந்த 1991-ம் ஆண்டு சர்வதேச மகளிர் வலுதூக்கும் போட்டியில் 3-வது இடமும், 1992, 1994-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்து உள்ளார். தொடர்ந்து 1995-ம் ஆண்டு நடந்த ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்திருந்தார்.

    சாமுண்டீஸ்வரியின் கணவர் அசோக் கோவையில் பணியாற்றியதால் அவர்கள் குடும்பத்துடன் இங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை வடவள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.

    சாமுண்டீஸ்வரியின் உடல், அவரது சொந்த ஊரான சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது. சாமுண்டீஸ்வரிக்கு ஹரிகிருஷ்ணன், மகேஸ்வர் என்ற 2 மகன்களும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

    • பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தாத்தாவும் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.
    • பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கோவிலூர் தெருவை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 50). பைக் மெக்கானிக்.

    இவரது மகள் ஹாசினி (15). இவர் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஹாசினி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

    பேத்தியின் தற்கொலையால் தாத்தா சுப்பிரமணியன் (75 ) சோகத்துடன் காணப்பட்டார். பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.

    பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்ததால் அந்த பகுதி மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.

    ×