search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 188514"

    • உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள்பயன்பாட்டிற்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    • கால்வாயினை  தூர்வாரி சுத்தம்செய்ய உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்மண்டலம் -1, வார்டு -22 , பகுதியில் அமைந்துள்ளஉழவர் சந்தை பூங்காவை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மறுசீரமைப்புசெய்து கம்பி வேலிகள் அமைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள்பயன்பாட்டிற்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டிருந்த கழிவு நீர் கால்வாயினைபார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக கால்வாயினை  தூர்வாரி சுத்தம்செய்ய உத்தரவிட்டார்.

    மேலும், உழவர் சந்தையில் உள்ள கழிவறைகள், குப்பை கொட்டும் பகுதிகள்மற்றும் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, "மக்களுடன் மேயர்" திட்டத்தின் கீழ் 29-வது வார்டு பகுதியில்உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.வெ.ராதாகிருஷ்ணன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 44 வது வார்டில் கடந்த 12 தினங்களாக குடிநீர் வரவில்லை.
    • கடந்த ஒரு மாதத்தில் 460 எம்.எல். டி. தண்ணீர் திருப்பூர் மாநகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 44 வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கண்ணப்பன் பேசியதாவது:- 44 வது வார்டில் கடந்த 12 தினங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் வார்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இஸ்லாமியர்கள் நிறைந்த எனது வார்டில் தற்போது ரம்ஜான் நோன்பு என்பதால் குறைகளை தீர்க்க சரியான முறையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதற்கு பதில் அளித்து மேயர் தினேஷ் குமார் பேசியதாவது:- கடந்த ஒரு மாதத்தில் 460 எம் .எல். டி. தண்ணீர் திருப்பூர் மாநகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் நான்காம் கூட்டு குடிநீர் திட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதி மட்டுமின்றி தெற்கிலும் வர செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக தெற்கு சட்டமன்ற தொகுதியில் இந்த வார இறுதிக்குள் பெரிச்சி பாளையம் வினோபா நகர் , நல்லூர் பகுதிகளில் நான்காம் கூட்டு குடிநீர் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் குறைந்த பட்சம் 5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரம்ஜான் பண்டிகை, சித்திரை திருவிழா உள்ளிட்ட பண்டிகைக்காக 18 லாரிகள் மூலம் மாநகராட்சி முழுவதும் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். மாநகராட்சி முழுவதும் 100 சதவீதம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது தான் இலக்கு . அதனை கண்டிப்பாக செய்து கொடுக்கப்படும் என்றார்.

    • மாநகராட்சி பள்ளிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
    • ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் மத்தியில் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், அதை முறையாக தொடர்ந்து பயின்று பின்பற்றும் வகையிலும் திட்டமிடப்பட்டு ள்ளது.மாநகராட்சி பள்ளிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதன் தொடக்க விழா கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.துணை மேயர் பாலசுப்ரம ணியம், கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கல்விக்குழு தலைவர் திவாகர், உதவி கமிஷனர் செல்வநாயகம் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்து பேசுகை யில், யோகா வகுப்புகள் மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் துவங்கி ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்படும். மேலும், அனைத்து பள்ளிகளிடையே யோகாசன போட்டிகள் நடத்தி சிறப்பிடம் பெறுவோருக்கு பரிசளிக்கப்படும் என்றார்.

    பயிற்சியை துவக்கி வைத்து மேயர் தினேஷ்குமார் பேசுகையில், யோகா உடலையும், உள்ளத்தையும் சீராக வைத்திருக்க உதவும் அற்புத கலை.இதை இளம் வயதிேலயே மாணவர்கள் கற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைத்துக் கொள்ளமுடியும். இதைக் கற்றுக் கொள்ள உலக நாடுகளில் வாழும் பலரும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.

    • கடந்த ஆண்டு தனியார் பங்களிப்புடன் 150கணிணிகள் வழங்கப்பட்டது.
    • நடமாடும் நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டு தினசரி ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு அனுப்பப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி யின் 2023 -2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்று மாநக ராட்சி மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நிதி குழு தலைவர் கோமதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதா வது:- திருப்பூர் மாவட்டம் கல்வி வளர்ச்சியில் முதன்மை பெற்ற மாவட்ட மாக திகழும் இந்நேரத்தில் கல்வி வளர்ச்சியில் அதிகஅக்கறை கொண்ட தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை கல்விக்கா கவும், மாணவர் நலனுக்கா கவும் செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி க்கு உட்பட்ட 11 மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 49 கூடுதல் வகுப்ப றைகள் மற்றும்25 கழிப்பறைகள் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக 75 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 25 கழிப்பறைகள் பொது மக்களின்பங்களிப்புடன் கட்டுவதற்கு 2023-24 ம் நிதியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகராட்சிப் பள்ளி களில் புதிதாக 50 ஸ்மார்ட் வகுப்ப றைகள் உரு வாக்க ப்படும். மேலும் கடந்த ஆண்டு தனியார் பங்களி ப்புடன் 150கணிணிகள் வழங்கப்பட்டது. 2023-24ம் ஆண்டில் 200 கணி ணிகள்வழங்கப்பட்டு மாணவர்களின் தொழில்நுட்பத்திறன் மேம்படுத்தப்படும்.

    2023-24ம் நிதி யாண்டில் மூன்று மாநக ராட்சி பள்ளி களி ல்மா ணவர்களின் கல்வித்திறன் மேம்பட தனியார் பங்களி ப்புடன் கூடியநூலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஆண்டுதோறும் படிப்படியாக விரிவு படு த்தப்படும். நடமாடும் நூலகம் ஒன்றுஉருவா க்கப்பட்டு தினச ரி ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு அனுப்பப்படும். தமிழக முதலமைச்சர் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறி வித்துள்ளார். அதனடிப்ப டையில்2023-24 ம் நிதி யாண்டில் 102 மாநக ராட்சிப் பள்ளிகளில் பயிலும்19824 மாணவர்க ளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கிட 1.10 கோடிரூபாய் மதிப்பீட்டில் நான்கு இடங்களில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் கட்டிடம் கட்டுவதற்குஎதிர்வரும் கல்வியா ண்டில்மாந கராட்சி பள்ளிகளில் துவங்கப்படும். திருப்பூர்மாநகராட்சி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றல் கல்வியினை தவிர்க்க ஏழைபள்ளிக் குழந்தை களின் பசியினை போக்க வும், கல்விச்சாலைக்கு வந்துகல்வியறிவு பெற்றிடவும், சமூகத்தில் முன்னேறி டவும்சிற்று ண்டி" வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதலமை ச்சருக்கு நன்றித்தெரி விப்பதில் பெருமை யடைகிறேன். மாநகராட்சி பள்ளி களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கல்விபயிலும் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடங்களில்அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறும் மாணவ ர்களுக்குஅவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கம் மற்றும் வெள்ளிக்கா சுகள் பரிசாக வழங்கப்படும்.

    திருப்பூர் மாநகராட்சியில் நாம் பொறுப்பேற்ற பிறகு நமக்கு நாமேதிட்டத்தில் தமிழ கத்தில் 7-ம் இடத்திலிருந்து தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறோம். மக்களின் சுய உதவி சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பரவலாக்கவும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தில்" திருப்பூர் மாநகராட்சி தமிழகத்தில் முதலாவது இடம் பெற்றுள்ளது. வளர்ச்சிபணிகளுக்கான திட்டமிடுதலில் தொடங்கி,வள ஆதாரங்க ளைதிரட்டுதல் பணிகளை மேற்கொள்ளுதல்மற்றும் மேற்பார்வைசெய்தல் போன்ற அனைத்து பணிகளிலும் மக்கள் பங்களி ப்பினை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2022-23 ம் ஆண்டில் 41 பணிகள் நடைபெற்றுள்ளது.திருப்பூரில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 10.73 கோடி ரூபாய் பொது மக்களின் பங்களிப்புடனும்,மாநில அரசின் 21.47 கோடி ரூபாய் பங்களிப்புடனும், புதியதாக மருத்துவமனை கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் நிர்வாக அனுமதி பெற நகராட்சி நிர்வாகஇயக்குநர் அவ ர்களுக்கு கருத்துரு அனுப்ப ப்பட்டுள்ளது. 2023-24 ம் நிதியாண்டில் புற்றுநோய் மருத்துவமனைக்கு பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கு வதற்கு பொதுமக்கள் பங்களிப்பு மூலம் 20.00 கோடி ரூபாயும், அரசின் பங்களிப்பு மூலம் 40.00 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 60.00 கோடி ரூபாய்மதிப்பீட்டில் நிறுவவும்,பொது மேம்பாட்டு பணிகளுக்காக 20.00கோடி ரூபாய் திட்ட மதிப்பீடும் ஆக மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் செயல்படுத்தப்பட்டு தொடர்ந்து 2023-24 ம் ஆண்டிலும் நம் மாநகராட்சி முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று மகிழ்ச்சியோடுதெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மாநகரில் தெருவிளக்கு 17.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8681புதிய தெரு மின்விளக்குகளும், 4755சோடியம் ஆவி விளக்குகளை மின்சிக்கன விளக்குகளாக 2023-24ஆம் ஆண்டில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் உயர்கோபுர மின்விளக்குகள் 28இடங்களில் அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். ஏற்கனவேசெயல்பாட்டில் உள்ள சோடியம் ஆவி விளக்குகளை பராமரித்திடசிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக மூலம் பிரித்து வழங்கி திருப்பூர்மாநகரத்தை ஒளிர வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் மாநகராட்சியில் ஏ.எம்.ஆர்.யூ.டி. திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணி 1120.57 கோடி ரூபாய் மதிப்பீ ட்டில்மேற்கொ ள்ளப்பட்டு 94 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில் நான்காவது குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்பட்டு சோதனைஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டம்கடந்த மாதத்தில்திருப்பூர் வடக்குப் பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு சோதனை ஓட்டமாககொண்டு வரப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்திற்குள்தெற்குப் பகுதிக்கு விரிவுப்படு த்தப்பட்டு விரைவில் செயல்பாட்டி ற்குகொண்டு வரப்படும். SCADA (Supervisory Control and DataAcquisition) மேற்பார்வை கட்டுப்பாட்டு தரவு கையகப்படுத்துதல்திட்டம், முதலில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனைஅடிப்படையில் செயல்பட்டு வருகிறது.இத்திட்டம் மேலும்விரிவாக்கப்பட்டு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக ளுக்கும் inflow and outflow 100 சதவீதம்மேற்பார்வை செய்யப்பட்டு குடிநீர் சீராக விநியோகம் செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மக்களுக்கு நீர்த்தட்டுப்பாடு இல்லாமல் மாநகராட்சிப் பகுதிகளில்நீராதாரத்தை ஆய்வு செய்து புதிய ஆழ்குழாய்கிணறுகள் அமைத்துசெய்யப்ப ட்டுள்ளது.மேலும் தேவைப்படும்தண்ணீர் வசதிபகுதிகளுக்கு புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்.தமிழகத்திலேயே முதன் முறையாகதிருப்பூர் மாநகராட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில்குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை"குறுஞ்செய்தி" (SMS) மூலமாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தெரியப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    மாநகரில் சுகாதார பிரிவில் ஏற்கனவே 17 ஆரம்ப சுகாதாரமையங்கள் உள்ளது. மேலும் ஒரு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் குளத்துப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.14 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் மகப்பேறுசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 34 நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்படும். நமக்கு நாமே திட்டத்தில் மருத்துவ சேமிப்புகிடங்கு 27.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டி.எஸ்.கே.மருத்துவமனை வளா கத்தில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்டுள்ளது.மாநகராட்சியில் புதிதாக மருந்து கிடங்கு மங்கலம் சாலையில்அமைக்க ப்படவுள்ளது.எஸ்.ஆர்.நகர் பகுதியில்தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 51 துணை சுகாதார நிலையம் 60 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் மூன்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ங்களுக்கு வரும்கர்ப்பிணித் தாய்மா ர்களுக்கு முன் பேறுகால பரிசோதனை கள்செய்வதற்கு தேவைப்படும் அல்ட்ரா சவுண்ட் இஸ்கேனர் (UltraSound Scanner) கருவி புதியதாக அமைக்கப்படும்.

    இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொன்னம்மாள்ராமசாமி மகப்பேறு மருத்துவ மையம் (PRMH) மற்றும் வீரபாண்டிஆரம்ப சுகாதார நிலையங்களில் 60.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டும். மேலும் மூன்று ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கூடுதல் கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி வேண்டிகருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். "நடமாடும் இரத்த பரிசோதனை கூடம்" அறிமுகப்படுத்தப்படும்.

    திருப்பூர் மாநகரில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் வீடு இல்லாத ஏழைகள் தங்குவதற்கு வசதியாக இரவு நேர தங்கும் விடுதி மற்றும் புதிய கழிப்பிடங்கள் 1.41 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.மாநகராட்சிக்கு சொந்தமான மனைப்பிரிவுகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு நீச்சல் குளமும்அண்ணா காலனியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்

    ஆண்டிபாளையத்தில் உள்ள குளத்தை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து படகு சவாரி மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .இந்த நிதி ஆண்டில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தொழில் நகரமான திருப்பூரில் குற்ற நடவடிக்கைகள் குறைக்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் 64.20 லட்சம் மதிப்பில் பொருத்தப்படும்.

    வளர்ந்து வரும் நம் திறன் மிகு திருப்பூர் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நொய்யல் நதிக்கரையின்இருபுறமும் 6.70 கி.மீ. நீளத்திற்கு தார்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இருபுறமும் 5 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் பாலம் மற்றும் நடராஜ் தியேட்டர் பாலம் மற்றும் தந்தைபெரியார் நகர் பாலம், சங்கிலிப் பள்ளம் ஓடையின் குறுக்கே புதியபாலங்கள் அமைக்க 36.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் புதிதாக ஒரு இரயில்வே மேம்பாலம் அமைக்கநடவடிக்கைமேற்கொள்ளப்படும்.பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் சேதமடைந்த சாலைகளைபோர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுமார் 150 கோடிக்கும் குறையாமல் அரசு நிதி பெறப்பட்டு இந்த நிதியாண்டில் சாலைகள் புனரமைக்கப்படும்.

    "சீர்மிகு நகரம் சிறப்பான நகரம் - நம் திருப்பூர் மாநகரம் "எல்லா நாடுகளிலும் நகரங்களின் வளர்ச்சியே பொருளாதாரவளர்ச்சிக்கு வினையூக்கியாக உள்ளது. ஒரு செயல்முறை அல்லது தொடர் நடவடிக்கைகள் மூலமாக நகரங்களைத் தொடர்ந்து வாழ தகுந்த மாநகரமாக மாற்றி, புதியசவால்களுக்கும் உடனடித் தீர்வு காணும் திறன் பெற்றதாக 986.05 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் இச்சீர்மிகு நகரத்திட்டத்தில்மதிப்பீட்டில் உத்தேசிக்கப்பட்ட 28 பணிகளில் 21 பணிகள்முடிவடைந்துள்ளது.

    மீதமுள்ளஅனைத்துபணிகளும் விரைவில்முடிக்கப்படும். முடிவடைந்துள்ள பணிகளில் 7.19 கோடி ரூபாய்அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நம் திருப்பூர் சீர்மிகு வாழிடமாக மாறியுள்ளது என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 2 மூன்றாம் நிலை நகராட்சிகள் 15 வேலம்பாளையம் மற்றும் நல்லூர்பகுதிகள் மற்றும் 8 ஊராட்சி பகுதிகளில் உள்கட்டமை ப்புகளையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட சிறப்பு நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.1.20 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
    • சாலை சீரமைப்பிற்கு மேலும் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் மேல தெருவில் ரூ.2.45 லட்சம் செலவில் சாலை பணியை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

    இதே போல 39-வது வார்டுக்கு உட்பட்ட இடலாக்குடி பள்ளித்தெரு, வேம்படி தெரு, கடைத் தெரு பகுதிகளில் ரூ.59 லட்சத்தில் சீரமைப்பு பணி மற்றும் கீழ மறவன்குடியிருப்பு மெயின் ரோடு ரூ.50 லட்சம் செலவில் சீரமைப்பு பணி, ரூ.1.20 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் கோபால் சுப்ரமணியன், எம்.ஜே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரை முன் மாதிரியான மாநக ராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாலை சீரமைப்பிற்கு ஏற்கனவே ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை சீரமைப்பிற்கு மேலும் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விரைவில் டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். குப்பை இல்லா மாநகராட்சியாக மாற்ற முழு முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள குப்பை களையும் தரம் பிரித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சாலை ஓரங்களில் உள்ள ஆக்கர் கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கடைகளில் முன் பகுதியில் பல்வேறு இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடைக்காரர்கள் தானாக முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • அடிப்படை வசதிகள் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    • பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித்சிங், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், உதவி ஆணையர் காளிமுத்தண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப் பாலை, கண்ணனேந்தல், கற்பக நகர், கோமதிபுரம், ஆத்திக்குளம் உள்பட கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    அவர்கள் தங்கள் பகுதிகளில் சாலை வசதி வேண்டியும், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிமற்றும் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டி கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.

    அதனை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நேரில் மனுக்கள் குறித்து விசாரணை செய்து உடன டியாக நடவடிக்கை எடுக் கும்படி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த முகாமில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பலர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு அளித்தனர்.

    • ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்
    • கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. தலைமை அலுவல கத்தில், மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள், அமைப்பாளர்கள் ஆலோச னைக் கூட்டம் நடைபெற் றது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எப்.எம். ராஜரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாரும் மேயருமான மகேஷ் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர் களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதன்படி, நாம் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு விழா தொடங் குவதற்குள், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நாம் வீடு வீடாக சென்று சந்தித்தாலே போதும், ஒரு வாரத்தில் பொறுப்பாளர் கள் அவர்கள் இலக்கை எட் டிவிட முடியும். இதுபோல் 100 வாக்காளர்களுக்கு ஒரு நபர் என்ற முறையில் பூத் கமிட்டி படிவங்களை பெற்று ஏப்ரல் 5-ந்தேதிக்குள் மாநில தலைமைக்கு அனுப்பிவைக்கவேண்டும். இதற்காக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு 16 பேரை டிக் செய்து, அதில் 8 பேரை தேர்வு செய்யலாம்.

    இதனை மேற்பார்வை செய்ய 3 பேர் குழுவை மாநில தலைமை அறிவித் துள்ளது. மேலும், யார் யார் என்கிற பட்டியலும் மாநில தலைமையே அறிவித்து பட் டியல் அனுப்பியுள்ளது. ஏப் ரல் 3-ந்தேதி நம் தலைவர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கியதும், நாமும் சுறுசுறுப்பாக இந்த பணியில் ஈடுபட வேண்டும். ஜூன் 3-ந்தேதியிலிருந்து, கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் கலைஞரின் பெயரை உச்சரிக்க வேண்டும்.

    இதற்காக தலைவரின் உத்தரவுப்படி கட்அவுட் வைக்க கூடாது. அதற்கு பதிலாக துண்டு பிரசு ரங்கள், சுவர்விளம்பரங் கள் என மேற்கொள்ளலாம். மாவட்ட தி.மு.க. சார்பில் பட்டிமன்றம், நலத்திட்ட உத விகள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம்கள், மாற்று திறனாளிகளுக்கு அறுசுவை உணவுகள், கலை நிகழ்ச்சிகள், கலை போட்டிகள் போன்றவை நடத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசி னார். தொடர்ந்து, தொகுதி மேலிட பார்வையாளர்க ளான மாநில மகளிர் தொண்டரணி மாநில துணைசெயலாளர் விஜிலா சத்தியானந்த் (நாகர்கோ வில்), மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் அருண் (குளச்சல்), விளை யாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் நம்பி (கன்னியாகுமரி) ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாவட்ட துணை செயலா ளர் பூதலிங்கம்பிள்ளை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பார்த்த சாரதி, தாமரைபாரதி, சதாசிவம், ஒன்றிய செய லாளர்கள் பிராங்கி ளின், மதியழகன், பாபு, சுரேந்திர குமார், லிவிங்ஸ்டன், மாந கர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் ஜவ கர், ஷேக்மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.
    • மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (வளர்மதி) கிளையின் நியாய விலைக்கடை பணியாளர் செல்வராணி விபத்தில் சிக்கினார்.

    அப்போது மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், அவரது வாகனத்திலேயே ஏற்றி சென்று டி.எம்.எப்.மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். அவரின் இந்த சிறப்பான செயலுக்கு வளர்மதி பண்டக பணியாளர்களின் சார்பாக அவரை பாராட்டி அவருக்கு நன்றி தெரி விக்கப்பட்டது. மேலும் மேயர், செல்வராணியின் உடல்நலத்தை பற்றி விசாரித்ததோடு மட்டும ல்லாமல் அவரே கோவை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு செல்வராணியின் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ததோடு மட்டுமின்றி மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.

    • குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 4-வது குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டமாக தற்போது நாளொன்றுக்கு கூடுதலாக 20 எம்.எல்.டி. குடிநீர் பெறப்படுகிறது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் கோடையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது :- கடந்த ஆண்டு கோடை யை திறம்பட சமாளித்தோம். தற்போது கூடுதல் குடிநீர் பெறப்படுகிறது. 4-வது குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டமாக தற்போது நாளொன்றுக்கு கூடுதலாக 20 எம்.எல்.டி. குடிநீர் பெறப்படுகிறது. இருப்பினும் மாநகரில் ஒரு பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறையும், மற்றொரு பகுதியில் 10 நாட்கள், 15 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை வழங்குவது மிகவும் முக்கியம். இதற்கு குழாய் திறப்பாளர்கள், குடிநீர் குழாய் ஆய்வாளர்கள் வரை அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்.

    மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்வதை முறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். வார்டில் அனைத்து பகுதிக்கும் 2 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வது கட்டாயம். அதை உறுதிப்படுத்த வேண்டும். கோடையை சமாளிக்க சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி, உதவி ஆணையாளர்கள், இளம்பொறியாளர்கள், பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்ததாரர்கள், குடிநீர் திறப்பாளர்கள், குடிநீர் குழாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் மேயர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
    • வினோபா நகர் தண்ணீர் தொட்டியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.குடிநீர் வழங்கும் அதிகாரிகளுடன் இது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி எந்தெந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து கேட்டறிந்து வருகிறார்.இந்தநிலையில் இன்று காலை நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 55 வது வார்டு வினோபா நகர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை தொடர்பான கோரிக்கையை ஏற்று வினோபா நகர் தண்ணீர் தொட்டியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது குடிநீர் வினியோகத்தை 5 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அப்பகுதியில் கழிவுநீர் வடிகால்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யுமாறு அலுவல ர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.இந்த ஆய்வின்போது அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.
    • தஞ்சாவூர் மாவட்ட கவிஞர்கள் பங்குபெறும் கவியரங்கம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 10 நாட்கள் நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் " ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி"என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் இந்து சமய அறநிலையத்துறை , தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

    அதுமட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய அரசு திட்டங்களின் தொகுப்பு புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளது.

    புகைப்பட கண்காட்சியினை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் புத்தக கண்காட்சி,உணவு திருவிழா சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் கண்டு மகிழ பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து அமையப்பட்டுள்ளது.

    மேலும் புகைப்பட கண்காட்சி அரங்கில் தினம் தோறும் மாலை நேரத்தில் பொதுமக்களின் மனம் கவரும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, அரசு இசைப்பள்ளி பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்ட கவிஞர்கள் பங்குபெறும் கவியரங்கம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 10 நாட்கள் நடத்தப்படும்.

    அரசின் திட்டங்களை கலை அறிந்து இலக்கிய நிகழ்ச்சிகளாக பயன்பெறும் வகையிலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் பாரம்பரிய உணவு குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும், நெகிழிக்கான மாற்று பொருட்களை விளக்கும் வகையிலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் கண்டுகளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளபட்டது.

    இந்த கண்காட்சி வருகின்ற 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார், தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.33.60 லட்சம் மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.
    • இந்த வீட்டில் ஒரு பல்நோக்கு அறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்மேயர் தினேஷ்குமார் 16 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் தலாரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.33.60 லட்சம் மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் வீடுகள் இல்லாத ஏழை, எளியோருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும்திட்டத்தினை துவக்கி வைத்து அதனை செயல்படுத்த உத்தரவிட்டார்.அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் அனைவருக்கும் வீட்டு வசதிதிட்டத்தின் கீழ் அதன் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 400சதுர அடிக்கு மிகாமல் புதிதாக கான்கிரீட் தளம் போட்ட வீடு கட்டிக்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்விதமாக தலா ரூ. 2.10 லட்சம் வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும் வகையில் மொத்தம் ரூ.33.60 லட்சம் அதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    400 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் இந்த வீட்டில் ஒருபல்நோக்கு அறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் இந்த வீடு அமைக்கப்பட உள்ளது.இவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியமான ரூ.2.10 லட்சம்நான்கு கட்டங்களாக வங்கியில் வரவு வைக்கப்படும். அதன்படி, கட்டிடஅடித்தளம் அமைத்த பின் ரூ. 50,000, கட்டிட லிண்டல் அமைக்கப்பட்ட பின் ரூ. 50,000, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட பின் ரூ. 50,000, மேலும் வீட்டின் முழு பணிகளும் முடிவடைந்த பின்னர் ரூ.60,000 வழங்கப்படும்.

    எனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள்முறையாக 12 மாதங்களுக்குள் கட்டிட வேலைகளை முடித்து சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் என்றார். அப்போது திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் பலர் உடனிருந்தனர்.  

    ×