search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்"

    • தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
    • பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.

    அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.

    தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.

    இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்கும் அரசாணை வெளியி டப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு மருத்துவ மனைகள், மருத்து வக்கல்லூரிகளில் பணி யாற்றும் டாக்டர்க ளுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டி இன்று மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

    அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்கும் அரசாணை வெளியி டப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுவரை அதனை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் இந்த போராட்டம் காரணமாக மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    • ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது.
    • குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

    ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

    விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம் இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் போன்ற வாசகங்களை எழுதியிருந்தார். இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரைப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அரசு தரப்பு வக்கீல் கூறும்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு லூசி லெட்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் அவர் குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதிக்கப்பட்ட போது லூசி லெட்பி, பணியில் இருந்ததை கவனித்த சக ஊழியர்கள் கவலைகளை தெரிவித்தனர் என வாதிட்டார்.

    ஆனால் இதை லூசி லெட்பி மறுத்தார். அவரது தரப்பு வக்கீல் கூறும்போது, லூசி ஒரு அப்பாவி. குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளில் 7 குழந்தைகளை கொன்றது, 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். லூசி லெட்பி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    7 குழந்தைகளை கொன்ற நர்சு லூசி லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் உதவி உள்ளார். பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த ஆஸ்பத்திரியில் குழந்தை நல டாக்டராக ரவி ஜெயராம் என்பவர் பணியாற்றினார். இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம், நர்சு லூசி லெட்பி மீது சந்தேகத்தை எழுப்பி எச்சரிக்கையை தெரிவித்தார்.

    அதன்பின் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலரும் சந்தேகங்களை கூறினர். இதையடுத்து நர்சு லூசி லெட்பி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

    இதுகுறித்து டாக்டர் ரவி ஜெயராம் கூறும் போது, 2015-ம் ஆண்டு மூன்று குழந்தைகள் இறந்த பிறகு முதலில் கவலைகளை எழுப்பினோம். மேலும் பல குழந்தைகள் இறந்ததால் நர்சு லூசி லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.

    லூசி லெட்பி பற்றிய எச்சரிக்கைகளுக்கு காவல்துறை முன் கூட்டியே செவி சாய்த்து இருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இப்போது 4 அல்லது 5 குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருக்கக் கூடும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்" என்றார்.

    லூசி லெட்பி, இங்கிலாந்து நாட்டின் மிக குரூரமான தொடர் சிசு கொலையாளி என்ற பெயரை பெற்றுள்ளார்.

    • முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வலியுறுத்தல்
    • அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜன், சென்னையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் மிக குறைந்த அளவு நோயாளிகள் வந்து மருந்துகளை வாங்கிவிட்டு வீடு திரும்பும் நிலை இருந்து வந்தது. தற்போது ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, மருத்துவப்பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி வகுப்புகள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பயின்று வருகிறார்கள். பல்வேறு வகையான அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து தங்கி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த சூழலில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்கு றையால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சீட்டு எடுப்பதற்கும், டாக்டரை சந்திப்பதற்கும், மருந்துகள் வாங்குவதற்கும், அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    வெளி மாவட்டத்தில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகள், டாக்டர்கள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகி றார்கள். 9 டாக்டர்கள் இருக்கும் இடத்தில் 3 பேர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள இடங்களில் மருத்து வக்கல்லூரி பேராசிரியர்களை வைத்து தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டாக்டரை தாக்கியதால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. இவரது 11 மாத பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. குழந்தையை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குழந்தைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    முன்னதாக குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டது. அதன் பின்பு குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குழந்தையை பார்க்க ஜிப்மருக்கு வந்த தியாகுவின் உறவினர்கள், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான் உடல்நிலை மோசமானதாக கூறி அங்கிருந்த டாக்டரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் டாக்டரை தாக்கினர். இதனால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த காவலாளிகள் தியாகுவின் உறவினர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
    • நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன்

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உப்பள கூலி தொழிலாளி ராஜேந்திரன் மகள் சண்முகபிரியா.

    இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 355 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

    இவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.

    மாணவி சண்முகபிரியா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று பல மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

    இதையடுத்து சண்முகப்பிரியாவை ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

    இது பற்றி சண்முகப்பிரியா கூறும்போது, நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன் என்றார்.

    • நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • அம்மா உணவகம் கண்காணிக்கப்படும் என தலைவர் கூறினார்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், நகராட்சி பொறியாளர் மணி, மேலாளர் சக்திகுமார், சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகராஜா பேசுகையில், குளச்சல் அரசு மருத்துமனையில் தேவையான மருத்துவர்கள் இல்லை. மருந்து தட்டுப்பா டும் உள்ளது. மருத்து வமனையை சீரமைக்க அனைத்து கவுன்சிலர்களும் மருத்துவமனையில் உள்ளிருப்பு செய்வோம் என்றார். தி.மு.க. கவுன்சிலர் ஷீலா ஜெயந்தியும், குளச்சல் மருத்துவமனையை சீரமைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் நசீர், தேவையான மருத்துவ உபகரணங்கள் கேட்டு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    தி.மு.க. கவுன்சிலர் ரகீம் பேசுகையில், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளருக்கு தன் பணி குறித்து அடிப்படை தெரியவில்லை. நகராட்சி ஆக்கிரமிப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றார். உடனே தலைவர், உரிய நடவடிக்கை எடுக்கும்போது கவுன்சி லர்கள் சிபாரிசுக்கு வரக்கூ டாது என்றார்.

    சுயேச்சை கவுன்சிலர் அன்வர் சதாத் பேசுகையில், சிலர் தெருக்களையே ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என குற்றம் சாட்டினர். அம்மா உணவகத்திலிருந்து பார்சல் வாங்கி சிலர் வெளியே விற்பனை செய்வ தாக காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அம்மா உணவகம் கண்காணிக்கப்படும் என தலைவர் கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் பணிக்குருசு, ஜான் சன், ஜான் பிரிட்டோ, நசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்தி ற்குட்பட்ட காகிதக்காரத் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் , இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    சந்திரசேகரன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட குற்றப் பதிவேடுகள் கூடத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற சந்திரசேகரன் மதிய உணவு அருந்திவிட்டு தனது பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்து ள்ளார்.

    இதனை யடுத்து சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரி ழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பணியின் போது மாரடைப்பில் உயிரிழந்த 58 வயதான சந்திரசேகரன் இதற்கு முன்பு கூத்தாநல்லூர் காவல் நிலையம் திருவாரூர் தாலுகா காவல் நிலையம் நிலைய எழுத்தராக பணிபுரிந்து ள்ளார். கடந்த 4 வருடங்களாக திருவாரூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தி ல் உள்ள மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளராக ஒரு வருடம் பணியில் இருந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பில் உயிரிழந்த நிகழ்வு மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.
    • 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய முதுநிலை படிப்பு மொத்த இடங்கள் 2,100 உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தான் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை மேற்படிப்புக்கு பல கோடி செலவிட வேண்டிய நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 'நெஸ்ட்' தேர்வு மூலம் சேர தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்லது.

    மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.

    அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து முடிக்கும் போது, இதுவரையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி மூப்பு காலம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவர்களின் பணி ஓய்வு காலம் 60 வயது என மாற்றப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 5 ஆண்டுகள் வரை முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் கடைசி பணி ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறையும் ஏற்கனவே உள்ளது.

    இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '55 வயது உள்ள மருத்துவர் முதுநிலை படிப்பில் இதன்மூலம் சேர முடியும். 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும். இது முன்பு ஓய்வு பெறும் வயதில் இருந்து 2 ஆண்டுமுன்பு வரை முதுநிலை மருத்துவபடிப்பில் சேரலாம் என இருந்தது. அதில் மாற்றம் செய்து புதிய விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றார்.

    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது
    • ஜீவிதா விற்கு அவருடைய தாயார் சார்லட் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முடிவு செய்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் சார்லட் (வயது 52), தொ ழிலாளி. இவரது மகள் ஜீவிதா (31) என்பவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள சிறுநீரக பிரிவில் சிசிச்சைக்காக சேர்ந்தார்.

    ஆஸ்பத்திரியில் அவருக்கு கடந்த 1½ ஆண்டுகளாக தொடர்ந்து ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்தது. இதனிடையே ஜீவிதாவுக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. இந்த நிலையில் அவருக்கு இரு சிறுநீரகமும் அகற்றி அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. ஜீவிதாவிற்கு அவருடைய தாயார் சார்லட் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 6-ந் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் சார்லட்டுக்கு முழு உடல் பரிசோதனையும் மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ குழுவில் முன் அனுமதியும் பெற்றார்கள்.

    இதையடுத்து ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் டீன் பிரின்ஸ் பயஸ் தலைமையில் சூப்பிரண்டு அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலட்சுமி, ரெனிமோள் மற்றும் டாக்டர்கள் ஜெயலால், பத்மகுமார், அருண் வர்கீஸ், எட்வர்ட் ஜான்சன், செல்வகுமார் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினரால் ஜீவிதாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. பின்னர் அவர் 15 நாட்கள் மருத்துவ குழுவினரால் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

    அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜீவிதா தற்போது நல்ல உடல் நலம் பெற்று உள்ளார். இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜீவிதாவை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேரில் பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ டாக்டர் குழு வினரை பாராட்டினார்.

    அப்போது ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் பேசியதாவது:-

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 2 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட் டுள்ளது. முதலில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. பின்னர் மருத்துவ முன் அனுமதி பெற்று அவருக்கு அவரது தாயாரின் ஒரு சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஜீவிதாவிற்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த அனைத்து மருத்துவ குழுவினரையும் பாராட்டுகிறேன். மேலும் தொடர்ச்சியாக எதிர்ப்பு வினையை சீர் செய்யும் சிறப்பு மருந்துகளும், தொடர் கண்காணிப்பு சிகிச் சைக்கான பரிசோதனை களும் முற்றிலும் இலவசமாக தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத் தின் கீழ் வழங்கப்படும். இந்த மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ10 லட்சம் வரை செலவாகும். ஆனால் இங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நடைபெற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன்.
    • டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பணியில் இருந்த வந்தனா தாஸ் என்ற பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் அவரை கத்திரி கோலால் குத்தி கொலை செய்தார்.

    இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெண் டாக்டர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது பற்றி அந்த டாக்டர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார். அதில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

    இதனால் நான் அதிர்ந்து போனேன். உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீண்டும் பிடித்து சென்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

    கேரளாவில் வந்தனாதாஸ் என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்னர், டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    மேலும் ஆஸ்பத்திரி பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது. அதன்பின்பும் ஒரு சில அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இப்போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    • டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம், சாப்ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

    இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது.

    இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    ×