என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டாக்டர்"
- அறைக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
- ஆடை கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
திருப்பூர் :
தேனி மாவட்டம் கே.பி.ஆர்.நகரை சேர்ந்த மாடசாமி குணசேகரன் என்பவரின் மகன் ராஜேஸ் கண்ணா (வயது 29). மருத்துவப்படிப்பு படித்துள்ளார். இவர் கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருப்பூர் வந்து தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணி செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து கடந்த 10 நாட்களாக தங்கியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை அவர் தங்கியிருந்த அறைக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக விடுதியின் உரிமையாளர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு படுக்கையில், ராஜேஸ் கண்ணா உடல் அழுகிய நிலையில் ஆடை கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு காலி மதுபாட்டில்கள் அதிகம் இருந்தது.
இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 21-ந் தேதி இரவு தான் தங்கியிருந்த அறைக்குள் சென்ற ராஜேஸ் கண்ணா அதன்பிறகு வெளியே வரவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஸ் கண்ணாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தேனியில் இருந்து விரைந்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ராஜேஸ் கண்ணா ரஷியாவில் டாக்டருக்கு படித்துள்ளார். சொந்த ஊர் திரும்பிய பின்னர், இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கான இந்திய மருத்துவ கழகத்தின் தேர்வை எழுதியபோது குறைந்த மதிப்பெண்களில் தொடர்ந்து தேர்ச்சியடை யாமல் இருந்துள்ளார். 4 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதில் அவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தான் திருப்பூர் வந்த ராஜேஸ் கண்ணா, திருப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். அதில் கிடைத்த பணத்தை வைத்து அறையில் மது அருந்தியதாக தெரிகிறது. மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் அளவுக்கு அதிகமாக மது குடித்ததில் அவர் இறந்தாரா? இல்லை வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர்.
மதுரை:
மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை வாசலில் நோயாளி ஒருவர் மயங்கி கிடந்தார். அவரது கால் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து பா.ஜ.க. நிர்வாகி முத்துக்குமாருக்கு தெரிய வந்தது. அவர் நிர்வாகிகளுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பிணவறை வாசலில் கிடந்த முதியவரை மீட்டு விசாரணை நடத்தினார்.
அதில் அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 36) என்பது தெரிய வந்தது. இவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக கடந்த ஒரு மாதமாக மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் பாதிப்பு குறையவில்லை.
இதற்கிடையே நோயாளி பிரகாஷ்ராஜின் உறவினர்கள் கைவிட்டு சென்றனர். இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரகாஷ்ராஜை ஆஸ்பத்திரி வாசலில் விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் பிரகாஷ்ராஜ் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த குழுவினர் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட வார்டில் வேலை பார்த்த 2 டாக்டர்கள், ஒரு நர்சு, தூய்மை பணியாளர் ஆகிய 4 பேர் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 2 டாக்டர்கள், நர்சு உள்பட 4 பேரையும் மதுரை பாலரங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக இடமாற்றம் செய்து டீன் உத்தரவிட்டார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட விவகாரத்தில், 2 டாக்டர்கள் உள்பட 4 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிவகங்கை அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
- இதில் அதிர்ஷ்டவசமாக டாக்டர் உயிர் தப்பினார்.
நெற்குப்பை
சிவகங்கை அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார்.இவர் காலையில் பணிக்கு சென்று விட்டு மதியம் 1 மணியளவில் காரில் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருக்கோஷ்டியூரை அடுத்த கே.பிள்ளையார் பட்டி அருகே கார் வந்த போது எதிரே பேரீச்சம் பழம் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது பயங்கர மாக மோதியது. இருந்தபோதிலும் காரில் உள்ள உயிர் காக்கும் பலூன் உடனடியாக விரிந்தது. இதனால் காரை ஓட்டி வந்த டாக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இருப்பினும் லாரி கார் மீது கவிழ்ந்து விழுந்தது. இதனால் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் சுல்தான் மற்றும் உதவியாளர் மகேஸ்வரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த சின்னக் கரையை சேர்ந்த ஒருவரின் ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் /அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் குழந்தையின் மூச்சுக்குழாயில் குறுமிளகு சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டாக்டர்கள் குழுவினர் பிரான்ஸ்கோபி மூலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த குறுமிளகு அகற்றப்பட்டது. மேற்கொண்ட சிகிச்சைக்கு பின் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.
- சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
- டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.
மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- நாகர்கோவிலில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டர் ஒன்றில் ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மீண்டும் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினார்கள்.
- பிரசவத்தில் தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் அவர்களது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நாகர்கோவில் :
இரணியல், சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அருள் ஜாஸ்மின் (வயது 30). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் அருள் ஜாஸ்மின் மீண்டும் கர்ப்பமானார்.இதையடுத்து அவர் திங்கள் நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.
தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அருள் ஜாஸ்மின் பரிசோத னைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருள் ஜாஸ்மினை ஸ்கேன் எடுத்து வருமாறு கூறினார்கள்.
உடனே அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டர் ஒன்றில் ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மீண்டும் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினார்கள்.
உடனே அவரது உறவி னர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அருள் ஜாஸ்மினை அழைத்து வந்தனர். அங்கிருந்து நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அருள் ஜாஸ்மினை சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை அசைவின்றி இருப்பதால் உடனே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். நேற்று இரவு அருள் ஜாஸ்மினுக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்தனர்.அப்போது குழந்தை இறந்திருந்தது.
மேலும் அருள் ஜாஸ்மினின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதுகுறித்து டாக்டர்கள் அருள் ஜாஸ்மின் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்தனர்.குழந்தை இறந்த தகவலை கேட்டு ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த உறவினர்கள், அருள் ஜாஸ்மினும் கவலைக்கிட மாக இருப்பதாக கூறியதால் கவலை அடைந்தனர். இந்த நிலையில் அருள் ஜாஸ்மின் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
பிரசவத்தில் தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் அவர்களது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அருள் ஜாஸ்மின் மற்றும் அவரது குழந்தை சாவிற்கு திங்கள் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டரே காரணம் என்று அருள் ஜாஸ்மினின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பிரசவத்தில் தாய்-குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர் வேண்டுகோள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் சையது அபுல் ஹாசன் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள கடந்த 2017-18 ஆம் ஆண்டு மருத்து மாணவராக சேர்ந்து அதன் பின் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு திரும்பினார்.
பின்னர் அவர் ஆன்லைன் கல்வி மூலமாகவே மருத்துவ கல்வியை முடித்து கடந்த 11-ந்தேதி மீண்டும் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்காக சென்றார்.
அப்போது ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சீனாவில் உயிரிழந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கடந்த மாதம் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- டாக்டர் சக்திவேல் தனது உடலில் ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள மேவாணி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(39). சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான இவர் ஈரோடு நியூ டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். அவரது மனைவி அகமதாபாத்தில் படித்து வருகிறார். இன்று காலை டாக்டர் சக்திவேல் நீண்ட நேரமாகியும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்போடப்பட்டு இருந்தது.
இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது டாக்டர் சக்திவேல் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர் சக்திவேல் தனது உடலில் ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டாக்டர் சக்திவேல் சாவுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
- என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராகவும், என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர் என்று முதலமைச்சர் கூறினார்.
சென்னை:
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளரும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத் தலைவருமான முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் நேற்றிரவு சென்னையில் இருந்து காரில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார். அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அதற்குள் மஸ்தான் பரிதாபமாக இறந்துவிட்டார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
டாக்டர் மஸ்தான் உடல் திருவல்லிக்கேணி பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப் பட்டது.
தகவல் அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்பட ஏராளமானோர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மஸ்தான் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக - அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர். இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச் சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.
சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப்பணியாளரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன்.
அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார். மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தானின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கழகத்தினருக்கும் - சிறு பான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்தது.
- கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம் 4 கால்களுடன் பிறந்துள்ளது.
அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளை, குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதேவேளை, கூடுதலாக உள்ள 2 கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளது.
மேலும், கருமுட்டை பிரிதலின்போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளதாகவும், கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்றும் டாக்டர்கள் கூறினர்.
- இவர் லண்டனில் உள்ள விர்ரல் பல்கலைகழக மருத்துவமனையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்
- சென்னையில் உள்ள எம்.ஐ.ஓ.டி. சர்வதேச மருத்துவமனையிலும், பெங்களூரு மருத்துவமனையிலும் பணியாற்றியுள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெசா லிட்டி மருத்துவமனையில் லண்டன் குடியுரிமை பெற்ற இதயவியல் நிபுணர் டாக்டர் சரவணன் (வயது 53) நாளை (திங்கட்கிழமை) முதல் முழுநேர மருத்துவ மனை இயக்குனராகவும் இருதய வியல் துறை தலைவராகவும் பதவியேற்கிறார். இவர் எம். பி.பி.எஸ்., எம்.டி. பட்டங்களை மதுரை மருத்துவ கல்லூரி யிலும், எப்.ஆர். சி.பி. லண்ட னிலும், சி.சி.டி. லண்ட னிலும், சி.சி.டி.எஸ். அமெரிக்காவிலும், எப்.இ. எஸ்.இ. லண்டனிலும் படித்துள்ளார்.
இவர் லண்டனில் உள்ள விர்ரல் பல்கலை கழக மருத்துவமனையில் பல ஆண்டுகள் பணி யாற்றிவிட்டு, சென்னையில் உள்ள எம்.ஐ.ஓ.டி. சர்வதேச மருத்துவமனையிலும், பெங்களூரு மருத்துவமனை யிலும் பணியாற்றியுள்ளார்.
இவர் ரத்த ஓட்ட சோதனை இதய தமனி களில் ரத்த ஓட்டத்தை பரிசோதித்தல், மூடிய இதய தமனிகளை திறந்து பின்னர் ஸ்டென்ட் பொருத்துதல், இதய முடுக்கி பொருத்து தல், இதய படபடப்பு தடுப்பு மற்றும் உயிர் காக்கும் எந்திரம் பொருத்துதல், இதய மறு சீரமைப்பு, இதய முடுக்கி பொருத் துதல், இதய மின் இணைப்புக்களை சோதித்தல் போன்ற சிகிச் சைகள் அளிக்கிறார்.
இவரை பொன் ஜெஸ்லி குழு மங்களின் தலைவர் பொன்.ராபர்ட் சிங், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜார்ஜ். இருதயவியல் டாக்டர்கள் ஸ்ரீதரசுதன், வெங்கடேஸ் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணி யாளர்கள் வாழ்த்தினர்.
- வேலை முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கம் கெடுகிறது.
- அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என டாக்டர் புகாரில் தெரிவித்துள்ளார்.
போபால்:
இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் அலோக் மோடி. இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது:
எனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அந்த சேவல் கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கத்தைக் கலைத்து விடுகிறது. அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.
இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என சஞ்சய் சிங் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்