search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடனுதவி"

    • தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது
    • கொரோனா காலத்தில் வேலையிழந்து நாடு திரும்பியோர்

    அரியலூர்:

    தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பின்னர் நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

    உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    திட்ட தொகையில் பொதுப்பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும்.

    அரசு மானியமாக திட்ட தொகையில் 25சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் சரி செய்யப்படும். கடன் வழங்கப்பட்ட பின், ஆறு மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையினை வங்கியில் செலுத்த ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையினை திரும்ப செலுத்த வேண்டும்.

    கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜாநகரம், அரியலூர் என்ற விலாசத்தில் நேரிலோ அல்லது 8925533925, 8925533926 என்ற கைப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பியோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை'' செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொேரானா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி ெபற்றுப் பயன் பெறலாம். அவர்கள் ெகாரோனா பரவலால் 1.1.2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேலாகவும், 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    விற்பனை மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும், உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் பயனாளர் தம் பங்காக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10 சதவீதம் மற்றும் பெண்கள், இட ஒதுக்கீடு பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5சதவீதம் செலுத்த வேண்டும்.

    மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு திட்டத் தொகையில் 25சதவீதம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும்.

    மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www/msme.Online.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரி யில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை 2 பிரதிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில்மையம், சிவகங்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து கொரோனா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டோர் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க (MEGP) என்ற இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இது குறித்து மேலான விவரங்கள் மற்றும் ஆலோச னைகள் பெற மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திள் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி மூலமாகவோ அணுகி பயன்பெறலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4.36 கோடி கடனுதவியை கலெக்டர் வழங்கினார்
    • வங்கிகள் உங்களை தேடி வந்து கடன்களை கொடுக்கின்றன.

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் இணைந்து மாபெரும் மகளிர் சுய உதவிக்குழு கடன் முகாமை நடத்தியது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    இதில் 58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4 கோடியே 36 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான கடனு தவிகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளின் மூலமாக கலெக்டர் வழங்கி னார்.

    முகாமில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு புதிய கடன்களை அதிகமாக வழங்கியிருக்கிறோம். விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கக்கூடிய கடன்கள் வாரா கடன்களாக மாறுகின்றனவா? என்றால் இல்லை. அனைத்து குழுக்களும் தாங்கள் பெறக்கூடிய கடன்களை முழுமையாக திரும்ப செலுத்தி விடுகின்றன. அதனால் தான் வங்கிகள் உங்களை தேடி வந்து கடன்களை கொடுக்கின்றனர்.

    புதிதாக உங்களுக்கு கடன்களை வழங்கக்கூ டியது, புதிதாக உங்களுக்கு கடன்களை பெறக்கூடியது, தனிநபர் அல்லது குழுவின் உடைய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகும். ஒரு நாடாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி உங்களின் வருமானத்தை பெருக்கு வதற்கு புதிய முதலீடுகளை செய்ய வேண்டும்.

    பெண்களுக்கு உண்மை யான வலிமை, உண்மையான சுதந்திரம், விடுதலை என்பது அவர்களின் பொருளாதார வலிமையை பொறுத்தது தான் ஆகும். நீங்கள் பொருளாதார வலிமையை அடைவதற்கு நிறைய பணத்தை நல்ல வழியில் அதனை ஈட்டுவதற்கு நாம் வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும்.

    அதற்கு மிகவும் முக்கிய மானது ஒரு முதலீடு. அந்த முதலீட்டை வைத்து உங்கள் உழைப்பால், திறமையால், அர்ப்பணிப்பால் பெண்கள் பெரிய அளவில் பொருளா தார வலிமை பெற முடியும். பொருளாதார வலிமை இருந்தால் உங்களால் நிறைய சாதிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் நாகையா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், ஊரக கிராமிய பயிற்சி மைய இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் 12,768 பயனாளிகளுக்கு ரூ.150.58 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது
    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு வங்கி கடன் ஒப்புதல்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியோடு மற்ற வங்கிகளும் இணைந்து முதல் 3 வாரத்தில் 12 ஆயிரத்து 768 பயனாளிகளுக்கு ரூ.150.58 கோடி மதிப்பில் முன்னூரிமை துறை கடனாக வழங்கி உள்ளது.

    இதில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் 12 ஆயிரத்து 498 பயனாளிகளுக்கு ரூ.137.54 கோடியும், மாவட்ட தொழில் மையம் திட்டங்களில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.34.06 லட்சமும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.35.54 லட்சமும் மற்றும் புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் 1 பயனாளிக்கு ரூ.10 லட்சமும், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக திட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.54.38 லட்சமும், 91 சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.13 கோடியும், பிரதம மந்திரியின் தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி திட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சமும், முத்ரா திட்டத்தில் 57 பயனாளிகளுக்கு ரூ.77.15 லட்சமும், 22 பயனாளிகளுக்கு கல்வி கடன் ரூ.95 லட்சமும், 18 பயனாளிகளுக்கு வீட்டுக்கடன் ரூ.3.69 கோடியும் மற்றும் இதர கடன்களாக 23 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடியும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் பரிமளா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லயனல் பெனடிக்ட், ரிசர்வ் வங்கி மாவட்ட முன்னோடி அலுவலர் வெங்கடேசன், நபார்டு மாவட்ட வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வெங்கடேசன் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்களும் கலந்து கொண்டனர்.

    • 174 பேருக்கு ரூ.14.35 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
    • வங்கிகளின் வாயிலாக கடனுதவிகள் பெறும் பயனாளிகள் அதனை முறையாக செலுத்த வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வங்கி கடனுதவிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஆண்டிற்கு சராசரியாக ரூ.8,500 கோடி வரையிலான வங்கி கடன் உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில் வங்கி கடன் உதவிகள் வழங்குவது மட்டுமின்றி அவர்களின் சேமிப்பினையும் முறையாக பாதுகாப்பதற்கும் வங்கிகள் உதவி வருகின்றன.

    மேலும் அனைத்து வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஏ.டி.எம்.கார்டு, அதன் கடவுச்சொல் ஆகியவைகள் தொடர்பான விபரங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. எந்த வங்கியின் வாயிலாகவும் மேற்கண்ட விபரங்கள் குறித்து கோரப்படமாட்டாது. இது குறித்து போதுமான விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும்.

    பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு கடனுதவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகளின் வாயிலாக கடனுதவிகள் பெறும் பயனாளிகள் அதனை முறையாக செலுத்த வேண்டும்.

    மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு, அதனை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அனைத்து வங்கிகளின் சார்பில் விவசாயக்கடன், கல்விக்கடன், தொழில்கடன், மகளிர் சுயஉதவி குழுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் என மொத்தம் 174 வாடிக்கையாளர்களுக்கு ரூ.14.35கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் காரைக்குடி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் லீனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பயனாளிகளுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது
    • மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின்படி வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில், அரசு திட்டங்களுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை, ஆட்சியரகத்தில் கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இம்முகாமில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் சிறு தொழில் மானிய கடன்கள், மகளிர் சுயஉதவி குழு கடன்கள், கல்விக்கடன்கள், வாகன கடன்கள், சாலையோர வியாபாரிகளுக்கான கடன்கள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குதல் திட்டத்திற்கான கடன்கள், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட கடன்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கான கடன்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை கடன்கள், ஊரக வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நபர்களுக்கான தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 47 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.93 கோடி மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் 40 நபர்களுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான காசோலைகளையும் என ஆகமொத்தம் ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இம்முகாம் மூலமாக வங்கி கடன் இணைப்புகளை பெற்ற அனைத்து நபர்களும் உரிய முறையில் முதலீடு செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

    • தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை.
    • தாட்கோ மூலம் ரூ. 2.25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது :-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பலவேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சினை தாட்கோ சார்பாக வழங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு மூலம் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ

    மூலமாக ரூ.2.25 இலட்சம் வரை மானியத்துடன் கூடிய ரூ.10.00 இலட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

    எனவே மேற்காணும் இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்க ர்கள் தாட்கோ இணையத ளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட ) தாட்கோ வழங்கும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் ரூ.5 கோடி வரை மானியத்துடன் சுயதொழில் கடனுதவி பெறலாம்.
    • திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லாத மாற்றுதிறனாளிகள் மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் பெற்று சுயதொழில் தொடங்கலாம்.

    வேலையில்லாத திண்டாட்டத்தினை போக்கு வதற்காக தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் சுயதொழில் கடனுதவி திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி தொழில் முனைவோர்களாக திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை நிறைவேற்றிட தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிறனாளிகள், 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.75லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையினை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.

    பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத்தொழில் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை.

    மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையில் திட்ட மதிப்பீடாக கொண்டு வரலாம்.

    இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு மானியமாக ரூ.17.50 லட்சம் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மானியமாக வழங்கப்படு கிறது. திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்கு தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மானியங்களை பெற்று பயனடையுமாறும் மற்றும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 8925534036 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்
    • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடந்த அரசு விழாவில் மாநில அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி, அதனை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 532 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 6 ஆயிரத்து 546 உறுப்பினர்களுக்கு ரூ.28 கோடியே 76 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.


    • 6,546 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.28.76 கோடி கடனுதவி வழங்கப்பட்டது
    • மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கி, சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 532 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 6 ஆயிரத்து 546 மகளிர்களுக்கு ரூ.28.76 கோடி கடனுதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது,மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கி, சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 121 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளில் 3 ஆயிரத்து 906 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 13 பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் 654 மகளிர் சுய உதவிக்குழுக்களும் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 5 ஆயிரத்து 908 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.264.29 கோடி வங்கி நேரடி கடனுதவி வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 3 ஆயிரத்து 373 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.140.77 கோடி வங்கி நேரடிக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 532 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 6 ஆயிரத்து 546 மகளிர்களுக்கு ரூ.28.76 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஒ. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மகளிர் திட்ட இயக்குநர் கருப்பசாமி, நகராட்சி தலைவர் அம்பிகா, துணை தலைவர் ஹரிபாஸ்கர், ஒன்றியகுழு தலைவர் மீனாம்பாள், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.





    • 1,461 மகளிர் குழுக்களுக்கு ரூ.84.13 கோடி கடனுதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அதனை தொடர்ந்து சிவகங்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து சிவகங்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 1,4611 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.84.13 கோடி கடனுதவிகளை வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது:-

    சுயஉ தவிக்குழுக்கள் அமைத்து சுழல்நிதி கடன் திட்டத்தை வழங்கி பெண்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்தியவர் மகளிர் குழு பயன்பெறும் வகையில் குழு உறப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். அந்த அளவிற்கு சுயதொழில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

    பொதுவாக ஒரு வீட்டில் குடும்பத்தலைவி போதிய வருவாய் ஈட்டும் நிலையில் இருந்தால்தான், அந்த குடும்பம் கடனின்றி சிறப்பாக வழிநடத்தி செல்ல முடியும். பெண்கள் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு எத்தகைய திட்டங்களை பெற்று பயன்பெற முடியுமோ அத்தகைய திட்டங்களை மேற்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் மகளிர் குழுக்களுக்கு ரூ.83.79 கோடி கடனுதவிகளை ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுகிறது.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 1591 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.79 கோடி மதிப்பிலான கடனுதவி களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.

    இந்தியாவிலேயே முதன்முறையாக 1989ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டு தற்போது சமூக பொரு ளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் மாதவன், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×