search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி"

    • மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலனாக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
    • மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 பெறும் பயனாளி நெகிழ்ச்சியடைந்தார்.



    மாற்றுத் திறனாளி கருப்பையா

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திற னாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் மாற்றத்தை கொண்டு வரும் திறனாளிகள் என்ற உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு அவர்களுக்கான திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுய வேலை வாய்ப்பினை உருவாக்கிட கைபேசி, கணினி போன்ற எண்ணற்ற பயிற்சிகள் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித் தொகை, திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது.

    காது கேளாத மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கு அடிப்படை பயிற்சி, கட்டண மில்லா பஸ் பயண அட்டை, மின்கல சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கால் மற்றும் நவீன ஒப்பு காதொலி கருவி, முடம் நிக்கும் சாதனம் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம் வட்டத்தில் 1583 மாற்றுத்திறனாளி களுக்கும்,ராமேசுவரம் வட்டத்தில் 429 மாற்றுத்திற னாளிகளுக்கும், திருவாடானை வட்டத்தில் 1033 மாற்றுத்திறனாளிக ளுக்கும், கீழக்கரை வட்டத்தில் 803 மாற்றுத்திற னாளிகளுக்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 725 மாற்றுத்திறனாளிகளுக்கும், கடலாடி வட்டத்தில் 1138 மாற்றுத்திறனாளிகளுக்கும், கமுதி வட்டத்தில் 838 மாற்றுத்திறனாளிகளுக்கும், முதுகுளத்தூர் வட்டத்தில் 1001 மாற்றுத்திறனாளி களுக்கும், பரமக்குடி வட்டத்தில் 1336 மாற்றுத்திற னாளிகளுக்கும் என மொத்தம் 8886 மாற்றுத்திற னாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 32 ஆயிரத்து 378 நபர்கள் மாற்றுத்திறன் கொண்ட வர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள வழங்கப்பட்டுள்ளது.

    14 ஆயிரத்து 905 நபர் களுக்கு மத்திய அரசின் UDID திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளும் வழங்கப் பட்டுள்ளது. கடந்த மே 2021 முதல் பிப்ரவரி 2023 வரை மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட வங்கிக்கடன் மானியமாக 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 528 மதிப்பிலான மானியத் தொகையும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38.63 லட்சம் மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 2 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.30 லட்சம் மதிப்பிலும், நவீன செயலிகளுடன் கூடிய கைபேசி 124 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.50 லட்சம் மதிப்பிலும், முடநீக்கியல் கருவி 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 120 மதிப்பிலும், 3 சக்கர சைக்கிள் மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.90 ஆயிரத்து 500 மதிப்பி லும், சக்கர நாற்காலி 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து10 ஆயிரத்து 600 மதிப்பிலும் என 467 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 90 ஆயிரத்து 748 மதிப்பீட்டில் வழங்கப் பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாதாந்திர உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளி கருப்பையா கூறும்போது, மூளை வாத முடக்கு நோயால் பாதிக்கப் பட்டேன். மாற்றுதிறனாளி களுக்கான அடையாள அட்டை பெற்று மாதம் ரூ.1,000 பெற்று வந்தேன். தற்போது முதல்-அமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் முதல் 1,500 வழங்கிட உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி வருவதன் மூலம் எனக்கு ரூ.1,500 கிடைக்கிறது.

    மாற்றுத்திறனாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மாற்றுத்திற னாளிகளின் பாதுகாவ லனாக திகழ்ந்து வருகின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன் றியை தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.

    இந்த தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி செய்தி தொடர்பு அலுவலர் விஜய குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் 86 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களை இணைத்து விண்ணப்பம் அளித்தனர்.

     திருப்பூர் :

    காதுகேட்காத, வாய்பேசாத மற்றும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் 86 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் கட்டமாக ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். பார்வையற்றோர் சங்க பிரதிநிதி சக்கரையப்பன், காதுகேளாதோர் சங்க பிரதிநிதி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களை இணைத்து, ஸ்மார்ட் போனுக்கான விண்ணப்பம் அளித்தனர். மொத்தம் 100 பேர் ஸ்மார்ட் போன் கேட்டு விண்ணப்பித்தனர்.

    • மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
    • தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்கள், 7023 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 114 பேர் 53 மையங்களில் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே திருப்புட் குழி அரசு மேல் நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இதுபற்றி மாணவி அப்போது மற்ற ஆசிரியர்களிடம் தெரிவிக்கவில்லை.

    தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி பள்ளியில் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு ஆசிரியர் ஜெகன்நாத் தேர்வு எழுத உதவியபோது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஆசிரியர் ஜெகன்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. எனவே வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் நீலநிற அட்டை வழங்கப்படுகிறது. அதுவும் தவிர மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் 2-வது செவ்வாய் கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய் கிழமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் முன்னிலையிலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 10-ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பயனாளிகள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி, நீல நிற வேலை அட்டை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
    • கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஊராட்சி ஒன்றிய ஆனையரிடம் வழங்கினர்.

    தரங்கம்பாடி:

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் லெட்சுமி, செம்பை ஒன்றிய அமைப்பாளர் ராஜாபிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் செல்வராஜ், ஒன்றிய அமைப்பாளர் கண்ணன், தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளிலும் நூறுநாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி வேலைத்திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஊராட்சி ஒன்றிய ஆனையரிடம் வழங்கினர்.

    • மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந் தேதி தொடங்கி நடைபெற்றது.
    • ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்றிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந்தேதி ெதாடங்கி நடைபெற்றது.

    திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம், காங்கயம், குண்டடம், ஊத்துக்குளி, குடிமங்கலம், பொங்கலூர்,வெள்ளகோவில், மூலனூர் ஒன்றியங்களில் முகாம் நடத்தப்பட்டது.அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று, அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் கேட்டு விண்ணப்பங்கள் அளித்தனர்.

    கண், எலும்பு முறிவு, காது - மூக்கு - தொண்டை, நரம்பியல், மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர். ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்கும்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27 முதல் இம்மாதம் கடந்த 14ந் தேதி வரை முகாம் நடத்தப்பட்டுள்ளது.

    முகாமில் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 349 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்காக 430 விண்ணப்பங்கள், 21வகையான உதவி உபகரணங்கள் கேட்டு 112 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொழில் துவங்குவதற்கான வங்கி கடன்கள் கேட்டு 32 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.

    • இன்று முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.

    கோவை

    கோவையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடை யாள அட்டை புதுப்பித்தல், தனித்து வமான அடையாள அட்டை பதிவு, மருத்துவ உபகரணங்கள் வழங்கல், அறுவை சிகிச்சைக்கு பயனாளிகள் தோ்வு உள்ளி ட்டவை மேற்கொ ள்ளப்படுகிறது.

    எனவே மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் இம்முகாமை பயன்படுத்திகொள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

    முகாம்கள் பேரூா் வட்டாரத்தில் குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்றும், கோவை மாநகா் வட்டாரத்தில் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 3-ந் தேதியும், கிணத்துக்கடவு வட்டாரத்தில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 -ந் தேதியும்,

    பெரிய நாயக்கன்பாளையம் வட்டாரத்தில், நரசிம்ம நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 8-ந் தேதியும், அன்னூா் வட்டாரத்தில், அன்னூா் அமரா் எ.முத்துக்கவுண்டா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ந் தேதியும், காரமடை வட்டாரத்தில் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ந் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

    சுல்தான்பேட்டை வட்டாரத்தில், சுல்தான்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் 13 -ந் தேதியும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 15 -ந் தேதியும் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 17-ந் தேதியும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 20-ந் தேதியும் ஆனைமலை வட்டாரத்தில், ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 22-ந் தேதியும் நடைபெறுகிறது.

    சூலூா் வட்டாரத்தில் சூலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 23-ந் தேதியும், தொண்டாமுத்தூா் வட்டாரத்தில், தொண்டாமுத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24-ந் தேதியும், மதுக்கரை வட்டாரத்தில், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பிப்ரவரி 27-ந் தேதியும், வால்பாறை வட்டாரத்தில், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 28 -ந் தேதியும் நடைபெறுகிறது.

    முகாம்கள் காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 4, ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.
    • மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

    சென்னை:

    சென்னை கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையானது, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.

    மருத்துவ சேவை, சமூக மற்றும் தொழில் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த அனைத்து சேவைகளும் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    இம்மருத்துவமனை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் ஒரு அங்கம் ஆகும். 1960-ம் ஆண்டு முதன் முதலில் எலும்பு முறிவு சிகிச்சையின் கீழ் உட்பிரிவாக அரசு பொது மருத்துவமனையில் உடல் இயக்கவியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு துறை (பி.எம்.ஆர்.) தோற்றுவிக்கப்பட்டது. விரிவான இடவசதி கருதியும், மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு தொடர்பான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் பொருட்டும் சென்னை, கே.கே. நகரில் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மாற்றப்பட்டது.

    இம்மருத்துவமனை மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் தொழில்முறை சிகிச்சை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புனர்வாழ்வு மையம் ஆகும்.

    இம்மருத்துவமனையில், 60 படுக்கைகள் கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் உறுப்பு துண்டித்தல் ஆகிய மூன்று உள்நோயாளிகள் பிரிவுகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. இம்மருத்துவமனையில் நாள்தோறும் 250 புறநோயாளிகளும், 30 உள்நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.28 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டிடடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    ஒப்புயர்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை பயிற்சி வசதிகள், இயன்முறை பயிற்சி, மின்முறை சிகிச்சை ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை வசதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    மேலும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கருவிகளையும் பார்வையிட்டார்.

    இப்புதிய ஒப்புயர்வு மையத்தின் மூலம் 60 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, பக்கவாதம், முதுகுத் தண்டு காயம், மூளைக் காயம், பெருமூளை வாதம், தசைக்கூட்டு கோளாறு நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அதிநவீன செயற்கை உபகரணங்கள், இலவச சக்கர நாற்காலிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடக்கிறது.
    • இன்று முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை நடக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

    சிறப்பு மருத்துவர்கள் குழு முகாமிற்கு வருகை தந்து மாணவர்களின் இயலாத் தன்மைக்கேற்ப மருத்துவச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், UDID அட்டை பதிவேற்றம் செய்தல் உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரைத்தல், அறுவைச் சிகிச்சை பரிந்துரை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தல் போன்ற செயல்பாடுகள் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த முகாம் இன்று (24-ந் தேதி) விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், 27-ந் தேதி காரியாபட்டி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 31-ந் தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பிப்ரவரி 2-ந் தேதி திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

    7-ந் தேதி அருப்புக் கோட்டை சி.எஸ்.ஐ (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியிலும், 9-ந் தேதி சிவகாசி எ.வி.டி. நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், 14-ந்தேதி ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், 16-ந் தேதி சாத்தூர் எட்வர்டு நடுநிலைப் பள்ளியிலும், 21-ந் தேதி வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ந் தேதி வத்ராயிருப்பு ஒன்றியம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 28-ந் தேதி ஸ்ரீவில்லி புத்தூர் ஒன்றியம் ஊரணிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது.

    முகாமிற்கு வரும்பொழுது மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம்-8, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல்-2, ஆதார் கார்டு அசல் மற்றும் நகல் - 2, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். மேலும் ஏற்கனவே தேசிய அடையாள அட்டை வைத்திருப்போர் அசல் மற்றும் அனைத்துப் பக்கங்களின் நகல்கள் கொண்டு வர வேண்டும்.

    இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறளாளி மாணவர்களும், பெற்றோர்களும் பயனடையலாம் என்று விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை அருகே விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.2.40 லட்சம் செலவில் வீடு வழங்கப்பட்டது.
    • இதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக அவர்களை பயன்பெறச் செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேலப்பூங்குடி ஊராட்சி திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமணன் கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக முதுகு தண்டு பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில் உள்ளார்.

    அவர் தற்போது தனது குடும்பத்தினரின் அரவணைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். அவருக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அவரது இல்லத்திற்கு சென்று மருத்துவப் பராமரிப்பு வழங்கிடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் லட்சுமணனுக்கு பெரு நிறுவன சமூக பொறுப்புகள் திட்டநிதி 2021-22ன் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டினை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (தணிக்கை) கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேலு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெகநாதசுந்தரம், உதவி பொறியாளர் கிருஷ்ண குமாரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி, ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் வாழ்த்து பெற்றார்.
    • இவருக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு. இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் கடந்த டிசம்பரில் பாகிஸ்தானில் நடந்த சக்கர நாற்காலி ஆசிய கோப்பை கிரிக்கெட் 20- 20 போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டார்.

    இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி ஆசிய கோப்பை கைப்பற்றியது. மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட வினோத் பாபுவுக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது மற்றும் அதிக ரன்கள் எடுத்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு வந்தவுடன் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான உதவிகளை செய்ததற்காக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்களை காண்பித்து மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலி கிரிக்கெட் கேப்டன் வினோத்பாபு வாழ்த்து பெற்றார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது
    • நிறுவனர் சபரிமலைநாதன்,சமூக ஆர்வலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் முத்தமிழ் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செந்தில்குமாரின் தாயார் புற்று நோயால் காலமானார். அவரது 60-வது நினைவு நாளை முன்னிட்டு இந்த அறக்கட்டளை மூலம் முதுகுளத்தூரில்

    30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன்,சமூக ஆர்வலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×