search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல.கணேசன்"

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். #Karunanidhi #KarunanidhiHealth
    சென்னை:

    பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் அங்கிருந்த டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

    பின்னர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சி வேறுபாடற்று அரசியல் களத்தில் இருக்கக் கூடிய அத்தனை பேருக்கும் ஒரு மூத்த தலைவராக விளங்குபவர் கலைஞர். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்.

    அவருக்கு உடல் நலம் குன்றியபோது கனிமொழியை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது கலைஞருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவது உண்மை. ஆனால் ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிவித்தார்.

    எனவே எனது சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று காலையில் தான் வந்தேன். உடனே காவேரி மருத்துவமனைக்கு சென்று மு.க.ஸ்டாலின் மற்றும் டாக்டரிடம் கலைஞரின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தேன். அப்போது கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் அருகில் இருந்தனர்.

    கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும், உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunanidhi #KarunanidhiHealth
    சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #BJP #LaGanesan #PropertyTax
    மதுரை:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறவினருக்கு ராணுவ விமானம் வழங்கியது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.

    தமிழகத்தில் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவரை காப்பாற்றும் நோக்கத்தில் தனது காரில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் மந்திரியின் செயல்பாடு கூட தவறு என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம் மீனவர்கள் விவகாரத்தில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.


    தமிழக கவர்னர் ஆய்வுப்பணி நடத்துவதை தவறு என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க.வினர் இதற்காக போராட்டங்களை நடத்துகின்றனர். இந்த வி‌ஷயம் தேவையற்ற முறையில் பெரிதுபடுத்தப்படுகிறது.

    கவர்னர் ஆய்வை எதிர்த்து மு.க.ஸ்டாலின், அவரிடம் ஏன் கோரிக்கை மனுவை கொடுக்கிறார்? தமிழக அரசை கலைக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை.

    மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் பொதுமக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

    தமிழக பா.ஜனதாவை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை ஆதரிக்கிறோம். என்னுடைய பார்வையில் அரசு நன்றாகத்தான் செயல்படுகிறது. ஒருசில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.

    லஞ்சம் கொடுப்பவருக்கும் தண்டனை என்ற சட்டத்தை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது பெருமையான வி‌ஷயமாகும்.

    சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதால் தேர்தல் கூட்டணி வருமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #PropertyTax
    பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம் என்று மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் இல.கணேசன் எம்.பி. கூறினார். #OneNationOneElection
    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூரில் இன்று பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட இல. கணேசன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம். அதற்கான கட்சிப்பணிகளை மேலூரில் இருந்து தொடங்கி உள்ளோம்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என டி.டி.வி தினகரன் கருத்து கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே அமித்ஷா ஊழல்வாதிகளுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்து விட்டார்.

    காவிரி பிரச்சனைக்காக போராடியவர்கள் இன்று யாரேனும் வயல்வெளியில் இறங்கி விவசாய பணிகளை செய்தார்களா? என்பது தான் தற்போதைய கேள்வி.

    பொய் வதந்தி மூலம் குழந்தை திருட வந்ததாக, சில அப்பாவி மக்கள் தற்போது கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது இந்த தேசத்தின் மீது குற்றச்சாட்டை பரப்ப வேண்டும் என்று சிலர் செய்யும் பிரசாரம் ஆகும்.


    ஸ்டெர்லைட் ஆலை மூலம் அந்தப்பகுதி மாசடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது.

    இதேபோல சேலம் தோல் தொழிற்சாலை, திருப்பூர் உள்ளிட்ட சாயப்பட்டறை செயல்படும் பகுதிகளிலும் நிலத்தடி தண்ணீர் மாசடைந்தது உண்மை. இதனை ஆய்வு செய்ய வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் போல், சேலம் பகுதியில் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி நீர் கடலில் கலந்து வீணாவதை அரசு தடுக்க வேண்டும். இதற்காக தஞ்சை பகுதிகளிலுள்ள ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    கவர்னர் பதவி என்பது திரையரங்கில் உள்ள தீ தடுப்பு வாளி போன்றது. கவர்னர் ஆய்வை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பொது மக்கள் ஆதரிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan  #OneNationOneElection
    சென்னை-சேலம் 8 வழி சாலையை 90 சதவீத மக்கள் வரவேற்றுள்ளதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்தார். #ChennaiSalemGreenExpressWay
    ராஜபாளையம்:

    பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழி சாலையை 90 சதவீத மக்கள் வரவேற்றுள்ளனர். மக்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. சாலை அமைக்க எடுக்கும் இடங்களில் விவசாய நிலங்கள் குறைவு.


    அந்த நிலத்தின் மதிப்புக்கு அதிகமான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சிலர் பிரச்சனையை தூண்டுகிறார்கள்.

    தி.மு.க.வின் முதல் வார்த்தையான திராவிடம், 2-ம் வார்த்தையான முன்னேற்றம் என்பது அர்த்தமற்றதாகி விட்டது. வெறும் கழகம் மட்டுமே உள்ளது.

    ஜி.எஸ்.டி வெற்றிகரமாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த வரியால் எதிர் பார்த்த அளவுக்கு அதிகமாக வருமானம் கிடைத்துள்ளது.

    ஜி.எஸ்.டி இன்னும் முழுமை அடையவில்லை. அதிகமான வரி உள்ள பொருட்களுக்கு இன்னும் வரி குறையும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஜி.எஸ்.டி.க்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

    ராஜ்ய சபாவில் வாய்ப்பு கிடைத்த போது பட்டாசு தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு குறித்து பேசினேன். வரி விலக்கு கிடைத்தால் பட்டாசு தொழில் மேம்படுவதுடன் அன்னிய செலாவணியும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressWay  #BJP #LaGanesan
    இல.கணேசனுக்கு ம.பொ.சி. விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்குகிறார்

    சென்னை:

    ம.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்த்தாயின் தவப்பு தலைவர், எல்லைகளையெல்லாம் மீட்டு புதிய தமிழகம் படைத்த போராட்ட வீரர், விடுதலை போராட்ட வீரர் என நாட்டிற்காக சிலம்புச்செல்வர் ம.பொ.சி. செய்த தியாகங்கள் அளவிட முடியாதது. ம.பொ.சி.யின் 113-வது பிறந்த நாள் நாளை 26-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது.

    எங்களுடைய சிலம்புச் செல்வர் டாக்டர் பத்மஸ்ரீ ம.பொ.சி. அறக்கட்டளை சார்பில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு தியாகராயநகர் போக் சாலையில் அமைந்தள்ள ம.பொ.சி.யின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி அரங்கத்தில் இல.கணேசன் எம்.பி. தலைமையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.-ஒரு பன்முக பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

    இதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் இல.கணேசன் எம்.பி., இளங்கோகுமனன், குடத்தை மாலி ஆகியோருக்கு 2018-ம் ஆண்டு ம.பொ.சி. விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ம.பொ.சி.யின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நாளை காலை நடக்கும் கருத்தரங்கை தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். ம.பொ.சி. பற்றி கல்வியாளர் வ.வே.சு, திருப்பூர் கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை மாதவி பாஸ்கரன், செந்தில் ம.பொ.சி. செய்துள்ளனர். #Tamilnews

    தமிழக அரசை கலைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும் அதுவே கலைந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் இல.கணேசன் கூறினார். #BJP #LaGanesan #TNGovernment
    மதுரை:

    பா.ஜனதா தேசிய செயலாளர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை மதுரையில் சமுதாய தலைவர்களை சந்தித்து விளக்குவதற்காக வந்துள்ளேன்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பிரதமர் மோடி ஏன் கலந்து பேசவிலலை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அப்போது சட்டசபை தேர்தல் நடந்ததால் அதற்கான சூழ்நிலை அமையவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை 100-க்கு 100 சதவீதம் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.


    முத்தலாக் விவாகரத்து சட்டம் குறித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதனை அ.தி.மு.க. உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பித்துரை பாராட்டி பேசினார். ஆனால் இப்தார் விருந்தில் முத்தலாக் சட்டம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து பேசி உள்ளார். இது அவரது கருத்தா? கட்சியின் கருத்தா? என தெரியவில்லை.

    எனவே தமிழக அரசு முத்தலாக் சட்டம் குறித்து தங்களின் கொள்கை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    தமிழக அரசை கலைக்கும் எண்ணம் மத்திய பா.ஜனதா அரசுக்கு கிடையாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் அப்படி நடந்துள்ளது. அதே நேரத்தில் ஆட்சி தானாக கலைந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

    அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நிபுணர்கள் குழு பரிந்துரை தற்போது வெளிவந்துள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரலாம்.

    தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இப்போது ஆலோசிக்கவில்லை. தமிழகத்தில் எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் சூரியன் உதிக்கும் இடத்தில் சந்திரன் இருக்காது. அ.தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை. தற்போது மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன்தான் நாங்கள் உள்ளோம். தேர்தல் வரும் போது அந்த நேரத்தில் கலந்து பேசி கூட்டணி பற்றி பின்னர் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #TNGovernment
    காலா படத்தை திரையிட விடாமல் தடுப்பவர்களை அரசு ஒடுக்க வேண்டும் என்று தஞ்சையில் பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் தெரிவித்தார். #BJP #LaGanesan #Kaala
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

    இளைஞர்கள் சமுதாயம் ஆண்டவன் தந்த உயிரை தாங்களே மாய்த்து கொள்ள உரிமை கிடைக்காது. எந்த காரியத்திலும் இறுதிவரை போராட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். எந்த பிரச்சனை என்றாலும் அதனை எதிர்கொண்டு தைரியமாக போராட வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. போராட சென்றவர்களும், போராட்ட குழுவை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் போராட்டம் நடந்த வழியில் சென்றவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வழங்கி வாழ்வாதாரத்துக்கு அரசு உதவ வேண்டும். போராட்டத்தை தூண்டி விட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தை வெளியிட காழ்ப்புணர்ச்சி காரணமாக மறுக்கின்றனர். கலை பிரிவினர் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டக் கூடாது. காலா படத்தை திரையிட விடாமல் தடுப்பவர்களை அரசு ஒடுக்க வேண்டும்.

    வருகிற ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அதிக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #Kaala
    ×