search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்டர்"

    • டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் மேற்கொண்டுள்ளார்.
    • இந்த முறை டுவிட்டர் ஊழியர்களில் பத்து சதவீதம் பேர் வேலையை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டுவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் பலமுறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எலான் மஸ்க் தலைமை பொறுப்பை ஏற்கும் முன் டுவிட்டர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வந்தனர்.

    எனினும், எலான் மஸ்க் பதவியேற்றதும், ஊழியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை எலான் மஸ்க் பத்து சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறார். இந்த நடவடிக்கையில் சுமார் 200 பேர் பணியை இழந்துள்ளனர்.

     

    இது குறித்து நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், டுவிட்டர் நிறுவனம் பிராடக்ட் மேலாளர்கள், டேட்டா ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கை வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைனில் டுவிட்டரின் பல்வேறு அம்சங்களை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மானிடைசேஷன் உள்கட்டமைப்பு குழுவில் பணியாற்றி வந்து 30 ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது 8 ஆக குறைந்துள்ளது. எலான் மஸ்க்-இன் டுவிட்டர் 2.0 திட்டத்தில் பணியாற்றி வந்தவர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.

    • டுவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் பிரீமியம் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • முதற்கட்டமாக கட்டண முறை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாக இருக்கிறது.

    டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் புளூ சந்தா முறையை அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. புதிய டுவிட்டர் புளூ சந்தாவில் வெரிஃபிகேஷன் புளூ டிக் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான சேவைகள் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில், தற்போது இன்ஸ்டாகிராம் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா புதிய கட்டண முறையை அறிவித்து இருக்கிறது. இந்த சந்தா மெட்டா வெரிஃபைடு என அழைக்கப்படுகிறது. புதிய மெட்டா வெரிஃபைடு மூலம், மெட்டா நிறுவனம் போலி அக்கவுண்ட்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தை குறைக்க செய்வது மற்றும் இதர பலன்களை வழங்குகிறது.

    மெட்டா தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பர்க் இன்ஸ்டாகிராம் கட்டண முறையை அறிவித்தது. மெட்டா வெரிஃபைடு கட்டண முறை வலைத்தளத்திற்கு மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வலைத்தளங்களில் மாதம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய கட்டண முறையின் கீழ் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு வெரிஃபைடு டிக் வழங்கப்படுகிறது. புதிய முறை மெட்டா சேவைகளின் கீழ் தனித்துவம் மற்றும் செக்யுரிட்டியை வழங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்த வாரம் வழங்கப்படுகிறது.

    இதை் தொடர்ந்து விரைவில் மற்ற நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மெட்டா வெரிஃபைடு சந்தாதாரர்களுக்கு வெரிஃபைடு பேட்ஜ், கூடுதல் செக்யுரிட்டி மற்றும் நேரடி வாடிக்கையாளர் சேவை மைய வசதி வழங்கப்படும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது.

    • டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் தனது டுவிட்டர் புளூ கட்டண சேவையை அறிவித்தது.
    • டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்கள் கூடுதல் வசதிகள், புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தலாம்.

    எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதில் இருந்து அந்த நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஊழியர்கள் பணிநீக்கத்தில் துவங்கி, அம்சங்களில் மாற்றம் என தொடர்ந்து பல்வேறு அதிரடிகள் டுவிட்டரில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், தற்போது கட்டணம் செலுத்துவோர் மட்டுமே டுவிட்டர் தளத்தில் டூ-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் வசதியை கொண்டு தங்களின் அக்கவுண்ட்களை பாதுகாக்க முடியும்.

    "மார்ச் 20 ஆம் தேதிக்கு பின் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர் மட்டுமே டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையில் குறுந்தகவல்களை பெற முடியும்," என அந்நிறுவனம் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது. டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

     

    டு-ஃபேக்டர் முறையை தேர்வு செய்யும் போது, பயனர்கள் வழக்கமான கடவுச்சொல் மட்டுமின்றி கூடுதலாக குறுந்தகவல், ஆதெண்டிகேஷன் ஆப் அல்லது செக்யுரிட்டி கீ என மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பயனர் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும்.

    இந்த நிலையில், டுவிட்டரில் டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை சிலர் தவறாக கையாள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என டுவிட்டர் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த பயனர் கேள்விக்கு எலான் மஸ்க் டுவிட்டர் தளத்திலேயே பதில் அளித்து இருக்கிறார்.

    எலான் மஸ்க் அளித்த பதிலில், "டெலிகாம் நிறுவனங்கள் பாட் அக்கவுண்ட்களை கொண்டு டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் எஸ்எம்எஸ்-ஐ அனுப்புகின்றனர். இதன் காரணமாக நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மோசடி குறுந்தகவல்களால் 60 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது," என தெரிவித்துள்ளார்.

    • சுமார் 7 ஆயிரத்து 500 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
    • முன்னணி நிர்வாகிகளை அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார்.

    புதுடெல்லி :

    உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கையகப்படுத்தினார். பின்னர், அதில் பணிபுரிந்த முன்னணி நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார். டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட 4 முக்கிய உயர் அதிகாரிகளையும், பணியாளர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். இவரது அதிரடி நடவடிக்கைகள் சர்ச்சைக்குள்ளானது.

    இந்த நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 டுவிட்டர் அலுவலகங்களில் டெல்லி, மும்பையில் உள்ள தனது அலுவலகங்களை டுவிட்டர் நிறுவனம் மூடியுள்ளது. பெங்களூரு அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள 2 அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். செலவை குறைக்கும் நடவடிக்கையாக 3 அலுவலகங்களில் இரண்டை மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டுவிட்டர் நிறுவனம் இந்திய அலுவலகங்களில் வேலை பார்த்து வந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதாக தகவல்.
    • சர்வதேச அளவில் டுவிட்டர் நிறுவன செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக எலான் மஸ்க் இப்படி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று டுவிட்டர் நிறுவன அலுவலகங்களில் இரண்டு மூடப்பட்டு விட்டதாகவும், அதில் பணியாற்றி வந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் வீட்டில் இருந்தபடி பணியற்றலாம் என டுவிட்டர் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. தற்போது சரிவில் சிக்கிக் கொண்டுள்ள நிறுவனத்தை மீட்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக இந்தியாவில் பணியாற்றி வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு இருந்தது. இது டுவிட்டர் இந்தியா ஊழியர்களில் சுமார் 90 சதவீதம் ஆகும். இந்த வரிசையில் தான், தற்போது புது டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் செயல்பட்டு வந்த டுவிட்டர் அலவலகங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.

     

    இரு நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து இந்தியாவில் டுவிட்டர் நிறுவன அலுவலகம் தற்போது பெங்களூருவில் மட்டுமே இயங்கி வருகிறது. இரண்டு இந்திய அலுவலகங்கள் மூடப்பட்ட விவகாரம் குறித்து டுவிட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உலகம் முழுக்க டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம், அலுவலங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளை எலான் மஸ்க் தொடர்ந்து எடுத்து வருகிறார்.

    இந்த நடவடிக்கைகளின் மூலம் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனம் 2023 வாக்கில் நிதி நிலையில் மேம்பட்டு இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா இதுவரை மிகமுக்கிய சந்தையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், எலான் மஸ்க் இந்திய டுவிட்டர் அலுவலகங்களை மூடும் நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்.

    இது தற்போதைய சூழலில் டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய சந்தைய அத்ததைய முக்கியத்தம் கொண்டிருக்கவில்லை என்பதையே குறிக்கிறது. கடந்த காலங்களில் டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய சந்தை மிக முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் டுவிட்டர் புளூ சேவையின் கீழ் பயனர்களுக்கு புளூ டிக் வழங்கப்படுகிறது.
    • டுவிட்டர் புளூ சேவைக்கான இந்திய விலை மாதம் ரூ. 650-இல் இருந்து துவங்குகிறது.

    டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது டுவிட்டர் புளூ சேவையை சமீபத்தில் துவங்கியது. மேலும் டுவிட்டர் புளூ சேவைக்கான சந்தா கட்டணம் வலைதளத்திற்கு மாதம் ரூ. 650, ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் செயலிகளுக்கு மாதம் ரூ. 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எலான் மஸ்க் அறிவித்து இருக்கும் டுவிட்டர் புளூ சேவையின் மிகமுக்கிய அம்சமாக புளூ டிக் உள்ளது. டுவிட்டர் புளூ சேவையில் கட்டணம் செலுத்தும் அனைவருக்கும் புளூ டிக் வழங்கப்பட்டு விடும். முன்னதாக இந்த புளூ டிக் டுவிட்டர் நிறுவனம் நடத்திய ஆய்வை அடுத்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது மாதிரி டுவிட்டர் ஏற்கனவே ஆய்வு செய்து வழங்கி வந்த புளூ டிக் விரைவில் நீக்கப்பட்டு விடும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

    டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க்-ஐ டேக் செய்த நபர் ஒருவர், "தற்போது புளூ வெரிஃபிகேஷன் மார்க் ஜோக் ஆகி விட்டது. முன்னதாக புளூ டிக் வெரிஃபிகேஷன் பொது நபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் வெரிஃபிகேஷன் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது." என தெரிவித்து இருந்தார்.

    இவரது பதிவிற்கு பதில் அளித்த எலான் மஸ்க் விரைவில், "அந்த மாதிரி வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் விரைவில் நீக்கப்பட்டு விடும். இதுபோன்ற புளூ டிக் கொண்டவர்கள் தான், உண்மையில் ஊழல்வாதிகள் ஆவர்," என தெரிவித்து இருக்கிறார்.

    எலான் மஸ்க் அளித்த பதிலுக்கு பலர் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர். பலர், எலான் மஸ்க் எப்படி ஒருவர் ஊழல்வாதி என்பதை அறிந்து கொள்கிறார் என கேள்வி எழுப்பி இருக்கிறார். மற்றொருவர் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் நிறம் மாற்றி வேறு நிறத்தில் டிக் வழங்கலாம் என குறிப்பிட்டு இருக்கிறார். 

    • டுவிட்டர் தளத்தில் வழங்கப்பட்டு வரும் விசேஷ டுவிட்டர் புளூ சேவை இந்திய விலை விவரங்கள் வெளியீடு.
    • டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்திய பயனர்கள் இனி டுவிட்டர் புளூ சந்தாவில் இணைய முடியும். முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த டுவிட்டர் புளூ சந்தா தற்போது இந்தியாவிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தா பெறுவோருக்கு புளூ டிக் வழங்கப்பட்டு விடும். இந்தியாவில் டுவிட்டர் புளூ கட்டணம் வலைதளம் மற்றும் மொபைலில் மாதம் முறையே ரூ. 650 மற்றும் ரூ. 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வலைதள வெர்ஷனுக்கு வருடாந்திர அடிப்படையில் சந்தா செலுத்துவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவை வருடாந்திர அடிப்படையில் பெறும் போது ரூ. 6 ஆயிரத்து 800 மட்டுமே செலுத்தினால் போதுமானது. முன்னதாக வெரிஃபைடு டேக் பெற வாடிக்கையாளர்கள் தனியே விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் வழங்கப்பட்டு இருந்த நிலையில், டுவிட்டர் புளூ சேவை தற்போது இந்தியா, பிரேசில், இந்தோனேசியா என மொத்தம் 15 நாடுகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர், தங்களின் டுவிட்களை எடிட் செய்வது, நீண்ட நேர வீடியோக்களை பதிவிடுவது, 50 சதவீதம் வரை குறைந்த விளம்பரங்களை பெறுவது, புதிய அம்சங்களை முன்கூட்டியே பெற முடியும்.

    இத்துடன் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போரின் பதிவுகளுக்கு டுவிட்டர் முன்னுரிமை கொடுக்கும். டுவிட் செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் அதிகபட்சமாக ஐந்து முறை அவற்றை எடிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    டுவிட்டர் புளூ சேவையை பெறுவது எப்படி?

    பயனர்கள் டுவிட்டர் புளூ சேவையை இயக்க தங்களின் ப்ரோஃபைல் படத்தின் இடது புறத்தில் க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் அதிகபட்சம் டுவிட்டர் கணக்கை துவங்கி 90 நாட்கள் கழித்தே டுவிட்டர் புளூ சேவையை பெற முடியும். டுவிட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தி இருப்பவர்கள், தங்களின் புகைப்படம், ப்ரோஃபைல் பெயர் உள்ளிட்டவைகளை வெரிஃபைடு பேட்ஜ் வழங்கும் வரை மாற்ற வேண்டாம் என டுவிட்டர் கேட்டுக் கொண்டுள்ளது.

    • டுவிட்டர் கணக்குகளை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
    • உலகம் முழுவதும் திடீரென டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக ஊடக தளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாரகிராம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று திடீரென ஆயிரக்கணக்கான பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் தான் அதிக அளவு முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயனர்கள் புதிய டுவிட்டுகளை பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

    அவர்களுக்கு நீங்கள் பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டிவிட்டீர்கள். அதனால் டுவிட் செய்ய முடியாது என குறுஞ்செய்தி வந்தது. இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல பேஸ்புக்கில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளும், 7 ஆயிரம் இன்ஸ்டாரகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து டுவிட்டர் கணக்குகளை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறும்போது "சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். இதற்காக மன்னிக்கவும், இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்து உள்ளது.

    உலகம் முழுவதும் திடீரென டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    • டுவிட்டர் சமூக வலைதளத்தில் டுவிட்டர் புளூ சந்தா ஏராள மாற்றங்களை பெற்று இருக்கிறது.
    • தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கு டுவிட்டர் புளூ கட்டணம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டுவிட்டர் புளூ சந்தா ஒருவழியாக ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டு வருகிறது. வருடாந்திர சந்தா கட்டண முறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆண்ட்ராய்டு தளத்திற்கும் டுவிட்டர் புளூ சந்தா வழங்கப்படுகிறது. ஐஒஎஸ் போன்றே டுவிட்டர் புளூ சந்தாவுக்கான கட்டணம் மாதம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ வெப் தளத்திற்கான கட்டணத்தை விட செயலியின் கட்டணம் அதிகம் ஆகும்.

    இரு தளங்களின் விலை வேறுபாட்டிற்கான காரணம் பற்றி டுவிட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இன்-ஆப் பர்சேஸ்களுக்கான பிளே ஸ்டோர் கட்டணத்தை ஈடு செய்யும் வகையில் டுவிட்டர் புளூ கட்டணத்தில் வேறுபாடு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    பலன்களை பொருத்தவரை டுவிட்டர் புளூ பயனர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்துடன் டுவிட்களை எடிட் செய்யும் வசதி, 60 நிமிடங்களுக்கான வீடியோ அப்லோட் ( வெப்-இல் மட்டும்) செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் கஸ்டம் ஆப் ஐகான், புக்மார்க் செய்யப்பட்ட டுவிட்களுக்கு எளிய நேவிகேஷன், செயலியில் வித்தியாசமான தீம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    செயலியில் நேவிகேஷன் பார் கஸ்டமைஸ் செய்யும் வசதி, ரீடர் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை டுவிட்டர் ஒட்டுமொத்த அனுபவத்தை வித்தியாசமாக மாற்றுகிறது. டுவிட்டர் புளூ சந்தா தற்போது ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

    • இந்த ஹேஷ்டேக்கில் திமுகவினர் அனல் பறக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர்.
    • ஆளுநர்- ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் சரிவர வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

    ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து, டுவிட்டர் பக்கத்தில் ஆளுநருக்கு எதிராக #GetOutRavi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

    இந்த ஹேஷ்டேக்கில் திமுகவினர் அனல் பறக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர்.

    இந்நிலையில், சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் திமுக சார்பில் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

    ட்விட்டரில் ட்ரெண்டிங்கான #GetOutRavi என பதிவிட்ட அனைவருக்கும் நன்றி என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆளுநர்- ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஹேக்கர்கள் மூலம் பலரது அந்தரங்க தகவல்களும் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
    • டுவிட்டர் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    லண்டன்:

    உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அதன்மூலம் தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். ஆனால் அவ்வப்போது சில ஹேக்கர்கள் இவர்கள் டுவிட்டர் கணக்குளை முடக்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது 20 கோடி டுவிட்டர் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இணையதள கண்காணிப்பு நிறுவனமான ஹெட்சன்ராக் என்ற நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் அலன்கால் கூறியதாவது:-

    20 கோடி டுவிட்டர் பயனாளர்களின் இ-மெயில் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களும் திருடப்பட்டு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. 2021-ம் ஆண்டிலேயே இது நடந்து இருக்கலாம் என நினைக்கிறேன். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு இது நடந்து உள்ளது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள ஹேக்கர்களின் இருப்பிடம் குறித்தோ இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்தோம் எந்த தகவலும் இல்லை.

    இதனை விசாரிக்கவும், சரி செய்யவும் டுவிட்டர் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து எந்த தெளிவான விளக்கங்களும் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஹேக்கர்கள் மூலம் பலரது அந்தரங்க தகவல்களும் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் டுவிட்டர் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்நிறுவனம் ஏராளமான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
    • டுவிட்டர் சமூக வலைதளத்தில் ஏராளமான மாற்றங்கள், புது வசதிகள் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    டுவிட்டர் நிறுவனத்தின் சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலக கட்டிடத்திற்கு வாடகை செலுத்த காரணத்தால் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. ஹார்ட்ஃபோர்டு பில்டிங் -- கொலம்பியா ரெய்ட் - 650 கலிஃபோர்னியா எல்எல்சி உரிமையாளர் டுவிட்டர் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். கட்டிடத்தின் 30 ஆவது தளத்தில் டுவிட்டர் நிறுனவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    2017 வாக்கில் டுவிட்டர் நிறுவனத்திற்கான கலிஃபோர்னியா அலுவலகம் லீஸ் முறையில் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், சர்வதேச அலுவலகங்களுக்கான வாடகையை டுவிட்டர் நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதில் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள தலைமையகமும் அடங்கும். வாடகை பாக்கி வைக்கப்பட்டு இருக்கும் அலுவலகங்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நீண்ட காலம் மூடியே வைக்கப்பட்டு இருந்தன.

    மேலும் டுவிட்டர் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம் எனும் திட்டம் அமலில் இருந்து வந்தது. சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டுவந்தார். இதோடு டுவிட்டர் நிறுவனத்தில் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதன் மூலம் பயனர் எண்ணிக்கை மற்றும் வருவாயை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டது.

    அலுவலக வாடகை மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனம் இரண்டு தனி விமானங்களுக்கான வாடகையை ஜெட் சர்வீசஸ் எல்எல்சி குழுமத்திற்கு செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. ஜெட் சர்வீசஸ் எல்எல்சி நிறுவனமும் டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறது. தனி விமானங்களுக்கான வாடகை பாக்கி மட்டும் இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 63 லட்சம் என கூறப்படுகிறது. 

    ×