search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிரொலி"

    தென்மேற்கு பருவமழை எதிரொலியால் ஊட்டியில் அணைகளில் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. இதில் 3 அணைகள் நிரம்பின.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. சுற்றுலா நகரமான ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ஊட்டியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டி நகராட்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்கின்றது.

    குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை, கோரிசோலா அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. கடந்த ஆண்டு ஊட்டியில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால் அணைகளில் நீர் இருப்பு குறைந்த நிலையில் காணப்பட்டது.

    ஆனால், இந்த ஆண்டு ஊட்டி நகரில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

    ஊட்டியில் பெய்த தென்மேற்கு பருவமழை எதிரொலியால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகின்றது. கோடப்பமந்து அப்பர் அணை தனது முழு கொள்ளளவான 12 அடி, தொட்டபெட்டா லோயர் அணை 14 அடி, கிளன்ராக் அணை 7 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளன. அந்த 3 அணைகள் நிரம்பி உள்ளன.

    முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்து உள்ளது. மார்லிமந்து அணை தனது 23 அடி முழு கொள்ளளவில் 12.5 அடியை எட்டி உள்ளது. தற்போது அந்த அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. கோடப்பமந்து லோயர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    ஊட்டியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஊட்டி நகராட்சியில் வசித்து வரும் மற்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை. இதுகுறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கூறும்போது, ஊட்டி நகராட்சியில் தென்மேற்கு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராது. சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார். 
    நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதன் எதிரொலியாக அவரது வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #SalmanKhan
    மும்பை:

    ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர ரவுடியான லாரன்ஸ் பிஸ்னோயின் உதவியாளர் சம்பத் நெஹ்ராவை அரியானா மாநில சிறப்பு அதிரடி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு லாரன்ஸ் பிஸ்னோய் திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.

    இதற்காக லாரன்ஸ் பிஸ்னோயின் பிற கூட்டாளிகள் மும்பைக்கு சென்றிருக்கலாம் என கருதும் அரியானா போலீசார், இது தொடர்பாக மராட்டிய போலீசாரை எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி அவரது வீடு மற்றும் படப்படிப்பு தளங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவரது பாதுகாப்புக்காக சிறப்பு மெய்க்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  #SalmanKhan #Tamilnews 
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி பகுதிகளில் போராட்டங்கள் நடந்தது.

    நாகர்கோவிலில் இருந்து இடிந்தகரை வழியாக சென்ற அரசு பஸ்சை அந்த பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பஸ்சின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இருக்கைகளும் கிழிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் பஸ்சில் இருந்து தப்பித்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். பொதுமக்கள் சிறை பிடித்து வைத்துள்ள பஸ்சை இதுவரை மீட்க முடியவில்லை.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இடிந்தகரை, கூடங்குளம், உவரி வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. சுமார் 50 மேற்பட்ட பஸ்கள் உவரி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் இன்று அந்த பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க விடிய, விடிய ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி, களியக்காவிளை சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர காவல்படை போலீசார் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்தனர்.

    ×