search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 197182"

    • 20க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்யப்பட்டது.
    • கோவையை சேர்ந்த யோகினி அனிதா யோகா பயிற்சி அளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில் உலக யோகா தின விழா திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை வரவேற்று பேசினார். திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், யோகா மற்றும் இயற்கை உதவி மருத்துவ அலுவலர் திவான் மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோவையை சேர்ந்த யோகினி அனிதா யோகா பயிற்சி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்யப்பட்டது. இதில் தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி, மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் மற்றும் நீதித்துறை நடுவர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கூடுதல் மகிளா நீதிபதி கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    உலக சமுதாய சேவா சங்கம், திருப்பூர் மண்டல மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள், தவ மையங்கள் சார்பில் உலக யோகா தின விழா, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் நாகராஜன் தலைமை தாங்கி பேசினார். இதில் திருப்பூர் மண்டல செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா பயிற்சியை ஸ்கை குழும நிர்வாக இயக்குனர் சுந்தரராஜ் தொடங்கிவைத்தார்.

    மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் திருப்பூர் மண்டல தலைவர் கருணாநிதி நன்றி கூறினார். இதில் பலரும் பங்கேற்று யோகா செய்தனர்.

    • 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை.

    ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம் என்றே கூறலாம். யோகா என்பது மதம் சார்ந்த பயிற்சி அல்ல. அது, நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான கலை என்று கூட கூறலாம். மேலும் யோகா பயிற்சி செய்வதால் மாணவர்கள் கவனச்சிதறல் இன்றி கல்வி கற்கலாம்.

    இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகாவை, உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி உலகம் முழுவதும் வாழும் மக்கள் பழமை வாய்ந்த யோகாசனங்களை செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதற்கு ஒரு நாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி டெல்லியில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும், 2019-ம் ஆண்டு ராஞ்சியிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை. யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து, அறிவுறுத்தி வருகிறார்.

    மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும். ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத்தேடினாலும்... உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும்... உள்நிலை மாற்றம்தான் நோக்கம் என்றாலும் யோகா பயிற்சிகள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிக சுலபமாய் கையாள வழி ஏற்படுத்தி கொடுக்கும். யோகா பயிற்சி மேற்கொள்வதால், முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது.

    ஞாபக சக்தி, மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை மேம்படுகிறது. உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன. முதுகு வலி, மன அழுத்தம், பயம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது. நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வேலை செய்யும் இடத்தில், குழுவாக பணியாற்றும் திறன் மற்றும் தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது. அமைதியும், ஆனந்தமும், நீடித்து நிலைத்திருக்க செய்கிறது.

    • இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சர்வதேச யோகா தினம் விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் நடந்தது
    • நடனம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் ஒயிலாட்டம், உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது

    கன்னியாகுமரி :

    மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சர்வதேச யோகா தினம் கன்னியா குமரி விவேகானந்தபு ரத்தில்உள்ள விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில்மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலை பணி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி வரவேற்றுப் பேசினார். இதில்குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., பெங்களூரு சி.எப்.எஸ். இயக்குனர் அன்னபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் யோகா பயிற்சி, நடனம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் ஒயிலாட்டம், உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் பால்பண்ணை அதிபர்கள் கால்நடை விவசாயிகள் மீனவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சி யால் ஜூன்21-ந்தேதி உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் அற்புதமான யோகா கலை ஐ.நா. சபையால் உலக யோகா தினமாக ஆண்டுதோறும் ஜூன்

    21-ந்தேதி கடந்த 8 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் இந்த ஆண்டு முழுவதும் 75-வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில் உலக யோகா தினத்தை 75 நாட்களுக்கு முன்பே தொடங்கி உள்ளோம்.

    வடக்கே இமயமலை உத்தரகாண்ட் ரிஷிகேஷ் தெற்கு கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்றைய தினம் இந்த யோகா தினத்தின் முன்னோடி நிகழ்ச்சியாக யோகா பயிற்சி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை ரீதியாக யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் இன்று இங்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக யோகா தின விழா நடத்தப்படுகிறது

    யோகா கலை நமது நாட்டில் தோன்றிய அற்புதமான கலை இன்று உலகம் முழுவதும் போற்றக்கூடிய சிறப்பை பெற்றுள்ளது. யோகா மூலமாக எளிமையாக அதிக செலவு செய்யாமல் மனிதன் நோயை கட்டுப்படுத்த முடியும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்த யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.

    தொடர்ந்து யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் செய்து வந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் தேசம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்காகவும் வருங்கால சந்ததியினருக்கும் இந்த யோகா கலை கொண்டு செல்கிறோம். சர்வதேச யோகா தின மான வருகிற 21-ந்தேதி இந்தியா முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் ஏராளமான மாணவர்களுடன் தரையில் அமர்ந்து யோக பயிற்சி செய்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • இந்த யோகா பயிற்சியை அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
    • தினமும் செய்து வந்தால் முதுகெலும்பு வலுப்பெறும்.

    செய்முறை: தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கால்களை மடக்கி உடலுக்கு நெருக்கமாகக் கொண்டுவர வேண்டும். கால்களுக்கு இடையே சற்று

    இடைவெளி இருக்கட்டும். கைகளை, தலைப் பக்கம் கொண்டுவந்து உள்ளங்கை, விரல் உடலைப் பார்த்தபடி தரையில் பதிக்கவும். இப்போது மூச்சை நன்கு

    இழுத்துக் கை, கால்களைத் தரையில் அழுத்து உடலை உயர்த்த வேண்டும். முடிந்தவரை வயிறு பகுதி மேலே வரும் அளவுக்கு உடலை வில் போல வளைக்க

    வேண்டும். இப்போது உடலின் முழு எடையும் கை - கால்களில் இருக்கும். இந்த நிலையில் ஓரிரு நிமிடங்கள் இருந்துவிட்டு மூச்சை வெளியே விட்டபடி

    பழைய நிலைக்கு வர வேண்டும்.

    குறிப்பு: ஒரு நாளைக்கு இதை ஆறு முறை வரை செய்யலாம். இந்த யோகா பயிற்சியை அனைவரும் முயற்சிக்க வேண்டாம். நீண்ட நாட்கள் யோகா பயிற்சி

    பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.

    பலன்கள்: தினமும் செய்து வந்தால் முதுகெலும்பு வலுப்பெறும். கூன் விழுவது தவிர்க்கப்படும். உடல் புத்துணர்வு பெறும். கை, கால்கள் பலம் பெறும்.

    நுரையீரல் செயல்திறன் அதிகரிக்கும்.

    • குழந்தை பாக்கியம் யோகக்கலை மூலம் நிச்சயம் கிட்டும்.
    • மன அழுத்தத்துடன் தம்பதியர் சேரும்பொழுது குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை.

    குழந்தை பாக்கியம் யோகக்கலை மூலம் நிச்சயம் கிட்டும். யோகக்கலை என்பது உடல் சார்ந்த பயிற்சி மட்டுமல்ல. உடல், மனம், சார்ந்த பயிற்சி. பண்பாட்டை, பழக்கவழக்கத்தை சரி செய்யும் பயிற்சி. இன்றைய காலத்தில் எதனால் நிறைய தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் இல்லை என்ற காரணத்தை முதலில் அறிய வேண்டும். அதனை அறிந்து அதில் தெளிவடைந்து, பின் பண்பாட்டை சரிப்படுத்தி யோகா பயின்றால் வெற்றி நிச்சயம்.

    இன்றைய தம்பதியர்கள் இருவருமே மன அழுத்தத்தில் வாழ்கின்றனர். இதுவே ரத்த அழுத்தமாக மாறும். உடலில் மற்ற முக்கிய சுரப்பிகள் சரியாக சுரக்காமல் மன அழுத்தத்துடன் தம்பதியர் சேரும்பொழுது குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை.

    செல்போனில் உள்ள கதிரியக்கம் அளவுக்கு மீறி பேசினால் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். ஆண்களுக்கு ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும். உணவில் கவனமாக இருக்க வேண்டும். பசித்தால் புசி, மாமிசம் தவிர். இரவு 7 மணிக்குள் அல்லது 8 மணிக்குள் கால் வயிறு உண்டால் போதும்.

    விரிப்பில் அமரவும். இரு கால் பாதங்களையும் ஒன்று சேர்த்து கால்களை பக்கவாட்டில் வைத்து இரு கால் பாதங்களையும் உயிர்ஸ்தானத்திற்கு உள்முகமாக படுமளவு கொண்டு வரவும். (படத்தை பார்க்க) இரு கைகளையும் பக்கவாட்டில் சின் முத்திரையில் மூட்டின் மேல் வைக்கவும். ஆசனவாய் பூமியில் படக்கூடாது.

    கண்களை மூடி மூன்று நிமிடங்கள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரணமாக அமரவும்.

    கணவன் / மனைவி இருவரும் தினமும் மூன்று நிமிடங்கள் காலை / மாலை பயிற்சி செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

    குதபாத ஆசனத்தின் மற்ற பலன்கள்

    • விந்துப்பை வலுவாகும்

    • பெண்களின் கருப்பை குறை நீங்கும்

    • மூலம் நீங்கும்

    • மலச்சிக்கல் நீங்கும்

    • சிறுநீரக கற்கள் கரையும்

    • பித்தப்பை கற்கள் கரையும்

    • அதிக உடல் எடை குறையும்

    • மூட்டுவலி வராது

    • மன அமைதி கிட்டும்

    • பாத வலி வராது

    • இளமையுடன் வாழலாம்

    • மாதவிடாய் பிரச்சினை தீரும்

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • யோகாவின் பலன்கள் எண்ணற்றவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • 'நமது அன்றாட வாழ்வில் யோகா' என்ற யூடியூப் இணைப்பை மோடி வெளியிட்டார்.

    சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ம் தேதி உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், யோகாவின் பலன்கள் எண்ணற்றவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், " சர்வதேச யோகா தினம் இன்னும் சில நாட்களில் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. யோகாவின் பலன்கள் எண்ணற்றவை. மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

    மேலும் 'நமது அன்றாட வாழ்வில் யோகா' என்ற யூடியூப் இணைப்பையும் மோடி வெளியிட்டார்.

    • பத்மாசனத்தில் அடி வயிறு அமுக்கப்படுவதால் அதிக வயிற்று தசை குறையும், இடை பெருக்காது.
    • பெண்கள் திருமணத்திற்கு முன்பே இந்த ஆசனம் செய்தால் திருமணமானவுடன் சுகப்பிரசவம் உண்டாகும்.

    செய்முறை

    விரிப்பில் முதலில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதலில் பத்மாசனம் போடவும். (இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடையிலும் போட்டு அமரவும்.)

    இப்பொழுது பத்மாசனத்திலேயே இருந்து மெதுவாக அவசரப்படாமல் குப்புறபடுக்கவும். (படத்தை பார்க்கவும். ஸ்டெப் 1 , ஸ்டெப் 2)

    இரு கைகளையும் இருதய பக்கத்தில் வைத்து மூச்சை இழுத்துக்கொண்டே மெதுவாக தலையையும், கைகளையும் உயர்த்தி மேலே பார்க்கவும். அந்நிலையில் மூச்சடக்கி ஒரு பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையில் நெற்றியை வைக்கவும்.

    பின் மெதுவாக கைகளை ஊன்றி எழுந்து பத்மாசனத்திலேயே அமரவும். பின் பத்மாசனத்திலிருந்து சாதாரணமாக அமரவும்.

    பலன்கள்

    தோள்கள், மார்பு, வயிறு, இடை முதலியவற்றில் தசைகளும் கட்டுக் கோப்பாக இருக்கும். அதனைச் சார்ந்த உள் உறுப்புகளும் வளமாக இயங்கச் செய்யும், இந்த ஆசனம் செய்தால் மார்பக புற்று நோய் நிச்சயம் வராது.

    தாய்மார்கள் தயவு செய்து உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை இளம் வயதிலியேயே இந்த ஆசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி தினமும் காலை, மாலையில செய்ய சொல்லுங்கள். வளர்ந்து வரும் காலங்களில் அவர்களுக்கு மார்பக புற்று நோய் வராது. திருமணம் ஆன பிறகும், குழந்தை பிறந்த பிறகும், மார்பக கட்டிகள் வராது. மேலும் இளமையாகவே இருப்பார்கள்.

    பத்மாசனத்தில் அடி வயிறு அமுக்கப்படுவதால் அதிக வயிற்று தசை குறையும், இடை பெருக்காது. மாதவிடாய் பிரச்சினைகள் வராது. செரிமானம் நன்கு நடக்கும். குடல் சுத்தமாகின்றது. சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சினைகள் வராது.

    தொடை தசைகள் பெரிதாக இருப்பது பெண்களின் அழகு தோற்றத்தை பாதிக்கும். இந்த ஆசனம் செய்வதால் தொடைப் பகுதியில் உள்ள அதிக தசைகள் எளிதாக எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் குறைந்து அழகான தோற்றத்துடனும், இளமையுடனும் திகழலாம்.

    மூட்டுக்கள் பலம் பெரும். மூட்டு வலி வராது. பெண்கள் திருமணத்திற்கு முன்பே இந்த ஆசனம் செய்தால் திருமணமானவுடன் சுகப்பிரசவம் உண்டாகும்.

    முகம், கன்னம் தசைகள் பளபளப்பாகவும், சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.

    சிலருக்கு தோள்பட்டை சமமாக இல்லாமல் சற்று இறங்கியிருக்கும். அதனை இவ்வாசனம் செய்தால் சரி செய்துவிடும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி பிடித்தல், ஜலதோஷம் நீங்கும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும், சளி, ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும்.
    • மலச்சிக்கல் வராமல் வாழலாம். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.

    எந்த ஒரு தொற்றுக் கிருமியும் நம்மை தாக்காமல் வாழ வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் ராஜ உறுப்புகளில் ஒன்றான நுரையீரலை நன்றாக வைத்திருந்தால் நலமாக வாழலாம்.

    உடல் வளையும் தன்மை உள்ளவர்கள், மாணவச் செல்வங்கள், எந்த ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்யாதவர்கள் கீழ்குறிப்பிட்ட யோகாசனங்களை தினமும் பயிலுங்கள். நுரையீரல் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். உடலில் பல பிரச்சினைகள் உள்ளவர்கள், சற்று வயதானவர்கள், யோகாசனத்திற்கு பதிலாக அடுத்து வரும் முத்திரை, தியானம், மூச்சுப்பயிற்சிகளை செய்யுங்கள்.

    புஜங்காசனம்

    விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை பக்கவாட்டில் இதயம் பக்கத்தில் வைக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து கொண்டு இடுப்பிற்கு மேல் உடலை படத்தில் உள்ள படி பின் புறமாக வளைக்கவும். பத்து வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையை நோக்கி வரவும். இது போல் மூன்று முறைகள் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும்.

    நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கும். நல்ல காற்றை உள் வாங்கும். அசுத்தக் காற்றை வெளியேற்றும். நுரையீரலில் உள்ள காற்று முடிச்சுகளில் அசுத்தக் காற்றுகள், கிருமிகள் தங்காது. முதுகுத்தண்டு திடப்படும்.

    உசட்டாசனம்

    முதலில் வஜ்ராசனமிடவும். முட்டியில் நிற்கவும். ஒவ்வொரு கையினால் கணுக்காலை படத்தில் உள்ளது போல் பிடிக்கவும். கழுத்தை பின்னால் வளைத்து மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் மெதுவாக கைகளை எடுத்து நேராக வரவும். இரண்டு முறைகள் செய்யவும்.

    நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும், சளி, ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும். காய்ச்சல் வராது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இந்த யோகாசனத்தை பொறுமையாக பயிற்சி செய்ய வேண்டும். சற்று உயர்நிலை ஆசனம். ரத்த அழுத்தம், இதய வலி, முதுகு வலி, உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்ய வேண்டாம். தகுந்த யோகா வல்லுனரின் மேற்பார்வையில் பயிலுங்கள். பொதுவாக ஆரோக்கியமாக உள்ளவர்கள். உடல் வளையும் தன்மையுள்ளவர்கள் நிதானமாக இதனை பயிற்சி செய்யுங்கள். முதலில் ஒரு கையால் ஒரு காலை பிடியுங்கள், பின் மாற்றி அடுத்த கையால் காலை பிடியுங்கள்.

    சஸங்காசனம்

    முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். ஒவ்வொரு காலாக மடித்து இரு கால் முட்டியையும் சேர்த்து வைக்கவும். பின் மூச்சை வெளியில் விட்டு குனியவும். இரு கைகளையும் படத்தில் உள்ளது போல் பக்கவாட்டில் வைக்கவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக எழுந்து வஜ்ராசன நிலைக்கு வந்து சாதாரணமாக அமரவும்.

    இதயம், நுரையீரல் நன்கு அமுக்கப்படுகின்றது. அதில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறுகின்றது. நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். ஜீரண மண்டலம் நன்கு சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இதயம், இதய வால்வுகள் நன்கு சக்தி பெற்று இயங்கும். மன அழுத்தம் நீங்கும். பய உணர்வு நீங்கும்.

    மகாசிரசு முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரலை மடித்து உள்ள ங்கையில் வைக்கவும். ஆள்காட்டி விரல் நடு விரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம்/ மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும். சளி, சைனஸ் நீங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    அபான வாயு முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் நடுவிரல் மோதிர விரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரல் அடியில் வைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    இதயம், இதய வால்வுகள் நன்றாக சக்தி பெற்று இயங்கும். சளி, சைனஸ் நீங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். வாயு, அஜீரணக் கோளாறுகள் நீங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். உடலில் எல்லா அவயங்களுக்கும் பிராண ஆற்றல் கிடைக்கும். உடலில் நீரின் தன்மை சரியாக இருக்கும். கால் பாத வீக்கம், எரிச்சல் வராது. உடல் முழுக்க தச வாயுக்களும் நன்றாக இயங்கும். தசைப் பிடிப்புகள் வராமல் வாழலாம். மலச்சிக்கல் வராமல் வாழலாம். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • ரத்த அழுத்தம், இதய வலி, முதுகு வலி, உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்ய வேண்டாம்.
    • முதுகெலும்பு பலப்படும், முதுகுவலி, இடுப்பு வலி குணமாகும்.

    செய்முறை:

    விரிப்பில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு முழங்கால் 90 பாகையில் இருக்க படத்தில் காட்டிய படிமுறைகளில், உடல் படத்தில் உள்ளவாறு வளைந்திருக்க இரு கைகளாலும் இரு கணுக்கால்களையும் பிடிக்க வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.

    இதனுடன் செய்யவேண்டிய மாற்று ஆசனம் சர்வாங்காசனம் அல்லது ஹலாசனம்.

    பலன்கள்:

    நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும், சளி, ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும். காய்ச்சல் வராது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இந்த யோகாசனத்தை பொறுமையாக பயிற்சி செய்ய வேண்டும். சற்று உயர்நிலை ஆசனம். ரத்த அழுத்தம், இதய வலி, முதுகு வலி, உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்ய வேண்டாம்.

    தகுந்த யோகா வல்லுனரின் மேற்பார்வையில் பயிலுங்கள். பொதுவாக ஆரோக்கியமாக உள்ளவர்கள். உடல் வளையும் தன்மையுள்ளவர்கள் நிதானமாக இதனை பயிற்சி செய்யுங்கள். முதலில் ஒரு கையால் ஒரு காலை பிடியுங்கள், பின் மாற்றி அடுத்த கையால் காலை பிடியுங்கள்.

    முதுகெலும்பு பலப்படும், முதுகுவலி, இடுப்பு வலி குணமாகும். மார்பு விரிவடையும், சுவாச உறுப்புகள் நன்கு வேலை செய்யும். மூக்கடைப்பு, ஆஸ்துமா நீங்கும், கால்கள், கைகள், புஜங்கள், உடல் பலம் பெறும்.

    போலீஸ், மிலிட்டரிக்கு வேலைக்குப் போகிறவர்கள் மார்பு அகலம் வேண்டும் என்றால் 15 நாள் இப்பயிற்சியைச் செய்தால் 2 முதல் 3 அங்குலம் மார்பு விரியும்.

    பிரிட்டனில் நடைபெற்ற யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுவன் இந்த ஆண்டுக்கான சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    லண்டன் :

    பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சிறுவன் ஈஸ்வர் சர்மா. 8 வயதான இவர் கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற 'உலக மாணவர்கள் விளையாட்டு 2018'-ல் வெற்றி பெற்று பிரிட்டனுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். மேலும், துருக்கியில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய யோகா சாம்பியன் போட்டிகளிலும் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.

    பிரிட்டனில் நடைபெற்ற 11 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய யோகா போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வர் சர்மா எனும் சிறுவன் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், பிர்மிங்கமில் நடைபெற்ற இளம் சாதனையாளர்களுக்கான 6-வது விருது வழங்கும் விழாவில், இந்த ஆண்டுக்கான பிரிட்டனின் சிறந்த இந்தியராக ஈஸ்வர் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சிறுவன் ஈஸ்வர்,  ‘எனக்கு என்னையே போட்டியாளராக நினைத்துக்கொண்டு செயல்பட்டதால் எத்தகைய கடினமான ஆசனமாக இருந்தாலும் என்னை அதை எளிதில் செய்ய முடிந்தது’ என தெரிவித்தார்.



    பிரிட்டன் முழுதும் 100-க்கும் மேற்பட்ட யோகா போட்டிகளில் பங்கேற்றுள்ள ஈஸ்வர், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலியிலும், அடுத்த ஆண்டு பிய்ஜிங்கிலும் நடைபெற உள்ள யோகா போட்டிகளில் கலந்துகொள்ள தன்னை தயார் செய்யும் வகையில் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.  
    யோக தினமான இன்று (21-6-2018) ஒவ்வொருவரும் மனித வாழ்க்கைக்கு யோகம் எவ்வளவு நன்மை அளிக்கிறது என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது. #InternationalYogaDay2018 #yoga
    இன்று வியாழக்கிழமை (21-6-2018) உலக யோக தினம். யோக தினத்தன்று ஒவ்வொருவரும் மனித வாழ்க்கைக்கு யோகம் எவ்வளவு நன்மை அளிக்கிறது என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது.

    யோகத்தின் சிறப்பு

    மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தான் செல்லும் பாதைகளில் வெற்றியடைய நல்ல உடல், மன ஆரோக்கியம் அவசியமாகிறது. நம் உடல், மூச்சு, மனம் இம்மூன்றின் சேர்க்கையே உயிர் வாழ்க்கையாகிறது. உடல், மூச்சு, மனம் ஆகிய மூன்றில் எது பாதித்தாலும் அது மற்றதை பாதித்து விடுகிறது.

    இம்மூன்றையும் சீர்படுத்த ஹடயோகம் உதவுகிறது. பழங்கால பயிற்சி முறையான ஹடயோகம் பாரத நாட்டு யோகிகளால் உபதேசிக்கப்பட்ட உடல், மூச்சு, மனம் மற்றும் ஆன்மா சம்பந்தமான ஓர் அற்புத விஞ்ஞானமாகும். ஹடயோகம்-ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தம் ஷட்கர்மா, தியானம் என ஆறு முக்கிய அங்கங்களை கொண்டுள்ளது.

    யோகத்தில் வரும் ஆசனங்கள். உடலை ஆரோக்கியமடையச் செய்யவும். பிராணாயாமம் மூச்சை ஒழுங்குபடுத்தி நீண்ட ஆயுளை அடையவும், முத்திரைகள் குறிப்பிட்ட நாடி, நரம்புகளில் பிராஹ சக்தியை (மின்காந்த சக்தியை) செலுத்தவும், வந்தங்கள் குறிப்பிட்ட நாடிகளில் பிராண சக்தியை நிலை நிறுத்தவும், ஷட்கர்மா உடலின் உள் உறுப்புகளை தூய்மைப்படுத்தவும், தியானம் மனதை தூய்மைப்படுத்தவும், தனது நிஜவடிவான இறை தன்மையை அறியவும் உதவுகிறது.

    தற்கால நவீன மருத்துவம்-எலும்பு மண்டலம், தசை மண்டலம், சுவாச இயக்க மண்டலம், ரத்த சுழற்சி மண்டலம், உணவூட்ட சுழற்சி மண்டலம், கழிவு, நீக்க மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம், என உடல் இயக்கத்தை பிரித்து விவரித்து கூறுகின்றன. யோகப் பயிற்சிகள் இந்த அனைத்து இயக்கங்களும் சரியாக இயங்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நவீன மருத்துவம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத நுட்ப உடல், காரண உடல் மற்றும் ஆன்மாவை அறிந்து கொள்ளவும் யோகம் வழிகாட்டுகிறது.

    எலும்பு மண்டலம்

    மனித உடலுக்கு அடிப்படை உருவத்தை எலும்புகள் அமைத்துக் கொடுக்கின்றன. மண்டை ஓடு, முதுகெலும்புத் தொடர், மார்பு எலும்பு, விலா எலும்பு, இடுப்பு எலும்பு, மேற்கை எலும்பு, கீழ்க்கை எலும்பு, தொடை எலும்பு, கால் எலும்பு, விரல் எலும்புகள் எனப் பலவகை எலும்புகள் நம் உடலில் உள்ளன. மூளையிலிருந்து உடலெங்கும் பரவி நிற்கும் நரம்புகள் முதுகெலும்புத் தொடரை சார்ந்து செல்கின்றன. முதுகெலும்புத் தொடர் முன்னோக்கியும், பின் நோக்கியும், பக்கவாட்டிலும் வளையக்கூடிய தன்மை உள்ளவரை, இளமை, சுறுசுறுப்பு நீடிக்கும்.

    முறையான ஆசனப் பயிற்சிகள் எலும்புகளை உறுதிப்படுத்தி அவைகளின் இயல்பான வளைவு தன்மையை மிகச் செய்கின்றன. உத்தித திரிகோணாசன நிலை முழு முதுகெலுப்புத் தொடருக்கும், அதிகபட்சமாக 85 (டிகிரி) வரை பக்க வளைவைத் தருகிறது. இடுப்பு-20, மார்பு-20, கழுத்து-35-45 (டிகிரி) வரை வளைவு பெறுகின்றன. இதனால் எலும்புகளில் அமைந்துள்ள அனைத்து பந்தகங்களும் (Ligaments) மற்றும் தசைகளும் நன்கு நீட்சி (Stretch) அடைகின்றன.

    சசாங்காசன நிலை சட்டகத்திற்கு முன் நோக்கி 110 வளைவைத் தருகிறது. இந்த ஆசனம் முதுகெலும்பு பந்தகங்களுக்கு ஓய்வளிப்பதுடன் பின்புறத் தசைகளை நீட்சியடையச் செய்கின்றன. மேலும் நிற்கும் நிலையில் இடுப்பு முன்னெலும்பு இடைத்தட்டுகளில் சாதாரணமாய் காணப்படும் அழுத்தத்தை விடுக்கின்றன.



    தசை மண்டலம்

    உடலின் அசைவுகளுக்கு எலும்புகள் காரணம் என்றால் அந்த எலும்புகளை இயக்குபவை தசைகள்தான் தசைகள் எலும்புகளோடும், மூட்டுகளோடும் தசை நார்களால் இணைக்கப்பட்டுள்ளன. எலும்புகளை மூடி உடலுக்கு வடிவையும், அழகையும் தசைகளே தருகின்றன. ஆசனம் பயிற்சிகள் ஒவ்வொரு தசைகளையும் முறையாக இயக்கி உடலை அழகான வடிவடையதாக்குகிறது மற்றும் பலப்படுத்துகிறது. ஆசனப் பயிற்சியின் மெதுவான இயக்கங்களும் ஆழமான மூச்சும் தசைகளுக்கு பிராணவாயுவின் விநியோகத்தை அதிகரிப்பதால் தசை நார்களில் லாக்டிக் அமிலம் தங்குவதைத் தடுக்கிறது.

    பஸ்சிமோந்தாசனம்-முட்டி, பாதம் மற்றும் கழுத்துப் பகுதி எக்ஸ்டென்சார் (extensors) தசைகளை இயக்குவதுடன் முட்டி பந்தகங்கள் மற்றும் முதுகுத்தசைகளை நீட்டியடையச் செய்கிறது. பூர்ண புஜங்காசன நிலையில் முட்டி, பாதம், முதுகெலும்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள பிளக்சார் தசைகள் இயக்கப்படுகின்றன.

    ஆசனங்களின் எதிரெதிராக செயல்படும் ஒவ்வொரு இணைத் தசைகளையும் அடுத்தடுத்து முறையாக செயல்பட வைக்கிறது. எடுத்துக்காட்டா முன் நோக்கி வளையும் பஸ்சிமோத்தாசனத்தையும், பின் நோக்கி வளையும் பூர்ண புஜங்காசனத்தையும் கூறலாம். இத்தகைய மாற்று ஆசனப் பயிற்சிகளினால் தசைகளை இளமையுடனும், மீள் தன்மையுடனும் மேலும் ஒன்றுக்கொன்று சம நிலையிலும் வைக்க முடிகிறது.

    சுவாச இயக்க மண்டலம்

    உயிர் வாழ்க்கைக்கு அவசியமான பிராண வாயுவை நாம் சுவாசிப்பதன் மூலம் பெறுகிறோம். நுரையீரல்கள் நன்றாக விரிந்தால்தான் நாம் நிறைய பிராண வாயுவைப் பெற முடியும். அதே போல் நுரையீரல்கள் நன்றாகச் சுருங்கினால்தான் நாம் கரியமில வாயுவை அதிக அளவு வெளியேற்ற முடியும். உடம்பு நிமிர்ந்த நிலையில் இருக்கும் போது இது எளிதாக நடைபெறும். ஆனால் மக்களில் அநேகம் பேர் உடலை எப்போதும் கூனி குறுகியபடி வைத்துக் கொள்வதால் சுவாச இயக்கம் சீராக நடைபெற இயலுவதில்லை.

    ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவற்றினால் பாதிக்கப்படும் போது நுரையீரல்களின் சிறுகுழல்கள் மற்றும் காற்று நுண்ணுறைகள் இறுக்கமடைகின்றன. சுவாசத் தசை நார்கள் வலுவிழக்கின்றன. நோயின் தன்மை அதிகரிக்கும் போது அசுத்தக் காற்றை வெளியேற்றவோ, சுத்தக் காற்றை உட்கொள்ளவோ முடியாமல் நோயாளிகள் மிகவும் துன்பப்படுவர்.

    புஜங்காசன, உஷ்ட்ராசனம், மதஸ்யாசனம் போன்ற ஆசனங்களும், கபால பாத்தி போன்ற வயிற்று சுவாச பயிற்சிகளும் சுவாச இயக்கத்திற்கு உதவும் மூச்சு, சுவாச குழல், உதரவிதானம், மார்புக்கூடு, விலா இடைத் தசைகள் மற்றும் நுரையீல்களின் செயலை சீர்படுத்தி எல்லா சுவாச பணிகளையும் மேம்படுத்துகிறது. நாடி சோதனா போன்ற பிராணாயாமப் பயிற்சியினால் சாதாரண மூச்சில் நுரையீரல்களுக்கு செல்லும் காற்றின் அளவைவிட ஐந்து மடங்கு காற்று அதிகமாக நுரையீரல்களுக்கு செல்வதுடன் வலுவான தசைகளை உருவாக்குகின்றன.



    ரத்த சுழற்சி மண்டலம்

    உடலில் பல பாகங்களில் வளர்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் கழிவுகள் கலந்த அசுத்த ரத்தத்தை சிரைகளின் வழியாக இருதயம் பெற்று நுரையீரல்களுக்கு அனுப்பி, பிராணவாயு கலந்த சுத்த ரத்தமாக மாற்றி, மீண்டும் நுரையீரல்களிலிருந்து இருதயம் பெற்று, இருதயத்திலிருந்து வெளியேறும் தமனிகள் (Artevie) வழியாக உடல் முழுவதும் சுத்த ரத்தத்தை பாய்ச்சுகிறது.

    ரத்தம் பிராண வாயுவையும், ஜீரண உறுப்புகள் உணவிலிருந்து கிரகித்துத் தரும் சத்துக்களையும் நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களையும் உடலின் திசுக்களுக்கு வழங்கி உடலில் ஆங்காங்கே வெளிப்படும் கழிவுகளையும், கரியமில வாயுவையும், சிறுநீரகங்கள், சருமம் மற்றும் நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை செய்கிறது.

    ரத்த சுழற்சி என்பது ஒரு ஆரோக்கியமான இருதயத்தையும், முதன்மை தமனிகள் மற்றும் சிரைகளில் (Veines) இருந்து சிறிய நுண் ரத்தக்குழல்கள் வரை மீள்தன்மை மற்றும் அடைப்புகள் அற்ற ரத்த நாளங்களையும் நம்பியுள்ளது.

    அனைத்து ஆசனங்களும், குறிப்பாக சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற தலைகீழாக வரும்படி செய்யும் ஆசனப் பயிற்சிகள் ரத்த சுழற்சிக்கு நன்மை அளிக்கிறது. தலைகீழாக நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் விளைவை மாற்றி அமைப்பதால் இருதயம் தரும் அழுத்தம் இன்றியே தலைக்கும், கழுத்திற்கும் ரத்தம் கீழ்நோக்கி ஓடி வருகிறது. இதனால் இருதயம் ஓய்வு பெற்று மீண்டும் நன்கு இயங்கும் ஆற்றலை பெறுகிறது.

    உடலின் தலைகீழ் பயிற்சியான ஆசனங்கள் வால்வுகளும், சிரைச்சுவர்களும் ஓய்வு பெற உதவுகின்றன. சில குறிப்பிட்ட ஆசனங்கள் வெரிகோஸ் நிலையை வராமல் தடுப்பதுடன் அந்தக் குறைபாட்டை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

    பொதுவாக ஆசனப் பயிற்சிகள் உடல் தசைகளை மெதுவாக அமுக்குவது போல செய்வதால், திசுக்களில் உள்ள தேவையற்ற கழிவுகளை கொண்ட திரவங்களை வெளியேற்றுகிறது. மேலும் திசுக்களை நீட்சி அடைய வைப்பதால் புதிய வாழ்வு தரும் உணவுப் பொருட்கள் மற்றும் ஆற்றல் ஆகியவை கொண்ட திரவங்கள் உட்செல்ல வைக்கிறது.

    உத்ரவிதானத்தின் சுவாச அசைவுகள் ஜீரண உறுப்புகளை தொடர்ச்சியாக அமுக்கிவிடுவதால் அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அக்னிசாரா கிரியா உதரவிதானத்தை நேரடியாக பலப்படுத்த உதவுகிறது. புஜங்காசனம், சவாசனம் போன்ற பின் வளைந்து செய்யும் ஆசனங்களும் தண்டுவட சுழற்ப்பயிற்சியான அர்த்த மத்ஸ்பேந்திராசனம் ஆகியவையும், உதரவிதானம் மற்றும் வயிற்றிலுள்ள முக்கியமான உறுப்புகளை அமுக்கி விடுவதன்மூலம் ஜீரண கருவிகளின் கோளாறுகளை நீக்கி அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்பட வைக்கிறது.

    மேலும் கழிவு நீக்க மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம் போன்ற எல்லா மண்டலங்களும் நன்கு இயங்க, குறைபாடுகள் நீங்க யோகப்பயிற்சி உதவுகிறது.

    யோகத்தை பயிலுங்கள் உடல் மன ஆரோக்கியத்துடன் வாழுங்கள். #InternationalYogaDay2018 #yoga
    ×