search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201649"

    • உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தீ விபத்து தடுப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் ஒரு வாரம் தீ தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்பட உள்ளது.தீயணைப்பு பணிகளின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்ப ட்டது.

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அதிகாரி சகாயராஜ், போக்குவரத்து அதிகாரி முருகன் ஆகியோர் தீயணைப்பு வீரர்கள் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார்கள் .

    இந்தநிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.வரும் 20 ம் தேதி வரை தீ விபத்து தடுப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    • நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
    • 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் குமரி மாவட்டத்தின் 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் சிறைவாசி களுக்காக புத்தகம் தானம் பெற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    இதையொட்டி புத்தக கண்காட்சியில் தானம் பெற பெட்டிகள் வைக் கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் புத்தகங்களை வழங்கி தானம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் பாளை யங்கோட்டை சிறைத்துறை சூப்பிரண்டு சங்கர், மாவட்ட கிளை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜமாணிக்கம் மற்றும் சிறை காவலர்கள் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியில் குமரி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகம் தானம் செய்கிறார்கள்.

    • நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது காசீம்,நகர் துணை செயலாளர் சுபைர், இளைஞரனி அன்சர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

    ராமநாதபுரம்

    பனைக்குளத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மாநில தகவல் தொழில்நுட்ப இணை ஒருங்கினைப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை தலைவர் சாதுல்லாக்கான், மாவட்ட உதவி செயலாளர் பனைக்குளம் முகம்மது இக்பால், மாவட்ட உதவி செயலாளர் ஆசீக் உசேன், மாநில மாணவரனி ஈரோடு முஹம்மது பாருக், மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஒருங்கினைப்பாளர் சுல்தான் சலாவுதீன், பனைக்குளம் கிருஷ்ணாபுரம் கணேசன் தலைமையி்ல் ஐந்து நபர்கள்,சோகையன் தோப்பு சேர்ந்த இரண்டு நபர்களும்,பொன்குளம் ஆதிராஜ் , சக்திமுருகன் பனைக்குளம் துணை செயலாளர் சீமான் என்ற சாகுல் ஹமீது, பனைக்குளம் பொருளாளர் சபிக் ரஹ்மான், பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை, முஸ்லீம் நிர்வாக சபை,ஐக்கிய முஸ்லிம் சங்கம் வாலிப முஸ்லிம் சங்கத்தை சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது காசீம்,நகர் துணை செயலாளர் சுபைர், இளைஞரனி அன்சர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்

    • பணியின்போது வீரமரண மடைந்த வீரர்களுக்கு, நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக
    • இன்று வீர வணக்கமும், 2 நிமிட மவுன அஞ்சலி அனுசரித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீத்தொண்டு நாளை அனுசரிக்கும் விதமாக, பணியின்போது வீரமரண மடைந்த வீரர்களுக்கு, நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக இன்று வீர வணக்கமும், 2 நிமிட மவுன அஞ்சலி அனுசரித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தீத்தொண்டுநாள் வாரவிழாவை முன்னிட்டு காலை, மாலை 2 நேரமும் பொதுமக்கள் கூடுமிடங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தீத்தடுப்பு பிரசாரங்கள், செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தும், தீ அபாயம் உள்ள இடங்களில் தீ தடுப்பு ஒத்திகையும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. 

    • சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கரூர் கலெக்டர் அலுவலகத்தில்

    கரூர்:

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டுசமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, தனித் துணை கலெக்டர் சைபுதீன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சந்தியா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மூன்று நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    முதல் நாள் மாலையில் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் முன்னிலையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.

    2-வது நாள் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் காலை, மதியம், மாலை திருப்பலி மற்றும் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இரவு கலை நிகழ்ச்சிகள் வான வேடிக்கை முழங்கிட மணங்கமலும் மலர்கள் மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனே கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது.

    முன்னதாக பாபநாசம் மேல வீதியில் புனித செபஸ்தியாருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    3வது நாள் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி முன்னிலையில் திருவிழா திருப்பலி மற்றும் திருப்பலி நடைபெற்றது மாலை கொடி இறக்கம் நடைபெற்றது திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் , இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் அருள் சகோதிரிகள் பங்கு பேரவை அன்பியங்கள் , பங்கு இறை மக்களை, பங்கு கிளை கிராம இறை மக்கள் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 28-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த கோவிலின் திருவிழா கடந்த 28-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.அபிஷேக ஆராதனை, வழிபாடுகள், சக்தி அழைத்தல், கும்பம் தாளித்தல், பூச்சொரிதல் வழிபாடு, திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேவி கருமாரியம்மன் கோயிலில் இருந்து கம்பம் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருச்செங்கோடு தெப்பக்குளத்தை அடைந்தது. பூசாரியும், பக்தர்களும் தெப்பக்குளத்தில் கம்பத்தை பூஜை செய்து வழிபட்டு குளத்தில் விட்டனர். ஏராளமான பக்தர்கள் வேண்டுதலுக்காக வேடமிட்டு ஆடி படி ஊர்வலமாக வந்தனர்.

    • இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடந்தது.
    • சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

    அய்யம்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த சக்கராப்பள்ளியில் உள்ள தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் கோவிலில் சப்தஸ்தான விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அய்யம்பேட்டை சவுராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி ஏழூர் பல்லக்கு புறப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில்இருந்து புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டைஎல்லை வரை சென்று மாகாளி புரம், வழுத்தூர், சரபோஜிரா ஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில் ஆகிய கிராமங்களில் வீதிஉலா சென்றது.

    இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது.

    தொடர்ந்து, இன்று இலுப்பக்கோரை கிராமத்திற்கு சென்று மீண்டும் பசுபதிகோவில், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் வீதிஉலா வந்தது.

    பின்னர், மாலை அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஏழூர் கிராமமக்கள் செய்துள்ளனர்.

    • 17 பேர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார்.

    இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளை காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு நித்தியாவை வாழ்த்தினர்.

    பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்ப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கும், 17 பேர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் வைத்தீஸ்வரன்கோவில் ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதுகுறித்து சீர்காழி, மயிலாடுதுறை, மணல்மேடு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது
    • ஒருவருக்கொருவர் பாதங்களை கழுவி பணிவிடை செய்தனர்.

    கன்னியாகுமரி :

    கிறிஸ்துமஸ் பண்டி கையை அடுத்து கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகை ஈஸ்டர் பண்டிகை ஆகும். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி புனித வெள்ளியின் முந்தின நாள் வியாழன் பெரிய வியாழனாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெரிய வியாழன் இரவு பாஸ்கா இரவு கொண்டாடப்படும். இயேசு கிறிஸ்து இரவு உணவு உண்ட வேளையில் தம் சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்கள் ஒருவருக்கொருவர் பணியாளர்களாக இருக்க வேண்டும் என பாடம் புகட்டினார்.

    இதை நினைவு கூறும்வ கையில் ஆண்டுதோறும் பெரிய வியாழன் இரவு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெரிய வியாழனை முன்னிட்டு நேற்றிரவு மணவாளக்குறிச்சி அருகே திருநயினார்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒருவருக்கொ ருவர் பணிவிடை செய்யும் விதத்தில் பங்கு மக்கள் மற்றும் அம்மாண்டிவிளை கிளை பங்கு மக்கள் இணைந்து ஒருவருக்கு ஒருவர் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குமக்கள் அன்பு செய்து பணிவிடை எண்ணம் மேலோங்கும் வகையில் ஒருவருக்கொருவர் பாதங்களை கழுவி பணிவிடை செய்தனர். இதில் பங்கு தந்தை லியோன் எஸ். கென்சன், அருட்சகோதரர் கேபா மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக பெரிய வியாழன் பாஸ்கா விருந்தில் ஆலயங்களில் பங்குத்தந்தையர் 12 பக்தர்களின் பாதங்களை கழுவுவர்.

    மக்கள் அனைவரும் ஒருவருக்கொ ருவர் அன்பு செய்யும் எண்ணம் மேலோங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு பங்கு மக்கள் ஒருவருக்கொருவர் பாதங்களை கழுவி அன்பை பரிமாறிக்கொண்ட னர் என்பது குறிப்பி டத்தக்கது

    • கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பெருமாள்- தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும்.

    இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம் திருநாளின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான பரிமளரெங்கநாதர் பெருமாள், சுகந்தவனநாயகி தாயார் வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர்.

    பெருமாள் தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல், சிறப்பும் பூரணாகுதி திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு தீபாரதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பெருமாள் தாயார் திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக செயலர் ரம்யா, அலுவலர் விக்னேஷ், நகர மன்ற துணை தலைவர் குமார், மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

    • எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது
    • ஏராளமானவர்கள் பங்கேற்பு

    திருச்சி, 

    எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங் கம் திருச்சி மாவட்ட ஆட்டோ நலச்சங்க தலைவர் அல்லா பகஷ் தலைமையில் இப்தார் நிகழ்ச்சி உறையூரில் நடைபெற்றது. ஆட்டோ நலச் சங்க செயலாளர் தமிமுல் அன்சாரி தொகுத்து வழங்கினார். சிட்டி மீட்டர் ஆட்டோ குழு தலை–வர் முகமது இலியாஸ் வர–வேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி மண்டல தலைவரு–மான இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி மற்றும் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் முகம்மது ரபிக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.நிர்வாகிகள் தலைவர் முஸ்தபா, துணை தலைவர் மீரான் மைதீன், செயலாளர் காஜா முயினுதீன், கட்சியின் மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ், சிராஜ், அப்துல் மாலி, சக்கரை மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் புதிய ஜனநாயக தொழிற் சங்க நிர்வாகிகள் சிவா, கணேசன், சிட்டி மீட்டர் ஆட்டோ குழு செயலாளர் அப்துல் சையது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×