என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 202809"
- சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் எம்.எஸ்.டோனி களமிறங்கினார்.
- டோனிக்கு சி.எஸ்.கே. அணி உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார்.
சென்னை:
சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்யுயுள்ளார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும். 2010, 2011, 2018 மற்றும் 2021 என 4 முறை டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே.
2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.
199 போட்டிகளில் தோனியின் தலைமையில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் களமிறங்கிய எம்.எஸ்.டோனிக்கு சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார். அணி வீரர்களும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
டாஸ் வென்ற சி.எஸ்.கே. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- 30 இன்ச் நீளம் மற்றும் 20 இன்ச் அகலத்தில் இந்த போர்வையை அப்புசாமி உருவாக்கியுள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்களின் உருவத்தை வடிவமைத்து அதனை எலக்ட்ரானிக் தறி மூலம் போர்வையில் உருவாக்கி வந்தார்.
சென்னிமலை:
சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அப்புசாமி என்பவர் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே தனது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்களின் உருவத்தை வடிவமைத்து அதனை எலக்ட்ரானிக் தறி மூலம் போர்வையில் உருவாக்கி வந்தார்.
அந்த வகையில் தற்போது கடந்த 2 மாதங்களாக பல முயற்சி செய்து இறுதியில் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.டோனியின் படம் ஒருபுறமும், மற்றொருபுறம் விராட் கோலி உருவ படத்தையும் வடிவமைத்துள்ளார்.
30 இன்ச் நீளம் மற்றும் 20 இன்ச் அகலத்தில் இந்த போர்வையை அப்புசாமி உருவாக்கியுள்ளார். கைத்தறி துணிகளில் இருபுறமும் ஒரே டிசைன் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேகேஆர் அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
- 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் 16-ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் கோடி கணக்கில் ஏலத்தில் சென்றனர். அதேவேளையில் இந்திய வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. 400-க்கும் மேற்பட்ட வீரர்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது ரஞ்சி தொடரானது நடைபெற்று வரும் இவ்வேளையில் உள்ளூர் அணிகளை சேர்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்களை விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன் எந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் இந்த ஏலத்தில் 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
எதிர்வரும் சீசனில் விளையாடயிருப்பது குறித்து பேசிய தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் கூறுகையில்:-
ஒவ்வொரு வீரருக்கும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அந்தவகையில் நானும் அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிறைய போட்டிகளில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சென்னை அணியில் நான் இருந்த வரை டோனியிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவற்றை எதிர்வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அயர்லாந்திர்கு எதிரான டி20 போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியை உற்சாகப்படுத்தும் விதமாக டோனியின் மகள் ஷிவா பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஷிவா, கம் ஆன் ஹர்திக் கம் ஆன் என கத்துகிறார். இந்த வீடியோவை டோனி மனைவி சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தார்.
அதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா, எனக்கான சியர்லீடர் (உற்சாகப்படுத்துபவர்) கிடைத்து விட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார். டோனியின் மகள் ஷிவாவின் வீடியோ அடிக்கடி சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெறும். ஷிவாக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் நடனமாடுவது, பாடுவது போன்ற வீடியோக்கள் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. #MSDhoni #Ziva #HardikPandya
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்