என் மலர்
நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"
- 52 கலைகுழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி
- இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை
நாகர்கோவில் :
அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடத் தப்படுகின்ற கிறிஸ்துமஸ் விழாவின் 25-ம் ஆண்டை யொட்டி வெள்ளிவிழா கொண்டாட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கி யது.
முதல் இரண்டு நாட்கள் கிறிஸ்துமஸ் பேரின்ப பெருவிழாவாக நடைபெற்றது. இதில் தேவ ஊழியர் கள் அனிசன், சாமுவேல், எலியாஸ் ஜேக்கப் (துபாய்) ரவி மணி (பெங்களூரு) ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தி அளித்தனர்.ஜெர்சன் எடின்புரோ மற்றும் ஆல்பன் தாமஸ் ஆகியோர் பாடல் ஆராதனை நடத்தினர். தொடர்ந்து சிறப்பு செய்தியாளர் பால் தினகரன் செய்தி அளித்தார்.
நேற்று மாலையில் மூன்றாம் நாள் விழா நடந்தது. இதனையொட்டி அரு மனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 52 கலைகு ழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இயேசு நாத ரின் உருவம் தாங்கிய ரதம், வண்ண உடைகளுடன் கண்ணை கவரும் வகை யில் கலைஞர்கள் வலம் வந்தனர். பேண்ட் வாத்தியம் உட்பட இசை கருவிகள் இசைக்கப்பட்டன.அதனை தனி மேடையில் அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், விஜய்வசந்த் எம்பி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியதுணைதலைவர் தெஹ்லான் பாஹவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் பெங்களூரு ராபர்ட் கிறிஸ்டோபர், ஐ.ஜே.கே. கட்சி மாநில தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன், அருமனை கிறிஸ்தவ இயக்க தலைவர் டென்னிஸ், பொருளாளர் கிளாரிஸ் பிரபு, செய்தி தொடர்பாளர் பாவலன், வழக்கறிஞர் அணி துணை செயலாளர் திலிப் சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் அல்காலித், குமரி மேற்கு மாவட்ட செயலாளர்ஜெயன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து சமூக நல்லிணக்க மாநாடு நடந்தது.
மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:-
நாம் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும், மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. மதத்தில் 3 வகை உண்டு. இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை. கடவுளின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களால் எந்த மோதலும், வன்முறையும் நடப்பது இல்லை.
ஆனால் இந்து மதத்தில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். சாதாரண இந்து மக்களுக்கு அதில் எந்த பொறுப்பும் இல்லை. மடாதிபதிகளுக்கும் பொறுப்பு இல்லை. பாரதிய ஜனதா போன்றவை தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை புகுத்துகிறார்கள்.
சாதாரண இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தவில்லை. சமூகத்தில் இந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆதலால் எல்லா கட்சிகளிலும் இந்துக்கள் தான் இருக்கி றார்கள். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் சங் பரிவார அமைப்புகளை தான் எதிர்க்கிறோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது சகோதரத்தை, சமத்து வத்தை, சமூக நீதியை பேசினால் வரவேற்கலாம். ஆனால் இதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தையே தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. சங் பரிவார அமைப்புகளை பற்றி பேசும்போது இந்து களை விமர்சிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. தற்போது நடந்த மாநாட்டில் அனைத்து மதத்தினரையும் மேடையில் ஏற்றி இருக்கிறோம்.அனை வருக்கும் நேர்மறை சிந்தனை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் நேர்மறை சிந்தனை வரும். ஏசு 3 ஆண்டு போதித்த போதனைகள் தான் உலகை ஆழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, "தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் கரும்பை பொங்கல் பண்டிகை அன்று வழங்கி னால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பு வழங்கினால் நன்றாக இருக்காது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அப்படி இருக்க மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரபேல் வாட்ச் தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாரதிய ஜனதாவினர் விளம்பரத்துக்காக அதுபற்றி பேசி வருகிறார்கள். பா.ஜனதாவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி அமைக்குமா? என்று கேட்கிறீர்கள். பாரதிய ஜனதாவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த காலத்திலும் கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு இல்லை. நல்லவர்களால் பாராட்டக்கூடிய நல்லாட்சி நடந்து வருகிறது" என்றார்.
- கட்சியின் 138-வது தொடக்க நாள் விழா நேற்று ஓசூரில் கொண்டாடப்பட்டது.
- இதையொட்டி, ஓசூர் எம். ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் 138-வது தொடக்க நாள் விழா நேற்று ஓசூரில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஓசூர் எம். ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு கட்சிக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர்,கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
- மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி, ஜேடர்பாளையம் ஆகிய காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் இளைஞர்கள் சுற்றுதல் கூடாது. மேலும் மது அருந்திவிட்டு மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகவேகமாக பைக் ரேஸ் ஓட்டுபவர்களின் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து வாகனத்தை பறிமுதல் செய்யப்படும்.
மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் புத்தாண்டிற்கு தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொது மக்கள், தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறும் பரமத்தி
வேலூர் டி.எஸ்பி கலை யரசன் தெரிவித்துள்ளார்.
- போலீசார் கடும் கட்டுப்பாடு
- குத்தாட்டம், ஆடல் பாடலுடன் நடக்கிறது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட் டத்துக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டுவருகிறது. இரவு 7 மணிமுதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல்- பாடல், குத்தாட்டம், பரதநாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கள் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வான வேடிக்கை, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்கவிடப் பட்டு கேக்வெட்டிபுத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரியில் நடக் கும் இந்தபுத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வெளி நாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்று முதலே வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா சுற்றுலாபயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.
ஒரு தம்பதிக்கு ரூ.6ஆயிரம் வீதமும் தனிநபர் ஒருவருக்கு ரூ.3ஆயிரம் வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டி கன்னி யாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துஉள்ளனர். கன்னியாகுமரி கடற்கரை யில் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடைவித்து உள்ளனர். நட்சத்திரஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீச்சல்குளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும் கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிபோதையில் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் உற்சாக கொண்டாட்டம்
- சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடப்பட்டது. இதனால் சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

2023 புத்தாண்டு பிறந்ததையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
- இந்தியா கேட், கேட்வே ஆப் இந்தியா, பாந்த்ரா பகுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மக்கள்.
- நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.
2023 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தலைநகர் டெல்லி உள்பட முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு களைகட்டியிருந்தது. டெல்லியின் கன்னாட் பிளேஸ் மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு புத்தாண்டைக் கொண்டாட குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நூற்றுக்கணக்கானோர் ராஜபாதையான கர்த்வயா பாத் பகுதியில் திரண்டதால் அந்த பகுதி சுற்றுலாத்தளம் போல் காட்சி அளித்தது. புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி பாதுகாப்பை உறுதி செய்ய தலைநகர் முழுவதும் 18,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

.இதேபோல் தெற்கு மும்பையில் கேட்வே ஆப் இந்தியா, மரைன் டிரைவ் மற்றும் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். மேலும் மும்பை புறநகர் பகுதிகளில், பாந்த்ரா, மார்வ் கடற்கரை பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர்.
மும்பை மாநகராட்சி, சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், கேட்வே ஆப் இந்தியா போன்ற முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஹோட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.

இதேபோல் கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் களைகட்டியிருந்தன. பனாஜி நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளில் ஏராளமான மக்கள் ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதேபோல் கேரளா மாநிலம் கொச்சி, இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
- நள்ளிரவில் போலீசார் கடும் கட்டுப்பாடு
- நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.
கன்னியாகுமரி:
ஆங்கில வருடமான 2022-ம் ஆண்டு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்து 2023-ம் ஆண்டு மலர்ந்தது. புத்தாண்டு பிறந்ததை யொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. கன்னியாகுமரியிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கன்னியா குமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தன. நட்சத்திர ஓட்டல்களில் இரவு 7 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல் - பாடல், குத்தாட்டம், பரத நாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வாண வேடிக்கை, குழந்தை களுக்கானவிளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.
மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்க விடப்பட்டு கேக் வெட்டி புத்தாண்டு கொண் டாடப்பட்டது. கன்னியா குமரியில் நடந்த இந்த புத்தாண்டு கொண்டாட் டத்தில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்றுமுன்தினம் முதலே வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண் டனர்.
புத்தாண்டு கொண்டாட் டத்தை யொட்டி கன்னியா குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்து இருந்தனர்.
கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண் டாட தடை விதிக்கப் பட்டது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண் டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துகிறார்களா? என்றும் போலீசார் தீவிர மாக சோதனை நடத்தி னார்கள். அதேபோல குடி போதையில் யாராவது வாகனம் ஓட்டுகிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்துவந்தனர்.
- கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
- கேக் வெட்டி பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள்.
பெரம்பலூர்
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளில் சாக்லெட் கேக், வெண்ணிலா கேக், ஐஸ்கிரீம் கேக், பிளாக் பாரஸ்ட் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
- கோவில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடத்தினர்
- ஆங்கில புத்தாண்டை–யொட்டி இரவு ஓட்டல்களில் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருச்சி:
2023 ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்சியில் இன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தேவாலயங்களில் நேற்றிரவு சிறப்பு பிரார்த்தனை நடை–பெற்றது. இதில் பொது–மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண் டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகளில் நடன, கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்தநிலையில் 2022-ம் ஆண்டு முடிவடைந்து நேற்றிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் புத்தாண்டு கொண்டாட்டம் களை–கட்டியது. இதையடுத்து பொது–மக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்க–ளிடம் வாழ்த்துக்களை பரி–மாறி கொண்டனர்.திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்க–ளில் ஆங்கில புத்தாண்டை–யொட்டி இரவு ஓட்டல்களில் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதேபோல் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற வழிபாடுகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் அதிக அளவிலானோர் கலந்துகொண்டனர். இளை–ஞர்கள் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் உலா வந்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.புத்தாண்டையொட்டி திருச்சி உள்பட 5 மாவட் டங்களிலும் நேற்றிரவு பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் பலர் விதவிதமான கேக்குகளை வாங்கி சென்றனர். இதே–போல் 10 மணி வரை சைவ, அசைவ உணவு ஓட்டல் களில் பலர் தங்களது நண் பர்களுடன் வந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர். குறிப்பாக அசைவ உணவு ஓட்டல்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.2023 ஆங்கில புத்தாண் டையொட்டி திருச்சி–யில் ஸ்ரீரங்கம் ரெங்க–நாதர் கோவில், சமய–புரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளி–யம் மன் கோவில், திருவா–னைக்காவல் அகிலாண் டேஸ்வரி, ஜம்பு–கேஸ்வரர் கோவில், திருச்சி மலைக் கோட்டை தாயு–மான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், வயலூர் முருகன் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநே–யர் கோவில் திருச்சி கண் டோன்மென்ட் அய்யப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்க–ளிலும் இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடை–பெற்றது.உள்ளூர் பக்தர்கள் மட்டு மின்றி சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், மேல் மருவத்தூர் ஆதிபாராசக்தி கோவிலுக்கு செல்லும் செவ்வாடை பக்தர்கள், பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் என திரளானோர் குவிந்தனர்.மேலும் கடுமையான குளிரையும் பொருட்படுத் தாமல் அனைத்து கோவில் களிலும் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.இதேபோல் மேலப்புதூர் தூய மரியன்னை ஆல–யம், பொன்மலை புனித சூசையப் பர் ஆலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், ஏ.ஜி.சர்ச், புனித சந்தியா–கப்பர் ஆல யம், புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவா–லயங்களிலும் நேற்றி–ரவு இரவு முதல் கிறிஸ்த–வர் கள் பிரார்த்தனையில் ஈடு–பட்டனர்.புத்தாண்டு கொண்டாடத் தின் போது எந்தவித அசம் பாவித சம்பவங்களும் நடை பெறாமல் இருப்பதற்காக திருச்சி போலீசார் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். திருச்சியில் ஒருசில இடங்களில் விதி–களை மீறி இருசக்கர வாக–னங்களில் ரேஸ் சென்ற இளைஞர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்த–னர்.
- புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு முசிறியில் டி.எஸ்.பி தலைமையில் போலீசார் கேக் வெட்டி கொண்டாடினர்
- புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு முசிறி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
முசிறி:
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு முசிறி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். போலீசாரின் ரோந்து பணியினை டிஎஸ்பி யாஸ்மின் ஆய்வு செய்து கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியானதை தொடர்ந்து முசிறி கைக்காட்டி பகுதியில் டிஎஸ்பி யாஸ்மின் கேக் வெட்டினார். பின்னர் கேக் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சக்தி விநாயகம், வடிவேல், நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அங்கமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி பிரியா பலர் கலந்து கொண்டனர்.
- கிராம மக்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
- 50-க்கும் மேற்பட்டோருக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பூதமங்க லம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்தது.
பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்னகருப்பன் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.பொங்கல் திருநாளை முன்னிட்டு பூதமங்கலம் தூய்மை பணியாளர் களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி பருப்பு, முழு கரும்பு, சீருடைகள் வழங்கப்பட்டது. பணித்தள பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்டோருக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்த விழாவில் பூதமங்க லம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பகதூர், தும்பைபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அயூப் கான், வஞ்சிநகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி, கச்சிராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம் ஆண்டிச்சாமி, அட்டப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன், பூதமங்கலம் ஊராட்சி செயலர் வடிவேலன், சமூக ஆர்வலர் தேவராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணித்தள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலூர் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, துணை தலைவர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலச்சந்தர், ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவாதவூர் இளவரசன், ஆட்டுக்குளம் சிவன் ராஜன், சூரக்குண்டு நிர்மலா ஸ்டீபன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள், யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- முத்துப்பேட்டை, கீழக்கரை கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில் கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில், கல்லூரி முதல்வர் ஹேமலதா முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடை அணிந்து, சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி னர். தொடர்ந்து கல்லூரி அரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில், துணை முதல்வர் ஷேக் தாவூத் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஒருங் கிணைப்பாளர் கணேஷ் குமார் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பொங்கி வந்த போது மாணவ மாணவியர்கள் பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டனர். விழாவை முன்னிட்டு கரகாட்டம்,ஒயிலாட்டம், கும்மியாட்டம், உரியடி, சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை கல்லூரி விரிவுரையாளர் மரியதாஸ் தொகுத்து வழங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் உமையாள் நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி இயக்குனர் மருதாசல மூர்த்தி மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.