search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை
    • குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது விற்பனை செய்பவரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று முன் தினம் திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரம் சாமவிளை புத்தன்வீட்டை சேர்ந்தஅல் அமீன் (வயது 31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதே போல் நாகர்கோவில் வெட்டூணிமடத்தை சேர்ந்தவர் செல்வன் (23). சமீபத்தில் இவரை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் வடசேரி போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இரணியல்போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதே போல் வாத்தியார்விளை சேர்ந்தவர் அஜித் என்ற அஜித்குமார். இவரையும் சமீபத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக வடசேரி போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர் மீதும், இரணியல் போலீஸ் நியைத்தில் வழக்குகள் உள்ளன.

    இவர்கள் இவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலகல் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் செல்வன், அஜித் ஆகிய இருவரையும் வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை. ஜெயிலில் அடைத்தனர்.

    • இவர் மேட்டூர், சேலம் கேம்ப், தங்கமாபுரிப்பட்டணம், குஞ்சாண்டியூர், புத்துசாம்பள்ளி பகுதிகளில் ஏஜெண்ட்டுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
    • ஏஜெண்டுகளை கூண்டோடு பிடிக்க முடிவு.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் செல்போனில் தொடர்பு கொண்டால் இருக்கும் இடத்திற்கே வந்து கஞ்சா விற்கப்படுவதாக, மேட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்ஐ சேகர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    கஞ்சா வியாபாரிகளின் செல்போன் எண்ணை கண்டுபிடித்த போலீசார், கல்லூரி மாணவர்கள் போல் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினர். சிறிது நேரத்தில் மேட்டூர் காவிரி பாலத்தில், சொகுசு காரில் வந்த டிப்டாப் உடையணிந்த நபர்கள், ரூ.1000 பெற்றுக் கொண்டு, காரில் இருந்தபடியே 2 பொட்டலம் கஞ்சாவை வீசி விட்டு செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு தயாராக இருந்த மேட்டூர் போலீசார், அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த சேலம் 5 ரோட்டை சேர்ந்த மனோகரன் மகன் விஜய்பரத் (வயது 28), மேட்டூர் குமரன் நகரைச் சேர்ந்த விக்னேஷ் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் விஜய்பரத் பி.இ. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து விட்டு, சேலம் 5 ரோட்டில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். அவரது ஏஜெண்டாக செயல்பட்டு வரும் விக்னேஷ் (21) என்பவர், மேட்டூர் அனல் மின் நிலைய கண்காணிப்பு பொறியாளர் ஒருவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

    இருவரும் விற்பனைக்காக காரில் வைத்திருந்த தலா 25 கிராம் எடை ெகாண்ட 51 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய்பரத் காரிமங்கலத்தை சேர்ந்த விஷ்வா என்பவரிடம் 4 கிலோ கஞ்சாவை கிலோ ரூ.4000-க்கு வாங்கி வந்து, 25 கிராம் எடை ெ காண்ட பொட்டலம் ரூ.500-க்கு விற்பனை ெ சய்து வந்துள்ளார். இவர் மேட்டூர், சேலம் கேம்ப், தங்கமாபுரிப்பட்டணம், குஞ்சாண்டியூர், புத்துசாம்பள்ளி பகுதிகளில் ஏஜெண்ட்டுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

    ஏெஜண்டுகளை கூண்டோடு கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யபட்ட இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இந்த ஆண்டு இதுவரை 20-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    • கஞ்சா செடி எந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வரு கிறார்கள்.

    தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 20-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.நேற்றும் கோட்டார், வடசேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் பூதப் பாண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்ப டும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர்கள் மூன்று பேரை பிடித்தனர்.

    பிடிபட்ட வாலிபர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய் தனர். மேலும் கஞ்சா செடி வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

    பிடிபட்ட 3 பேரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கஞ்சா செடி எந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • ரெயிலில் கடத்தி வந்த 3½ கிலோ குட்கா பறிமுதல்
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் நேற்று வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் இளங்கடையை சேர்ந்த அசோக் (வயது 25), வல்லன் குமாரன்விளையைச் சேர்ந்த அருள் செல்வன் (30), தியாகராஜன் பழவிளையை சேர்ந்த ஜெனித் (21) என்பது தெரிய வந்தது. போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கஞ்சா சென்னையிலிருந்து வாங்கி வருவதாக தெரிவித்த னர். தொடர்ந்து போலீசார் நான்கு பேரிடமும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்.நேற்று புனேவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் அனாதையாக பை ஒன்று கிடந்தது.போலீசார் அதை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3½ கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை கொண்டு வந்தவர்கள் குறித்த விப ரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டு இதுவரை 65 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 7 பறக்கும் படைகள் அமைக்க ப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

    கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கஞ்சா வழக்குகளில் சிக்குபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 65 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் கஞ்சா வியாபாரிகள் ஆவார்கள்.

    இந்த நிலையில் மேலும் ஒரு கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து குண்ட சட்டம் கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

    ஆரல்வாய்மொழி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பணகுடி சிவகாமி புரத்தைச் சேர்ந்த ராமைய்யா (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து ராமையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அரவிந்த் கஞ்சா வியாபாரி ராமையாவை குண்ட சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டு உள்ளார். ராமையா குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    • கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் 10 நாட்கள் தங்கியிருந்து இதில் சம்பந்தப்பட்ட ஜக்கி. கைலாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டறிந்து, அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் வங்கி கணக்குகள் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகள், அசையும், அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக நடப்பு ஆண்டில் 5 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் ரூ. 8 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 623 மதிப்புள்ள வங்கி கணக்கு மற்றும் அசையும்-அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    மேலும் 136 வழக்குகளில் தொடர்புடைய 296 பேரின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.37 லட்சத்து 62 ஆயிரத்து 531 முடக்கப்பட்டு உள்ளது. கஞ்சா வழக்குகளில் மீண்டும் ஈடுபட்ட 22 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேரின் பிணை ஆணையை ரத்து செய்து மீண்டும் அவர்களை ஜெயிலில் அடைத்துள்ளோம். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 225 பேரிடம் 'மீண்டும் கஞ்சா விற்பணையில் ஈடுபட மாட்டோம்' என்று பிணை பத்திரம் பெறப்பட்டு, அவர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கட்டதேவன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார், முத்துராமன் ஆகியோரின் பிணை பத்திரம் ரத்து செய்யப்பட்டு, அவர்களை மேலும் 10 மாதம் ஜெயிலில் அடைக்க உத்தரவி டப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 8 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கஞ்சாவை அழிப்பதற்கு மண்டல அளவிலான குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அவை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள ஒரு கிட்டங்கியில் வருகிற 17-ந் தேதி அழிக்கப்பட உள்ளது.

    மதுரை மாவட்டம் செக்காணூரணியில் கஞ்சா விற்பனை செய்த கோவிலாங்குளம் முத்து (47) என்பவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 393 மதிப்புள்ள அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    ஒத்தக்கடையில் கஞ்சா வழக்கில் பிரகாஷ், நிஷந்தன், குணசேகரன் மற்றும் அவர்களின் உறவி னர்களின் ரூ.55 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகள், 5 வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கஞ்சா கடத்தல்காரர்கள் மட்டுமின்றி அவர்களின் உறவினர்கள் சொத்துக்க ளும் சட்டப்படி முடக்கப்ப டும். கஞ்சா விற்பனை செய்யும் சிறுவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கூட அளவில் போதை பொருள் விழிப்புணர்வு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் கொரியர் மற்றும் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வெளியூர் போக்குவரத்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேரையூரில் 24 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்க ளுக்கு கஞ்சா சப்ளை செய்த சென்னை வாலிபரை தேடி வருகிறோம்.

    மேலூரில் 95 பவுன் நகை கொள்ளை வழக்கில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கும்பல் ஈடுபட்டு உள்ளது. அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை, மத்திய பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    அங்கு தனிப்படை போலீ சார் 10 நாட்கள் தங்கி யிருந்து இதில் சம்பந்தப்பட்ட ஜக்கி. கைலாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்படவில்லை. இது தவிர மேலும் 4 பேரை பிடிக்க வேண்டியுள்ளது. இதற்காக தனிப்படை போலீசார் மீண்டும் மத்திய பிரதேசம் செல்ல உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்
    • பள்ளி, கல்லூரிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளதாக திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.அவர்களிடம் விசாரணை நடத்திய போது அதிகமானோர் கேரளாவில் இருந்து குட்கா மற்றும் கஞ்சாவை வாங்கி வருவதாக தெரிவித்தனர்.

    இதை யடுத்து மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். எல்லை பகுதியிலுள்ள ஊரம்பு, களியக்காவிளை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு போதை பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதி யாக அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திருவனந்தபுரம் போலீஸ் சூப்பி ரண்டு ஷில்பா தியா வையா ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆட்டோக்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.கொரியர் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    வெளியூர்களிலிருந்து இரண்டு கிலோவுக்கு மேல் வரும் பார்சல்களை ஒப்படைக்கும் போது அதை திறந்து பார்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால்

    7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத் தரவுப்படி தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத் தில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். இதன் அடுத்த கட்ட மாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களை தடுப்பது தொடர்பான நடவடிக்கை தொடங்கி உள்ளோம்.

    குமரி மாவட்டம் கேரளா அருகில் உள்ள தால், தற்போது கேரள போலீசாருடன் இணைந்து போதை பொருட்கள் விற்ப னையை தடுத்தல் மற்றும் இது தொடர்பான குற்ற வாளிகளை கைது செய் தல் நடவடிக்கைகளை பரி மாற்றம் செய்து கொள் ளுதல் போன்றவை மேற் கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக தற்போது திரு வனந்தபுரம் மாவட்ட எஸ். பி.யுடன் இணைந்து முதற் கட்டமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு உள்ளோம். தக வல்களை பரிமாற்றம் செய் யும்போது குற்றவாளிகளை விரைந்து கைது செய்யமுடி யும். கொரியர் சர்வீஸ் சென் டர்களையும் கண்காணித்து வருகிறோம்.

    பெரும்பாலும் தற்போது கொரியர் மூலம் கஞ்சா பார்சல்கள் வருவது தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கஞ்சா, போதை பொருட் கள் விற்பனை மட்டுமின்றி செயின் பறிப்பு குற்றவா ளிகளையும் கைது செய்ய இரு மாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வார் கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா கூறு கையில், கேரள முதலமைச் சர் உத்தரவின்படி போதை பொருள் விற்பனையை தடுக்கவும், இதில் பாதிக் கப்பட்டவர்களை மீட்கவும் நடவடிக்கைமேற்கொண்டு வருகிறோம். பள்ளி, கல்லூ ரிகளில் இது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தி உள்ளோம். போதை பழக்கத்துக்கு அடிமை யானவர்களை கண்டறிந்து அவர்களை அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள், வியா பாரிகள் ஒத்துழைப்பு அவசியம், கேரள எல் லையில் உள்ள அமா விளை சோதனை சாவ டியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இருமாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள் ளும் போது குற்றவாளி களை எளிதில் கைது செய்ய முடியும் என்றார்.

    • 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மோட்டார் சைக்கிள் பறிமுதல்

    கன்னியாகுமரி:

    குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் அருகில் சந்தேகப் படும்படியாக வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் சிக்கினர்.

    பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, வேர் கிளம்பி பகுதியைச் சேர்ந்த விஜி (வயது 22), சஜி (21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வர்களிடம் மேலும் விசா ரணை நடத்திய போது கஞ்சா பொட்டலங்களை கேரளாவில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை யும் பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடிய நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் தப்பி ஓடியவர்கள் குளச்சல் பகுதியைச் சேர்ந்த நிதிஷ் ராஜா, தக்கலையைச் சேர்ந்த ஜெனிஸ், திக்கணம் கோட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீதும் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    • கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்ப வர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு வருவ துடன் அவர்கள் மீது குண்டர் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இதுவரை கஞ்சா வியாபாரிகள் 20 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து போலீசார் கஞ்சாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இதையடுத்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பி னும் ஒரு சில இடங்களில் கஞ்சா புழக்கத்தில் இருந்து வருகிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் புதுகிராமம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர்கள் மூன்று பேரை பிடித்து விசா ரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் களை தெரிவித்தனர்.சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும், 2 மோட் டார் சைக்கிளையும், செல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்த னர். பிடிபட்ட நபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் குலசே கரன் புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (வயது 19), கண்ணன்பதியை சேர்ந்த கார்த்திகேயன் (20), மாங்குளம் பகுதியைச் சேர்ந்த வைரவன் (19) என்பது தெரியவந்தது.

    3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கொடிசியா ரோட்டில் சந்தேகம்படும் படி நின்றிருநத வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
    • 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

    கோவை

    கோவை பீளமேடு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடிசியா ரோட்டில் சந்தேகம்படும் படி நின்றிருநத வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் சாமூண்டிபுரம் காந்திநகரை சேர்ந்த கோபி(25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல், பீளமேடு போலீசார் விமான நிலையம் பூங்கா நகர் ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் சாமூண்டிபுரம் ராஜீவ் நகரை சேர்ந்த அருண்குமார்(25), நரேந்திரன்(22), திருப்பூர் சோழியம்பாளையத்தை சேர்ந்த பவிஷ்நாத்(22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்களின் கூட்டாளி திருப்பூர் சபி முகமத் என்பவரை தேடி வருகின்றனர்.

    • ஈரோடு கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியில் வீட்டிற்கு அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதையடுத்து முத்துசாமியை பங்களாபுதூர் போலீசார் கைது செய்து அவர் வளர்த்த 3 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியில் வீட்டிற்கு அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் பங்களாபுதூர் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு ரோந்து சென்றனர்.

    அப்போது நரசபுரம் பகுதியில் முத்துசாமி (31) என்பவர் அவரது வீட்டிற்கு அருகே உள்ள காலி இடத்தில் செடிகளுக்கு இடையே துணியை கட்டி மறைத்து கஞ்சா செடியை வளா்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து முத்துசாமியை பங்களாபுதூர் போலீசார் கைது செய்து அவர் வளர்த்த 3 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    • 8 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் விரைவு ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது சேலம் உட்கோட்டம் ரெயில்வே போலீசார் தனிப்படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 8 பண்டல்களில் சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பதை உறுதி செய்த போலீசார் உடனடியாக ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் விசாரணை செய்தனர்.

    மேலும் கைப்பற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் எனகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×