search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு"

    • தகவல் அறிந்ததும் செங்கல்பட்டில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
    • தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் வெடிகுண்டுகள் எப்படி வந்தது?

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் அட்டைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. கடந்த 5 மாதங்களாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையை சுற்றிலும் மற்றும் பின்புறத்திலும் ஏராளமான முட்புதர்கள் இருந்தன.

    இதனை அகற்றும் பணியில் பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சீனு, தினேஷ் உள்ளிட்ட 4 தொழி லாளர்கள் ஈடுபட்டனர். அப்போது முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தொழிலாளர்கள் சீனு, தினேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் செங்கல்பட்டில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். போலீசாரின் தீவிர சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்து மேலும் 2 வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. அதனை வாளியில் வைத்து பத்திரமாக போலீசார் எடுத்து சென்ற னர். தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் வெடிகுண்டுகள் எப்படி வந்தது? யார் இதை இங்கு வைத்தது? ரவுடி கும்பல் இதனை இங்கு பதுக்கி வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் ரவுடிகள் 2 பேர் எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டு ஒன்று திருப்போரூர் பஸ்நிலையம் அருகே எதிர்பாராத விதமாக வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து கேளம்பாக்கம் பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது தண்டலம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பறிமுதல் செய்யப்பட்ட2 நாட்டு வெடிகுண்டுகளையும் முருக மங்கலத்தில் உள்ள வெடிபொருள் கிடங்கிற்கு போலீசார் எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிது நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என பேசிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து கோயம்பேடு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இதனால் வெளி மாவட்டங்கள் செல்லும் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர்.
    • தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் முதலியார்பேட்டை 100 அடி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அனிதா நகரில் ஒரே பைக்கில் வந்த 5 பேரை தடுத்து நிறுத்தினர். அவர்களில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    மற்ற 3 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். இதையடுத்து நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தியை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் உருளையன் பேட்டை கென்னடி நகர் ஜோயல் (வயது24) ராஜா நகர் பத்பநாபன் (25), கோவிந்து சாலை கார்த்திகேயன் என்ற குள்ள கார்த்தி (20) என்பதும், தப்பி சென்றவர்கள் அரியாங்குப்பம் முகிலன் (28) மற்றும் முத்தியால் பேட்டை சங்கர்(28) என்பது தெரியவந்தது.

    பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் தப்பியோடிய முகிலன், அரியாங்குப்பம் ஜிம் பாண்டியன் கொலை வழக்கில் ஜெயிலில் இருந்தபோது, அங்கிருந்த மற்றொரு ரவுடியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன், தன்னிடம் தகராறு செய்த ரவுடியை தீர்த்து கட்டுவதற்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து பைக்கில் சுற்றி வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    • வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர் தியாகு முதலியார் வீதி, ஹவுஸ்சிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

    லாரி டிரைவரான ராஜி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

    தேங்காய்திட்டில் வசித்து வந்த ராஜிவின் உறவினர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

    இறுதி ஊர்வலத்தில் ராஜி பட்டாசு வெடித்தபடி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், ஹரி ஆகியோர் வெடிக்க பட்டாசு கேட்டனர். அப்போது அவர் நீங்கள் சின்ன பசங்க... உங்களுக்கு பட்டாசு வெடிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ராஜிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ராஜி அவர்களை தாக்கியுள்ளார்.

    அவர்கள் ராஜிவை தாக்க முயற்சித்த போது உறவினர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வதாக இருதரப்பும் கூறியதால் போலீசார் திரும்பி சென்றனர்.

    இறுதி சடங்கு முடிந்த பின்பு ராஜி வீட்டிற்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து நிர்மலும், ஹரியும் வந்தனர். ராஜியின் வீட்டை அடையாளம் தெரிந்த பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.

    இரவு 8.30 மணிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு ராஜி சென்று டிபன் வாங்கி கொண்டு வீட்டின் மாடிக்கு ராஜி சென்றார்.

    அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நிர்மலும், ஹரியும் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து ராஜி மீது வீசினர்.

    அவரது முதுகில் வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்ததில் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

    அங்கு ராஜி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நின்ற கொலையாளிகள் 2 பேரும் பொதுமக்கள் வருவதை பார்த்ததும் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராஜி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
    • நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    விருகம்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது21). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. நேற்று நள்ளிரவு அவர், வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை தெருவில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டு விழவில்லை. அவரது அருகே சிறிது தூரத்தில் விழுந்து நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தீனதயாளன் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். எனினும் மர்ம கும்பல் அவரை பட்டாக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றனர்.

    இதற்கிடையே நாட்டுவெடிகுண்டு வெடித்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீனதயாளனை மர்ம கும்பல் அரிவாளுடன் விரட்டி செல்வதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

    சிறிது நேரத்தில் கொலைவெறி கும்பலிடம் இருந்து தப்பிய தீனதயாளன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.அவர்தான் அணிந்திருந்த சட்டையை மாற்றிக் கொண்டு "அனைவரும் இங்கிருந்து கிளம்பி சென்று விடுங்கள் ஆபத்து உள்ளது" என்று அவரது தாயிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தீனதயாளன் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    நேற்று நண்பர் ஒருவரது பிறந்தநாள் விழாவில் தீனதயாளன் கலந்து கொண்டார். அப்போது அவர் மதுபோதையில் அங்கிருந்த ஒருவரையும் அவரது கூட்டாளிகளையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில் அந்த கும்பல் தீனதயாளனை தீர்த்துக்கட்ட நாட்டு வெடி குண்டை வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வத்திராயிருப்பு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியது யார்?
    • தோட்ட உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மாவட்டம் பேரையூர், தேனி மாவட்டம் மேகமலை ஆகிய வனப்பகுதிகள் இணைக்கப் ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்- மேக மலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை வனத் துறையினர் விதித்தனர். மேலும் வனப்பகுதியில் யாரும் நுழைக்கிறார்களா? என்பதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வத்திரா யிருப்பு மலையடிவார பகுதிகளில் கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கான்சாபுரம் அருகே ஓடை யில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து அத்திக்கோவில் பகுதியில் உள்ள தனியார் தென்னந் தோப்பில் 5 நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத் திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் அடுத் தடுத்து சிக்கிய சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் அத்தி கோவில் பகுதியில் வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக சிலர் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் சோதனை செய்தனர்.

    அப்போது கான்சா புரத்தை சேர்ந்த சோலை யப்பன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பதுக்கி வைத்தி ருந்த 4 நாட்டு வெடிகுண்டு களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக அதனை அங்கு யாரோ மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.

    ஆனால் பதுக்கிவைத்தது யார்? என்பது தெரிய வில்லை. அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. மேலும் வனவிலங்குகள் வேட்டை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று தோட்ட உரிமையாளர் சோலை யப்பனிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • அத்வானியை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர்.
    • தேடப்படும் குற்றவாளி அபுபக்கர் சித்திக் என்று அச்சிடப்பட்டு அவரது படத்துடன் நோட்டீஸ் ஓட்டினர்.

    வேதாரண்யம்:

    பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்தார்.

    அப்போது ரத யாத்திரை மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வதாக இருந்தது. அந்த நேரத்தில் அத்வானியை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர். உடனடியாக அதனை போலீசார் கண்டுபிடித்து செயல் இழக்க வைத்து அகற்றினர். இதனால் அத்வானி மயிரிழையில் உயிர் தப்பினார்.

    வெடிகுண்டு வைத்த வழக்கில் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த இஸ்மத், அப்துல்லா, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையை சேர்ந்த அபுபக்கர்சித்திக் (வயது 57) உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அபுபக்கர் சித்திக் தவிர மற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கனவே ஒருவர் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக அபுபக்கர் சித்திக் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் அவரை பிடித்து உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என்று திருவள்ளூர் பூவிருந்தவல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

    அதனை தொடர்ந்து இன்று சென்னை, மதுரை சிறப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தோப்புத்துறையில் உள்ள அபுபக்கர் சித்திக் வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு அவரது வீட்டில் தேடப்படும் குற்றவாளி அபுபக்கர் சித்திக் என்று அச்சிடப்பட்டு அவரது படத்துடன் நோட்டீஸ் ஓட்டினர். தொடர்ந்து அவரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை.
    • 5 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    நீடாமங்கலம்:

    தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த குரு (வயது 23), பிரித்திவி ராஜ் (20), கும்பகோணத்தை சேர்ந்த சரண்ராஜ் (21), தர்மராஜ் (30), சந்தோஷ் (26) ஆகிய 5 பேர் மீதும் மணஞ்சேரியில் வெடிக்குண்டு வீசிய வழக்கு உள்ளன.

    இந்நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி குரு, பிரித்திவிராஜ் உள்பட 5 பேரையும் போலீசார் குணடர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • போலீசார் 7 செல்போன்கள் மற்றும் 2 பெண் டிரைவர்கள், மொட்டை கடிதங்களை பறிமுதல் செய்தனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெயர், முகவரி எதுவும் இல்லாமல் ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியான ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தி கொண்டிருந்தனர். ஆனால் அங்கு குண்டு இல்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த கடிதத்தை யார் அனுப்பியது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கேமிராவில் பதிவாகி இருந்த வாலிபர் மற்றும் பெண் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதுபோன்று பல்வேறு இடங்களில் குண்டு வைத்ததாக வந்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்ய இடங்களில் இவர்கள் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அதிகரிக்கவே அவர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கொல்லம் அருகே உள்ள பத்தாப்புறத்தை சேர்ந்தவர் கொச்சு தெரசா(வயது62) மற்றும் அவரது மகன் சாஜன்(33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போட்டது நாங்கள் தான் என ஒப்புக்கொண்டனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில், கொச்சு தெரசா அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது இவருக்கு வரும் பென்ஷனை வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே தான் அவர்களுக்கு வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அப்படி செய்வதன் மூலம் போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் மோப்பநாய்கள் மூலம் சோதனை போடுவார்கள். அப்படி நடக்கும் போது, அந்த இடத்திற்கு சென்று, அதனை பார்ப்போம். அப்போது எங்களுக்குள் ஒருவித ஆனந்தம் ஏற்படும். இதனால் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 50க்கும் மேற்பட்ட மொட்டை கடிதங்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

    போலீசார் 7 செல்போன்கள் மற்றும் 2 பெண் டிரைவர்கள், மொட்டை கடிதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.
    • வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை

    சண்டிகர்:

    சண்டிகரில் இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 4:30 மணியளவில், ஹெலிபேட் மற்றும் பஞ்சாப் முதல்வரின் வீட்டிற்கு அருகிலுள்ள மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய ராணுவத்தின் மேற்கு பிரிவும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெடிகுண்டு எப்படி அங்கு வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

    வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலெக்டர் அம்ரித்தின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
    • குன்னூர், கோத்தகிரி என மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டராக அம்ரித் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் அம்ரித்தின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நீலகிரியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இருந்தது. இதையடுத்து கலெக்டர் சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம் புகார் அளித்தார்.

    இதை தொடர்ந்து, கூடலூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி என மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். வாகன ஓட்டிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதேபோல் ஊட்டி நகரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் காபி ஹவுஸ், கல்லட்டி, சேரிங்கிராஸ், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊட்டி நகர் பகுதியில் சுற்றி திரிந்த வெளியூர்களில் இருந்து வந்த நபர்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என்று விசாரணை நடத்தினர்.

    இதேபோல் ஓட்டல்கள், தங்கும் அறைகளில் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர். இதேபோல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பஸ் நிலையம் , ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×