search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதரவு"

    • வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின.
    • இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ் பாய் பிரதமராக இருந்திருந்தாலும் அந்த முடிவையே எடுத்திருப்பார்.

    முன்னால் இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாளானது அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

    தேர்தல் பிரகாரங்களில், பாராளுமன்றத்திலும் 50 வருடங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியை சுட்டிக்காட்டி காங்கிரஸை தொடர்ந்து பாஜக விமர்சித்து வரும் நிலையில் அதன் உச்சமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  மகாராதிராவில் இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவ சேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எமெர்ஜென்சி குறித்து தெரிவித்துள்ள கருத்து அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    'அந்த சமயத்தில் நாட்டில் சிலர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர். இந்திரா காந்தி அரசை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைத்தனத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அரசியல்வாதிகள், நமது வீரர்களிடமும் ராணுவத்திடமும் அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அவர்கள் நேரடியாகவே வலியுறுத்த தொடங்கினர்.

    இதுபோன்ற ஒரு சூழலில் வாஜ் பாய் பிரதமராக இருந்திருந்தாலும் எமெர்ஜென்சியை அறிவிக்கும் முடிவையே எடுத்திருப்பார்.வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டங்களும் அரங்கேறின.எனவே எம்ர்ஜென்சி தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. சிவ சேனாவின் பால் சாஹேப் தாக்கரே எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

    ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெளிப்படையாகவே எமெர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தது. அமித் ஷாவுக்கு எமர்ஜென்சி குறித்து முழுமையாக தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். எமெர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ் பாய் அதை அரசியலமைப்பு படுகொலையாக பார்க்கவில்லை. தற்போதுள்ள மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியே எமெர்ஜென்சி போல உள்ளது' என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

    • ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
    • இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்

    ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள சீர்திருத்தவாத கட்சி வேட்பாளர் மசூத் பெசெஸ்கியன் இஸ்ரேல் - காசா போரை முன்னிறுத்தி முக்கிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலின் அருகாமையில் உள்ள லெபனானில் இயங்கி வரும் ஹெஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக அவ்வமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவுக்கு ஈரானின் அரசு ஊடகமான IRNA மூலம் உறுதி தெரிவித்துள்ளார்.

     

    மேலும் ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ள அவர், பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களை நிறுத்த ஹெஸ்புல்லா போன்ற எதிர்ப்பு இயக்கமே தீர்வு என்பதில் தான் உறுதியாக உள்ளதாக மசூத் தெரிவித்துள்ளார்.

     

    1984 இல் லேபனான் உள்நாட்டுப் போரின் போது அந்நாட்டின்மீது இஸ்ரேல் படையெடுத்து கைப்பற்ற முயன்றது. இஸ்ரேல் படையெடுப்பை எதிர்க்க உருவான இயக்கமே ஹிஸ்புல்லா ஆகும். ஹிஸ்புல்லா என்ற சொல்லுக்கு கடவுளின் ஆட்சி என்று பொருள். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஹாசன் நஸ்ரல்லா தலைமையில் லெபனானை மையமாக கொண்டு ஹிஸ்புல்லா இயங்கி வருகிறது.

    ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக கடந்த 8 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா நடந்திய ஏவுகணைத் தாக்குதல் லெபனானில் இஸ்ரேல் போர் தொடுத்துவரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • தற்போது ‘மோடி கேரண்டி' என்ற ஒன்று இல்லை. இன்று ‘மோடி அரசும்' இல்லை.
    • மோடி என்னை ஓய்வின்றி அலைந்து திரியும் ஆத்மா என கூறியிருந்தார்.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் 25-வது நிறுவன நாள் கொண்டாட்டம் சரத்பவார் கட்சி சார்பில் அகமதுநகரில் நடந்தது. விழாவில் சரத்பவார் பேசியதாவது:-

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று உள்ளார். பதவி ஏற்கும் முன் அவருக்கு நாட்டின் ஆதரவு இருந்ததா?. நாட்டு மக்கள் அவருக்கு ஒப்புதல் அளித்தார்களா?. பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லை. அவர்கள் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் போன்றோரின் உதவியை பெற்றுக்கொண்டனர். அவர்களால் தான் மோடியால் அரசு அமைக்க முடிந்தது.

    இதற்கு முன் அமைந்த அரசுக்கும், தற்போது அமைந்துள்ள அரசுக்கும் வேறுபாடு உள்ளது.

    தேர்தல் பிரசாரத்தின் போது மோடி எங்கு சென்றாலும், 'இந்திய அரசு' என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார். 'மோடி அரசு', 'மோடி கேரண்டி' போன்ற வாா்த்தைகளை தான் கூறி வந்தார். தற்போது 'மோடி கேரண்டி' என்ற ஒன்று இல்லை. இன்று 'மோடி அரசும்' இல்லை. உங்களின் ஓட்டால் இன்று அவர்கள் இது 'மோடி அரசு' அல்ல, இந்திய அரசு என கூறும் நிலையில் உள்ளனர்.

    இன்று வாக்காளர்களால் அவர்கள் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பிரதமா் பதவி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானது அல்ல. அரசு நாட்டின் எல்லா பிரிவு பற்றியும் யோசிக்க வேண்டும். ஆனால் மோடி அதை மறந்துவிட்டார். அவர் வேண்டுமென்றே அதை செய்தார் என்று தான் நான் நினைக்கிறேன்.

    முஸ்லிம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சி ஆகிய சிறுபான்மையினரும் நாட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் அரசின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் மோடி அதை செய்ய தவறிவிட்டார்.

    பிரசாரத்தின் போது அவர் குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக குழந்தை இருப்பது பற்றி பேசினார். அவர் இஸ்லாமியர்கள் குறித்து தான் பேசினார் என்பது தெளிவாக தெரிந்தது.

    எதிர்க்கட்சியினரின் கையில் ஆட்சி சென்றால் பெண்களின் தாலியை பறிப்பார்கள் என்றெல்லாம் பேசினார். இதுபோல நாட்டில் நடந்தது உண்டா?. எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவரிடம் 2 எருமை இருந்தால், ஒன்றை பறித்துவிடுவார் என்றும் பேசினார். ஒரு பிரதமர் இதுபோல பேசலாமா?. மற்றவர்களை விமர்சிக்கும் போது மோடி எந்த கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதில்லை.

    பிரதமர் மோடி உத்தவ் தாக்கரே கட்சியை போலி சிவசேனா என கூறினார். பிரதமர் பதவியில் இருப்பவர் ஒருவர், ஒரு கட்சியை போலி என கூறலாமா?. ராமர் கோவிலை கட்டியது அரசியல் தொடர்பானது என சிலர் நினைத்தனர்.

    ஆனால் அயோத்தியிலேயே பா.ஜனதா வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். நாளை நான் ராமர் கோவிலுக்கு சென்றாலும், அதை நான் அரசியலுக்காக பயன்படுத்த மாட்டேன். பிரதமர் மோடி செய்த தவறை அயோத்தி மக்கள் புரிந்து கொண்டனர். எனவே அங்கு பா.ஜனதா வேட்பாளரின் தோல்வியை உறுதி செய்தனர்.

    மோடி என்னை ஓய்வின்றி அலைந்து திரியும் ஆத்மா என கூறியிருந்தார். அது நல்லது தான். ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. இந்த ஆத்மா உங்களை விடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனவேதனையில் இருந்த மலிவால், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தை என்னைத் தொடர்பு கொண்டு விவரித்தார்.
    • அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் குறித்து மவுனம் காப்பதை சுட்டிக்காட்டிய அவர், பிபவ் குமார் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியான ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், கடந்த மே 13ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஸ்வாதி மலிவாலுக்கு ஆதரவாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், மனவேதனையில் இருந்த மலிவால், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தையும், சொந்த கட்சியினரிடமிருந்தே தனக்கு ஏற்பட்ட மிரட்டலையும் அவமானத்தையும் என்னைத் தொடர்பு கொண்டு விவரித்தார். மேலும் தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

    முந்தய காலங்களில் மலிவால் எனக்கு எதிராகவும் விரோதமாகவும் அப்பட்டமான கருத்துக்களை தெரிவிப்பவராகவும், என்னை நியாயமற்ற முறையில் விமர்சித்தாலும், அவர் மீது நடத்தப்பட்ட இந்த உடல் ரீதியான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

    மேலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் குறித்து மவுனம் காப்பதை சுட்டிக்காட்டிய அவர், பிபவ் குமார் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார். மேலும், டெல்லி தேசிய தலைநகரம் ஆகும். இது போன்ற வெட்கக்கேடான சம்பவங்களும் அரசாங்கத்தின் மவுனமும் உலகளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கின்றன என்று குறிப்பிட்டார்.

    மேலும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்த டெல்லி காவல்துறை விவரவில் விசாரணையை முடிக்கும் என்று சக்சேனா உறுதியளித்தார்.

     

     

    ஆம் ஆத்மி கட்சியின் எம்பியான ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், கடந்த மே 13ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். 

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநரின் கருத்து ஒன்றே இது முழுக்க முழுக்க முழுக்க பாஜகவின் சதி என்று அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.
    • அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சி கள் கூட்டணிகளை உறுதிப் படுத்துவதிலும் தொகுதி பங்கீட்டிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க தமிழக அரசியல் கட்சிகள் அதிக அக்கறை காட்டி வருகிறது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பா.ஜனதா கூட்டணியில் இந்த தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பா.ஜனதா கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளரை நிறுத்தும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தினகரனே போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.

    சிவகங்கை தொகுதியை பொருத்தவரை முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் பெற்றது. தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாலும், முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.

    அதன் காரணமாக இப் போதிலிருந்தே தொகுதி முழுவதும் அ.ம.மு.க.வினர் குக்கர் சின்னத்தை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். சிவகங்கை தொகுதியை பொருத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்ட ணியில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் பா.ஜனதா சார்பில் களம் இறக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில் அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்.
    • இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்.

    கோவை:

    கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பெஸ்ட் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமரானால் ஊழல் இன்றி விவசாயிகள், ஏழை-எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்.

    உலகில் ஒரு வலுவான நாடாக இந்தியா மாறியுள்ளது. பேச்சுத்திறனும், உலகம் போற்றும் தலைவராகவும் மோடி உள்ளார். இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறது.

    இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். பாராளுமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் மாறி, மாறி வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் மாநில வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை விமான நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும், மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன.
    • மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது

    மங்கலம்,செப்.24-

    திருப்பூர், கோவை மாவட்ட சிறு ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி கூறுகையில்,

    திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு ரூ.25கோடி மதிப்பிலான நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை 25-ந்தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இந்த ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கம் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்கிறது.

    தமிழக முதல்வர் ஓ.இ. மில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள சிறு ஓ.இ.மில் நூற்பாலைகளை பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது
    • சமுதாய தலைவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகளை சால்வை அணிவித்து வரவேற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டி அங்கு உள்ள விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 19 நாட்களாக தொடர்கிறது.

    இந்த நிலையில் நீலகிரி போராட்டத்துக்கு அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதற்காக அவர்கள் கேத்தி பகுதியில் நடைபெற்ற போராட்ட களத்திற்கு நேரில் சென்றனர். அங்கு அவர்களுக்கு சமுதாய தலைவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ச்சுனன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, முன்னாள் அரசு வக்கீல் பாலநந்தக்குமார், கேத்தி பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், தேனாடு லட்சுமணன், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஜெய்ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத், உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் சென்று வாழ்த்து
    • நஞ்ச நாடு தொதநாடு, இத்தலார் மேக்குநாடு நலசங்கத்தினர் உள்பட திரளானோர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் நாக்கு பெட்டா படுகர் நலசங்கம் சார்பில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்சமாக 35 ரூபாய் விலை நிர்ணயிக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.இதில்நஞ்ச நாட்டை சேர்ந்த தொதநாடு நலச்சங்கத்தினர், இத்தலாரை சேர்ந்த மேக்குநாடு நல சங்கத்தினர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் நீலகிரி தேயிலை விவசாயிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், உண்ணா விரத பந்தலுக்கு வந்தார்.

    அப்போது அவரு டன் அமைப்பு செய லாளர் கே.ஆர்.அர்ஜூ னன், ஒன்றிய கழக செயலாளர்கள் சக்ஸஸ் சந்திரன், கடநாடு குமார் மற்றும்கழக நிர்வாகிகள் சென்றிருந்தனர்.நீலகிரி விவசாயிகள் உண்ணா விரத போராட்டத் தில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் கலந்து கொண்டு பேசும் போது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பார். மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும் நமக்கு உறுதுணையாக இருப்பார். நீலகிரி விவசாயி களின்உண்ணாவிரத போ ராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    • ஏராளமான நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதன் பின்பும் ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.வலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 65 பேர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முற்றுகை போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    • கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும்.
    • அந்த பகுதியில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்லூரி அமைக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 8 வருடங்களாக அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

    இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த கல்லூரிக்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்து கல்லூரி கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடந்து.

    நன்னிலம் தொகுதியில் உள்ள குடவாசல் கல்லூரிக்கு வேறு ஒரு தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த இடத்திற்கு குடவாசலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

    மேலும் கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று குடவாசல் பேருந்து நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து தொடர்ந்து 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நன்னிலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் மாணவ- மாணவிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது நிருபர்க ளிடம் காமராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது, குடவாசலிலே கல்லூரி அமைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்நிலையிலும் இந்த மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக இருப்பேன்.

    சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசிய பொழுது, அந்தப் பகுதியில் மக்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரி அமைக்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

    குடவாசலிலேயே கல்லூரி அமைய வேண்டும் என்று இப்பகுதி மக்களும், கல்லூரி மாணவர்களும் போராடிவரும் நிலையில் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்வின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், ராஜேந்திரன், நகர செயலாளர் சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் தென்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.
    • ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பழைய கட்டிடம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசன், சிவபெருமாள், இன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்களின் கனவு தகர்ந்து போய்விட்டது. எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.

    இதற்கிடையே அக்னி பத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சந்திப்பு ரெயில்வே புதிய கட்டிடம் அருகே பிட் லைனில் தட்சின ரெயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரெயில்வே துறையின் விதிக்கு எதிராக இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக கூறி அக்னிபத் திட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் ராணுவத்தில் தற்போது ஆட்கள் எடுப்பதை போல ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் தென் மண்டல துணை பொதுச்செயலாளர் மணி, கோட்ட கூடுதல் செயலாளர் அருண்குமார், கிளை பொறுப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×