search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 213159"

    • மீட்டு தரக்கோரி மனைவி போலீசில் புகார்
    • போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்து மாயமான பிர்லன்ஜோஸ் செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சூசக்குடிவிளை, பூந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெனிஷா (வயது 25). இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் பிர்லன்ஜோஸ் (28). இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கடற்படையில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது விசாகபட்டினத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்தார்.

    அதன்பிறகு உடல் சரியான பிறகு கடந்த மாதம் மீண்டும் விசாகப்பட்டினம் கடற்படை தளத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு குடும்பத்தா ருக்கு போன் செய்யவில்லை.

    நேற்று விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் எனது கணவர் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் வந்துசேரவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே எனது கணவரை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்து பிர்லன்ஜோஸ் செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள். பிர்லன்ஜோஸ் மாயமானதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

    • சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள்.
    • முடிவை மனதில் வைத்துக்கொண்டு, உத்வேகத்துடன் தொழில் தொடங்குங்கள்.

    நீங்கள் புதிய தொழில் தொடங்கும் சிந்தனையில் உள்ளீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான யோசனைகள் தான் இவை. இதை பின்பற்றினால், வெற்றிக்கொடி பறக்க விடலாம். அப்படி என்னதான் தெரிந்து கொள்ள போகிறீர்கள் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.:-

    சந்தையை தேர்வு செய்தல்

    சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்போது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும். கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது.

    எடுத்துக்காட்டாக கூகுள் 90-களில் தொடங்கும் பொழுது அதன் சந்தை மிக சிறியது மற்றும் வேறு எந்த நிறுவனமும் அதற்கு போட்டியாக இல்லை. இது அவர்களின் மொத்த சந்தையையும் அவர்களுக்கே சொந்தமாக்கியது. இதே கதை தான் பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் பேபால் நிறுவனங்களின் இமாலய வளர்ச்சிக்கு காரணம். நீங்கள் தொடங்கும் தொழில் அந்த இடத்தில் முதலாவதாக இருக்கட்டும். ஒரு இடத்தில் இருக்கும் 4-வது உணவகமாகவோ, 10-வது கைபேசி கடையாகவோ இருக்க முயற்சிக்காதீர்கள்.

    சிறியதாக தொடங்குங்கள்

    சிறிதாக தொடங்கினாலும் அதில் உங்களை விட சிறந்த பொருட்களை அல்லது சேவையை தர முடியாத அளவுக்கு சிறப்பாக இருங்கள். எடுத்துக்காட்டாக, அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் தனது இலக்காக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஆக வேண்டும் என தீர்மானித்தார்.ஆனால் அவர் எடுத்த உடனேயே அனைத்து பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர் ஆகவில்லை. முதலில் புத்தகங்கள் மட்டும் விற்கும் தலமாக தான் அமேசானை தொடங்கினார். பின்னர் உலகிலேயே சிறந்த புத்தக கடையாக அதை மாற்றினார். அதன் பிறகு தான் அனைத்து பொருட்களையும் விற்கும் தலமாக அமேசானை மாற்றினார்.

    புதிய சிந்தனை

    அடுத்த பில் கேட்ஸ் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார். அடுத்த ஸுக்கர்பேர்க் ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார். நாம் அவர்களை பின்பற்றினால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். இது வரை யாரும் செய்திராத ஒரு விஷயத்தை செய்யுங்கள். ஏனென்றால் ஒரே ஆற்றில் இரண்டு முறை அடியெடுத்து வைக்க முடியாது.

    கடைசியாக இருங்கள்

    ஒரு பொருள் இந்த உலகத்தில் இருந்து அழிய போகிறதென்றால், உங்கள் பொருள் தான் கடைசியாக அழிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மைக்ரோசாப்ட் தான் பல ஆண்டுகளுக்கு கடைசி ஆப்பரேட்டிங் ஸிஸ்டெமாக இருந்தது. கூகுள் தான் கடைசி தேடு தலமாக இருந்தது. எனவே முடிவை மனதில் வைத்துக்கொண்டு, உத்வேகத்துடன் தொழில் தொடங்குங்கள். நிச்சயம் சாதிக்கலாம்.

    • அலுவலகத்திற்கு சீக்கிரம் வருவது, உங்கள் மதிப்பை உயர்த்தும்.
    • வேலையில் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் தவறு செய்வது தவறல்ல.

    சில நேரங்களில் நிர்ணயிக்கப்படாத வேலைகளைச் செய்ய அலுவலக அதிகாரிகள் அல்லது முதலாளிகள் உத்தரவிடலாம். அலுவலக நேரம் கடந்தும் வேலை செய்யும்படி சில நேரங்களில் கூறலாம். விடுமுறை நாள்களிலும் வேலை செய்ய அறிவுறுத்தப்படலாம். வேறொருவரின் வேலையை செய்யவும் கேட்டுக் கொள்ளலாம். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர், அவற்றை மறுக்காமல் ஏற்று செயல்படுத்துவது வேலையில் முன்னேற்றமடைய உதவும்.

    எந்த துறை சார்ந்த அலுவலகமாக இருந்தாலும், ஊழியர்களின் நடத்தைகளில் சில பொதுவான எதிர்பார்ப்புகள் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இருப்பது இயல்பானது. கடைநிலை ஊழியர் முதல் மேல் அதிகாரி வரையில் சீரான நடத்தைகள் காணப்படும்போது, நிறுவனங்கள் தழைக்கும். அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும், ஊழியர்களின் நடவடிக்கைகள் ஒரு நிறுவனத்தை வளர்ச்சி சார்ந்த பாதையில் பயணிக்க வழிவகுக்கும்.

    ஊழியர் தாம் செய்யும் வேலையில் அக்கறையோடு ஈடுபடுவதும், உண்மையான உழைப்பை வழங்குவதும் நிறுவனத்தின் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, நிறுவனம் உயர்நிலையை அடைவதற்கும் படிக்கல்லாக அமையும். ஏற்றுக்கொண்ட பணி அல்லது வேலையில் முன்னேறுவதற்கு சில ஒழுக்கநெறிகள் அல்லது நடத்தை விதிகளை ஊழியர்கள் தவறாமல் கடைப்பிடிப்பது அவசியம்.

    ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் பலரும் பொதுவாகக் கூறும் அறிவுரை, 'மேலதிகாரி அல்லது முதலாளி அலுவலகம் வருவதற்கு முன்பு நீங்கள் சீக்கிரமாக அலுவலகம் வந்துவிடுங்கள்; அவர் சென்ற பிறகு அலுவலகத்தில் இருந்து புறப்படுங்கள்' என்பதுதான். இது இக்காலத்துக்கும் பொருந்தும். அலுவலகத்திற்கு சீக்கிரம் வருவது, உங்கள் மதிப்பை உயர்த்தும்.

    'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று வேலையில் மனதை கூர்மையாக செலுத்தி, குறித்த நேரத்தில் வேலையைத் திறம்பட முடிப்பது பாராட்டத்தகுந்தது. அதே நேரத்தில் அலுவலகத்தின் மூத்தவர்கள், அனுபவசாலிகளை அவ்வப்போது சந்தித்து வேலை நுணுக்கங்களை அவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது சிறப்பானது. அது வேலைத்திறனை மேம்படுத்த உதவும். சக ஊழியர்களுடன் நல்லமுறையில் பழகுவது அலுவலக சூழலை இனிமையாக்குவதோடு வேலை தொடர்பான அறிவைப் பெறவும் உதவியாக இருக்கும்.

    தனது பணியை முடிப்பதற்காக சக ஊழியர் உதவி கேட்டால், உடனடியாக இணங்குவது நல்ல பண்பாகும். பிறருக்கு உதவுவது உங்களிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் உங்களுக்கு உதவும். பிறருக்கு நீங்கள் உதவினால் எதிர்காலத்தில் அவர் உங்களுக்கு உதவக் கூடும்.

    வேலைநேரம் முடிந்தபிறகு அல்லது வார இறுதி நாட்களில் சக ஊழியர்களோடு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அலுவலக மின்னஞ்சலை பயன்படுத்தாமல், தனி மின்னஞ்சலை உருவாக்கி, சக ஊழியர்களோடு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது நல்லது.

    நீங்கள் இதுவரை செய்திராத வேலையைச் செய்யுமாறு உங்களது மேலதிகாரி அல்லது சக ஊழியர் உங்களிடம் கேட்டுக்கொள்ளும்போது, பதற்றமடைவது இயல்பானது. வேலையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள அது காரணமாகிவிடக்கூடாது. புதிய வேலை அல்லது பணியை ஏற்று செயல்படும்போது தான் உங்களுடைய திறன் மேம்படும். உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால், அந்த பணியை உங்களிடம் மேலதிகாரி ஒப்படைத்திருக்கலாம். அந்த நம்பிக்கை உங்களுடைய எதிர்காலத்துக்கு உதவும்.

    வேலை செய்யும் இடத்துக்கு பொருத்தமான ஆடைகளை அணிவது அவசியமானது. பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பிறர் முகம் சுழிக்காத வகையிலும் ஆடைகளை அணிவது நல்லது.

    புதியவேலையில் ஈடுபடும்போது, புதிய உறவுகளைக் கட்டமைக்கும் போது, வேலையில் உயர்படிநிலைகளில் முன்னேறும்போது எல்லோருடைய கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் திறந்த மனநிலையை பேணுவது நல்லது. மாற்றங்களை ஏற்க தயாராக இருங்கள். நேர்மறை சிந்தனைகளை கொண்டிருப்பதும், எப்போதும் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதும் அவசியம். வேலையில் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் தவறு செய்வது தவறல்ல. அந்த தவறுகளை திருத்திக் கொள்வதும், அதே தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதும் நல்லது. தவறுகள், புதியனவற்றைக் கற்க உதவும்.

    • அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது.
    • எல்லோரும் தங்களது வேலையை முடித்தபின் 'மீட்டிங்'கை நடத்துங்கள்.

    விளையாட்டாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, குழுவாகச் சேர்ந்து செயல்படுவது என்பது அவசியம். அதிலும் அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது. அலுவலகத்தில் நீங்கள் ஒரு சிறந்த குழுவை அமைத்துச் செயல்படுவது எப்படி?

    * நன்றாகப் பணிபுரியக்கூடியவர்கள் என்று உங்களுக்கு தோன்றக்கூடியவர்களை உங்கள் குழுவில் சேர்ப்பது நல்லது. சாதாரணமாக பிறருடன் நீங்கள் கலந்து பழகி மற்றவர்களை அறிந்திராதவர் என்றால், யார் உங்கள் குழுவில் சேர்வதற்கு ஆர்வமும், விருப்பமுமாக இருக்கிறார்கள் என்று பார்த்துச் சேர்க்கலாம். சும்மா உட்கார்ந்தபடி அதுவாகவே குழு உருவாகட்டும் என்று இருக்காதீர்கள். குறிப்பிட்ட ஒரு குழுவின் அங்கத்தினராக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுங்கள்.

    * உங்கள் குழுவுக்கான பொறுப்புகள் அளிக்கப்பட்டபின், அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். குழு அமைக்கப்பட்ட உடனே அவசர அவசரமாக அடுத்தடுத்து 'மீட்டிங்' போடாதீர்கள். குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்த வேகத்துக்கு ஏற்ப, தங்களால் ஒதுக்க முடிந்த நேரத்துக்கு ஏற்ப வேலை செய்யட்டும். வாய்மொழிப் பரிமாற்றங்கள் போதும். எல்லோரும் தங்களது வேலையை முடித்தபின் 'மீட்டிங்'கை நடத்துங்கள்.

    * வேலையை முடித்த அறிக்கையை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் போக வேண்டாம். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். பிற குழுக்கள் எப்படி வேலை அறிக்கை அளிக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வேலை அறிக்கையை வித்தியாசமாக அளிக்கலாம்.

    * குழுவில் பிரச்சினைகள் வரலாம். சிலரிடம் 'ஈகோ' தலைதூக்கலாம். சிலர் சோம்பேறித்தனமாக இருக்கலாம். எனவே உங்கள் குழுவில் வேலையில் பலவீனமாக இருப்பவரைக் கண்டு பிடித்து, அவருக்கு ஏற்ப எளிதான வேலையைக் கொடுங்கள். உங்கள் குழுவில் ஒழுங்கீனமாக ஒருவர் இருந்தால், அவரது வேலையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்கப் பாருங்கள். வேலை அறிக்கை அளிப்பதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே அதைத் தயார் செய்துவிடுங்கள்.

    உங்கள் குழு உறுப்பினர்கள் சரியில்லா விட்டால், அது நீங்கள் கையில் எடுத்திருக்கும் பொறுப்பை ஏன் பாதிக்க வேண்டும்? அதில், எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், இறுதி முடிவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். யாருமே வேலை செய்யாதபோது நீங்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் குழுவில் ஒன்றுமே செய்யப்படாமல் இருப்பதை விட, ஏதோ உங்களால் அதிகபட்சமாக செய்யக்கூடியதை செய்வது சிறப்பானது. வேலையின் முழுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்குக் கீழே கொண்டுவந்து வெற்றி பெற்றுக் காட்டுங்கள்.

    • இது போன்சாய் போன்ற தொழில்நுட்பம் தான்.
    • இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.

    நம்மில் பலருக்கு அலங்கார செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதில் உள்ள வாய்ப்புகள் தெரிவதில்லை. அழகு செடிகள் வளர்ப்பதில் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அதில் மிக எளிமையாகவும் அழகாகவும் செய்ய கூடிய ஒன்று தான் கொக்கிடமா (kokedama).

    அது என்ன கொக்கிடாமா என்று பார்க்கிறீர்களா? இதுவரையில் பெரிய அளவில் கேள்விகள் எழுப்பப்படாவிட்டாலும், இந்த யோசனை முதன்முதலில் தொடங்கியது ஜப்பானில் தான்.

    இது போன்சாய் போன்ற தொழில்நுட்பம் தான். ஆனால் போன்சாய் செய்வதற்கு அதிக செலவு ஆகும். கொக்கிடமா செய்வதற்கு மண் மற்றும் பாசி (peat moss) இவை இரண்டும் இருந்தாலே போதும். அதனால் இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.

    கொக்கிடமா என்பது தாவரத்தின் வேர் பாகத்தை மண் பந்தினுள் நிறுத்தி அதற்கு மேல் மென்மையான பசுமையான பாசியை வைத்து அழகுபடுத்துவதுதான். பின்னர் இந்த அமைப்பை குறிப்பிட்ட இடத்தில் அழகுக்கு வைப்பதற்கு ஏற்ப நூலினை வைத்து வடிவமைக்க வேண்டும்.

    உகந்த தாவரங்கள்

    நிழலில் வளரக்கூடிய, நிழலை அதிகம் விரும்பக்கூடிய தாவரங்கள் இதற்கு பொருத்தமானதாகும். கொக்கிடமா செய்வதற்கு பொருத்தமான சில தாவரங்களின் பெயர்கள்,

    *சென்சிவேரியா

    *ஜாமியோகல்காஸ் ஜாமிபோலியா (Zamioculcas zamiifolia Zz)

    *மணி பிளான்ட் (money plant)

    *அந்தூரியம் (anturium)

    * பிலோடென்ரான் (philodendron)

    *டிராசியேனா (Dracaena)

    இவை மட்டுமில்லாமல் வீட்டினுள் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரங்களும், சதைப்பற்று அதிகம் உள்ள அழங்கார தாவரங்களையும், சிறிய வேர்த்தொகுப்பு உள்ள தாவரங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.

    எப்படி செய்வது?

    முதலில் மண் மற்றும் பாசி (peat moss) 2-யும் சேர்த்து நாம் எடுக்கும் தாவரத்தை பொறுத்து சிறிய பந்து போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். பின்னர் அதனுள் நாம் தேர்ந்தெடுத்த தாவரத்தின் வேர்பகுதியை அந்த பந்தின் நடுப்பகுதியில் வைத்து நூலினால் கட்டவேண்டும். மேலும் அழகு சேர்க்க பசுமையான பாசியினை அதன் மேல் வைக்கலாம். பின்னர் அதை பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.

    இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சதைப்பற்று அதிகம் உள்ள தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் அதிகமாகவும் பாசி (peat moss) குறைவாகவும் இருக்க வேண்டும். அதே தண்ணீர் அதிகம் தேவைப்படும் தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் குறைவாகவும் பாசி (peat moss) அதிகமாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்தால் போதுமானது. நாம் செய்யக்கூடிய பூச்சட்டிக் கலவை நன்கு காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    வியாபார வாய்ப்பு

    இன்றயை சூழலில் திருமண நிகழ்வுகளில் தாம்பூலங்கள் வழங்குவது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. திருமண தாம்பூல பரிசாக இனிப்பு மற்றும் காரங்களை தருவதே வழக்கமாக உள்ளது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே விதைகளையும் மரக்கன்றுகளையும் பரிசாக தருகின்றனர். நாம் சற்று வித்தியாசமாக அழகு தாவரங்களையும் பரிசளிக்கலாம். இது நம் உறவினர்களுக்கு நினைவு சின்னமாகவும் மனநிம்மதி தரும் வகையிலும் அமையும்.

    மேலும், கார்பொரேட் கம்பெனிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஒப்பந்த அடிப்படியில் இதை நாம் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்து லாபம் பார்க்கலாம். இதன் நுணுக்கங்களை நாம் நன்றாக கற்று கொண்டால் மற்றவர்களுக்கு கற்று கொடுத்தும் லாபம் பார்க்கலாம்.

    அதோடு இன்றைய இணைய உலகில், சந்தை வாய்ப்புகளை அங்கிருந்தே தொடங்கி, நமது வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்து நல்ல வருவாய் பெற முடியும்.

    • நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன.
    • எந்த ஒரு தொழில் செய்து வந்தாலும் அதை விளம்பரம் செய்ய வேண்டும்.

    வேலைக்கு செல்லும் பலரின் கனவு சொந்தமாக தொழில் தொடங்கி நாமும் முதலாளியாக வேண்டும் என்பதாக இருக்கும். அப்படி இருந்தாலும் பலர் அதற்கு நிறைய முதலீடுகள் வேண்டும் அல்லது தங்களுக்கு ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட அளவு பணம் தேவை என தொழில் தொடங்கும் கனவை ஓரம் வைத்துவிட்டு வேலைக்கு சென்று மாதம் சம்பளம் வாங்குவதையே குறிக்கோளாக வைத்து இருப்பார்கள். ஆனால் நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன.

    டிஜிட்டல் கல்வி

    வேகமாக வளர்ந்து வரும் ஐ.டி. உலகில் பலரும் வேலை செய்யும் இடங்களில் பல்வேறு மென்பொருளில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதையே ஒரு படிப்பாக மாற்றி ஆன்லைனில் வீடியோவாக வெளியிடுவது அல்லது ஆன்லைனில் கற்றுக்கொடுப்பதன் மூலம் பெரும் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்.

    கைவினை பொருட்கள்

    உங்களுக்கு கைவினை பொருட்கள் செய்யும் திறன் உள்ளது என்றால், அதை உற்பத்தி செய்துவிட்டு ஆன்லைனில் விற்கலாம். இதற்காக பல்வேறு இணையதளங்கள் செயலிகள் உள்ளது. இதற்கும் பெரிய முதலீடுகள் தேவை இருக்காது.

    பேக்கரி

    உங்களுக்கு சமையல் செய்ய பிடிக்கும் என்றால் பேக்கரி அல்லது சிறிய அளவில் உணவை வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். இதுபோன்றவர்களை ஊக்குவிக்கவும் ஆன்லைனில் பல்வேறு இணையதளங்கள் உள்ளது.

    டிஜிட்டல் மார்க்கெட்டிங்

    எந்த ஒரு தொழில் செய்து வந்தாலும் அதை விளம்பரம் செய்ய வேண்டும். நிறைய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அது உங்களுக்கு தெரியும் என்றால் அதற்கான சேவையை நீங்கள் வழங்கலாம். பல்வேறு சிறு நிறுவனங்கள் தங்களது பொருட்களை சந்தையில் மக்களிடம் கொண்டு செல்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவையை நாடுகின்றனர். இதன் மூலமும் வருமானம் ஈட்டலாம்.

    இதுபோன்று குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

    • குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து விசைத்தறிகள் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவித்தி ருந்தனர்.
    • இந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொங்கு விசைத்தறி கள் சங்கத்தார் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தி ருந்த னர். தற்போது இந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சங்க நிர்வாகி சங்கமேஸ்வரன் கூறியதாவது:

    கோவை மாவட்ட விசைத்தறி சங்கத்தார் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேட்டுக்கொண்டனர். அதற்கு விசைத்தறி சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பொறுத்திருங்கள். முதல்வரிடம் பேசி நல்லதொரு பதிலை சொல்கிறேன் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

    அதே போல் அரசு கேட்டுக்கொண்ட தற்கிணங்க நாங்களும் மின் கட்டண உயர்வினை கண்டித்து நாளை தொடங்க விருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். எங்களுடன் கொங்கு மண்டல முறுக்கு நூல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர்
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை அப்புறப்படுத்தினார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    மேலும் தினமும் மனு அளிப்பதற்கும் பொது மக்கள் வந்த வண்ணம் உள்ள னர்.அப்படி வருபவர்களில் சிலர் திடீரென தீக்குளிக்கும் சம்பவங்கள் நடந்து வருவதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலெக்டர் அலு வலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி னார்கள். இதில் அவர் கருங்கல் அருகே உள்ள பூடேற்றி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.

    கூட்டுறவு துறையில் வேலை வாங்கித் தருவ தாக கூறி, சிலர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இது தொடர்பாக பல முறை முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்பட பல இடங்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் அவர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக வேலை கேட்டு அலைந்து திரியும் தனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரமேஷ் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பின்னர் தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.
    • இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன்.

    இவரது மனைவி அந்தோணியம்மாள் ( வயது 52).

    இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தஞ்சை ஆத்துப்பாலத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் பஸ்ஸில் ஏறினார்.

    பின்னர் தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

    அப்போது தான் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பலரிடம் விசாரித்து பார்த்தும் நகைகள் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

    அப்போதுதான் ஓடும் பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் நகையை அறுத்துக் கொண்டு திருடி சென்றிருக்கலாம் என சந்தேகப்பட்டார்.

    இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • ரூ. 9 லட்சம் மற்றும் 12 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலி மாலை, ஒரு பவுன் எடை கொண்ட தங்க மோதிரம் ஆகியவை காணவில்லை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி குதிரைப்பந்தி விளையை சேர்ந்தவர் ஜோசப் அலெக்சாண்டர் (வயது 84). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவரது மனைவி மேரி ரெத்னா ஜோதி (80). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர. இருவரும் திருமணமாகி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் தனியாக மனைவியுடன் வசித்து வந்த ஜோசப் அலெக்சாண்டர் தங்களை கவனித்து கொள்ள வில்லுக்குறி ஆர்.சி தெரு வைச் சேர்ந்த மெல்டா (42) என்பவரை பணிக்கு வைத்திருந்தார்.

    இவர் கடந்த 2 ஆண்டு களுக்கும் மேலாக ஆசிரியர் வீட்டில் பணிபுரிந்துவந்தார். சம்பவத்தன்று ஜோசப் அலெக்சாண்டர் பணம் எடுப்பதற்காக வீட்டில் இருந்த பீரோவை திறந்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ. 9 லட்சம் மற்றும் 12 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலி மாலை, ஒரு பவுன் எடை கொண்ட தங்க மோதிரம் ஆகிய வற்றை காணாது அதிர்ச்சி யடைந்தார்.

    இதுகுறித்து ஜோசப் அலெக்சாண்டர் இரணியல் போலீசில் புகார் அளித்தார்.அதில் வீட்டில் வேலை செய்யும் மெல்டா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மெல்டா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • யார் வேண்டுமானாலும், எங்கிருக்கும் நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
    • கொரோனா, ஆரம்பத்தில் சில தொழில்வாய்ப்புகளை முடக்கியது.

    கொரோனாவிற்கு பிறகான வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?, கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதா?, தொழில்துறையிலும் - வேலைவாய்ப்பிலும் கொரோனா ஏதாவது மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறதா?... இதுபோன்ற பல கேள்விகள் நம்மிடைய எழுகின்றன. இவை அனைத்திற்கும் பதிலளிக்கிறார், பிச்சுமணி துரைராஜ். சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவரான இவர், மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பல ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றியவர். இப்போது, அதை சொந்த முயற்சியாக முன்னெடுத்திருக்கிறார். கூடவே தன்னுடைய அனுபவம் மூலம், நேர்காணலில் வெற்றி பெற வழிகாட்டுகிறார். அவர் தொழில்துறையின் நகர்வு பற்றியும், வேலைவாய்ப்பு குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

    *கொரோனா தாக்கத்திற்கு பிறகான தொழில்வாய்ப்புகள் எப்படி உள்ளன?

    கொரோனா, ஆரம்பத்தில் சில தொழில்வாய்ப்புகளை முடக்கியது. ஆனால் இப்போது தொழில்வாய்ப்புகளை இரு மடங்காக்கி உள்ளது. முடங்கியிருந்த எல்லா துறையும், இப்போது இருமடங்கு - மும்மடங்காக வளர்ச்சி பெற்று, பரபரப்பாக இயங்கி வருகின்றன.

    * எந்தெந்த துறை வளர்ச்சி கண்டிருக்கிறது?

    ஐ.டி.துறை கொரோனா காலத்திலும் சுணங்கவில்லை . அதனால் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. அதே போல மெடிக்கல், ஹெல்த்கேர், கட்டுமானம், சுற்றுலாதுறை , ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், உற்பத்தி துறை, வீடு தேடி பொருள் சேர்க்கும் ஈ-காமர்ஸ் போன்றவை எதிர்பார்த் ததை விட, அதிகம் வளர்ச்சி பெற்றுள்ளன.

    * 'ஒர்க் பிரம் ஹோம்' முறை தொழில்துறையினருக்கும், பணியாளர்களுக்கும் வசதியாக இருக்கிறதா ?

    நேரடியாக பணியாற்றும் அளவிற்கு வசதியாக இல்லாவிட்டாலும், பணி செய்யமுடியாத நிலையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை சிறப்பாகவே வழங்குகிறது. அதே போல வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளும் (ஜூ ம் கால், டீம் மீட்டிங்) ஐ.டி.பணியாளர்களுக்கு ஏற்ப , முன்னேறி கொண்டே இருக்கிறது.

    * ஒர்க் பிரம் ஹோம் முறையில் இருந்து அவசர அவசரமாக ஐ.டி. துறையினர் பணிக்கு அழைக்கப்படுவார்களா?

    இல்லை. 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் இருந்து அலுவலக வாழ்க்கைக்கு மாற குறைந்தது ஓரிரு ஆண்டுகள் ஆகும். நகரங்களில் வாழும் ஊழியர்களை தவிர்த்து, வெளியூரில் வசிக்கும் ஊழியர்களும் ஒர்க் பிரம் ஹோம் முறையையே விரும்புகிறார்கள். 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் இருந்து அவசர அவசரமாக அலுவலக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டால், அசவுகரியம் காரணமாக ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிவிடுவார்களோ என்ற அச்சம் எல்லா நிறுவனங்கள் மத்தியிலும் நிழலாடுகிறது.

    அதனால் பகுதி-பகுதியாகவே அழைக்கப்படுவர். உள்ளூர் ஊழியர்கள், பக்கத்து ஊர்களில் வசிப்பவர்கள்... இப்படி 100 சதவிகித அலுவலக வாழ்க்கையை எட்ட , 2 ஆண்டுகள் ஆகலாம்.

    * ஒர்க் பிரம் ஹோம் மாதிரியில் சமீபகாலமாக ஆன்லைன் முறையிலேயே நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. இதை நடத்துவதும், கலந்து கொள்வதும் சுலபமானதாக இருக்கிறதா ?

    நேரடி நேர்காணல்களை விட, நேர்காணல் நடத்தும் நிறுவனங்களுக்கும், கலந்து கொள்பவர்களுக்கும் இது மிகவும் சுலபமானது. மிக குறைந்த நேரத்திலேயே அதிகமானோரை நேர்காணல் செய்து விட முடிகிறது. அதே போல நேர்காணலில் கலந்து கொள்பவர்களும், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டே 4 முதல் 5 நேர்காணல்களில் கலந்து கொள்ள முடிகிறது. சொந்த ஊரில் இருந்து நேர்காணல் நடக்கும் நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவையும் இல்லை . புதிய இடத்தில் வழி தேடி அலைந்து, டென்ஷனாக வேண்டிய சூழலும் இல்லை . அமர்ந்த இடத்தில் இருந்தே , அமைந்தகரையில் நடக்கும் நேர்காணலிலும் கலந்து கொள்ளலாம். அமெரிக்காவில் நடக்கும் நேர்காணலிலும் கலந்து கொள்ளலாம்.

    முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு 300 நபர்கள் வரை நேர்காணல் செய்வதே கொஞ்சம் கடினமாக இருக்கும். இப்போது 3 ஆயிரம் நபர்கள் வரை மிக சுலபமாக ஆன்லைனில் நேர்காணல் செய்துவிடலாம். பல ஐ.டி.நிறுவனங்கள் இந்த வேலையை, அவுட்சோர்ஸிங் முறையில் எங்களிடம் பிரித்து கொடுத்திருக்கின்றன.

    * கொரோனாவினால் நிகழ்ந்த நன்மைகள் என்ன?

    பணிவாய்ப்பிற்கான வரையறையை தகர்த்து எறிந்திருக்கிறது. அதாவது கொரோனாவிற்கு முன்பு சில நிறுவனங்கள் அந்தந்த நகரங்களில் வசிப்பவர்களை மட்டுமே பணியமர்த்தி வந்தது. பிறமாவட்ட, மாநில பணியாளர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா தாக்கத்தினால், ஒர்க் பிரம் ஹோம் முறை இத்தகைய வரையறையை முற்றிலுமாக நீக்கி இருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருக்கும் நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே போல, வெளியூர் பணியாளர்கள் சென்னை , பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் வந்து தங்கியிருந்துதான் பணியாற்ற வேண்டிய நிர்பந்தமும் இப்போது இல்லை ஆன்லைன் நேர்காணல் என்ற நிலை உருவாகியுள்ளது.

    * ஆன்லைன் நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் இழைக்கும் தவறுகள் என்னென்ன ?

    ஆன்லைன்/ஆப்லைன் இவ்விரண்டுமே நேர்காணல்கள்தான். இவ்விரண்டிற்குமே, உங்களை பற்றிய நல்ல - கெட்ட புரிதலை உருவாக்கும் சக்தி உண்டு. அதனால் ஆன்லைன் நேர்காணல் என்று மெத்தனம் காட்ட வேண்டாம். குறித்த நேரத்திற்கு முன்பே ஸ்கைப்/டீம் மீட்டிங்/ ஜூ ம் போன்ற ஆன்லைன் தளங்களில் காத்திருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை பிரகாசமாக வைத்திருங்கள். தடையில்லா இணைய வசதி அவசியம். அதே போல தேவையில்லாத போன் அழைப்புகளை தவிர்த்து விடுங்கள். உங்களை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு தெரிந்த பதில்களை மட்டும் கூறுங்கள். ஆன்லைனில் தானே நேர்காணல் நடக்கிறது, இணையத்தில் பதில் தேடி விடை கூறலாம் என்பது போன்ற வீண் முயற்சிகளை கைவிடுங்கள். ஏனெனில் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் நீங்கள் விடைதேடும் முயற்சிகளை கூட கண்டறிந்து கூறிவிடும். அதே போல, இரைச்சல் இல்லாத அமைதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். இந்த குறிப்புகளை எல்லாம் தவறவிடும்போது தான், தவறுகள் இழைக்கப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.

    • உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள்.
    • தினமும் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்.

    சோர்வின்றி உற்சாகமாக வேலை செய்வது எப்படி? என்பதை இந்த கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.

    1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்

    தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் இல்லாமல் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

    2. 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்'

    ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்' என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். உங்கள் வீட்டு மாடிப்படி ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேன்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.

    3. தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்

    தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.

    4. ஒரு நாவல் எழுதுங்கள்

    ஒரு நாளில் உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை 1500 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள். 30-வது நாள் 50 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

    5. காதலிக்க பழகுங்கள்

    உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.

    ×