என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 214555"
- ரேஷன் கடை விற்பனையாளர்கள்- எடையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- கலெக்டர் வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையில், பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, ஆர்.ஆர்.விற்பனையாளர் எஸ்.தனபால் முதல் பரிசு ரூ.4 ஆயிரமும், ஆலங்குடி தாலுகா, சிக்கப்பட்டி விற்பனையாளர் எஸ்.அமுதாவுக்கு 2-வது பரிசு ரூ.3 ஆயிரமும், திருமயம் சி.எம்.எஸ். எடையாளர் சி.ராமாயிக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரமும், மீமிசல் எடையாளர் ஆர்.கண்ணகிக்கு 2-வது பரிசு 2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் கவிதாராமு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வழங்கல் அலுவலர் கணேசன், கூட்டுறவு சரக துணைபதிவாளர் சு.சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தகவலின் உண்மை தன்னை கண்டறிந்து சிறப்பு பரிசு வழங்க முடிவு
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி அறிவிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக போலி மதுபானங்களை விற்பனை செய்தல், மணல் திருடுதல், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள், லாட்டரி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், மேலும் உங்கள் பகுதியில் நடைபெறும் திருட்டு, திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பற்றிய தகவல்கள், உங்கள் பகுதியில் யாரேனும் சந்தேகப்படும் வகையில் புதியதாக இருக்கும் நபர்கள் குறித்து, பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். இந்த தகவலை தெரிவிக்க 9498100690 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தங்களது இரகசியம் காக்கப்படும். உண்மையான தகவலை அதிகப்படியான முறை கொடுக்கும் நபர்களுக்கு, தாங்கள் சொன்ன தகவலின் உண்மை தன்மை அறிந்து சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
- தேசிய அளவில் பார்வையற்றவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது.
- சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள விசாலயன் கோட்டை சேது பாஸ்கரா வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அளவில் பார்வையற்ற வர்களுக்கான முதலாவது ''சேது பாஸ்கரா பிடே தரவரிசை சதுரங்க போட்டி'' நடந்தது.
போட்டியை சேது பாஸ்கரா கல்வி குழுமங்களின் தலைவர் சேது குமணன் தொடங்கி வைத்தார். இதில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களை சேர்ந்த சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் சேது பாஸ்கரா கல்வி குழுமம் சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூ தன்ரெட்டி வழங்கினார். அவர் பேசுகையில், உலக தரமான கல்வியுடன் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்க ளை திறம்பட செய்து வருகிறது, சேது பாஸ்கரா கல்வி குழுமம்.
இங்கு படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய நிலையில் உயர்ந்து சிறப்பிடம் பெறுவார்கள். கண்பார்வையற்ற வர்களுக்கான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள். குறைபாடுள்ளவர்கள் முன்னேறுவதை அனை வரும் பாராட்ட வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் திருப்பதி, கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குநர் கோபால், ஆலோசகர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- போட்டியில் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
தென்காசி:
இந்திய வலு தூக்கும் சங்கம் மற்றும் தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுக்கான தேசிய வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வலு தூக்கும் சங்க மாநில தலைவர் ராஜா எம்.எல்.ஏ., மாநில செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் 24 மாநிலங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியானது வருகிற 17-ந்தேதி வரை நடைபெறும். நேற்று 53, 59 கிலோ உடல் எடை பிரிவில் நடைபெற்ற போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பரிசுகளை வென்றனர். ஏற்பாடுகளை தேசிய வலுதூக்கும் சங்க செயலாளர் ஜோசப், தேசிய வலுதூக்கும் சங்க தலைவர் சதீஷ்குமார், நெல்லை மாவட்ட தலைவர் சிவராமலிங்கம், செயலாளர் சண்முகசுந்தரம், தென்காசி மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முருகன், ரவிக்குமார், குத்தாலிங்கம் சரவணகுமார், ஜோதிமாணிக்கம், ஹிரா அப்துல் ரசாக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
- சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு பொது நூலக கட்டிடத்தில் நூலக வாசகா் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
வாசகா் வட்ட தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவா் ஆதிமூலம், இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம், போட்டித்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவிகள், குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவிகள், காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகள், ரெயில்வே தேர்வில் 1 மாணவர் என மொத்தம் 43 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, ஜே.பி.கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, அகாடமி இயக்குநர்கள் மாரியப்பன், அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நுாலகர் ராமசாமி நன்றி கூறினார்.
- கருகுடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஸ்ரீ வெள்ளச்சி ஸ்ரீ மலையரசி ஸ்ரீ சோனை கருப்பர் ஸ்ரீ ஓட்டத்திடல் காளியம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப் ஏற்பாட்டில் முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா பெரும் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர்.
- இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மனின் கோவில் 89 -ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்த யத்தில் நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 12 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 19 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
நடு மாடுகளுக்கு சிவகங்கை சாலை தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்) அருகில் இருந்து தானிப்பட்டி வரையில் 7 மைல் தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி களுக்கு க.பிள்ளையார்பட்டி விலக்கு வரை 5 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடந்தது.
சீறி பாய்ந்து சென்ற காளைகள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்றன. அப்போது மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சாரதி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் ரசிகர்களும், பொதுமக்களும் நின்று ஆரவாரத்துடன் போட்டி யை கண்டு ரசித்தனர்.
நடுமாடு பிரிவில் இலங்கிப்பட்டி அர்ச்சுனன் முதலாவது பரிசும், தானிப்பட்டி ராமாயி 2-வது பரிசும், சிவகங்கை புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.
பூஞ்சிட்டு பிரிவில் குண்டேந்தல்பட்டி சகாதேவன் முதல் பரிசும், கனகவள்ளி 2-வது பரிசும், பூண்டி கேசவன் 3-வது பரிசும் பெற்றனர். இதைத் தொடர்ந்து இன்று காலையில் பெரிய மாடு மற்றும் சிறிய மாடுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இதில் புலிமலைப்பட்டி முனிச்சாமி முதல் பரிசும், மாங்குளம் தேவேந்திரன் 2-வது பரிசும், சூரக்குண்டு இளவரசு 3-வது பரிசும் பெற்றனர். சிறிய மாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொ ண்டன. இதில் அவனி யாபுரம் மோகன்சாமி முதல் பரிசும், புதுப்பட்டி மணி 2-வது பரிசும், புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமை யாளர்களுக்கும், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்களுக்கும் ரொக்க பரிசு, கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
- போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.
- ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கோவை அணி பெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
தருவைகுளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றமும் இணைந்து நடத்திய போட்டியில் தூத்துக்குடி, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.
2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற கோவை அணியும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் பெண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற ஈரோடு அணிக்கும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் ரொக்க பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடக மாநில ரஜினிகாந்த் ரசிகர்மன்ற தலைவர் சந்திரகாந்த் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றத்தினர் விஜய் ஆனந்த், ஜெயபால், அசோக்ராஜ், விஜய் சாம்சன், ரமேஷ் கார்த்திகேயன், கண்ணன், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டு சேது பாதை ரோடு பகுதியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு லதா ரஜினிகாந்த் பாரத சேவா நிர்வாகிகள், துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினர். விருதுநகர் மண்டல பொறுப்பாளர் ரஜினி முருகன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலெட்சுமி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப் பாளர் ராஜமனுவேல், நிர்வாகிகள் குமாரசாமி, செல்வம், சிரிதேவி, முனீஸ்வரி, ஜோதி காமாட்சி, கோவில்பட்டி முத்து மாரியப்பன், விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
- முடிவில் பள்ளி ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஹாஜா நிஜாமுதீன் தலைமை வகித்தார்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்தியபாமா,ஊராட்சி செயலர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மாலா வரவேற்றார்.
பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.
- என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு.
- மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் தேசிய அளவில் நடைபெற்ற என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றிபெற்ற பிரித்திப்ராஜ், பீர்ஆரிஸ், நவீனா, துர்க்காதேவி, அன்பரசி, கனிகாஸ்ரீ, பவீனா, தீபதர்ஷினி ஆகிய 8 மாணவ- மாணவிகளுக்கும், மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற புத்தக திருவிழா கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப் பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் பட்டதாரி ஆசிரியை நதியா நன்றி கூறினார்.
- பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட மத்திய அரசின் ஆற்றல் திறன் பணியகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் 60 பள்ளிகளில் ஆற்றல் மன்றம் அமைக்கப்பட்டு தொடர்ச்சி யாக மாணவ-மாணவிகள் மத்தியில் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.
அதன்தொடர்ச்சியாக பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் அப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் வரவேற்றார்.
மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு சம்பந்தமாக நடந்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மின்பகிர்மான வட்ட ஆற்றல் மன்ற ஆய்வு அதிகாரியான பொது பிரிவு செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் வெங்கடேஷ் மணி மாணவ-மாணவி களுக்கு மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் மாணவர்களுக்கு அவர்கள் வீடுகளில் விதிக்கப்பட்ட கடந்த மின் கட்டணத் தொகைக்கும், அடுத்து விதிக்கப்படும் கட்டண தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டு தங்கள் முன்னெடுத்த மின் சிக்கனத்தை அறிந்து கொள்ள அறிவுரை வழங்கி னார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ராஜன் மற்றும் அன்பு ஸ்டார்லின், ஆற்றல் மன்ற குழுவினர் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்ட னர்.
- புதுக்கோட்டை மாவட்ட பட்டுபுழு வளர்பவர்களுக்கு தளவாடங்கள் வழங்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் நடைபெற்ற இக்கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டது.மேலும், பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டி முடிக்கப்பட்டு பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளும் 7 பட்டு புழு வளர்ப்போருக்கு தலா ரூ.37,500 வீதம் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களையும், மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000மும், இரண்டாம் பரிசாக ரூ.20,000மும், மூன்றாவது பரிசாக ரூ.15,000மும் மொத்தம் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், பட்டு வளர்ச்சி ஆய்வாளர் வெள்ளையம்மாள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்