search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214555"

    • காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது.
    • மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே உள்ள ஓகுர் மைதானத்தில் இருந்து மொத்தம் 205 புறாக்கள் பறக்க விடப்பட்டன.

    இதில் சிவகங்கை-காயல்பட்டினம் இடையிலான 160 கிலோ மீட்டர் விமான தூரத்தை காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை சேர்ந்த அகமது ரியாஸ் என்பவரது புறா 2 மணி நேரம் 2 நிமிடம் 10 வினாடியில் கடந்து வந்து முதல் இடத்தை வென்றது.

    கூடுதலாக 30 வினாடிகளில் வந்த சுலைமான் நகரை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரது புறா 2- வது இடத்தையும், அதனையடுத்து 10 வினாடி கழித்து வந்த நைனார் தெருவை சேர்ந்த முகமது ஹாஷிம் என்பவரது புறா 3-வது இடத்தையும் பிடித்தன. இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை புறா பந்தய கிளப் நிர்வாகிகள் அகமதுரியாஸ், லெப்பை, முகமது ஹாஷிம், அகமது, இப்னு மாஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் ஆறுமுகநேரி ஸ்டார் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.

    இவற்றில் 160 கி. மீ. சாலை தூரத்தை 1 மணி 54 நிமிட நேரத்தில் கடந்து வந்த லட்சுமி மாநகரத்தை சேர்ந்த ஜோஸ் வினின்ஸ்டன் என்பவரது புறா முதல் இடத்தை பிடித்தது. மேலும் இவரது இரு புறாக்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடித்தன. இதற்கான ஏற்பாடுகளை கிளப் நிர்வாகிகள் நாராய ணன், ராஜ், பட்டு ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முடிவில் சிறந்த கிடாரி வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் ஒன்றியம், கன்னாரக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் உதயசந்திரன், மிசா மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கொறடா கோவி.செழியன், ராமலிங்கம் எம்.பி. குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி, சினை ஊசி, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு பரிசோதனை செய்தனர்.

    முடிவில் சிறந்த கிடாரி வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாமில் விவசாயிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சாவூர் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இது குறித்து தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளான ரேனுகா தங்க பதக்கம், தமிழ் அழகி வெள்ளி பதக்கம், பிரீத்தி வெள்ளி பதக்கம், அனிதா வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். மேலும், மாணவர்கள் ரிஃபாயின் கபூர் தங்க பதக்கம், சந்தோஷ் வெள்ளி பதக்கம், சூர்யா வெண்கலம் பதக்கம், ஜீவா வெண்கலம் பதக்கம், ஹரிஹரனன் வெண்கலம் பதக்கம், சஞ்சய் குமார் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர்.

    பயிற்சியாளர் கிருஷ் ரத்தன் தலைமையில் சென்றனர். இவர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலர் ஜெயேந்திரன் வாழ்த்து கூறினர்.

    • தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந்தேதி அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.

    சேலம்:

    பொங்கல் பண்டி கையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசு வினி

    யோகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அந்தந்த மாவட்டங்க ளில் அமைச்சர்கள் இதனை தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த நிலையில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுளில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா பி.எப்.7 தொற்று இந்தியாவிலும் நுழைந்துள்ளது. கொரோனா முதல் அலை போன்று இந்த தொற்று உயிர் சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றன.

    புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் புதிய வகை கொரோனாவுக்கு கொண்டாட்டமாக அமைந்து விடாத வகையில் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன்

    கடைகளில் கூட்ட நெரிசல்

    இன்றி எவ்வாறு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பெற தகுதியானவர்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    ரேஷன் கார்டுதாரர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வாறு வழங்குவது என்பதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் சுமார் 10 லட்சத்து 58 ஆயிரம் ரேசன் கார்டுகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

    • மாடு விருத்தி அடைந்ததால் இம்மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர்.
    • சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், உள்நாட்டு இன கால்நடைகளை பாதுகாத்தல், இனவிருத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப் புல் என்ற ஒரு வகை புல் பிரசித்தி பெற்றது.

    இப்புற்களில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். இந்த புல் வகையை மேய்ந்து உம்பளச்சேரி மாடு விருத்தி அடைந்ததால் இம் மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர் வந்தது.

    இம்மாட்டினங்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.

    உம்பளச்சேரி எருதுகள் சேர் நிறைந்த சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.

    கடுமையான மழை, வெயிலை தாங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாடு இனமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உம்பளச்சேரி மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக மாடு, கன்றுகளை பராமரித்து வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர்சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குனர் மருத்துவர் ஹசன் இப்ராஹிம், மருத்துவர் விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • வீட்டின் முன்பு பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி என்ற தலைப்பில் கோலங்கள் வரைந்திருந்தனர்.
    • சிறந்த கோலத்தை தேர்வு செய்து சால்வை அணிவித்து கௌரவித்து பரிசு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலம் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

    அதன்படி இன்று தஞ்சை 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சிவக்குமார் தலைமையில், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் பொன்னர், கண்காணிப்பாளர் ராஜா மற்றும் தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த கோல போட்டியினை நடத்தினர்.

    இந்த கோல போட்டியில் பொதுமக்கள் தங்களது வீட்டின் முன்பு பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி என்ற தலைப்பில் கோலங்கள் வரைந்திருந்தனர்.

    அதில் முதல் இடத்தை பிடித்த தஞ்சை 42 -வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீ செங்கமல நாச்சி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆர். பானுப்பிரியா ராஜேஷ்க்கு, 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சிவக்குமார் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    மேலும் கோலப்போ ட்டியில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்க ளுக்கும் பரிசு வழங்கப்ப ட்டது.

    • தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையே டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலு ங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமத் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமச் செயலர் ஜெனட் ரம்யா ஆகியோர் தலைமை‌ வகித்தனர்.

    போட்டிகளை தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன் , தஞ்சாவூர் மாவட்ட டென்னிஸ் கழகத் தலைவர் டேவிட் அவர்களும் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.

    பல போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில்கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி முதல் இடத்தையும், கரூர் டிஎன்பிஎல் பள்ளி 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில், சாரதா சில்ரன்ஸ அகாடமி ஷ்ரத்தா பள்ளிமுதல் இடத்தையும், சென்னை‌ வேலம்மாள்‌வித்யாலய பள்ளி இரண்டாம் இடத்தையும்,

    19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கரூர் வேலம்மாள் பள்ளி முதல் இடத்தையும், சென்னை‌ பவன்ஸ்ரா ஜாஜி வித்யாஷ்ரம் 2ம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்டபெண்கள் பிரிவில் சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம்பள்ளி முதல் இடத்தையும், கோவை சச்சிதானந்தா ஜோதிநிகேதன் இன்டர் நேஷனல் பள்ளி 2ம் இடத்தையும் பெற்று வெற்றிபெற்றனர்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார். போட்டிகளைரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ் துணை முதல்வர் அம்பேத்கர் நடத்தினர்.

    • நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்ததினமான நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தேசிய பால் தினம் கொண்டாடப்பட்டது.

    இதில் வெண்மைப்புரட்சிக்கு வித்திட்ட டாக்டர்.வர்கீஸ் குரியன் பணி பற்றி நினைவு கூறப்பட்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தலா 3 நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது. இதில் திருப்பூர் ஒன்றிய பொது மேலாளர், துணைப்பதிவாளர்(பால்வளம்), உதவிப்பொது மேலாளர், குழுத்தலைவர்கள், ஒன்றிய பணியாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், சங்கச் செயலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
    • விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்ட இணைந்து கடந்த 14-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 55-வது தேசிய நூலக வார விழாவை நடத்தியது.

    இந்நிலையில் தேசிய நூலக வாரவிழாவின் நிறைவு விழா இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடை பெற்றது.

    விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, மாவட்ட மைய முதல் நிலை நூலகர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வாசிப்போம், யோசிப்போம் என்ற தலைப்பில் ெசாற்பொழிவாற்றினார்.  

    • கடனுதவி பற்றி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சகுந்தலா உரையாற்றினார்.
    • கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கண்மணி ஜான் ஆப் ஆர்க் அனைவரையும் வரவேற்றார்.

    திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்தார்.

    பட்டப்படிப்புக்கு பின்புள்ள உயர்கல்விகள் குறித்து குந்தவை நாச்சியார் கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி உரையாற்றினார்.

    அரசு போட்டி தேர்வுகள், பயிற்சி முறைகள் குறித்து உதவி இயக்குனர் ரமேஷ் குமார் சிறப்புரையாற்றினார்.

    சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் அரசு கடனுதவி பற்றி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சகுந்தலா உரையாற்றினார்.

    தொடர்ந்து, வேலைவாய்ப்பு தகவல் குறித்த கையேடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    முடிவில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேல் நன்றி கூறினார்.

    குந்தவை நாச்சியார் கல்லூரி சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும்
    • பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி குமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கிடையே யான பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன. பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    பள்ளிகள் பிரிவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரத்தை மாணவர்ஜெப்றின், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி அகஸ்தியா, 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்தை மாணவன் ஆஷிக்எ.எல்ஜித் ஆகியோர் பெற்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான சிறப்பு பரிசுத் தொகை தலா ரூ. 2 ஆயிரத்தை குமாரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஆக்னஸ் லிவிஷா, மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ருதி ஆகியோர் வென்றனர்.

    கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு 5 ஆயிரத்தை மாணவி ஷானு, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி ஆஷா, 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரத்தை மாணவி அஞ்சனா ஆகியோர் பெற்றனர்.

    பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது.

    திருப்பூர் :

    தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உர வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வகையில், 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில், 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது. 354 டன் விற்பனை செய்த ருத்திரபாளையம் கூட்டுறவு சங்கம் இரண்டாம் பரிசும், 343 டன் விற்பனை செய்த தளி கூட்டுறவு சங்கம் மூன்றாவது பரிசையும் பெற்றது.கலெக்டர் அலுவலகத்தில் இந்த மூன்று சங்கங்களுக்கும் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மண்டல இணை பதிவாளர் சீனிவாசன், கரூர் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா ஆகியோர் இதனை வழங்கினர். சரக துணை பதிபதிவாளர் சண்முகவேல், உடுமலை நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.

    ×