search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215693"

    • பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தைச் சேர்ந்தவர் குடிநீர் பைப்பில் தண்ணீர் வராததால் ஊராட்சி தலைவரின் கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • இந்த மிரட்டலில் ஈடுப்பட்ட லாரி டிரைவருக்கு வலைவீச்சு

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (45) . இவரது மனைவி சங்கீதா. வில்லிபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (47) லாரி டிரைவர்.

    இவரது வீட்டிற்கு பஞ்சாயத்து குடிநீர் பைப்பில் இருந்து தண்ணீர் வரவில்லை என அடிக்கடி ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சதீஷ்குமார் வில்லிபாளையம் ஊராட்சி மன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா இல்லாததால் அவரது கணவர் நடராஜனுக்கு போன் செய்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

    அங்கு வந்த நடராஜனை ஏன் பைப்பில் தண்ணீரை வரவில்லை எனக்கூறி அவரை தரைக்குறைவாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நடராஜன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    • சினிமா பட பாணியில் ஓடும் லாரியில் ரெடிமேடு ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    ''நெடுஞ்சாலை'' திரைப்படத்தில் கதாநாயகன் ஆரி ஓடும் லாரியில் புகுந்து பொருட்களை திருடும் காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதே மாதிரியான சம்பவம், மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம், நடுவளவு பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது46). லாரி டிரைவர்.

    இவர் சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் இருந்து ரெடிமேடு ஆடைகளை ஏற்றி கொண்டு லாரியில் மதுரைக்குப் புறப்பட்டார். துவரிமான் 4 வழி சாலை சந்திப்பு அருகே, டிரைவர் வெள்ளைச்சாமி லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.

    அப்போது தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள ரெடிமேடு ஆடைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    ஓடும் லாரியில் கொள்ளை அடிக்கும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளிடத்தில் மணல் குவாரி செயல்பட்ட போது மணல் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன.
    • குண்டும் குழியுமாக பாலத்தில் செல்லும் போது பாலம் மேலும் சிதிலமடைய‌ வாய்ப்புள்ளது.

    பூதலூர்:

    பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் விண்ண மங்கலம் கிராமத்தின் அருகில் வெண்ணாற்றில் பாலம் ஒன்று உள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலத்தின் வழியாக திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, லால்குடி, தஞ்சை, செங்கிப்பட்டி, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களுக்கு பயணிகள் பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.

    திருக்காட்டுப்பள்ளி‌ காவிரி கரையோரத்தில் இருந்து செங்கல்கள் ஏற்றிய லாரிகளும், கொள்ளிடத்தில் மணல் குவாரி செயல்பட்ட போது மணல் ஏற்றிய லாரிகளும் சென்று வருகின்றன.

    குறுகிய பாலமாகவும் பழுதடைந்து உள்ள பாலமாகவும் இருப்பதால் பாலத்தின் இரு புறமும் வலுவிழந்த பாலம் என்ற நெடுஞ்சாலை துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.

    பாலத்தின் மேற்பகுதியில் வாகனங்கள் செல்லும் தார்சாலை‌ ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழி போல காட்சி தருகிறது.

    அதிக பாரத்துடன் குண்டும் குழியுமாக பாலத்தில் செல்லும் போது பாலம் மேலும் சிதிலமடைய‌ வாய்ப்பு உள்ளது.

    மழை பெய்தால் குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வடைகிறது.

    பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள‌ நிலையில் பல்லாங்குழி ஆக காட்சி அளிக்கும் விண்மங்கலம் வெண்ணாற்று பால சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், மழையால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.
    • சுவாமிமலை மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி வாகனம் பின்புற டயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

    சுவாமிமலை:

    திருவைகாவூர் கொள்ளி டம் ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக சுவாமிமலை வழியாக வேதாரண்யம் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

    இதற்கான பணிகள் ஒரு சில இடங்களில் முடிவு பெற்ற நிலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், மழையால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.

    இந்நிலையில், கும்பகோணம்- திருவை யாறு சாலையில் சுவாமிமலை மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி வாகனம் பின்புறடயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

    சுமார் 2 மணி நேரம் போராடி அந்த வாகனத்தை மீட்டனர்.

    இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    அதனை தொடர்ந்து அங்கு வந்த கனரக லாரி ஒன்றும் மாட்டிக் கொண்டது.

    இதனால் சாலையில் பள்ளம் பெரிய பள்ளமாக மாறி உள்ளது.

    இதனை அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணைத்தலைவர் சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்தனர்.

    போர்க்கால அடிப்படையில் நடைபெற்ற இப்பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதால் மகன் கண் முன்பு தந்தை பலியானார்.
    • அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

    சிங்கம்புணரி

    மதுரை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது45). இவரது மகன் ரியாஸ் (17). இருவரும் சந்தையில் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். வாரச்சந்தைகளில் இருவரும் சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்வது வழக்கம். காரைக்குடியில் நடந்த சந்தை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.வி.மங்கலம் அருகே உள்ள காளாப்பூரில் விறகு ஏற்றிய லாரி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு சாகுல் அமீது மகனுடன் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். சரக்கு வானத்தை ரியாஸ் ஓட்டினார். அதி வேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாகுல் அமீது இறந்தார். தனது கண் முன்னே நடந்த இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாஸ் செய்வதறியாமல் தப்பினார். தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய போலீசார் தலைமறைவான ரியாசை தேடி வருகின்றனர். ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தகுதி இல்லாத வயதில் சரக்கு வாகனத்தை ஓட்டி தந்தையை காவு வாங்கிய ரியாஸ் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    • நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
    • லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர்.

    மன்னாா்குடி எம்.எல்.ஏ டி.ஆா்.பி. ராஜா தலைமையில் எம்.எல்.ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சுணன், ஈஸ்வரன், ராமச்சந்திரன்,அருள், அன்பழகன், பாலசுப்ர மணியன், செல்லூர் ராஜு, ராஜ்குமார் , முகமது ஷாநவாஸ் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் வந்தனர். வேதாரண்யம் தாலுகா ஆலங்குடியில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்று வரும் ட்ரோன் மூலமான பூச்சி மருந்து தெளிப்புப் பணியை பாா்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆசியாவி லேயே 2வது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான கோவில்பத்து கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொ ருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

    கஜா புயலின் போது சேதமடைந்த நெல் சேமிப்பு கிடங்கில்மேற்கொ ள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து, பார்வை யிட்டு இருப்பில் உள்ள நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.

    மேலும் தற்போது ரூ.6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள தரைதள பணிகள் மற்றும் தானியங்கு முறையில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து கோடியக்கரை, கோடியக்காடு வனவிலங்கு பகுதியில் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    • உள்ளே நுழையும் போது பாலத்தின் கைப்பிடி சுவரில் மூன்று தூண்கள் இடிந்த நிலையில் காணப்படுகிறது.
    • லாரி பின்னோக்கி வந்த போது இடித்து இது போன்ற நிலை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    பூதலூர்:

    கல்லணையில்உள்ள கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை -திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிதாக பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.1052 மீட்டர் நீளம்கொண்ட இந்த பாலம் 12.90 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்த பாலத்தின் வழியாக திருச்சி -தஞ்சை மாவட்டங்களுக்கு கனரக வாகனங்கள, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் திருச்சி தஞ்சை இடையே ஏராளமான வாகன போக்குவரத்து இந்த பாலத்தின் வழியே நடைபெற்று வருகிறது.

    லாரிகள், வேன்கள், சுற்றுலா பஸ்கள், கார்கள், சென்று வந்தாலும் இன்னமும் பொது போக்குவரத்து இந்த சாலை இந்த பாலத்தின் வழியாக செயல்படுத்தப்படவில்லை.

    விரைவில் திருச்சி தஞ்சை போக்குவரத்து கழகங்களில் வழியாக இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துவங்கும் என்றுஎதிர்பா ர்க்கப்படுகிறது.இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து உள்ளே நுழையும் போது பாலத்தின் கைப்பிடி சுவரில் மூன்று தூண்கள் இடிந்த நிலையில் காணப்படுகிறது.

    இந்த பாலத்தின் வழியாக மணல் லாரிகள் அதிக அளவில் சென்று கொண்டிருந்தபோது மோதியதாக கூறுகின்றனர். இடையிலுள்ள நடை மேடையில் எந்த பழுதும் இல்லாமல் கைப்பிடி சுவர் தூண்கள் மட்டும் இடிந்த நிலையில்உள்ளதால் இதுபோன்று நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர். ஏதாவது லாரி பின்னோக்கி வந்த பொழுது இடித்து இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இடிந்த பகுதியில் சீர் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது இந்த பகுதி வழியாக செல்வோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதுமட்டுமல்லாமல் இந்த பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எதுவும் இரவு நேரங்களில் எரிவதில்லை என்றும் இதனால் பாலத்தின் நடைமேடைமது அருந்தும் இடமாக உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கல்லணை கொள்ளிடம் பாலத்தில் இடிந்த கைப் பிடிச் சுவரை சீரமைத்து, மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • திருமங்கலம் அருகே விதிகளை மீறி லாரியில் கொண்டுவந்த 43 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உரிமையாளர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    திருமங்கலம், ஆக.14-

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையிலிருந்து லாரியில் 43 மாடுகளை ஏற்றப்பட்டு மதுரை மாவ ட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

    ஒரே லாரியில் இடை வெளி யின்றி ஏராளமான மாடுகள் ஏற்றி வருவதாக விருதுநகர் மாவட்ட பிராணிகள் நலவாரிய அமைப்பான பிப்பீள் பார் அனிமல்ஸ் அமைப்பின் செயலர் சுனிதாகிறிஸ்டிக்கு புகார் வந்தது.

    தொடர்ந்து திருமங்கலம் வந்த அவர் நேற்று இரவு கப்பலூர் மேம்பாலத்தில் மாடுகளுடன் வந்த லாரியை மறித்தார். பின்னர் இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை மாடுகளுடன் பறிமுதல் செய்தனர்.

    லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடை யநல்லூர் மேல திருவேட்டையை சேர்ந்த லாரி உரிமையாளர் மனோகரன், டிரைவர் முத்துபாண்டி(32) என்பது தெரியவந்தது.

    சுனிதா கொடுத்த புகாரில் போதுமான இடை வெளியின்றி மாடுகளை அடைத்து கொண்டும், போதுமான உணவு, தண்ணீர் கொடு க்காமல் நீண்டதூரம் லாரி யில் நிற்கவைத்து கொண்டு வந்ததாக வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 43 மாடுகளை விருதுநகரில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
    • செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பஸ் கணியூர் அடுத்த சோழமாதேவி அருகே சென்று கொண்டிருந்து. அப்போது செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் பஸ்ஸில் இருந்த பயணிகளும் லாரியின் முன்புறம் இருந்த தொழிலாளர்கள் என 20 பேர் இடிப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்கள் மீட்டு கோவை மற்றும் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருத்தாசலம் அருேக முதியவர் ஒருவர் லாரி மோதி பலியானார்.
    • வீட்டிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்து போகும் போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்(வயது 55). இவர் நேற்று இரவு 7:45 மணி அளவில் அவரது வீட்டிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்து போகும் போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஞானபிரகாசம் குடும்பத்துக்கு நஷ்டஈடாக யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.11 லட்சத்து 14 ஆயிரம் வழங்க உத்தரவிடடார்.
    • அந்நிறுவனம் நஷ்டஈடு வழங்க இழுத்தடித்ததால் அவர்கள் தஞ்சை சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது 42) விவசாயி. இவரது மனைவி ஜெயக்கொடி (40). இவர்களுக்கு கரண், சுதன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஞானபிரகாசம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மன்னார்குடி அடுத்த கம்மங்குடி ஆர்ச் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஞானபிரகாசம் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    மேலும் விபத்தில் பலியான ஞானபிரகாசம் மனைவி ஜெயக்கொடி, அவரது மகன்கள் மற்றும் ஞானபிரகாசத்தின் தாயார் ஆகியோர் நஷ்டஈடு கேட்டு மன்னார்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு ஞானபிரகாசம் குடும்பத்துக்கு நஷ்டஈடாக யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.11 லட்சத்து 14 ஆயிரம் வழங்க உத்தரவிடடார்.

    ஆனால் அந்நிறுவனம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து ரூ.17 லட்சத்து 74 ஆயிரத்து 371 வழங்க உத்தரவிட்டது.

    இருந்தாலும் அந்நிறுவனம் நஷ்டஈடு வழங்க இழுத்தடித்ததால் அவர்கள் தஞ்சை சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கடந்த ஜூன் 24-ந் தேதி பிறப்பித்த உத்தரவில்யு னெடெட் இன்சூரன்ஸ் அலுவலகத்தின் பொருட்களை ஜப்தி செய்யுமாறு கூறினார். அதன்படி இன்று நீதிமன்ற ஊழியர்கள் இன்சூரன்ஸ் நிறுவன முதுநிலை கோட்ட மேலாளர் ஸ்டாலினிடம், ஜப்தி செய்வதற்கான ஆணையை வழங்கினர். இதையடுத்து அங்கிருந்த கம்யூட்டர், டேபிள், ஏசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஜப்தி செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மார்த்தாண்டம் போலீசார் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கல்லன்குழி பயற்றன் கால விளையை சேர்ந்தவர் ஆரோன்மணி (வயது 60) இவர் மகளை குழித்துறை தெற்றி விளையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

    சம்பவத்தன்று தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டம் வழி யாக சிராயன்குழி பகு தியில் சென்று கொண்டி ருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியது. இதில் ஆரோன்மணியின் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் பரிதாபமாக பலியானார்.

    அவரது உடலை கைப்பற்றிய மார்த்தாண்டம் போலீசார் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டி வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த உதயமார்த்தாண்டன் (வயது 55) என தெரிய வந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×