search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்ட்"

    • பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.
    • நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையராக பணியாற்றிவர் குமரிமன்னன். இவர் சரிவர தனது பணிகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி வாடகை பாக்கி கேட்டு ஜே.சி.பி. டிரைவர் விஜயராகவன் என்பவர் நகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து போராட்டம் நடத்தினார். அப்போது அவர் வாடகை தொகை தர ஆணையர் குமரிமன்னன் லஞ்சம் கேட்பதாக கூறினார். இதையடுத்து அவரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென தன் உடல் மீது டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தனது பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.

    அதனை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புகார்கள் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை

    புதுக்கோட்டை ,

    புதுக்கோட்டை தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் சமீபத்தில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார பணிகள் சரியாக செய்யாமல் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து விசாரித்ததில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன் மற்றும் கணேசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • மெத்யூவ் கார்மென்ட்ஸ் நிறுவனம் அன்னைதெரசா பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.
    • இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான மெத்யூவ் கார்மென்ட்ஸ் முன்பக்கம் அண்ணாமலையார் படமும் பின்பக்கம் அன்னை தெரசா படம் மற்றும் அந்த நிறுவனத்தின் பெயரும் பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.

    இதுகுறித்து இந்து முன்னணியினர் கோயில் இணை ஆணையர் குமரேசனிடம் முறையிட்டனர். இது போன்று பக்தர்களை மதமாற்றம் செய்ய தூண்டும் வகையில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள் ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைதொடர்ந்து இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் குமரேசன் இந்த செயலில் ஈடுபட்ட சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகி இருவரையும் 6 மாதத்திற்கு பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் திருக்கோவிலில் இந்த 6 மாத காலத்தில் சாமிக்கு எந்த அபிஷேகம் ஆராதனைகள் செய்யக்கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    • லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    • ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் கோயில் இடத்தில் கடை நடத்தும் நபரிடம் வரி ரசீது போடுவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் ரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    பெரம்பலூரில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த மதனகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வரும் பெரம்பலூர், காந்தி நகரைச் சேர்ந்த குப்புசாமி மகன் சிங்காரம் (வயது 45). என்பவர் தொடர்ந்து கடை நடத்துவதற்கு அந்த இடத்தின் வரி ரசீது போட்டு தருமாறு கோயில் எழுத்தர் ரவியுடம் கேட்டுள்ளார். அதற்கு ரவி ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதன்படி சிங்காரத்திடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கோயில் எழுத்ர் ரவியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் ரவியை சஸ்பெண்ட் செய்து கோயில் உதவி ஆணையரும், தக்கருமான லட்சுமணன் உத்தரவிட்டுள்ளார்.

    • பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓடினார்
    • பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி.உத்தரவு

    பெரம்பலூர்,

    சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் பிரபாகரனை நேற்று முன்தினம் சேலம் மாவட்டம், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் இடையே பிரபாகரன் தப்பி ஓடி விட்டார். பின்னர் அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக, அவரை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டாா்.

    • கரூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்
    • ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

    கரூர்,

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கழகத்தின் கொள்ளை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கரூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சி.சுப்பிரமணியன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவராக கே.கனகராஜ் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனுமதி இன்றி மின் இணைப்பு கொடுத்தார்
    • விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் நிலையில் மோசடி

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது வீட்டிற்கு மின்சார இணைப்பு வசதி கோரி அப்பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் பரிசீலனை நிலையில் இருந்ததால், உரிய அனுமதி வழங்கப்படமல் இருந்து வந்தது. இந்நிலையில் வடிவேலுவின் வீட்டிற்கு மின் வாரிய ஊழியர் முருகேசன் மின்சார இணைப்பு வழங்கியிருக்கிறார்.இதற்காக அவரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வின் போது, அந்த மின்சார இணைப்புக்கு உரிய அனுமதி இல்லாமல் பெறப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பெரம்பலூர் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யபட்டார்
    • ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த பட்டதாரி ஆங்கில ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கோபிநாத் கொடுத்த புகார் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர் செல்வக்குமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.


    • நடத்தை விதிகளை மீறி அரசியல் பேரணியில் கலந்து கொண்டதாக கூறி பாஜக அரசு நடவடிக்கை.
    • அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார்

    பர்வானி:

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.

    அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

    • பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்.

    உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் வகுப்பறையில் இருந்து அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.

    உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள். பின்னர் பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு முன்னதாகவே வீடு திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • நன்னியூர் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
    • சாதி பாகுபாடு காட்டுவதாக பெண் ஊராட்சித் தலைவர் புகார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியம் நன்னியூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுதா(30). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், தன் மீது சாதிரீதியான பாகுபாடு காட்டப்படுவதாக அளித்த புகாரின்பேரில், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    போலீஸில் புகார்

    அதைத் தொடர்ந்து, "ஊராட்சியில் தனது கடமையை செய்ய விடாமல் குறுக்கீடு செய்வது, சாதி ரீதியான பாகுபாடு காட்டுவது, ஊராட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி அடிக்கடி அலுவலகத் துக்கு வந்து அலுவலகப் பணி யில் இடையூறு ஏற்படுத்தி வருவது,

    அலுவலகப் பணியில் ஊராட்சி செயலாளர் ஒத்துழைப்பு அளிக் காதது, 100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளராக செயல்படும் ஊராட்சி செயலரின் கணவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கான ஊதியத்தை தனக்கு தருமாறு நிர்பந்தம் செய்வது உள்ளிட்ட புகார்களை கூறி, உரிய நட வடிக்கை எடுக்குமாறு வாங்கல் போலீசில் சுதா புகார் அளித்தார்.

    இதையடுத்து, ஊரக வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) லீலா குமார் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி உள்ளிட்டோர் நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த 23-ந் தேதி சுதாவிடம் விசாரணை நடத்தினர். மேலும், வாங்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் முன்னிலையிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    வழக்கு பதிவு

    இதைத் தொடர்ந்து, நன்ளியூர் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் நல்லசாமி(40), ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமாரசாமி(58), ஊராட்சி செயலாளர் நளினி(38), 100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளர் மூர்த்தி(42) ஆகியோர் மீது ஆபாசமாக திட்டுதல், பெண் வன்கொடுமை மற்றும் பட்டியலின மற்றும் பட்டியல் பழங் குடியின வன்கொடுமை சட்டத்தின் கீழ் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, நன்னியூர் ஊராட்சி மன்ற செயலாளர் நளினியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. உத்தரவிட்டார்

    • சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
    • அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.

    மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேன்டும் என காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த விவகாரத்தில் சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவர் இறந்த விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். உரிய சிகிச்சை தரவில்லை என உறவினர்கள் புகார் கூறிய நிலையில், சரியான மருத்துவம் பார்க்கப்பட்டதாக அரசின் குழு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×