search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 218096"

    • தற்கொலை கடிதத்தில் தனக்கு ஓ.சி.டி. பாதிப்புகள் உள்ளது என தெரிவித்து உள்ளார்.
    • பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சம் தோன்றும், அந்த நபருக்கு வேறு எதிலும் கவனம் இருக்காது என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் ஐ.ஐ.ஐ.டி பாசார் என அழைக்கப்படும், ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பானுபிரசாத் என்ற மாணவர் முதலாம் ஆண்டு பி.யூ.சி. படித்து வந்துள்ளார்.

    இவர் ரங்காரெட்டி மாவட்ட பகுதியை சேர்ந்தவர். இந்த நிலையில், திடீரென அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதில், தற்கொலை குறிப்பு ஒன்றை போலீசார் கண்டெடுத்து உள்ளனர். அந்த கடிதத்தில், தனக்கு ஓ.சி.டி. பாதிப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சம் தோன்றும். அந்த நபருக்கு வேறு எதிலும் கவனம் இருக்காது. இதனால், கட்டாயத்தின் அடிப்படையில் திரும்ப, திரும்ப ஒன்றை செய்யும் நிலையில் அவர் காணப்படுவார்.

    இதுபற்றி நிர்மல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சல்லா பிரவீன் குமார் இன்று கூறும்போது, ஐ.ஐ.ஐ.டி. பசாரில் பானுபிரசாத் என்ற மாணவர் விடுதியில் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனநிலை பாதிப்புகள் இருந்துள்ளன. இதற்காக சில நாட்களுக்கு முன்பு, கல்லூரி நிர்வாகம் அவருக்கு 2 முறை கவுன்சிலிங் அளித்து உள்ளது. ஏனெனில் அவர் மனரீதியாக குழப்பத்தில் இருந்து உள்ளார். ஆனால், நேற்றிரவு அவர் தற்கொலை செய்து உள்ளார். தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து உள்ளார். அதில், தனக்கு ஓ.சி.டி. பாதிப்புகள் உள்ளது என தெரிவித்து உள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • மத்திய அரசு கல்வி கடன் வழங்குவதில் கடும் நிபந்தனைகள், கெடுபிடிகள் விதித்து உள்ளது

    கன்னியாகுமரி:

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

    ஏழை, நடுத்தர மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், தொடர்ந்து உயர் கல்வி பயின்றிட பொருளாதார வசதியின்மையால் உயர் கல்வியை துறந்து விடு கின்றனர். இதனால் அம்மாணவர்களின் உயர் கல்வி லட்சியம், தனித்திறமை, ஆற்றல் ஆகியவற்றை சமுதாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

    ஏழை பெற்றோர்கள் ஏழையாகவே இருந்து விடுகின்றனர்.இதனை போக்கும் வகையில் கடந்த காங். ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.ஏழை மாணவர்கள் படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்த பிறகு வங்கி கல்வி கடனை அடைத்து பயன் பெற்றனர்.

    காங். ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்பட வில்லை. தற்போது மத்திய அரசு இந்த கல்வி கடன் வழங்குவதில் கடும் நிபந்தனைகள், கெடுபிடிகள் விதித்து உள்ளன. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் கூட நிதியுதவி இன்றி மருத்துவ கனவை சிதைத்து உள்ளனர்.சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ள னர். வழங்கப்பட்ட கட னையும் வசூலிக்க மத்திய அரசு தனியாரிடம் ஒப்ப டைத்துள்ளது. இது அபத்தமானது. கடன் வசூலிக்கும் தனியார் நிறுவனம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறது.

    ஏழை மாணவர்களும் உயர் கல்வி பயின்றிட மத்திய அரசு கல்வி கடன் வழங்குவதில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும்.கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம் என கூறியி ருந்தார்.

    மத்திய அரசு தள்ளுபடி செய்யாவிட்டால், மாநில அரசு கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைக்க பாதிக்கப்பட்ட மாணவர் களை திரட்டி காங். பெரும் போராட்டங்களை நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொ கையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரையோ அணுகலாம்.

    மேலும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்தும்் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    2022-23-ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தை மாண வர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ''ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண். 044-29515942, மின்னஞ்சல் முகவரி:tngovtiitscholarship@gmail.com'' என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார்.
    • இந்தியாவில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் நாயகம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வில்லியம்.

    இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார். இதுதொடர்பாக இந்தியா வில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.

    இதற்கிடையே தனது நண்பர்கள் 6 பேருடன் இருசக்கர வாகனத்தில் இமாச்சலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அப்போது அங்கு எதிர்பா ராத விதமாக ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மாணவன் வில்லியம் பரிதா பமாக பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது தந்தை வெளி நாட்டிலிருந்து தாயகம் வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. விபத்தில் பலி யான மாணவர் வில்லியமின் தாயார் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்

    • கல்லூரி பஸ் மோதியதில்1 மாணவர் பலியானார்.
    • 2 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலூர்

    மதுரை சிக்கந்தர் சாவடி யை சேர்ந்தவர் பிரவீன், கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது பயஸ், ஆனைக்குளத்தை சேர்ந்தவர் சரவணன். நண்பர்களாக இவர்கள் 3 பேரும் மதுரை அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றதாக தெரிகிறது.

    அழகர்கோவில் அருகே சென்ற போது அவர்கள் படிக்கும் கல்லூரி பஸ்சும் முன்னால் சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே ஒரு ஆட்டோ வந்தது. அதில் மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரவீன், முகமது பயஸ், சரவணன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு ஏட்டு மாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும்
    • பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி குமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கிடையே யான பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன. பள்ளி அளவில் 46 பேரும், கல்லூரி அளவில் 20 பேரும் கலந்து கொண்டார்கள்.

    பள்ளிகள் பிரிவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரத்தை மாணவர்ஜெப்றின், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி அகஸ்தியா, 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்தை மாணவன் ஆஷிக்எ.எல்ஜித் ஆகியோர் பெற்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான சிறப்பு பரிசுத் தொகை தலா ரூ. 2 ஆயிரத்தை குமாரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஆக்னஸ் லிவிஷா, மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ருதி ஆகியோர் வென்றனர்.

    கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு 5 ஆயிரத்தை மாணவி ஷானு, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை மாணவி ஆஷா, 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரத்தை மாணவி அஞ்சனா ஆகியோர் பெற்றனர்.

    பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தை சேர்ந்தவர் பிஜூ. இவரது மகன் லெஜி (வயது 20). இவர், ஆறுதெங்கன்விளையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரி முடிந்து மாலை புதுக்கடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை கல்லூரிக்கு வருவது வழக்கம்.

    சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து லெஜி வழக்கம்போல் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மணவாளக்குறிச்சி கடந்து பரப்பற்று சந்திப்பில் செல்லும்போது முன்னால் பெரியவிளையை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி வல்லேரியன் (48) மோட்டார் சைக்கிளை திடீரென வலதுபுறம் திருப்பினார். இதில் லெஜி பைக் மீது மோதியதில் இரு வரும் கீழே விழுந்து படு காயமடைந்தனர்.

    இதில் வல்லேரியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ராஜாக்கமங்கலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லெஜிக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர் அருகில் ஒரு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வல்லேரியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணவாளக்குறிச்சி அருகே பாணான்விளையை சேர்ந்தவர் ரெத்தினசுவாமி (வயது 73). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டு முன் உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று ரெத்தினசுவாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரெத்தினசுவாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அவரது மகள் பிரதீபா (32) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் காவல் முடிந்ததால் கோர்ட்டில் கிரீஷ்மா இன்று ஆஜர்
    • கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விட்டனர்

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள முன்சிறை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23).

    இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, மாவட்ட எல்லையில் உள்ள பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், உடல் நலக்குறைவால் ஷாரோன் ராஜ் பாதிக்கப்பட்டார். பாறசாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் 25-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அவரது சாவுக்கு காதலி கிரீஷ்மா தான் காரணம் என, ஷாரோன்ராஜின் தந்தை புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கிரீஷ்மாவை கைது செய்து விசாரித்த போது, அவர் ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்ய கடந்த 3 மாதங்களாகவே கிரீஷ்மா திட்டமிட்டு அதற்கான முயற்சியில் இறங்கி யிருப்பது தெரிய வந்தது. கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திரு மணம் நிச்சயமானதும், ஜாதகப்படி அவரது முதல் கணவர் இறந்து விடுவார் எனக் கூறப்பட்டதாலும் இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டதாக விசாரணை யில் தகவல் கிடைத்தது.

    போலீஸ் விசாரணையின் போது, கிரீஷ்மா தற்கொ லைக்கு முயன்றதால் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்ததாக கூறப்படும் கிரீஷ்மாவின் வீடு, இருவரும் திருமணம் செய்ததாக கூறப்பட்ட வெட்டுக்காடு தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் கட்டமாக கிரீஷ்மா அழைத்துச் செல்லப்பட்டார்.

    நேற்று 2-வது கட்டமாக கிரீஷ்மா, குமரி மாவட்டம் அழைத்து வரப்பட்டார். ஷாரோன்ராஜ் படித்த கல்லூரி, அவர்கள் ஜோடி யாக சுற்றித்திரிந்த சுற்றுலா தலங்கள் போன்றவற்றுக்கு கிரீஷ்மாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர். அப்போது கிரீஷ்மா எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் போலீசாரிடம் பேசி உள்ளார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக கொலை சதியை அரங்கேற்றிய கிரீஷ்மா, டோலோ மாத்திரையை பொடி செய்து அதனை காதலன் ஷாரோன்ராஜிக்கு கொடுத்துள்ளார். அதனை ஒரே மடக்காக குடிக்க வேண்டும் என 'ஜூஸ் சேலஞ்சு'ம் நடத்தி உள்ளார்.அதன்படி குளிர்பானத்தை குடித்த ஷாரோன்ராஜ், கசப்பாக இருந்ததால் அதனை துப்பிவிட்டாராம். இதனால் அவர் தப்பி விட்டதாக போலீஸ் விசாரணையின் போது கிரீஷ்மா தெரிவித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குளிர்பானம் கசப்பாக இருப்பது பற்றி ஷாரோன்ராஜ் கேட்ட போது, அது காலாவதியானதாக இருக்கலாம் எனக் கூறி சமாளித்து விட்டதாகவும் கிரீஷ்மா கூறியுள்ளார்.

    காதலன் ஷாரோன்ராஜுடன் திற்பரப்பு விடுதியில் 2 முறை அறை எடுத்து தங்கியதாக கிரீஷ்மா விசாரணையின் போது கூறியிருந்ததால், அவரை நேற்று போலீசார் அங்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விடுதி அறையில் அவர்கள் தங்கி இருந்ததற்கான பதிவேடுகளையும் போலீசார் கைப்பற்றினர்.

    அதன்பிறகு மாலையில் போலீசார், கிரீஷ்மாவை கேரளா அழைத்துச் சென்றனர். அவரது காவல் முடிவடைந்துவிட்டதால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட னர். இன்னும் விசாரணை பாக்கி இருந்தால், கிரீஷ்மாவை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

    இந்த வழக்கில் தடயங்களை அழித்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் விசாரணைக்கு பின்னர், போலீஸ் காவல் முடிவடைந்த தால், ஏற்கனவே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விட்ட னர் என்பது குறிப்பிடத்த க்கது.

    • கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
    • மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடுமலை :

    உடுமலை எல்லை மற்றும் பிரிவு ரோடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரியின் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை நிறைவேற்றித் தருமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கூறி இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால் வகுப்புகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மாணவர்கள் தரப்பில் கல்லூரி வளாகத்திற்குள் குடிநீர் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஐடி கார்டு வழங்க வேண்டும். அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் உடனே வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாணவர்களின் புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • பணம் பெற்றுக் கொண்டு முறையாக பயிற்சி அளிக்கவில்லை
    • கருங்கல் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கருங்கல் அருகே மார்த்தாண்டம் சாலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் குறைந்த கட்டணத்தில் சாப்ட்வேர் பயிற்சி வழங்குவ தாகவும், பயிற்சி முடித்தபின் நிறுவனத்திலேயே வேலை வழங்குவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை நம்பி பூட்டேற்றி, பாலப்பள்ளம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அங்கு பயிற்சியில் சேர்ந்து உள்ள னர். இந்த நிலையில் அந்த மாணவர்கள் திடீரென பயிற்சி மையம் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

    பயிற்சியில் சேர்ந்த மாணவர்களிடம் 6 மாத பயிற்சி கட்டணமாக ரூ. 50 ஆயிரத்தை சாப்ட்வேர் நிர்வாகத்தினர் பெற்ற தாகவும் தற்போது முறையாக பயிற்சி வழங்காமல் யூ.டியூப். பார்த்து பழகிக்கொள்ள அறிவுறுத்துவதாகவும் மாணவர்கள் புகாரில் கூறி உள்ளனர்.

    தாங்கள் ஏமாற்றப்பட்ட தாக கூறும் மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களையும் பணத்தையும் திரும்ப கேட்டபோது நிர்வாக தரப்பில் வெற்று பேப்ப ரில் கையெழுத்து கேட்டதாகவும் அதற்கு தாங்கள் மறுத்து விட்டதாகவும் தெரி வித்தனர்.

    இந்த நிலையில் நிர்வாகம் தரப்பில் மாணவர்கள் தங்கள் நிறுவனத்தில் தகராறு செய்ததாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவர்களுக்கு போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர்.

    ஆனால் பயிற்சி பெறும் மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் நேற்று போலீஸ் நிலையம் திரண்டு வந்து சாப்ட்வேர் நிறுவனத்தினர் மீது புகார் அளித்தனர்.

    தங்களுக்கு முறையாக பயிற்சி தராமலும் வேலை தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் புகாரில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இதுகுறித்து கருங்கல் போலீசார் விசா ரணை செய்து வருகின்றனர்.

    • தடயங்களை அழிக்க முயற்சியா?
    • கிரீஷ்மா வீட்டில் போலீஸ் வைத்த சீலை உடைத்தது யார்?

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்மா (வயது 22).

    இவருக்கும் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த கேரள மாநிலம் முறியன் கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோன்ராஜ் (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த மாதம் 25-ந் தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சாவில் மர்மம் இருப்பதாக, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காதலி கிரீஷ்மா தான், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோன்ராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதன் அடிப்படையில் கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தடயங்களை அழித்ததாக சிந்து மற்றும் நிர்மல்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    போலீ சாரின் விசாரணை யில் கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தி ருப்பதும், ஜாதகப்படி கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என்பதால், காதலனை அழைத்து அவரை ஏமாற்றி கணவர் எனக் கூறி கிரீஷ்மா விஷம் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பான விசாரணையின் போது, கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றதால், அவரை போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது விஷ பாட்டிலை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கிரீஷ்மாவை அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அந்த வீட்டுக்கு சீல் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கிரீஷ்மாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னர்.

    தொடர்ந்து அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அழைத்துச் சென்ற போலீசார் அங்கு வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்தது எப்படி? என விசாரணை நடத்த போலீசார் திட்ட மிட்டிருந்தனர்.

    இந்த சூழலில் நேற்று யாரோ, கிரீஷ்மா வீட்டில் போலீசார் வைத்திருந்த சீலை உடைத்துள்ளனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும், பளுகல் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தட யங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையில் கேரள குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடம் வந்து பார்வை யிட்டனர்.

    கிரீஷ்மாவை விசாரணைக்கு வீட்டுக்கு அழைத்து வர போலீசார் திட்டமிட்டிருந்த சூழலில், வீட்டில் போலீசார் வைத்த சீல் உடைக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்குள் புகுந்து தடயங்களை அழிக்க முயற்சி நடந்திருக்கலாமா? அவர்கள் யார்? என்பது மர்மமாக உள்ளது.

    சம்பவம் தொடர்பாக இடைக்கோடு கிராம நிர்வாக அலுவலர் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளதா? அதில் கிரீஷ்மா வீட்டுக்கு வைத்த சீலை உடைத்தவர்கள் குறித்து பதிவு ஏதும் உள்ளதா? என போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • காதலி-பெற்றோரிடம் போலீசார் விசாரணை
    • வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23). இவரது சொந்த ஊர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங் கரை ஆகும்.

    அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார். கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார். சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார். அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாற சாலை போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது, அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

    திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைைமயில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர் பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார். இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளனர். இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என தெரிகிறது.

    ×