search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு"

    • பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற தடகள மாணவர்கள் 59 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாட்டு மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த தடகள பயிற்சிக்கான தேர்வு போட்டியினை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடங்கி வைத்தார்.

    இதில் பயிற்சியாளர்கள் துர்கா (தடகளம்), பரணி (டேக்வாண்டோ), உடற்கல்வி ஆசிரியர்கள், தற்காலிக பயிற்சியாளர்கள் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தினர். தடகள போட்டிகளில் மாவட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 100க் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பாக செயல்பட்ட 35 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு 11 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவர் என மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்தார்.


    • விழாவிற்கு கல்லூரி செயலர் ஜெசு ஜெகன் தலைமை தாங்கினார்.
    • கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்று பேசினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 26-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி செயலர் ஜெசு ஜெகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் பல்கலைக்கழக பிரதிநிதி பேராசிரியர் முத்து, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் காமராஜ், மாநில தொழிற்சங்க ஐ.என்.டி.யூ.சி.வைகுண்ட ராஜா, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் , மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா,தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும் , மாயமான்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான கண்ணன், ரூபன் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்றார்.நல்லூர் சேகர குரு பிரே ஜேம்ஸ் தொடக்க ஜெபம் செய்தார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு கல்லூரியில் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் நெல்லை திரும ண்டல பெருமன்ற உறுப்பி னர்கள் பால் நேசன் ஆண்டனி, ஜெயராஜ், கல்லூரி ஆட்சி மன்ற உறுப்பி னர்கள் பால்ராஜ், தேவ தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்லூ ரியின் பேராசிரி யர்கள், மா ணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜூலியன்ஸ் ராஜாசிங் செய்து, விளையாட்டு விழா விற்கான ஆண்டறிக்கையை சமர்பித்து நன்றி கூறினார்.

    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாநில அணிகளுக்கு பரிசு

    பெரம்பலூர், 

    தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், ஈரோடு மாவட்ட வாலிபால் சங்கம், உணர்வுகள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப்-2023 போட்டி பெரம்பலூரில் 2 நாட்கள் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டிக்கான தொடக்க விழாவில், ஆல்மைட்டி பள்ளி தாளாளர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் மக்கள்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல் நாள் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கன்னி துவக்கி வைத்தார். இதில் ஜார்கண்ட், ராஜஸ்தான், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஹிரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கனா உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.ஆண்கள் பாராவாலி போட்டியில் கர்நாடகா முதல் இடமும், ராஜஸ்தான் 2ம் இடமும், தமிழ்நாடு 3ம் இடமும், ஹரியானா 4ம் இடமும் பெற்றன. பெண்கள் பாரா வாலி போட்டியில் ராஜஸ்தான் முதலிடமும், ஜார்கண்ட 2-ம் இடமும், கர்நாடகா 3-ம் இடமும், ஹரியானா 4-ம் இடமும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயங்களும், பெரம்பலூர் ஐஓபி, அஸ்வின்ஸ் குழுமம், உதவியுடன் வழங்கப்பட்டது. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தமிழ்நாடு பாரா வாலி சங்க துணைசெயலாளர்கள் ஜெயபிரபா, கண்ணன், மாநில நடுவர்குழு தலைவர் ஜாபர், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், பாராவாலி பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரஞ்சித்குமரன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் சீனீவாசன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி துணைத்தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், சங்கீதா கோபிநாத், பள்ளி முதல்வர் ஹேமா, ஆசிரியர்கள் சந்திரோதயம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பண பரிசு வழங்கப்பட்டது
    • 28அணிகள் கலந்து கொண்டு விளையாடின

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான இறகு பந்து போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தின் உள்ளரங்கில் நேற்று நடந்தது. ஆண்களுக்கு இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 3, 4-ம் இடம் பிடித்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

    • முதல்வர் கோப்பைக்கான போட்டியில் மாவட்ட அளவிலான வெற்றி பட்டியலில் இடம் பிடித்தனர்
    • பள்ளி தாளாளர் மாணவர்களை பாராட்டினார்

    திருச்சி,

    திருச்சி மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ஹாக்கி போட்டியில் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மணப்பாறை தியாகேஸ்வரர் ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் மோதி மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதைத்தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆர். சி.பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி சின்னப்பன அடிகளார் பாராட்டினார். பயிற்சிக்கு ஊக்கமளித்த உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர் ஜான் சபரி ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்லஸ் ரேமண்ட் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரையும் அவர் வாழ்த்தினார். இந்த நிகழ்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் ஆசிரியர் சங்க செயலர் லூயிஸ் மற்றும் பொருளாளர் வின்சென்ட் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி மகிழ்ந்தனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து சிறந்த வீரர், வீராங்கனை களை உருவாக்க வேண்டும்
    • தனிநபர் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களும், குழுப் போட்டிகளில் தேர்வுக்குழு மூலம் தேர்வு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்கள் கல்வியில் பல்வேறு திட்டங் களை அறிவித்து செயல்படுத்தி வருவதோடு, விளையாட்டுத்துறையிலும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து சிறந்த வீரர், வீராங்கனை களை உருவாக்க வேண்டுமென்று பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்வியில் சிறந்த மாவட்டமாகும். அதேபோல் தடகளம், கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, செஸ் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வருவதோடு, பல்வேறு போட்டிகளில் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்கள்.

    குறிப்பாக, முதலாவது கேலோ இந்தியா (2021-2022) தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் ஆஸ்லின் சானியா என்ற வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். டெல்லியில் 2021-2022 டெல்லியில் நடைபெற்ற தடகள நேஷனல் விளையாட்டு போட்டியில் செல்வன் அசதுல்லா முஜாஹித் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். அகமதாபாத் பகுதியில் தேசிய அளவிலான தடகள போட்டி (2022-2023) 3-வது நேஷனல் விளையாட்டில் செல்வி கிரேசினா மெர்லி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். மேலும், போலந்து நாட்டில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

    தற்போது, 2022-23ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 12 முதல் 19 வயது வரை பள்ளிப் பிரிவாகவும், 17 வயது முதல் 25 வரை கல்லூரிப் பிரிவாகவும், 15 முதல் 35 வயது வரை பொதுப் பிரிவாகவும் மற்றும் அரசு ஊழியர், மாற்றுத் திறனாளிகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. குறிப்பாக, அரசு துறைகளான வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு தடகளம், கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, மற்றும் செஸ் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

    மேலும், இப்போட்டி களில் முதல் இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.3000/-மும், 2-ம் இடத்தை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.2000/-மும், 3-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் என மொத்தம் ரூ.42.02 லட்சம் பரிசு தொகை வழங்குவதற்கு நமது மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களும், குழுப் போட்டிகளில் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இது போன்று பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் கலந்து கொண்டு நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 10 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    மணக்குடியில் கிரிக்கெட் விளையாடியது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே பிரச்சினை இருந்து வந்தது.இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

    இது குறித்து மணக்குடி யைச் சேர்ந்த தோமஸ் (வயது 40) என்பவர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணக்குடியைச் சேர்ந்த சுபின் (25), ஆன்றனி (32), சுனாமி காலனியைச் சேர்ந்த அகில் (23), ஷியாம் (25), நிகில் (20) ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மணக்குடி வின்சென் மேற்கு தெருவை சேர்ந்த ஆண்டனி கொடுத்த புகாரின் பேரில் சர்ச் தெருவை சேர்ந்த தாமஸ் (40), ராபின் (35), அகில் (21), டேவிட் (45), சூசை ஆகிய 5 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இரு தரப்பினர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 294பி, 323, 506 2 ஐ.பி.சி. ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாளை மறுநாள் தொடங்குகிறது
    • போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாளை மறுநாள் முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2222 - 2023 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கு மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை மறுநாள் 8ம் தேதி தடகளம். சிலம்பம். கைப்பந்து ஆகிய போட்டிகளும் 11ம் தேதி கிரிக்கெட் 13ம் தேதி கபடி, இரவு பந்து, கைப்பந்து போட்டியிலும் 22ம் தேதி நீச்சல், கால்பந்து போட்டிகளிலும் 28ம் தேதி வலைப்பந்து, மேஜை பந்து போட்டிகளும் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.கல்லூரி மாணவ மாணவி களுக்கான இம்மாதம் 9ம் தேதி தடகளம், கபடி, சிலம்பம், இறகுபந்து 15ம் தேதி கையுறைபந்து, கால்பந்து இறகு பந்து, கபடி, எறி பந்து போட்டிகள் காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா 3ஆயிரம் இரண்டாம் பரிசாக தலா 2ஆயிரம் மூன்றாம் பரிசாக தலா ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுவோரும், குழு போட்டிகளில் தேர்ந்தெடு க்கப்பட்ட வீரர் வீரர்களுக்கும் மாநில போட்டிகளில் அரசு செலவில் பங்கேற்க அனுமதி க்கப்படுவர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீரா ங்கனைகள் மாநில அளவிலான போட்டி களுக்கு அனுப்பி வைக்கப்ப டுவர். எனவே போட்டிகளில் கலந்து கொள்ள காலை 8 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்

    • அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
    • கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

    கரூர்,

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திரு வள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், வருகிற மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இதில், கோ-கோ, கைப்பந்து, கபடி உள்ளிட்ட குழு போட்டிகள் நடக்கிறது. வரும் 4ல் மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளும், வரும் 5ல் மாணவர்களுக்கான தடகள போட்டிகளும் நடக்கின்றன. குழு போட்டியில் சிறந்த ஐந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஐந்து வீராங்கனைகளுக்கும் அதிக புள்ளிகள் பெற்ற இரண்டு பள்ளி மற்றும் இரண்டு கல்லூரிக்கும் என மொத்தம் 14 கோப்பைகள் சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழு போட்டிகள், தனிநபர் போட்டிகள் இந்த வாரமும், அடுத்த வாரமும் நடக்கின்றன மார்ச் 5ல் கரூரில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உட்பட பலர் கல

    • விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி உசிலம்பட்டியை அடுத்த சீமானூத்து கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி, சென்னை இ.பி.எம்.சி.ஆர். நிர்வாக இயக்குநர் கவின்குமார், பொறி யாளர்கள் வினோத்குமார், சவுமியா சிரபன் மற்றும் குழுவினர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.

    இந்த ஆய்வின்போது கீரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அணி சிவன் ஆகியோர் உடனிருந் தனர்.

    • சிறப்பாக பணிபுரிந்த 85 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
    • 155 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். விளையாட்டு துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான தடகள மற்றும் கைப்பந்து போட்டிகளில் பரிசு பெற்ற 6 வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வா கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடன் இருந்தார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் மூவர்ண பலூன்களை கலெக்டர் அரவிந்த் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகி யோர் வானில் பறக்க விட்ட னர்.

    இதைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த 85 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய 18 போலீசாருக்கு நற்சான்றி தழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள், தீயணைப்பு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 120 மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தோட்டக் கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 77 ஆயிரத்து 400 நிதி உதவி யையும் கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.முன்னாள் படை வீரர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வருவாய் துறை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 23 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 62 ஆயிரத்து 530 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அரவிந்த் வழங்கி னார். அரசு துறையில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வருவாய்த்துறை, நக ராட்சி, பேரூராட்சி, மருத்து வம், தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை துறை, மின்சார வாரியம், உணவு பாதுகாப்பு துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 155 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கி னார். விளையாட்டு துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான தடகள மற்றும் கைப்பந்து போட்டி களில் பரிசு பெற்ற 6 வீராங்கனைகள் கவுர விக்கப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. 12 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி, ராஜகுமாரி சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் குணால் யாதவ், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ், ஏ.டி.எஸ்.பி.க்கள் ஈஸ்வரன், ராஜேந்திரன், டி.எஸ்.பி. நவீன்குமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சத்தியமங்கலம் சுபசக்தி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கபட்டது

    குளித்தலை:

    குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் உள்ள சுபசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி தாளாளர் லதா சக்திவேல் வரவேற்புரையாற்றினார், சுபசக்தி . கல்லூரி தலைவர் இன்ஜினியர் சக்திவேல் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி இயக்குனர் ரத்தினம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக பி.எஸ்.என்.எல். முதன்மை பொறியாளர் ஓய்வு இரத்தினசாமி கலந்து கொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 1000 மீட்டர் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.

    ×