search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • அவலூர்பேட்டை ஊராட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை ஊராட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நடராஜன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரோஜா அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கைளை ஒன்றிய நிர்வாகிகளிடம் வழங்கினர். இதையடுத்து நீர், மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

    • பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது
    • பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடந்தது. முகாமினை மாவட்ட திறன்மிகு இந்தியா பயிற்சி மைய உதவி இயக்குநர் செல்வம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-பிரதம மந்திரி தொழிற் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் மாதாந்திர உதவி தொகையுடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் மாதம் 2 நாட்களில் (திங்கட்கிழமைகளில்) நடைபெறுகிறது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற்று பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவர்கள், 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், மகளிர் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சியை இலவசமாக பெற்று பயபெறலாம் என தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த பல முன்னணி சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலார்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்தனர்.தொழில்பழகுநர் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டோருக்கு சேர்க்கை ஆணை தொழில் நிறுவனங்களால் வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு, பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை தொழில் நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது.

    • இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.
    • வழக்கறிஞர் இள‌.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம், விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர் வேல்முருகன் தலைமையில், விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை தேரடி வீதியில் நடந்தது இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார். முன்னதாக, நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். கடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளருமான வழக்கறிஞர் இள.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாமினை தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, ஒன்றிய துணை செயலாளர் முத்துவேல், நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், பொருளாளர் சேட்டு, ஒன்றிய பிரதிநிதி கோ.மணி, சோழப்பிரகாஷ், டைலர் நடராஜன், டைலர் கணேசன், ஜெயசக்தி, கண்ணன், இளைஞரணி விக்ரம், ராஜேஷ் உள்ளிட்ட வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்
    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க. வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க.வில் புதிய உறுப்பி னர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் கோனை ஊராட்சி அப்பம்பட்டில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க. வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்.  இந்த முகாமில் செஞ்சி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அஞ்சாஞ்சேரி சரவணன் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் இணைந்த சரவணனுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழு மலை விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெயபாலன், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, துணை செயலாளர்கள் மதியழகன், அனுசுயா மணிபாலன், பொருளாளர் இக்பால், மாவட்ட பிரதி நிதிகள் குணசேகரன், கோடீஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர் ஜம்போதி பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரிஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டி ருந்த நீர்மோர் பந்தலை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, ரொட்டி, நீர்மோர் ஆகிவற்றை வழங்கினார்.

    • பெரம்பலூர், ேவப்பூர், அசூர் கிராமத்தில் நடைபெற்றது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியம், அசூர் கிராமத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் செ.வல்லபன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், டாக்டர் செ.செங்குட்டுவன், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.ராஜேந்திரன், தி.மதியழகன், ஒன்றிய தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாளை.மணிவண்ணன், அசூர் கிளைக் கழக செயலாளர் ந.செல்லப்பிள்ளை, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கு.க.அன்பழகன், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் அசூர் ந.முத்துச்செல்வன், வேப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மா.பிரபாகரன், அசூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.ரவி, குன்னம் ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்தோஷ்குமார், தேவா, தர்மராஜ், முத்துவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் டி.குணா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். காமில் கலந்து கொண்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., உறுப்பினர் சேர்க்கை மேலிட பார்வையாளர் முன்னாள் மத்திய மந்திரி வேங்கடபதி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர். எ.வ.வே. கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கமாக கூறினார்கள்.

    நிகழ்ச்சியில் நகர வர்த்தக சங்கத் தலைவர் கே.ஏ.ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் ஐ.ஆர்.கோவிந்தராஜன், எல்.தங்கராஜ், அண்ணாதுரை, ஜல்லிபிரகாஷ், மகாலிங்கம், துரைராஜன், பிரமிளாராகவன், சண்முக வள்ளி ஜெகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்கட், லதா சரவணன், தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வி.சந்திரசேகரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகி என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

    • தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளர்களா மணிமாறன் கலந்து கொண்டார்.

    திருமங்கலம்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா, தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது தொடர்பான கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் மதன்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்குமாவட்ட தி.மு.க செயலாளர் மணிமாறன், வர்த்தகர் அணி செயலாளர் ராமர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பேசுகையில், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றியம் மற்றும் ஒன்றிய செயலாளருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரிசளிக்கப்படும்.

    விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. கடந்த விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் தான் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுதந்தோம். வருகிற எம்.பி. தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு திருமங்கலம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுதரவேண்டும் என்றார்.

    தெற்குமாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர்கள் அழகா்சாமி, பால்பாண்டி, ராஜசுலோசனா, பொருளாளர் தேசிங்குராஜன், மாவட்ட பிரதிநிதிகள் ராதாகிருஷ்ணன் ஹரிகரன், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெர பஞ்சோலை ஊராட்சி பாலப்பட்டி புதூரில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது .

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தங்கபழனி பாலுசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி கவுன்சிலர் சித்ரா சரவணன் முன்னிலை வைத்தார். மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் வரவேற்றார். மருத்துவ முகாமில் முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்தி ரைகளை வழங்கினார்கள்.

    முகாமில் பொது மக்க ளுக்கு இலவச முழுக்கவசம் வழங்கப்பட்டு பொது மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சசிகலா, பரமேஸ்வரி, சுப்பிரமணி உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • கரூரில் நாளை இலவச சித்தா, ஓமியோபதி மருத்துவ முகாம் நடைபெறுகிறது
    • நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

    கரூர்:

    இந்திய மருத்துவம் மற் றும் ஓமியோபதித்துறை கரூர் மாவட்டம் சார்பில் மக்களைத்தேடி தமிழ் மருத்துவம் இலவச சிறப்பு சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ முகாம் நாளை (10-ந்தேதி, திங்கட்கிழமை) கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பழைய வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.இதுதொடர்பாக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலு–வலர் டாக்டர் எஸ்.காம–ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதா–வது:-

    நாளை கரூர் மாவட்ட தலைமை சித்த மருத்துவ மனையில் இலவச சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, வயிற்றுப்புண், கோடை கால நோய்களான மூலம், பவுத்திரம், வைரஸ் காய்ச் சல், சிறுநீர் தொற்று, மலக்கட்டு, சளி, இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல், சைனஸ் பிரச்சினை,தூக்கமின்மை, மஞ்சள் காமாலை, மூட்டு வலி–கள், தைராய்டு நோய், பெண்களின் மாதாந்திர தீட்டு பிரச்சினை, கருப்பை–கட்டி, சினைப்பை நீர்க் கட்டி, அதிக உதிரப்போக்கு, நரைமுடி, முடி உதிர்தல், உடல் பருமன், குழந்தை–யின்மை இப்படி சகல நோய்களுக்கும் சிறப்பு பரி–சோதனை மற்றும் மருந்து–கள் இலவசமாக வழங்கப்ப–டும்.

    கரூர் மாநகராட்சி ஆணையர், கரூர் அரசு மருத்துவ கல்லூரி டீன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்க உள்ளனர். எனவே இந்த முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
    • சுகாதார ஆய்வாளர் ராகவன் பரிசோதனைகளை செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் பயோமெடிக்கல் துறையின் சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உடல் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.

    இந்த முகாமில் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் செந்தட்டிகாளை, சுகாதார ஆய்வாளர் ராகவன் மற்றும் மருத்துவ குழுவினர் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல், கண், ரத்த பரிசோத னைகளை இலவசமாக செய்தனர்.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பயோமெடிக்கல் துறை தலைவர் மணிகண்டன், பேராசிரியர்கள் பபிதா தங்கமலர், கிருத்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கரூரில் இலவச மருத்துவ முகாம் வருகிற 10ந் தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை நடக்கிறது
    • வெள்ளைபடுதல், கர்ப்பப்பை கட்டி, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கரூர்,

    மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவனையில் மக்களை தேடி மருத்துவ முகாம் வருகிற 10ந் தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை நடக்கிறது. இலவச சிறப்பு சித்தா மற்றும் ஓமியோ மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, வயிற்று புண், உடல் பருமன், மலக்கட்டு, மூட்டு வலி, தைராய்டு, பொடுகு, கரப்பான், மூலம், பவுதிரம், வெள்ளைபடுதல், கர்ப்பப்பை கட்டி, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலாளர் தலைமை தாங்கினார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு சமையல் கேஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்பட பல்வேறு ஆகிய மாவட்ட மக்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    இங்கு கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலா ளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலை துணை மேலாளர் சரத் சந்திரா, சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், அதனைத் தொடர்ந்து கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே அதிநவீன தண்ணீர் வெளியேறி அணைக்கும் பயிற்சியும் மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது,

    தொழிற்சாலை பாதுகாப்பு துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலுவ லர்கள், தொழி லாளர்கள், ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும்போது விழிப்பு ணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கப்பட வேண்டும் உயிர் காக்கும் கருவிகள் அணிந்து கொண்டு பணி புரிய வேண்டும் என்றார், முகாமில் கேஸ் ஏஜென்சி மேலாளர் முருகேசன்,கருப்பூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பழகன், தீயணைப்பு வீரர்கள், பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் தொழிற்சாலை மேலாளர் சிவராம கிருஷ்ணன் பயிற்சி அளித்த போது எடுத்த படம் அருகில் இணை இயக்குனர் சபீனா, உள்ளார்.

    ×