search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223314"

    • அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
    • அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அடுத்த குள்ளே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரேவதி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

    இதில் வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

    சிறிது நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் சென்று பார்த்த போது வீட்டின் உள் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை கதவு மற்றும் வீட்டில் உள்ளே இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெட்டிக்கடைக்கு முதியவர் தீ வைத்துள்ளார்
    • போலீசார் தேடி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 35). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்(65) என்பவர், கலியபெருமாளின் பெட்டிக்கடைக்கு வந்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கு வந்த அவர், ரேஷன் அட்டையை அங்கு வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார். அதற்கு கலியபெருமாள், அவர் அங்கு ரேஷன் அட்டையை வைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து ெசல்லாததால், கலியபெருமாள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இந்த பெட்டிக்கடை தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பெட்டிக்கடைக்கு சுப்ரமணியன் தீ வைத்தது போன்ற காட்சி, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை பார்வையிட்ட போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியனை தேடி வருகின்றனர்."

    • இரு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது
    • ரூ. 2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

    கரூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி ஒத்தக்கடை பகுதியில் தங்கராசு மற்றும் சக்திவேல் ஆகியோர் அருகருகே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில்இவர்களது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் தீ பரவாமல் இருக்க அருகில் உள்ள வீடுகளில் தண்ணீரை பீச்சியடித்தனர்.

    இந்த விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 15 ஆயிரம்ே ரொக்க பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறுகின்றனர்,

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ எப்படி பிடித்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்தில் பாதிக்க ப்பட்ட குடும்பத்தினரை நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் கவுண்டம்பட்டி அன்பழகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சரக்கு ஆட்டோவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • கரூர் பஸ்நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது

    கரூர்

    கரூர் அருகே உள்ள செட்டிபாளையத்தில் இருந்து நேற்று மதியம் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் ஏற்றிக்கொண்டு கரூருக்கு ஒரு சரக்கு ஆட்டோ வந்துள்ளது. கரூர் பஸ்நிலையம் அருகே கோவை சாலையில் வந்து கொண்டிருந்த போது சரக்கு ஆட்டோவின் பின்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கவனித்த சரக்கு ஆட்டோ டிரைவர் வண்டியை நிறுத்தி, பார்த்தபோது செல்ப் மோட்டார் மற்றும் என்ஜின் வயர்கள் தீ பிடித்து எரிந்தன. இதனையடுத்து சரக்கு ஆட்டோ டிரைவர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் விரைந்து வந்து சரக்கு ஆட்டோவில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது"

    • கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
    • குளச்சல் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் அசின். இவர் தனது நண்பருடன் காரில் கருங்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் பாலூர் பகுதியில் வரும்போது திடீரெனை முன்பக்கம் இருந்து புகை வந்து உள்ளது. உடனடியாக அவரும், அவரது நண்பரும் காரை நிறுத்திவிட்டு இறங்கி விட்டனர். சிறிது நேரத்தில் காரில் தீப் பிடித்தது. அப்பகுதியில் கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    மேலும் குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    கோவை:

    தீபாவளி நாட்களில், பட்டாசு வெடி விபத்து ஏதாவது நடந்தால் அதனை சரி செய்ய தீயணைப்பு படையினர் தயாராக இருப்பார்கள். ஆனால், நேற்று பட்டாசு வெடி விபத்துகள் எதுவும், பெரியளவில் நடக்கவில்லை.

    ஆனால், அவினாசி ரோடு பழைய மேம்பாலம் அருகே உள்ள கடலைக்கார சந்து எலக்ட்ரிக்கல் கடையில், நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடைகள், வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள அந்த பகுதியில், தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்களும், குடியிருப்போரும் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடினர். இதுகுறித்து உடனே தெற்கு தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் காந்திபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு வாகனமும் உதவிக்கு வரவழைக்கப்பட்டது.

    வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகி விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென இவர்களின் கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.
    • சந்திரசேகரன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது சகோதரர் செல்லப்பாண்டியன். இருவரும் இசை கலைஞர்கள். அருகருகே கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை திடீரென இவர்களின் கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். மேலும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    இது குறித்து தஞ்சை மற்றும் திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 2 கூரை வீடுகள் முழுவதும் எரிந்து விட்டது.

    இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது.

    இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணத்திற்காக வீடு தீப்பற்றி எரிந்தது என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

    • நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது.
    • நாங்குநேரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிபட்டி செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    திடீர் தீ

    இந்த பயிற்சி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது. அப்போது காற்று வீசியதால் காய்ந்து கிடந்த சறுகுகளில் தீப்பற்றி மளமளவென பரவியது.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து நாங்குநேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மூலக்கரைப்பட்டி போலீசாரும் விரைந்து வந்தனர்.

    கட்டுக்குள் வந்தது

    ஆனால் காட்டுத்தீ நள்ளிரவு வரையிலும் தொடர்ந்து வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவி வந்ததால் திசையன்விளையில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு வண்டியுடன் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் விடிய விடிய பற்றி எரிந்த தீயை இன்று அதிகாலை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை 8 மணி அளவில் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

    • நேற்று இரவு தங்கள் வீடுகள் முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு வழக்கம் போல தூங்க சென்றனர்.
    • அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பிச்சனார் தோப்பு பகுதியில் முருகன், சக்திவேல், பேச்சு முத்து ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

    இவர்கள் நேற்று இரவு தங்கள் வீடுகள் முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு வழக்கம் போல தூங்க சென்றனர்.

    இந்நிலையில் அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் சமுதாய கொடியும், மர்மநபர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள் அருகில் உள்ள மேலகோட்டைவாசல் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த நல்லபெருமாள் என்ற ராஜா என்பவரது லோடு ஆட்டோ மற்றும் ராமர், கணேசன் ஆகியோரது 2 கார்களின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து உள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மேல பள்ளம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (வயது 42). வைக்கோல் வியாபாரி.

    இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான டெம்போவில் வைக்கோல் பாரம் ஏற்றினார். பின்னர் அந்த டெம்போவை புலியூர் குறிச்சி அருகே சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.அதிகாலையில் அவரது டெம்போவில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் ஜெகன் ராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைக்கோல் போரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் டெம்போ எரிந்து நாசமானது.

    இது குறித்து ஜெகன் ராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வைக்கோல் பாரத்திற்கு யாராவது தீ வைத்தார்களா அல்லது மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது.

    • 20 மாடுகளுக்கு காயம்
    • இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சேக்கல் மடத்து ஏலா பகுதியைச் சேர்ந்தவர் கமலாம்பிகா (வயது 45).

    இவர், அப்பகுதியில் பசுமாட்டுப் பண்ணை வைத்துள்ளார். இவரது பண்ணையில் உள்ள கொட்டகையில் சுமார் 22 பசுக்களும், 5 கன்றுகளும் உள்ளன. இந்தப் பசுக்களை பராமரித்தல் மற்றும் கறவை செய்வதற்கு ஒரு வட இந்திய குடும்பத்தினரும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

    நேற்று அதிகாலையில் வழக்கம் போல் அந்தக் குடும்பத்தினர் பசுக்களி லிருந்து பால் கறந்து விட்டு, பின்னர் தண்ணீ ரும், தீவனமும் வைத்து விட்டு பண்ணை கொட்டகை அருகிலுள்ள தங்களது குடி யிருப்பில் சென்று தூங்கி யுள்ளனர்.

    இந்நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் கொட்டகையின் கூரை தீ பிடித்து எரிவதை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பார்த்து கூச்சலிட்டதுடன், ஓடி சென்று பண்ணை யை பரிமரிக்கும் குடும்பத்தி னரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அனைவருமாக சேர்ந்து தீயை அனைத்து பசுக்களையும் கன்றுகளை யும் மீட்டுள்ளனர். இச்சம்ப வத்தில் 20 பசுக்கள் தீக்கா யம் அடைந்தன.

    இதையடுத்து தகலறிந்த பசுக்களை பராமரிக்கும் தனியார் கால் நடை மருத்து வர் மற்றும் ஓய்வு பெற்ற அரசு கால்நடை மருத்துவர் ஜாண் கிறிஸ்டோபர் ஆகியோர் விரைந்து வந்து தீக்காயமடைந்த பசுக்க ளுக்கும், கன்றுகளுக்கும் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து நாகர்கோவி லில் இருந்து கால்நடை அவசர மருத்துவக் குழு ஆம்புலன்சுடன் விரைந்து வந்து காயமடைந்த பசுக்க ளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இது குறித்து மருத்துவக் குழுவினர் கூறும் போது, பசுக்களுக்கு தேவையான சிகிச்ைசகள் அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றனர். சம்பவ இடத் திற்கு திற்பரப்பு கிராம நிர்வாக அலுவலர் நவ நீதன் மற்றும் வார்டு உறுப்பி னர் ராஜப்பன் ஆகி யோர் நேரில் சென்று காய மடைந்த பசுக்களை பார்வையிட்டனர்.

    இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படு கிறது. கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ள மின் விசிறிகளின் இணைப்பி லிருந்து மின்கசிவு ஏற் பட்டு, கொட்டகையின் உள்பக்கம் குளிர்ச்இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படு கிறது.இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படு கிறது.க்காக போட்டப்பட்டிருந்த தென்னை ஓலைகள் தீ பரவியுள்ளதுடன், தீயில் எரிந்த தென்னை ஓலைகள் பசுமாடுகளின் மீது விழுந்து மாடுகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மின்சாரம் தடைபட்டதால் பரபரப்பு
    • மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் இருந்த மின்இணைப்பில் இருந்து நேற்று இரவு திடீரென தீ பொறிகள் வந்தது.

    இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    உயர் மின்னழுத்தத்தின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு சில அலுவலகங்களில் இன்று காலை மின்சாரம் தடைப்பட்டது.

    மதியம் வரை மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    ×