search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது
    • உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட குலால்பாடி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு கலசப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் பேசினார்.

    ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ஏ.கே.மூர்த்தி, ரமேஷ், நகர செயலாளர் ராதா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசை பொதுமக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு யூனியன் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், கொரியர் கணேசன் வாடிப்பட்டி காளிதாஸ், வாடிப்பட்டி ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சாமிநாதன் வரவேற்றார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி போன்ற பொது மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார்.இவற்றையெல்லாம் முடக்கி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுதான் தி.மு.க. அரசின் சாதனையாகும். இதனால் மக்களுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது.

    தி.மு.க. அரசை பொது மக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை. தி.மு.க. அரசின் அராஜக போக்கை கண்டு பிரதமர் ஆட்சியை கலைத்து விடுவார் என்பதை தடுப்பதற்காகவே உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தார். ரூ.600 கோடியை செலவழித்து ஈரோடு கிழக்கில் பெற்ற வெற்றியானது ஜனநாயகத்தின் படுகொலை யாகும். எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி மகத்தான வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேசுவரன், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ராசு, கூட்டுறவு சங்க தலைவர் மலர் கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கி துணைத் தலைவர்-கிளை செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.

    • இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
    • மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் என்று எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதாவின் 75-வது நாள் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. பேசும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது-. நீர்தேர்வு ரத்து, மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் என்று எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர்கள் அமரநாதன், சொக்கலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட இணைச் செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முனிவெங்கடப்பன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் சாகுல்ஹமீது, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி நன்றி கூறினார்.

    • முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.
    • முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.

    ஓசூர் முனீஸ்வர் நகர், ரிங் ரோடு சந்திப்பில் நடந்த இக்கூட்டத்திற்கு மாநகர தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, அமைப்பு செயலாளர் சிங்காரம் மற்றும் கலைமாமணி சிவன் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும் இதில், மாநில, மாவட்ட, மாநகர ,ஒன்றிய நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழாவை யொட்டி, ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. முடிவில், மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.

    • கண்டனூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் நடந்தது.

    முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.கண்டனூர் பேரூராட்சி செயலாளர் சேகர் வரவேற்றார்.

    மாவட்ட செயலா ளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    வைகை செல்வன் பேசுகையில், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்கும் இயக்கம் அ.தி.மு.க.. இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த 3 நாட்களில் பீனிக்ஸ் பறவையாய் எழுச்சியோடு இங்கே கூடியுள்ளோம். தி.மு.க அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மாசான், சுப்பிரமணியன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நருவிழி கிருஷ்ணன், துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், காரைக்குடி நகர்மன்ற கவுன்சிலர்கள் ராம்குமார், அமுதா, கனகவள்ளி, ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.நகர தலைவர் அருள்ஜோதி நன்றி கூறினார்.

    • 7-வது நிகழ்ச்சியாக நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம், மார்ச் 6-

    ராஜபாளையம் தொகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் லியோனி தலைமையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி. முன்னிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் செட்டியார்பட்டி கலை யரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்கு சாட்சி ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி தான். தொடர்ந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

    திண்டுக்கல் லியோனி பேசுகையில், பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியது தி.மு.க. தான். பெண்கள் முன்னேற்றத்திற்காக கட்டணமில்லா பஸ் வசதி, புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் அதிகளவில் பெண் மேயர்களை உரு வாக்கிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி ஆகும் என்றார்.

    கூட்டத்தில் நகர செயலா ளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாணவரணி அமைப்பா ளர் வேல்முருகன், துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேல், விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிச்செல்வம், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ராம.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்ஜெட் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் எம்.எஸ்.ஷா பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவது உறுதி. தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் வாரிசு அரசியல் நடத்தி வருகிறது. இதனால் அந்த கட்சிகளின் தலைமைக்கு அவர்களது வாரிசுகளே வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் வாரிசுகள் 150 கோடி இந்திய மக்கள் தான். நாட்டு மக்களுக்காக பிரதமர் பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்காக பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கி உலக அரங்கில் வலிமை மிக்க நாடாக இந்தியாவை மாற்றி வருகிறார்.

    சாதாரண, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை பயன்பெறுவார்கள்.

    உலகமே போற்றும் வகையில் சுய சார்பு இந்தியாவாக மோடி மாற்றி வருகிறார்.

    உள் நாட்டிலேயே ரெயில் பெட்டிகள், விமானங்கள், விமான உதிரி பாகங்கள், நவீன எந்திரங்கள் போன்றவை தயாரிக்கப்பட் டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பொருளாதார பிரிவு மாவட்டத்தலைவர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். 

    • சாயல்குடி அருகே காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது.
    • வட்டாரத் தலைவர் (பொறுப்பு) சிக்கல் நூருல் அமீன் நன்றி கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட பொறுப்புக் குழு தலைவருமான மலேசியா பாண்டியன் தலைமை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர் மாநில பொதுச் செயலாளர் தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், கோபால் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாவட்ட சேவா தள தலைவர் கணேசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன், சிறுபான்மை மாநில செயலாளர் ஜெய்னுல் ஆலம், வழக்கறிஞர் சரவணா காந்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்னேசுவரன் ஆகியோர் பேசினர். வட்டாரச் செயலாளர் கனி வரவேற்றார். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறப்பு பேச்சாளர் அலிம்அல் புஹாரி சிறப்புரை ஆற்றினர்.

    கடலாடி தெற்கு வட்டாரத் தலைவர் அப்துல் சத்தார், கடலாடி மேற்கு சுரேஷ் காந்தி, நரிப்பையூர் ஞானசேகரன், முன்னாள் வட்டாரத் தலைவர் சேசு மனோகரன், சாயல்குடி நகர தலைவர் காமராஜ், மாவட்ட செயலாளர்கள் போஸ், கலைச்செல்வன், சகாயராஜ், சையது இப்ராஹிம், அமிர்தராஜ், கொக்காடி, கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டாரத் தலைவர் (பொறுப்பு) சிக்கல் நூருல் அமீன் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது இதற்கு உதாரணம் இடைத் தேர்தலில் எடப்பாடி சந்திக்க தயாராக உள்ளார்.
    • அ.தி.மு.க. மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கூட்டத்தை சிறப்பான முறையில் செயல்பட்டு தனி நபராக நின்று நடத்திய மாவட்ட மாண வரணி செயலாளர் மனோகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாகர்கோவில், செம்மாங் குடி ரோட்டில் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில், தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது, தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதா வது:-

    அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது இதற்கு உதாரணம் இடைத் தேர்தலில் எடப்பாடி சந்திக்க தயாராக உள்ளார். அ.தி.மு.க.வை, இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது. அப்படி முடக்க நினைத்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தி ருக்கும், ஆனால் சரிந்து விட்டது. எனவே தான் அ.தி.மு.க.விற்கு துரோகம் நினைத்தவர்களுடன் இனி ஓட்டும் உறவு கிடையாது என எடப்பாடி கூறி விட் டார்.

    நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க.வில் இருந்தபோது அவருக்கு உடல்நலம் சரி யில்லாமல் ஏற்பட்டது. அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சைக்கு 27 லட்ச ரூபாய் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது. நான்தான் கட்டினேன். அதே நாஞ்சில் சம்பத் இன்று தி.மு.க.வில் உள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார். தமிழக முதல்வர் தொலை பேசியில் நலம் விசாரிக்கி றார். இதுதான் தி.மு.க.வின் நிலை. அ.தி.மு.க. சோதனை காலத்திலும் தலை நிமிர்ந்து நிற்கிறது. இதற்கு காரணம் அடிமட்ட தொண்டன். ஆனால் தி.மு.க. அமைச்சர் தொண்டனை கல்தூக்கி எறிகிறார். இந்த காட்சியை எங்காவது பார்க்க முடி யுமா. இதுதான் தி.மு.க.வின் லட்சணம். தமிழக சபாநாயகர் குமரி மாவட்ட அதிகாரிகளின் மிரட்டி ராதாபுரம் கால்வாயில் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் தண்ணீர் திறந்து விட வைத்துள்ளார். இதனால் அஞ்சுகிராமம், புத்தளம் பகுதியை சேர்ந்த கடை மடை பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வரு கின்றனர். இவ்வாறு குமரி விவசாயிகளை வஞ்சிப்பது சபாநாயகருக்கு அழகல்ல.

    குமரி மாவட்டத்தை பொறுத்த அளவில் வெள் ளத்தால் சேதம் அடைந்த குளங்கள் இப்போதும் சாக்கு மூட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளது. சாலைகள் படுமோசமாக மக்கள் பயன்படுத்த முடி யாத அளவு உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டாகியும் இதுவரை இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை.குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கூட்டத்தை சிறப்பான முறையில் செயல்பட்டு தனி நபராக நின்று நடத்திய மாவட்ட மாண வரணி செயலாளர் மனோகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், அமைப்புச் செயலாளர் பச்சைமால், தலைமைக் கழக பேச்சாளர்கள் குமுதா பெருமாள், வைகை பாண்டியன் ஆகியோர் பேசி னார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அவைத் தலைவர் சேவியர் மனோகரன், இணைச் செய லாளர் சாந்தினி பகவதி யப்பன், பகுதி செயலா ளர்கள் வழக்கறிஞர் ஜெய கோபால், வழக்கறிஞர் முருகேஷ்வ ரன், ஜெபின் விசு, ஒன்றிய செயலாளர் ஜெஸீம், ஆர ல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்து குமார், மாநகராட்சி கவுன்சி லர்கள் அக்ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அனிலா சுகு மாறன், பொதுக்குழு உறுப்பி னர் சகாயராஜ், குளச்சல் தொகுதி பொறுப்பாளர் ஆறுமுக ராஜா, குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர் சந்துரு, நிர்வாகிகள் ெரயி லடி மாதவன், வடிவை மகாதேவன், மாவட்ட பிரதிநிதி ரபீக், தோவாளை வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    • மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத்தில் 2 இடங்களில் நடக்கிறது.
    • குமரி மாவட்டத்தில் சிதலம் அடைந்து கிடைந்த 100 கோவி லுக்கும் ரூ.5 கோடியே 83 லட்சத்தை தமிழக முதல்-அமைச்சர் ஒதுக்கி சிதலம் அடைந்த கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்பொதுக்கூட்டம் நேற்று மாலை நாகர்கோவில் நாகராஜா கோவில் தேர்மூடு பகுதியில் நடந்தது.

    நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த் வரவேற்றார். அவைத்தலைவர் பன்னீர் செல்வம், துணை மேயர் மேரிபிரின்சி லதா, துணை செயலாளர்கள் வேல்முருகன், ராஜன், மண்டல தலைவர் ஜவகர், சேக்மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் பாரி பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத்தில் 2 இடங்களில் நடக்கிறது. மத்திய அரசு, பள்ளிகளில் இந்தி படித்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும் என்று தமிழோடு சேர்த்து இந்தியையும் படிக்கவேண்டும் என்று உத்தர விட்டது. அதை எதிர்த்து கருணாநிதி 14 வயதில் போராட்டம் நடத்தினார். பல தமிழர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டனர்.

    அவர்களது நினைவாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25-ந்தேதி வீர வணக்க நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தியாகிகளை பற்றி பேசு வதற்கு வாய்ப்பு பெற்ற தற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியா குமரி மாவட்டத்தில் இந் துக்கு எதிரி தி.மு.க. என ஒரு பிம்பத்தை பாரதிய ஜனதா கட்சியினர் உருவாக்கி வருகிறார்கள்.

    ரூ.1 கோடி ஒதுக்கீடு

    பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மேம்பாட் டிற்கு தமிழக முதல்- அமைச்சர் அதிக நிதியை ஒதுக்கி யுள்ளார். ஒரு காலத்தில் நாகராஜா கோவிலுக்குள் செல்லமுடியாது தாழ்த்தப் பட்டவர்கள், ஒடுக்கப் பட்டவர்கள் என்று சொல் லப்பட்டதால் நம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. காலில் செருப்பு போட முடியாது. கோவிலுக்குள் செல்ல முடியாது, கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது இதுதான் ஒரு காலத்தில் இருந்தது. குல தொழிலை செய்ய வேண்டும் என்று ராஜாஜி கொண்டு வந்தார். அந்த நிலையை மாற்றியவர் தான் பெரியார்.

    இன்று திராவிட மாடல் ஆட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு பணி செய்வது நமக்கு கிடைத்த வாய்ப்பு. யார்,யார் எப்படி செயல் பட்டுக் கொண்டிருக்கி றார்கள், மாநிலத்தில் என்னென்ன நடக்கிறது என்று தமிழக முதல்-அமைச்சர் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். இந்து என்றால் பாரதிய ஜனதா என்ற நிலைப்பாட்டை பாரதிய ஜனதாவினர் மாற்றிக் கொள்ள வேண்டும். நாகராஜா கோவில் குட முழுக்கு நடத்த ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது குமரி மாவட்டத்தில் சிதலம் அடைந்து கிடைந்த 100 கோவி லுக்கும் ரூ.5 கோடியே 83 லட்சத்தை தமிழக முதல்-அமைச்சர் ஒதுக்கி சிதலம் அடைந்த கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் குமரி மாவட்டத் திற்கு கோவில் புனரமைப் புக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் இந்தி திணிப்பிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ெரயில்வே, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட மத்திய அரசு துறையில் உள்ள வேலைவாய்ப்பில் தமிழர் ஒருவருக்கு கூட வேலை இல்லை.

    இதனால் வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் தமிழக முதல்-அமைச்சர் சுட்டிக் காட்டுகின்ற வேட்பா ளரை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்றார்.

    பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ராஜரெத்தினம், மாநில கலை இலக்கிய செயலாளர் தில்லைசெல்வன், மீனவரணி மாநில துணைச் செயலாளர் பசலியான், செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • முடிவில் நகர தலைவர் சன் சுப்பையா நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நகர தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார். நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்புரையாற்றினார். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் துணை வேந்தருமான சபாபதி மோகன், தலைமை கழக பேச்சாளர் முகவை ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இதில் மாநில மாணவரணி துணை செயலாளர் பூர்ணசங்கீதா, தேவகோட்டை நகர செயலாளர் பாலமுருகன், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர்மன்ற உறுப்பினர்கள் மைக்கேல், கார்த்திகேயன், சித்திக், ஹேமலதாசெந்தில், தனம்சிங்கமுத்து, பூமிநாதன், நாச்சம்மை, நகர துணை செயலாளர் கண்ணன், வட்ட செயலாளர்கள் பாண்டி, ரமேஷ், விஜயகுமார், முகமதுகனி, மாவட்ட பிரதிநிதி சேவியர் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சன் சுப்பையா நன்றி கூறினார்.

    • மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டம் நடந்துது.
    • இந்த நாட்டில் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழியை காப்பாற்று வதற்காகவும் பலர் தியாகங்கள் செய்துள்ளனர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் முகமது யாசின் தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்த தினமான ஜனவரி 25 மொழிப்போர் தியாகி தினமாக அறிவித்த வர் கலைஞர் கருணா நிதி. இந்த நாட்டில் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழியை காப்பாற்று வதற்காகவும் பலர் தியாகங்கள் செய்துள்ளனர் என்றார்.

    கூட்டத்தில் சோழ வந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன், வல்லாள பட்டி சேர்மன் குமரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திர பிரபு, ராஜராஜன், பாலகிருஷ்ணன், பழனி, வல்லாளபபட்டி பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×