search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223471"

    • பறக்கை அருகே உள்ள மேலசெட்டியார் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 51) கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம்
    • சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    பறக்கை அருகே உள்ள மேலசெட்டியார் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 51) கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் ,ருந்து வந்தது. குடிப்பழக்கம் அதிகமாகி கடந்த சில வருடங்களால் நோயால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வீட்டில் முன் காலில் இருந்து சேகர் வயிற்று வழி என சத்தம் போட்டு கொண்டிருந்தார். உடனே அவரது மனைவி பகவதியம்மாள் ஒரு ஆட்டோ பிடித்து நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏதோ விஷமருந்து சாப்பிட்டு உள்ளார்.ஆதலால் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சென்றபோது சேகரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி பகவதியம்மாள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • புதிய மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டுமென்று தன் தாயாரிடம் பணம் கேட்டுள்ளார்.
    • தாயார் ரஞ்சிதம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் அருகே உள்ள இடையன்வி ளையை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 22).

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சதீஷ்குமார், புதிய மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டுமென்று தன் தாயாரிடம் பணம் கேட்டுள்ளார். அவர், பணம் கொடுக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதை பார்த்த குடும்பத்தினர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். பின்னர் மீண்டும் அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இது குறித்து அவரது தாயார் ரஞ்சிதம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த மணக்கரை அவரிவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஐயப்பகோபு (வயது 46).

    எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையில் கடந்த 4-ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். ஐயப்பகோபுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஐயப்பகோபு போதையில் தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐயப்பகோபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி துர்கா (36) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட வேதனையால் விபரித முடிவு
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ராஜா க்கமங்கலம் அருகே உள்ள தம்மத்துக் கோணம் சத்ரபதி சிவாஜி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 54). இவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (47).

    இவர்களுக்கு அருள்ஜோதி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் மகன் அருள்ஜோதி மட்டும் தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இர வில் உணவு அருந்தியதும் செல்வ குமார் மற்றும் புவனேசுவரி தங்கள் அறைக்கு தூங்கச் சென்று விட்டனர். நேற்று காலை அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வரவில்லை.

    இதனால் பதட்டமடைந்த அருள்ஜோதி, அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு பெற்றோர் பிண மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட செல்வ குமார், புவனேசுவரி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து கணவன்-மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில வருடங்க ளாக செல்வகுமார் நோயால் அவதிப்பட்டு வந்ததும் அதில் ஏற்பட்ட வேதனையில் தான் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை முடிவை எடுத்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      நாகர்கோவில்:

      பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ் (வயது21).

      இவர் திடல் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரி யில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சுபிதா கிரேஸ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

      இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

      பின்னர் மேல் சிகிச்சை க்காக சுபிதா கிரேஸ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிதா கிரேஸ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

      இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்ப ட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். முதல் கட்ட விசாரணை யில் மாணவி சுபிதா கிரேஸ் கல்வி கட்டணம் செலுத்த வில்லை என்று கூறப்படு கிறது.

      இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

      சுபிதாகிரேஸ் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள் ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.இதை யடுத்து உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

      • சில வருடங்களாக வாலிபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
      • வாலிபரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

      பல்லடம் :

      பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நாகராஜ்(வயது 30).இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

      இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தாயார் மயிலாத்தாள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

      • ஏகப்பட்ட கடன்கள் வாங்கி இருந்தார். இதனால் மணம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது
      • சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்துவிட்டார்.

      கன்னியாகுமரி :

      குலசேகரம் அருகே பொன்மனை மங்கலம் சாணல்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 56) தொழிலாளி. இவருக்கு சந்திரகலா (50) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

      இவர் ஏகப்பட்ட கடன்கள் வாங்கி இருந்தார். இதனால் மணம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் மனைவி வெளியே வேலைக்கு சென்று இருந்தார்.இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். ஜாண்சன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்துவிட்டார். சந்திரகலா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

      • வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
      • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை

      கன்னியாகுமரி:

      இரணியல் அருகே குளுமைக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 64) இவருக்கு மரியபுஷ்பம் (55) என்ற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

      கருத்து வேறுபாடு காரணமாக சுமார் இருபது வருடங்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

      இந்த நிலையில் ஸ்ரீவை குண்டம் பகுதியை சேர்ந்த உறவினர் செல்வி (52) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு சிபில் (21) என்ற மகன் உள்ளார். சிவபெருமாளுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

      இந்த நிலையில் அவர் உடல்நலம் சரியில்லாமல் அவதி பட்டார். அதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.

      மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து அவரது மகன் சிபில் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
      • இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

      சேலம்:

      சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.

      4 மாணவிகள்

      இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

      உடனடியாக அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      பரபரப்பு தகவல்

      இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 4 மாணவிகளும் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

      கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்லாமல் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

      கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனிடையே 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த 22-ந்தேதி விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாணவி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

      பின்னர் விசாரித்தபோது மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரிவிக்காமல் ஏத்தாபூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விடுமுறை நாளில் நேராக வீட்டிற்கு வராமல் தங்களின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் நீண்ட நேரம் விடுதியில் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.

      விஷம் குடித்தனர்

      இந்த நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய மாணவிகள், விடுதிக்கு பெற்றோர் வந்து விட்டு சென்றதை கேள்விப்பட்டனர். பெற்றோர், தங்களை அடித்து விடுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் மாலை எலிபேஸ்ட் வாங்கிக்கொண்டு விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது

      விடுதி ஊழியர்களிடம் விசாரணை

      மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கோமு- பேச்சியம்மாளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.
      • மனவேதனை அடைந்த கோமு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

      நெல்லை:

      கடையநல்லூர் அருகே உள்ள பேட்டை மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கோமு. இவரது மனைவி பேச்சியம்மாள்(வயது 26).

      இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கோமு அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் பேச்சியம்மாள் திருவேட்டநல்லூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

      இதனால் மனவேதனை அடைந்த கோமு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • திண்டுக்கல்லில் மாயமான வாலிபர் மதுரையில் விஷம் குடித்து இறந்தார்.
      • மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

      மதுரை

      திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளை பாண்டி மகன் முத்துவேல் (வயது 23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீெரன மாயமானார்.

      இதுபற்றி அவரது தாயார் சாந்தி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேலை தேடி வந்தனர்.

      இந்த நிலையில் மதுரை பாண்டி கோவில் நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

      அவரிடம் விசாரித்த போது, திண்டுக்கல்லில் மாயமான வாலிபர் அவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

      இதைத்தொடர்ந்து அவரது தாய் சாந்தி திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வந்தார். இந்த நிலையில் முத்துவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

      இதுதொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

      • வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொணடார்.
      • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ஈரோடு:

      ஈரோடு எல்லீஸ்பேட்டை ஏசுநாதர் கோவில் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் (58). இவரது மனைவி எலிசபத் (52). இவர்களுக்கு திருமணமாகி 30 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

      இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதேப்போல் சம்பவத்தன்றும் சாமிநா தனுக்கும், எலிசபத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

      இதில் ஆத்திரமடைந்த எலிசபெத் இனிமேல் நான் உங்களுடன் வாழ மாட்டேன் என்று கூறி தூங்க சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாமிநாதன் வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து எலிசபத் கேட்டபோது வீட்டை சுத்தம் செய்ய வைத்திருந்த டெட்டாலை எடுத்து குடித்து விட்டதாக சாமிநாதன் கூறினார்.

      இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எலிசபத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாமிநாதனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

      பின்னர் சாமிநாதன் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      சேலம் மாவட்டம் மேட்டூர் பி.என்.பட்டி, சின்னகவுர் பகுதியை சேர்ந்தவர் சிவன் (54). கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருணகிரிநாதர் தெருவில் வசித்து வருகிறார். சிவன் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

      இந்நிலையில் சிவன் சென்னிமலையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு கடந்த 9-ந் தேதி வந்து தங்கி இருந்தார். சம்பவத்தன்று மீண்டும் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவன் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார்.

      போலீசார் விசாரணை

      இது குறித்து அவர் தனது மகனிடம் கூறினார். இதனால் அதிர்ச்சடைந்த ஜெயக்குமார் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

      இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×