search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன்"

    • உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது.

    ரஷியா உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகளும் உக்ரைன் பகுதிகளில் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் உதவியுடன் இந்த போரில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது. ரஷியாவுக்கு வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

     

    உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் இல்லை என்று கூறும் புதின் மேற்கு நாடுகளால் உக்ரைன் வழியாக தங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெபோவா நோவோசெலிவ்கா [Stepova Novoselivka] iமற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நோவோபோக்ரோவ்ஸ்கே [Novopokrovske] ஆகிய இரண்டு கிராமங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

     

    ஆனால் உக்ரைன் ராணுவம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட பகுதிகளில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
    • உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.

    இதனால் அவ்விரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து தங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. குறிப்பாக ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.

    அப்படி சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப்பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

    அப்படி கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்படும் நபர்கள் உக்ரைன் நடத்தும் தாக்குதல்களில் பலியாவது தொடர் கதையாக உள்ளது.

    இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    அண்மையில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவுத்துறை இணை மந்திரி தாரக பாலசூரியா தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷிய அதிகாரிகளிடம் இதை பிரச்சினையாக எழுப்பியதாக இலங்கையில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    மேலும் போரில் காயமடைந்த இலங்கையை சேர்ந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தல், போர் முனையில் சிக்கி இருக்கும் இலங்கையை சேர்ந்தவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அனுப்பி வைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் இலங்கை அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு படையெடுத்தபோது உக்ரைன் விண்ணப்பம் செய்தது.
    • பேச்சுவார்த்தை தொடங்கிய போதும், முடிவடைய ஆண்டுகள் பல எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

    ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனின் பெரும் பகுதியை பிடித்துக் கொள்ள நினைக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    ரஷியாவின் படையெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள உக்ரைன், தங்களை ஐரோப்பிய யூனியனுடன் சேர்த்துக் கொள்ள கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தற்போது உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அனால இந்த பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மையால் "இது வரலாற்று தினம். ஐரோப்பிய யூனியனில் எங்கள் நாட்டின் கூட்டணி "புதிய அத்தியாயம்" எனத் தெரிவித்துள்ளார்.

    பெல்ஜியம் (சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைவர் பதவியை ஒரு நாடு ஏற்கும்) வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லஹ்பிப் "இது எங்கள் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணம். மேலும் எங்கள் உறவில் ஒரு மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

    உக்ரைனை தவிர்த்து மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளது. துருக்கி இணைவதற்கான பேச்சு வார்த்தை இரண்டு தசாப்தத்திற்கு மேலாக முடிவில்லாம் நீண்டது.

    ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையில் சரக்கு போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும். வரிவிதிப்பு, எனர்ஜி, சுற்றுச்சூழல், நீதித்துறை உரிமை, பாதுகாப்பு போன்றவற்றில் ஐரோப்பிய யூனியனின் 35 கொள்கைகளுக்கு ஏற்ப அதில் உள்ள நாடுகள் தங்களுடைய சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

    • மின்சார உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இன்று 8 ஏவுகணை மற்றும் 13 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா பார்வை உள்ளது.

    அந்த நகர் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் கட்டடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இடைவிடாமல் எரிசக்தி மற்றும் மின்சாரம் உற்பத்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் மின்சார உற்பத்தி திறனை இழந்துள்ளது. 16 ஏவுகணைகள் மற்றும் 13 டிரோன்கள் மூலம் எரிசக்தி மீது 8 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • குரூப் E பிரிவில் ஸ்லோவக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    இதில் குரூப் E பிரிவில் ஸ்லோவாக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியா வீரர் இவான் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பின் உக்ரைன் அணியின் மைகோலா 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதன்பின் 80வது நிமிடத்தில் ரோமன் எரிம்சக் இன்னொரு கோல் அடித்தார்.

    இதன்மூலம் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி உக்ரைன் வெற்றி பெற்றது.

    இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியை சந்தித்த உக்ரைன் அணி, தற்போது வெற்றி பெற்றுள்ளதால் அந்நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பின்லாந்து எல்லையில் ராணுவத் தளம் அமைத்து வீரர்களை குவித்து வைத்திருந்தது.
    • தற்போது உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்துள்ளதால் பெரும்பாலான துருப்புகளை திருப்பியுள்ளது.

    அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இன்னும் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் நேட்டோ படையில் சேர விருப்பம் தெரிவித்ததுதான். ஒருவேளை நேட்டோவில் இணைந்தால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது படைகளை நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளில் நிலைநிறுத்த முடியும்.

    அப்படி செய்தால் ரஷியா நாட்டிற்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என புதின் கருதினார். இதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து இரண்டு நாட்டிற்கும் இடையில் பாதுகாப்பு பகுதியாக வைத்துக் கொள்வதற்கான போர் தொடுத்ததாக கூறினார்.

    உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா, பின்லாந்து எல்லையிலும் ராணுவ தளங்களை அமைத்து வீரர்களை குவித்திருந்தது. இதனால் தங்கள் மீதும் போர் தொடக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு அண்டை நாடான பின்லாந்து கருதியது.

    இதனால் பின்லாந்து கடந்த 2024-ம் ஏப்ரல் மாதம் நேட்டோவில் இணைய விண்ணப்பித்தது. இதன் காரணமாக பின்லாந்து எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்தது. ஆயுதங்களையும் பின்லாந்து எல்லையில் மறைத்து வைத்திருந்தது.

    இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலைதான் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது பின்லாந்து எல்லையில் குவிக்கப்பட்டிருந்த துருப்புகளில் 80 சதவீதத்தை உக்ரைன் நோக்கி நகர்த்தியுள்ளதாக பின்லாந்து புலானாய்வுத்துறை கூறியதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் உபகரணங்களையும் நகர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    உக்ரைன் மீது தற்போது முழு வீச்சாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வீரர்கள் தேவை என்பதால் நகர்த்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    இதற்கிடையே கடந்த 2023-ல் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தது. ரஷியாவின் விமானங்கள் அடிக்கடி தங்களது வான் எல்லையில் தென்படுவதாக பின்னலாந்து அடிக்கடி குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.

    • வட கொரியாவுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    • ரஷியா, வட கொரியா இடையிலான உறவை மேம்படுத்தி வருகிறோம்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக வட கொரியா பயணம் மேற்கொள்கிறார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷிய போருக்கு ஆதரவு அளிக்கும் வட கொரியாவுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 844 நாட்களை கடந்துள்ள நிலையில், "உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு வட கொரியா ஆதரவாக இருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். ரஷியா மற்றும் வட கொரியா இடையிலான உறவை மேம்படுத்தி வருகிறோம்," என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    அதிபர் புதினின் வட கொரிய பயணத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இரண்டாம் உலக போரை தொடர்ந்து வட கொரியா உருவானதில் இருந்தே ரஷியா மற்றும் வட கொரியா இடையே நட்புறவு இருந்து வருகிறது.

    எனினும், கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷியா-உக்ரைன் போர் துவங்கியதில் இருந்து ரஷியா மற்றும் வடகொரியா இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்டு இருக்கிறது. இதனிடையே உக்ரைன் மீதான போருக்கு உதவும் வகையில், வட கொரியா சார்பில் 7000 கண்டெயினர்களில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டன.

    இதில் வெடி குண்டுகள், அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் உடனான போர் தீவிரம் அடைந்ததில் இருந்து, புதின் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர் நண்பர்களை தேடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

    • உக்ரைன்-ரஷியா இடையே இரண்டு ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.
    • உக்ரைன் எல்லைப் பகுதியில் பெரும்பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது.

    ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது திடீரென படையெடுத்தது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் கால்வாசி பகுதிகளை ரஷியா பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனில் அமைதி திரும்பவும், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்படவும் உலகத் தலைவர்களின் உதவிகளை நாடி வருகிறார்.

    அவ்வப்போது ரஷிய அதிபர் போர் நிறுத்தத்திற்கான ஒரு பரிந்துரையை முன்மொழிவார். அதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது. உக்ரைன் மண்ணில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறும்வரை புதின் உடன் நேரடி பேச்சு கிடையாது என்பதில் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக உள்ளார்.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வழங்கு ஆயுத உதவிகளை வைத்து ரஷியாவை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனில் அமைதி நிலவ ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக நாளை சுவிட்சர்லாந்தில் ஒன்றுகூடுகின்றனர்.

    இதில் ஈகுவேடார், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா அதிபர்கள் கலநது கொள்ள இருக்கிறார்கள். அதேபோன்று ஐப்பிரோப்பியாவின் பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கக்ப்படுகிறது.

    அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள இருக்கிறார். துருக்கி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரிகளை அனுப்புகிறது. இந்தியா, தென்ஆப்பிரிக்கா பொன்ற நாடுகள் அதிகாரிகளை பிரதிநிதியாக அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் ரஷியா கலந்து கொள்ளவில்லை. அமைதி பேச்சுவார்த்தையில் ரஷியா மற்றும் உக்ரைன் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என சீனா தெரிவித்துள்ளது.

    என்னவாக இருந்தாலும் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ மற்றும் போர் நிறுத்தம் ஏற்பட இந்த கூட்டத்தில் முதல்அடி எடுத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஷிய அதிபர் புதின் நேற்று, "உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட்டால், 2022-ல் தங்களுடைய பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து உக்ரைன் துருப்புகளை திரும்பப் பெற்றால் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய தாயர்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் புதினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • 2022-ல் ரஷியா தன்னுடன் இணைத்த பிராந்தியத்தில் இருந்து உக்ரைன துருப்புகள் வெளியேற வேண்டும்.
    • நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    அமைதிக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஜி-7 மாநாடு நடைபெறும் இத்தாலிக்கு சென்று தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் உக்ரைன் இரண்டு விசயங்களை செய்தால் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் என ரஷிய அதிபர் புதின் உறுதி அளித்துள்ளார்.

    ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிபர் புதின் பேசும்போது "ரஷியா தன்னுடன் 2022-ம் ஆண்டு இணைத்துக் கொண்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து துருப்புகளை திரும்பப்பெற தொடங்கினால், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை கைவிட முடிவு செய்தால் உடினடியாக போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட தயார். நாங்கள் அதை உடனடியாக செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் ஒன்று கூடி உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான திட்டத்தை வகுக்க உள்ளனர். அமெரிக்கா- உக்ரைன் இடையே 10 வருட பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் இருந்து போர் நிறுத்தம் குறித்த பரிந்துரை வந்துள்ளது. இதை உக்ரைன ஏற்குமா என்பது சந்தேகம்தான்?.

    • ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.
    • தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் பலர் கொல்லப்பட்டாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி,இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆயுத உதவியும் செய்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரஷியா மீது உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஜெர்மனி நாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஷியா மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி இருப்பது ஆபத்தான நடவடிக்கை ஆகும். மேற்கு நாடுகளை தாக்க நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை வேறு சில நாடுகளுக்கு ரஷியா வழங்கும்.

    எங்களுடைய நாட்டின் இயைாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால் ரஷியா தன்னை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றும். அணு ஆயுதங்களை பயன் படுத்தவும் தயாராக இருக்கிறோம். ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.

    எதார்த்தத்தை சமாளிக்க வேண்டும் என நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    2003-ம் ஆண்டு தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என ரஷியா அறிவித்தது. தற்போது ரஷியா இந்த நிலைமாற்றத்தில் மனம் மாறி உள்ளது.

    கடந்த வாரம் ரஷியா வெளியுறவு துறை மந்திரி செர்ஜிலால் ரோஸ் கூறும் போது தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாஸ்கோ திட்டமிட்டுள்ளது என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்கரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் ரஷ்யா எந்த சமரசமுமின்றி தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறது. உக்ரைனும், மேற்கு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்திக்க சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அங்கு உரையாற்றுகையில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    மேலும் ரஷ்ய படை திட்டமிட்டபடி உக்ரைனுக்குள் தொடந்து முன்னேறி வருவதாகவும், கார்கிவை கைப்பற்றுவது தங்களின் நோக்கமில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலாக இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதொரு இடைப்பட்ட பாதுகாப்பு பகுதியை ( BUFFER ZONE) உருவாக்குவதே தங்களின் திட்டமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    மேற்கு நாடுகளின் ஒன்றிணைந்த நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேரும் பட்சத்தில் உக்ரைன் வழியாக எளிதில் ரஷ்யாவுக்குள் நேட்டோ படைகள் வந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாலேயே இந்த போர் நடந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளுக்குமாக BUFFER ZONE உருவாகும் பட்ச்சத்தில் இந்த அச்சுறுத்தல் விலகும் என்பதாலேயே ரஷ்யா இந்த போரை அதை நோக்கி கொண்டு செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

    முன்னதாக சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.
    • உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போர் களத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் தனது நாட்டின் மீது வைத்த பாசத்தை அந்நாட்டு ராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     


    போர் மூண்டுள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கை அசைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான். கையில் உக்ரைன் தேசிய கொடியுடன் சிறுவன் தினமும் உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.

    அந்த வகையில், சிறுவனின் தேச பக்தியை பாராட்ட அந்த ராணுவ விமானி முடிவு செய்தார். அப்படியாக வழக்கமான ராணுவ பணிகளுக்கு இடையில், சிறுவன் கொடியுடன் நிற்பதை பார்த்த விமானி உடனே தனது ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.

    பிறகு, சிறுவனிடம் ஓடிச் சென்ற விமானி அவனிடம் நிவாரண பொருட்களுடன் மிட்டாய், பொம்மை மற்றும் உணவு உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார். சிறுவனின் தேச பக்தியை வெகுவாக பாராட்டிய விமானி, அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.



    ×