search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார்"

    • திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    கடந்த ஜூலை 6-ந்தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்திய அளவில் வைணவ பக்தர்களிடையே மிகவும் முக்கியமான திருக்கோவிலாக இக்கோவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருவட்டார் ஆதிகேச வப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்ப டுவது வழக்கம்.

    ஐப்பசி திருவிழாவின் முதல் நாளான நாளை (23-ந்தேதி) காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் திருக்கொடியேற்று நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், 2-ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்பவரம் கதகளி நடைபெறுகிறது.

    3-ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராய ணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு தட்ச யாகம் கதகளி ஆகியன நடக்கிறது. 4-ம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லாக்கில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி.

    5-ம் நாள் இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றுதல், தொடர்ந்து கருடவாக னத்தில் சுவாமி பவனி வருதல், நள சரிதம் கதகளி ஆகியனவும், 6-ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கதகளி ஆகியனவும், 7-ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி பல்லாக்கில் பவனி வருதல் தொடர்ந்து துரியோதன வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

    8-ம் நாள் இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 9-ம் நாள் இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், 10-ம் நாள் (நவம்பர் முதல் தேதி) காலை 6 மணிக்கு ராமாயாண பாராயணம், காலை 11 மணிக்கு திருவி லக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு தளியல் ஆற் றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.

    விழாவுக்குகான ஏற்பாடுகளை கோவில் நிர்வா கத்தினர் மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

    • கடந்த 19-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே போனவர் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்லம்மாளை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே முண்டப்பிலாவிளை, புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் அசோகன் இவருக்கு ரமணி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.மனைவியின் தாயார் செல்லம்மாள் (வயது 72) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்தார். செல்லம்மாள் தன் மகளின் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி அந்த பகுதியில் வெளியே சென்றுவிட்டு வருவது வழக்கம்,

    அதேபோல் கடந்த 19-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே போனவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடனே செல்லம்மாளின் மகள் ரமணி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். உற்றார், உறவினர்கள் வீடுகளிலும் தேடி பார்த்து எங்கேயும் காணவில்லை. உடனே திருவட்டார் போலீசில் ரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்லம்மாளை தேடி வருகிறார்கள்.

    • போலீசை கண்டதும் டெம்போ டிரைவர் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே குமரன்குடியில் இருந்து செம்மன் கடத்தப்படுவதாக திருவட்டார் தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருவட்டார் தாசில்தார் குமரன்குடி கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அதிரடியாக அந்த பகுதியில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது செங்கோடி அருகே காரியமங்கலத்துவிளை பகுதியில் டெம்போவில் சிலர் செம்மண் ஏற்றிகொண்டு இருந்தார்கள்.

    போலீசை கண்டதும் டெம்போ டிரைவர் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். கிராம நிர்வாக அதிகாரி ஜெகன் அருள் டெம்போவை கைப்பற்றி திருவட்டார் போலீசில் ஒப்படைத்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • 297 கிலோ குட்கா- ரூ.16,500 பறிமுதல்
    • கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக போலீசார் தொடர் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தொடர் நடவ டிக்கைகள் எடுத்து வரு கிறார்.

    இந்நிலையில் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் மற்றும் போலீசார் சாமியார்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் வேகமாக வந்துள்ளது.

    அதனை நிறுத்தி அதிலிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கேரள மாநிலம் நியமம் பகுதியை சேர்ந்த அன்வர்தீன் (வயது 34), ஹாஜாஹூசைன் (36) மற்றும் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த ஜோஜோ (35) என்பது தெரியவந்தது.

    மேலும் காரை சோதனை செய்தபோது குட்கா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. குட்காவை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிட மிருந்து 297 கிலோ குட்கா மற்றும் ரூ.16,500 பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்பு அவர்கள் மீது திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்குபதிவு செய்தார். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். குட்கா பதுக்கல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இவரது மனைவி 2 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே முளவிளை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஜோஸ் (வயது 38). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அனிதா 2 குழந்தைகளுடன் பிரிந்து அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

    மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மெர்லின் ஜோஸ் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் படுத்து இருந்தார்.

    இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மெர்லின் ஜோஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மீட்டு தரக்கோரி மனைவி போலீசில் புகார்
    • போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்து மாயமான பிர்லன்ஜோஸ் செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சூசக்குடிவிளை, பூந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெனிஷா (வயது 25). இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் பிர்லன்ஜோஸ் (28). இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கடற்படையில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது விசாகபட்டினத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்தார்.

    அதன்பிறகு உடல் சரியான பிறகு கடந்த மாதம் மீண்டும் விசாகப்பட்டினம் கடற்படை தளத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு குடும்பத்தா ருக்கு போன் செய்யவில்லை.

    நேற்று விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் எனது கணவர் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் வந்துசேரவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே எனது கணவரை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்து பிர்லன்ஜோஸ் செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள். பிர்லன்ஜோஸ் மாயமானதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

    • பெண் கைது
    • 4 பேர் மீது வழக்கு

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கல்லங்குழி பகுதியில் வசித்து வருபவர் ஜெயகடாட்சன் (வயது 50). அந்த பகுதியில் தொழில் செய்து வருகிறார் இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அருள்ராஜ் (45). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வருகிறார்.

    பெருஞ்சகோணம் பகுதியை சேர்ந்தவர் பேலிஸ் (54). இவருடைய மனைவி வசந்தா, மகன் அனிஷ், உறவினர் செல்லத்துரை ஆகியோருக்கும் ஜெயகடாட்சனுக்கும் பாதை தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெயகடாட்சன் அந்த பகுதியில் வரும்போது பேலிஸ் அவரை வழிமறித்து தகராறு செய்தார் இதில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இவருக்கு ஆதரவாக அருள்ராஜ் சென்று சமதானம் செய்ய சென்றார்.

    இதில் பேலிஸ் மனைவி மகன் உறவினர் சேர்ந்து தாக்கியதில் அருள்ராஜ் பலத்த காயம் ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயகடாட்சன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து பேலிசின் மனைவி வசந்தாவை கைது செய்தனர் பேலிஸ் மகன் அனிஷ், உறவினர் செல்லத்துரை தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் தேடி வருகிறார்கள்.

    • பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

    கன்னியாகுமரி:

    திருவட்டார் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற தலைவர் பெனிலா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் மகாராஜன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜ், கவுன்சிலர்கள் சுவாமிதாஸ், றாபி, ஸ்டாலின் ஜோஸ், ராஜம்மாள், புஷ்பம், ஜெஸ்டின் ராஜ், ராஜேந்திரன், பரமேஷ்வரி, உஷாகுமாரி, ராஜிலா, சுரேஷ், மணிகண்டன், செல்வி, சிந்து, லில்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைப்பது என்றும், திருவட்டார் காவல் நிலையம் அருகில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி புதியதாக அமைப்பது என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், விவசாய நிலங்கள் வளம் பெற பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள குளம், ஏரிகளை உடனே தூர் வாரி விவசாயிகள் பயன் பெறும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சகோதரர் மகளை அவதூறாக பேசியதால் நண்பரை தாக்கி கொலை செய்தேன்
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

    இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்பு பிஸ்வாஷ் (வயது 28), அனில் பார்மன் (22) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் வேலை பார்த்து வந்தனர். இதற்காக 5 பேரும் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி வசித்து வருகின்றனர்.

    நேற்று பணிமுடிந்து அறைக்கு வந்த 5 பேரும் ஒன்றாக மது அருந்தி உள்ள னர். அப்போது சோம்பு பிஸ்வாஷ், அனில்பார்மன் இடையே தகராறு ஏற் பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அனில்பார்மன் பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதில் சோம்பு பிஸ்வாஷ் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்த தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சோம்பு பிஸ்வாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது உறவினர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து வர 3 நாட்கள் ஆகலாம் என்பதால் பிரேத பரி சோதனைக்கு பிறகு சோம்பு பிஸ்வாஷ் உடல் அங்கேயே வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் தப்பி ஒடிய அனில் பார்மனை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான கார ணம் குறித்து அவர் போலீ சாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், மது அருந்திக் கொண்டிருக்கும் போது சோம்பு பிஸ்வாஷ் குடி போதையில், எனது சகோதரர் மகள் பற்றி அவதூறாக பேசினார். இதனை நான் கண்டித்தேன்.

    ஆனால் அவர் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினேன். இதில் சோம்பு பிஸ்வாஷ் இறந்து விட்டார் என குறிப்பிட்டு உள்ளார்.

    • பெண்களை அவதூறாக பேசியதால் சக தொழிலாளி ஆத்திரம்
    • தலைமறைவான கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

    இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார் கள். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்போ (வயது 28), அனில் பர்மன் (22) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் அங்கேயே உள்ள அறை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இவர்கள் 5 பேரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்ப டுகிறது. பின்னர் சோம்போ, அனில்பர்மன் இருவரும் குடிபோதையில் இருந்தபோது அவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சோம்போ, அனில்பர் மனின் உறவினர் களை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. பெண்களை இழிவாக பேசியதால் ஆத்திரமடைந்த அனில்பர்மன் அங்கிருந்த பாட்டிலால் சோம்போவை தாக்கினார்.பின்னர் அந்த பகுதியில் கிடந்த இரும்பு கம்பியா லும் அடித்தார். இதில் சோம்போ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சோம்போ உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அனில் பர்மனை கைது செய்தனர்.

    கைது செய்யப் பட்ட அவரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தென் தாமரைகுளம் அருகே மணக்குடி பகுதியில் இதே போல் ஒரே அறையில் தங்கி இருந்த வட மாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளி அங்கிருந்து தலைமறைவானார். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் திருவட்டார் பகுதியில் வட மாநில தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டது
    • திருவிழா நிறைவு பெற்றது

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற திருக்கோவில்களில் மிகவும் முக்கியமான கோவில்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் இந்த கோவிலில் கடந்த ஆறு நாட்களாக நடந்து வந்த சிறப்புத்திருவிழா நேற்று சுவாமி ஆராட்டுடன் நிறைவடைந்தது.

    108 வைணவத்திருப் பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 22 நீள கடுசர்க்கரை யோக படிமத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    பல ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 6-ந்தேதி கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. அத்துடன் அருகில் உள்ள சாஸ்தா சன்னதி, குலசேகரப்பெருமாள் சன்னதியிலும் கும்பாபி ஷேகம் நடந்தது. கும்பாபி ஷேகத்துக்குப் பின்னர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி புதியதாக தங்கக்கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று மாலை ஆறுநாள் திருவிழாவுக்காக கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் சுவாமி நாற்காலி வாகனம், அனந்த வாகனம், கமலவாகனம், பல்லக்கு வாகனம் ஆகியவற்றில் பவனி வருதல் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன் தினம் கோவில் வெளியே அரச மரம் அருகில் சாமி பள்ளி வேட்டைக்குச்செல்லும் நிகழ்வு நடந்தது.

    நேற்று கோவில் ஆராட்டு விழாவுக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை வழக்கமான பூஜைகள் நடந்தது. மதியம் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் மேற்குவாசல் வழியாக பக்தர்கள் புடை சூழ பறளியாறு பாயும் கிழக்குக்கடவிற்கு ஆராட்டுக்கு எழுந்தருளினார்.

    திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் வாகனத்தின் முன் சென்றார். அப்போது வானம் இருண்டு மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாகனத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் பறளியாற்றில் ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆறாட்டு, நிவேத்யம், தீபாரா தனையைத் தொடர்ந்து சுவாமி கோவிலுக்குத் திரும்புதல் நிகழ்ச்சி நடை பெற்றது.

    திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப் பட்டது. மதியம் அன்ன தானம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • ரப்பர் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டார்.
    • கால்தவறி ஆற்றுக்குள் விழுந்தார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள செங்கோடி ஊர டியைச் சேர்ந்தவர் அருள் தாஸ் (வயது 38), ரப்பர் தோட்ட தொழிலாளி.

    நேற்று மாலை இவர் ரப்பர் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டார். இதற்காக மாத்தூர் தொட்டிப்பாலம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் கால்தவறி ஆற்றுக்குள் விழுந்தார். அவரை சக தொழிலாளர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கி அருள்தாஸ் இறந்து விட்டார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×