என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.பி.உதயகுமார்"

    • தமிழக மக்களுக்காக உருவாக்கி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி இந்த ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இருக்கிறது.
    • தமிழகத்திலே பாலாறு, தேனாறு ஓடும் என்று சொன்ன ஸ்டாலினே உங்கள் ஆட்சியிலே இன்றைக்கு சாராய ஆறு தான் ஓடுகிறது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் ஒரு சரித்திரம் படைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி கூட்டணியை எடப்பாடியார் என்கிற ஒரு சாமானியர் அமர்த்தியுள்ளார். இதைக் கண்டு நடுநடுங்கி போயிருக்கிறது ஆளும் தி.மு.க. அரசு. தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு எள்முனை அளவும் சேவை செய்யாத காரணத்தினாலே, தங்களுடைய அதிகார துஷ்பிரேகத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சியை தொடரலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த ஸ்டாலினுக்கு தற்போது தலையில் இடி விழுந்தது போல உள்ளது.

    இந்த அறிவிப்பை இன்றைக்கு நாடு முழுவதும் வரவேற்றுக் கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் கையில் இருக்கிற உளவுத்துறை கொடுத்திருக்கிற அறிக்கை இனி தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது என்கிற அந்த நடுக்கத்தில், அச்சத்திலே உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிற ஸ்டாலினின் அறிக்கையை யாரும் பொருட்படுத்த தயாராக இல்லை.

     அ.தி.மு.க. தலைமையிலான வெற்றி கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல், எடப்பாடி யாரை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் நெஞ்சடைத்து போய், வாயடைத்து போய் உள்ளனர். தமிழக மக்களுக்காக உருவாக்கி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி இந்த ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இருக்கிறது.

    அ.தி.மு.க. தலைமையில் உருவாகி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி மூலமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் இந்திய திருநாட்டில் தலை குனிந்து நிற்பதை பட்டியிலிட்டு உள்ளார். டாஸ்மாக் ரூ.39 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றது என்றும் சொன்னார். தமிழகத்திலே பாலாறு, தேனாறு ஓடும் என்று சொன்ன ஸ்டாலினே உங்கள் ஆட்சியிலே இன்றைக்கு சாராய ஆறு தான் ஓடுகிறது.

    பாரத பிரதமர் இங்கே பாம்பன் பாலத்தை திறக்க வருகிற போது மூன்று மடங்கு நிதி கொடுத்திருக்கிறோம் என்று சொல்லுகிறார். ஆனால் பணமே வரவில்லை என்று 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூட நிதி தராமல் நீலிக் கண்ணீர் வடித்து வருகிறார் ஸ்டாலின்.


    நிச்சயம் அ.தி.மு.க. சட்ட சபையில் ஆளுகிற வரிசையில் உட்கார்ந்து எடப்பாடியார் முதலமைச்சராக இருந்து இந்த நாட்டு மக்களுக்கு திட்டங்களை வழங்குகிற அந்த நாள் தொலைவில் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது இடியாக இறங்கிய மின்சார கட்டண உயர்வு, தமிழ்நாட்டு மக்கள் மீது இடியாக இறங்கி இருக்கிற சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் என்று ஆயிரம் இடியை தமிழக மக்களுக்கு அவர் வாடிக்கையாக வைத்திருக்க ஸ்டாலினுக்கு இந்தக் கூட்டணி என்பது தலையில் இடியாய் விழுந்திருக்கிறது.

    இந்த கூட்டணியை குறித்து நீங்கள் தொடர்ந்து அவதூறாக பேசுகிறீர்கள் என்று சொன்னால் எடப்பாடியார் ஆணை பெற்று தமிழகம் முழுவதும் கழக அம்மா பேரவை சார்பில் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயங்க மாட்டோம். ஆகவே ஆரோக்கியமான விமர்சனம் மூலம் ஒரு கூட்டணி அமைகிறது என்று சொன்னால் அதை ஆரோக்கியமாக விமர்சிக்க வேண்டுமே தவிர, இது போன்ற அரசியல் நாகரிகம் இல்லாமல் வார்த்தைகளை பயன்படுத்துவது தமிழ் நாட்டு அரசியலுக்கு உகந்த தல்ல.

    நீங்கள் பாஜக கட்சியில் கூட்டணி அமைத்து மத்தியிலே எத்தனை அமைச்சரவைகளை பெற்றீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. உங்களுக்கு மறதி நோய் வந்திருந்தால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஆரோக்கியமான கூட்டணி, தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கிற கூட்டணி, தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்கிற கூட்டணியை எடப்பாடியாரின் தலைமையிலே அமைந்திருக்கிறது. இனி இந்த கூட்டணி வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே சரித்திரம் படைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2026 தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த அதிரடி வியூகம்
    • திமுக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் 32 ஆண்டுகாலம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியில் அமர்ந்து முத்தான பல்வேறு திட்டங்களை, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தந்தது அ.தி.மு.க.தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலதா ஆகியோரது அயராத பணியால் அ.தி.மு.க. என்ற ஆலமரம் ஆயிரம் காலத்து பயிராக மலர்ந்து உள்ளது.

    ஏழை, எளிய மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இந்த மாபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை இன்றைக்கு வலிமையோடும், பொலிவோடும் பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார். எடப்பாடயார் சாமானிய தொண்டனும் உச்ச பதவி அடையலாம் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியை சுமார் நாலரை ஆண்டு காலம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நல்லாட்சி நடத்தியவர் எடப்பாடியார்.

    வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களான அரசு பள்ளிகளில் படித்த மாணவர்க ளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவித உள் இடஒதுக்கீடு வழங்கியதுடன், ஒரே ஆண்டில் 13 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் அமைத்தும் சாதனை படைத்தார். நீர் மேலாண்மை பாதுகாக்க குடிமராமத்து உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை தந்தவர் தான் எடப்பாடியார்.

    ஆனால் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச்சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரும்பும் திட்டமான தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, மகளிருக்கு இருசக்கர வாகன திட்டம், கால்நடை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார் .

    ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க மறுத்ததுடன், தி.மு.க. அரசு மக்களாட்சி தத்துவத்தையும் மறந்து மன்னர் ஆட்சியாக தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சியை செய்து வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், போலீசார் என்று யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் அத்துமீறல்கள், வழிப்பறி கொள்ளைகள், ஆதாய கொலைகள், போதை பொருள் நடமாட்டம் என்று அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறி இருக்கிறது. இதனை மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய மக்களிடம் உள்ளது.

    எனவே தான் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியில் தொடரும் வேதனைகளையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு அம்மா பேரவை சார்பில் வீதிவீதியாக, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

    அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் திண்ணைப் பிரசா ரம் நடந்து வருகிறது. இது வரை 5 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை 6-வது வாரமாக 82 பகுதியிலும் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்கிறார்கள்.

    வியாபாரிகள் பொதுமக்களும் எங்களின் துண்டுப் பிரசுரங்களை ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இந்த திண்ணை பிரசாரம் நடக்கும். ஒவ்வொரு வார மும் வேறு மாதிரியான துண்டு பிரசுரங்கள் அச்ச டிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கி வழங்கப்படுகிறது.

    வருகிற 2026 பொது தேர்தலில் மக்கள் அ.தி.மு.கவை மீண்டும் தமிழக ஆட்சி அரியணையில் ஏற்று வார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடியார் மக்களின் முதலமைச்சராக பதவியேற்பார். அப்போது தி.மு.க. அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் அனைத்தும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடை இன்றி கிடைக்கும்.

    வரிச்சுமையும் மக்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படும். எனவே இந்த மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட அம்மா பேரவை நடத்தி வரும் திண்ணை பிரசாரம் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
    • கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராம த்தில் கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகள் இடிந்து தவிக்கும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாத்தங்குடி கிராமத்தில் மழையால் வீடுகளை இழந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு. காய்கறி மற்றும் நிவாரண நிதியை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் கூறினார்.

    இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சுகுமார், சாமிநாதன், பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சமத்துவ சமுதாய திருமண விழாவில் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்க வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார்.
    • அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடந்தது.

    மதுரை

    ஜெயலலிதா பேரவையின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், வருகிற பிப்ரவரி 23-ந் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவில் 51 ஏழை, எளிய மணமக்களின் சமத்துவ சமுதாய திரும ணத்தை முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமணத்திற்கான முகூர்த்தக்கால் நடும் பணி டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் காலை 10 மணி அளவில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, இசக்கி சுப்பையா, ராஜலட்சுமி, அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், வி.வி.ராஜன் செல்லப்பா, சின்னதுரை, சுதா பரமசிவம், மாவட்ட செயலாளர்கள் எஸ்.பி.சண்முகநாதன், குட்டியப்பா எம்.எல்.ஏ., செந்தில்நாதன் எம்.எல்.ஏ, எம்.ஏ.முனியசாமி, ரவிச்சந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்.

    மகளிர் இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, தமிழரசன், மாநில பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், சதன் பிரபாகரன், வெற்றிவேல், சினிமா தயாரிப்பாளர் ஜி.என்.அன்புசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

    எல்லோரும் சமம் என்பதன் அடிப்படையில், தனது மகள் திருமணத்தை ஆர்.பி. உதயகுமார் ஏழை-எளிய மணமக்களுடன் சேர்த்து நடத்துகிறார். இந்த திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

    ஏற்கனவே அம்மா பேரவையின் சார்பில் 80 திருமணங்கள் நடந்தன.அதனைத் தொடர்ந்து 120 திருமணங்கள் நடை பெற்றன. தற்போது நடைபெறும் திருமணம் சமத்துவ சமுதாய திருமணமாகும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார்.

    அதற்கு முன்னதாக இந்த திருமணவிழா ஒரு முத்தாய்ப்பாக அமையும். இந்த திருமணத்தில் பொது மக்கள் அனைவரும் உற்சா கமாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசின் ஒரே சாதனை உதயநிதி அமைச்சராவது தான் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • விலைவாசி உயர்வினால், மக்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிட்டது.

    மதுரை

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் விலைவாசிஉயர்வை கண்டித்து, உசிலம்பட்டியில் அதி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கடுமையான 150 சதவீத சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலைவாசி உயர்வினால், மக்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிட்டது. மக்களை வாழவைக்க, பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மதுரை மாவட்டத்தில் 18 கால மாத கால ஆட்சியில் செய்த ஒரு மகத்தான சாதனை என்றால், ஸ்டாலின் தனது தந்தை பெயரில் நூலகம் அமைத்தது தான். எந்த திட்டங்களும் மதுரைக்கு செய்யவில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் பல கோடி ரூபாயை நூலகத்திற்காக காட்டும் அக்கறை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    சொத்து வரி உயர்வை கேட்டால், இன்றைக்கு சொத்தை விற்றுதான் கட்ட முடியும். அந்த அளவில் சொத்துவரி கட்டணம் உள்ளது. தமிழகத்தில் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளது. கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் துறைதோறும் விருதுகளை பெற்று சாதனை படைத்தோம்.ஆனால் இன்றைக்கு துறைதோறும் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு நிர்வாகம் ஸ்த ம்பித்துள்ளது.

    58 கால்வாய் திட்டம் என்பது, 40 ஆண்டு கனவு திட்டம் ஆகும். இந்தப் பகுதியில் தண்ணீரை திறந்து மக்களின் கண்ணீரை நாம் துடைத்தோம். ஆனால் அதற்கு எல்லோரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.இதற்கு உரிமை உள்ளவர்கள் நாங்கள் தான். இன்றைக்கு இந்த நீர் திறக்கவே போராடி திறக்க வேண்டிய நிலையில் உள்ளது.

    18 மாத தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை என்றால், தனது மகன் உதயநிதியை அமைச்சராக்குவது தான், வேறு எந்த சாதனை செய்யவில்லை.இன்றைக்கு மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது இது எதிர்த்து போராடும் நிலையில் உள்ளது. ஊர் எங்கும் ஒரே பேச்சு என்றால், எப்போது எடப்பாடியார் தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பேற்பார் என்பதுதான், அந்த நாள் மக்களுக்கு பொன்னாள் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமியை நாகரீகமற்ற முறையில் பேசுவதா? என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 51 ஜோடிகளின் திருமண அழைப்பிதழை வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதன் முதலில் புரட்சித்தலைவி அம்மா ரூ.100 பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.அதனை தொடர்ந்து பொங்கலுக்கு கரும்பை அம்மா வழங்கினார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு, கரும்பு ஆகியவற்றை வழங்கினார்.

    2021-ம் ஆண்டில் ரூ.2500 பொங்கல் பரிசு மற்றும் அரிசி, சர்க்கரை, கிஸ்மிஸ், முந்திரி ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்கினார். அத்துடன் வேட்டி, சேலையும் வழங்கினார்.

    பொங்கல் பரிசு என்பது மக்களுக்கு வாழ்வாதார திட்டமாகும். ஒரு கோடியே 86 லட்சம் பேருக்கு வேட்டிகளும், ஒரு கோடியே 86 லட்சம் பெண்களுக்கு சேலைகளும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    பொங்கல் தொகுப்பின் மூலம் நெசவாளர்களும் பயன் பெறுவார்கள், மக்களும் பயன்பெறுவார்கள். அதே போல் கரும்பு வழங்கும்போது விவசாயிகளும் பயன்பெறுவார்கள், மக்களும் பயன் பெறுவார்கள்.

    இந்த பொங்கல் தொகுப்பில் வேட்டி-சேலை திட்டத்தையும், கரும்பையும் இதில் அறிவிக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு வெளி மார்க்கெட்டில் போதுமான விலை அவர்களுக்கு கிடைக்காது.

    முதல்-அமைச்சர் அறிவிக்காதது கரும்பு விவசாயிகள் மத்தியில் இன்றைக்கு கண்ணீரை வரவழைத்து உள்ளது. அதேபோல் ஆயிரம் ரூபாய் முதல்வர் அறிவித்திருப்பது, யானைபசிக்கு சோ ளப்பொரி போன்றதாகும். அதேபோல் பொங்கல் தொகுப்பில் கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருள்கள் அனைத்தும் கொடுப்பது மரபு ஆகும் பொங்கல் பொருட்களை குறைத்து விட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மக்களின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இந்த அரசு ஆதரவு அளிக்கவில்லை என்பது போல் உள்ளது.

    இன்றைக்கு அம்மாவால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தான் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

    சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த இயக்கத்தை ஏழை, எளிய மக்களுக்காக புரட்சித்தலைவர் உருவாக்கினார். இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா நினைத்தார்கள்.

    அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.அதற்காக ஏச்சுகளையும், பேச்சுக்களையும், அவதூறுகளையும் சுமந்து தான் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்.

    இந்த இயக்கத்தில் ஒன்னரை கோடி தொண்டர்களும் அவருக்கு பின்னால் தான் உள்ளார்கள். இதை பொறுக்க முடியாத சில பேர் இயலாமையால், விரக்தியால் வெளியேறி நாகரிமற்ற பேச்சை பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
    • குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னு ரிமை வழங்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இந்த 18 மாத காலத்திலே எத்தனை பேர்களுக்கு வேலைகள் வழங்கி இருக்கிறது. 74 லட்சம் பேர் அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

    கடந்து சில மாதங்க ளுக்கு முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கு இது வரை இல்லாத வகை யில் 21, 85,328 பேர் விண்ணப்பித்தி ருக்கிறார்கள். அப்படி எதிர்பார்த்து காத்திருக்கிற பலருக்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய குரூப்-2, குரூப்- 3 பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாததும், குரூப்-4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரி விக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    குரூப்-1 தேர்வில் எத்தனை காலி இடங்கள் என்ற விவ ரங்கள் இல்லாததும் இளை ஞர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் 5.50 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் என்று சொன்னது கானல் நீராகத்தான் உள்ளது. எனவே கடந்த 18 மாதத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • 50 ஜோடி ஏழை-எளிய மணமக்களுடன் தனது மகள் திருமணத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடத்துகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி நாளை நடத்தி வைக்கிறார்

    மதுரை

    50 ஏழை எளிய திருமண ஜோடியுடன் தனது மகள் திருமணத்தையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நாளை நடத்துகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    தமிழக அமைச்சரவையில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றியவர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இவர், அ.தி.மு.க.வின் மாணவர் அணி, எம் .ஜி.ஆர். இளைஞர் அணி, இளைஞர்-இளம்பெண் பாசறை, அம்மா பேரவை உள்ளிட்ட அணிகளின் தலைமை பொறுப்பை வகித்து ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர்.

    தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், திரு மங்கலம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கட்சி பொறுப்பில் அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்து வருகிறார்.

    அமைச்சராக இருந்தபோது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் கடந்த 2016-ம் ஆண்டு 80 ஜோடிகளுக்கும், 2018-ம் ஆண்டு 120 ஜோடிகளுக்கும் ஏராளமான சீர்வரிசைகளுடன் ஜெயலலிதா தலைமையில் திருமணத்தை நடத்தி காட்டியவர் உதயகுமார் எம்.எல்.ஏ.

    தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு பொன்விழா கொண்டா ட்டத்தையொட்டி 51 ஜோடி களுக்கு எளிமையான முறையில் திருமணங்களை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் நாளை(23ந்தேதி) காலை நடைபெறு கிறது. இந்த திருமணத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி- முரளி ஆகியோரின் திருமணமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 50 ஏழை எளிய ஜோடிகளுடன் தனது இல்ல திருமணத்தையும் ஆர்.பி. உதயகுமார் நடத்துகிறார்.இதற்காக திருமண புடவைகள், வேட்டிகள், தங்கத்தாலி மற்றும் சீர்வரிசைகளும் தயாராக உள்ளன.

    இந்த திருமணங்களை நடத்தி வைக்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகிறார். காலை 10 மணி அளவில் திருமணம் நடைபெறும் ஜெயலலிதா கோயில் திடலுக்கு வரும் அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மதியம் 1 மணி அளவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்று விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி அவரை வரவேற்க திருமங்கலம் முதல் டி.குன்னத்தூர் வரை அ.தி.மு.க.வினர் சாலையின் இரு புறங்களிலும் கொடி, தோரணங்களை கட்டி வரவேற்பு ஏற்பாடுகளை செய்துவியிலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவு கூடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்நின்று கவனித்து வருகிறார்.

    முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு பிரியதர்ஷினி- முரளி ஆகியோரது திருமண வரவேற்பு நடைபெறுகிறது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், நாளை காலை நடைபெறும் திருமண விழாவிலும் தங்கள் வீட்டு திருமண நிகழ்வாக கருதி அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

    • வைகை ஆற்றில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

    மதுரை

    மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் 3-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பார்வையற்றோ ருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில் நடைபெற்றது.

    அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலா ளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    வைகை நதிக்கரையில் கள்ளழகர் ஆற்றிலே இறங்கி மக்களுக்கு அருளாசி வழங்கிய நிகழ்வு மதுரை யிலே சீரும் சிறப்போடும் நடைபெற்றது. இந்த நிகழ்விலே பல்வேறு பாது காப்பு நடவடிக்கைக ளையும் தாண்டி துரதிஷ்ட வசமாக 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த ஒரு சம்பவம் நடந்தது வருந்தத்தக்கது. இதில் ஒருவர் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார். எனவே இவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    2 ஆண்டுகளில் தி.மு.க. சாதனை செய்ததாக முதல் -அமைச்சர் ஸ்டாலின் பறைசாற்றி கொள்கிறார்.ஆனால் இதிலே நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த 2 ஆண்டுகளிலே தி.மு.க. அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம்.இன்றைய தி.மு.க. அரசு வெற்றி பெற்றது 30 சதவீதம் என்றால், தோல்வி பெற்றது 70 சதவீதமாக உள்ளது.

    எம்.ஜி.ஆர். 5-வது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்திக் காட்டினார். அவருடைய வழியில் ஜெயலலிதா வெற்றி மாநாட்டை நடத்தினார். உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில் நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற சித்தரை திருவிழா அதேபோன்று மதுரையிலே ஆகஸ்ட் 20-ந் தேதி நடை பெறும். அ.தி.மு.க. மாநாடு இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளசாராயம் விற்றவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கலாமா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் அன்ன தானம், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள், புதிய உறுப்பினர் சேர்க்கைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    69 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடி யார் பெற்று கொடுத்தார்கள். அது போன்று தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அம்மாவின் அரசாகும்.

    முதல் முதலாக பச்சை தமிழராக ஒரு முதலமைச்சர் வாடி வாசலுக்கு நேரடியாக வந்து துள்ளி வருகிற காளையை அங்கே வணங்கி பச்சைக்கொடி அசைத்து அதை தொடங்கி வைத்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு.

    அ.தி.மு.க.விற்கு 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கிற அந்த பணியையும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மதுரையிலே உலகமே திரும்பிப் பார்க்கிற அந்த பொன்விழா வெற்றி மாநாட்டை நடத்துகிற அந்த வரலாற்று பெருமை எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கிறது.

    கள்ளச்சாராயம் என்பது இந்தியாவிலே எங்கும் இல்லாத நிலையில் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஒரு அவலம் உள்ளது.

    கள்ளசாரயம் விற்பனை செய்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப் பட்டிருக்கிற அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அப்படி கொடுப்பது முறையான நிர்வாகமா?.

    நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

    மதுரை

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்காக மக்களை குடும்பம், குடும்பமாக பங்கேற்கும் வண்ணம் அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்று வழங்கியும், மாநாடு லோகோ ஸ்டிக்கரை இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டி அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி கே.கே. நகர் பூங்கா அருகே நடைபெற்றது.

    மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கரை ஒட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநாடுக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை வெற்றிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதய குமார் கூறியதாவது:-

    எடப்பாடியார் தலைமை யில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டிற்கு, தமிழகம் மட்டுமல்லாது, இந்திய தேசம் மட்டுமல்ல, உலக மக்களே கவனத்துடன் எதிர்கொண்டு வருகி றார்கள். இதனை தொடர்ந்து அம்மா பேரவை யின் சார்பில் ஒரு லட்சம் குடும்பங்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லம் தோறும் இலை மலர மரக்கன்று வழங்கப்பட்டு வருகிறது.

    மாநாட்டு விழிப்பு ணர்வுக்காக 2 சக்கர வாகனங்களில் மாநாட்டு லோகோ கொண்ட ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு வருகிறது.தி.மு.க. அரசு விலைவாசி உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    சொத்து வரி உயர்வில் கின்னஸ் சாதனை படைத் துள்ளது. பால் விலை உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    இந்த சர்வதாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகத்தை மீட்டெக்கும் வகையில் மாநாடு அமையும். நாள் தோறும் எடப்பாடியார் தி.மு.க. அரசின் செயல் பாடுகளை தோலுரித்துக் காட்டிவருகிறார். ஆனால் முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு பொய் சொல்வதில் கின்னஸ் சாதனையை அரசு படைத்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் கின்னஸ் சாதனை என்று கூறுகிறார்கள்.

    ஆனால் இன்றைக்கு பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு அமையும்.மாநாட்டில் எத்தனை லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு சுடசுட உணவு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் ஆணையிட்டு உள்ளார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியாரை கோட்டைக்கும், ஸ்டாலினை வீட்டுக்கும் அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்க்கட்சி தொகுதியை புறக்கணித்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

    மதுரை

    பேரறிஞர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

    அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த ஸ்டாலின். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று கூறுகிறார்.

    இன்றைக்கு 28 மாத

    தி.மு.க. ஆட்சியில் 150 சதவீதம் சொத்து வரி உயர்ந்துவிட்டது. மின் கட்டணம் உயர்ந்து விட்டது, பால் விலை உயர்ந்துவிட்டது நெய் விலை எட்டு முறை உயர்ந்து விட்டது, வேட்டி முதல் காலணி வரை உள்ள அனைத்து பொருள்களும் 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் சேலம், கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் பஸ் போர்ட் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதில் திருமங்க லத்தில் பாஸ்போர்ட் அமைத்திட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த திட்டத்தை காணோம்., அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் ஒதுக்க் பட்டு நிதி ஒதுக்கப்பட்டது அந்த திட்டமும் காணோம்.

    அதே போல் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்ட பணியை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை யும் காணோம். அதேபோல் இந்த செக்கா னூரணி பகுதியில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்ய செய்யப்பட்டு வருகிறது.ஆனால் மக்கள் எதிர்ப்பை மீறி மின் மயானத்தை கொண்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து மக்கள் இதற்காக போராடி வருகிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.இது போன்ற மக்கள் பிரச்சி னையில் எதிர்க்கட்சி தொகு திகளை புறக்கணித்தால் மக்களின் பிரச்சினைக்காக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். மக்களுக்காக தான் பதவி, பதவிக்காக மக்கள் அல்ல.

    99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த கூட்டத் தின் வாயிலாக சவால் விடுகிறேன். மக்கள் மத்தியில் இது குறித்து விவாதிப்போம். அப்படி மக்கள் 99 சதவீத வாக்குறுதி நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறினால் நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×