என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223931"
- தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் திருவத்தூர் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 56), நெசவு தொழிலாளி ஒரு வருடத்திற்கு முன்பு கொரானாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும் பட்டு நெசவு தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மனோகரன் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் நேற்று காலை நெசவு கூடத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து இறந்தவரின் மகன் சிவகுமார் செய்யார் போலீசில் நேற்று புகார் செய்தார்.போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புதுவை பாக்கமுடையான் பட்டு ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 1½ மாதமாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
- இவருக்கு திருமணமாகி அவரது மனைவி விவகா ரத்து பெற்று சென்று விட்டதாக தெரிகிறது
புதுச்சேரி:
தனியார் விடுதி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது34). இவர் புதுவை பாக்கமுடையான் பட்டு ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 1½ மாதமாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி அவரது மனைவி விவகா ரத்து பெற்று சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன வருத்தத்தில் அலெக்ஸ் மது குடிக்க தொடங்கினார். தனது மன வேதனையை அவ்வப்போது அவருக்கு தெரிந்த நண்பரான லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த பவித்ரன் என்பவரிடம் போனில் அடிக்கடி பேசி வருத்தப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் பணி முடிந்து விடுதி அறைக்கு தூங்க செல்வதாக அலெக்ஸ் மற்ற ஊழியர்களிடம் கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மற்ற ஊழியர்கள் அலெக்ஸ் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்தனர். அப்போது மின் விசிறியில் அலெக்ஸ் தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவி விவாகரத்து பெற்று சென்றதால் அலெக்ஸ் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து விடுதி மானேஜர் விக்னேஸ்வரன் கோரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அலெக்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேற்றில் தலை சிக்கிய பரிதாபம்.
- போலீசார் விசாைணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியை ேசர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 58), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் தக்கோலத்தை அடுத்தவட்டுமுடையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் புஷ்பராஜ் நிலத்திற்கு சென்று விட்டு நள்ளிரவு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
தக்கோலம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நீரேற்று நிலையம் பகுதியில் வந்த போது புஷ்பராஜ் நிலைதடுமாறி அங்குள்ள விவசாய நிலத்தில் விழுந்தார்.
அப்போது புஷ்பராஜின் தலை சேற்றில் சிக்கி மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் புஷ்பராஜை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப் ப செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி.
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த பாலு இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆண் பிள்ளைகள் பாலும் அவர் மனை சவிதாவும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவருடைய மூத்த மகள் ரஞ்சனி நாகவேடு பகுதியில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் நேற்று அதற்கான முடிவுகள் வெளிவந்தது. இதில் ரஞ்சனி கணிதம் மற்றும் சமூக அறிவியலில் தேர்ச்சி பெறவில்லை இதனால் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாமணி இறந்து போனார். இதனால் செங்குலத்தாள் தனிமையில் வசித்து வந்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி செங்குலத்தாள்(வயது73). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாமணி இறந்து போனார். இதனால் செங்குலத்தாள் தனிமையில் வசித்து வந்தார். அவரை அதே பகுதியில் வசிக்கும் இளைய மகள் லட்சுமி அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வார்.
தனிமையில் வசித்து வந்ததால் செங்குலத்தாள் மனஉளைச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செங்குலத்தாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனது கூரை வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது இளைமகள் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- மின்சாரம் தாக்கியதில் வட மாநில வாலிபர் பலியானார்.
- மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
உத்திரபிரதேச மாநிலம் மவு மாவட்டம் அடரி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஷனேகி (43). இவர் கடந்த 3 வருடமாக ஈரோட்டில் தங்கி கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று நாராய–ணன்வலசு பகுதியில் மரம் அறுக்கும் கட்டர் மிஷினில் மரகதவு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் காலணி அணியாமல் வேலை பார்த்துக்கொண்டி–ருந்தார்.
அப்போது திடீரென ராம்ஷனேகியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராம்ஷனேகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருந்துறை அருகே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
ஈரோடு சென்னப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் சங்கர் (வயது 24). இவர் தனது தந்தை இறந்த பின்பு அவர் நடத்தி வந்த பேக்கரிக்கு தேவையான மொத்த பொருட்களை விற்பனை செய்யும் கடையை கடந்த 18 வருடங்களாக பெருந்துறை-காஞ்சிகோயில் ரோடு பகுதியில் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் தனது தாய் மற்றும் அண்ணனிடம் அடிக்கடி புலம்பி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனது தாய்க்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார். மறுநாள் காலை வரை அருண்சங்கர் வீட்டிற்கு வராததால், அவரது தாய் அவருக்கு போன் செய்தபோது போன் எடுக்கவில்லை.
உடனடியாக குடும்பத்தினர் கடைக்கு வந்து பார்த்த போது கடை சட்டர் உள்புறமாக பூட்டி இருந்தது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அருண் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருண்சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவலறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு
- 4 குழந்தைகள் உள்ளனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி தேங்காய் தோப்பு வட்டம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா இவர் கட்டிட தொழிலாளி இவரது மனைவி மேனகாகாந்தி (வயது 35) இவர்களுக்கு 3 பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன.
கடந்த சில வருடங்களாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மேனகா காந்தி மனஉளைசலுக்கு ஆளானார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து மேனகா காந்தி சகோதரர் திருப்பதி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்