என் மலர்
நீங்கள் தேடியது "உறவினர்கள் மறியல்"
- பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன.
- சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
நாகர்கோவில்:
கருங்கல் அருகே உள்ள மாங்கரை தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள காட்டாற்று குளத்தில் சஜின் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் சஜினின் உறவினர்கள் இன்று காலை கருங்கல்-தொலையா வட்டம் சாலையில் மாங்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.
- உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற இவர், நெல்லை டவுன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி நேற்று அதிகாலையில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது காட்சி மண்டபம் அருகே வந்த போது ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, ஜாகீர்உசேன் பிஜிலி உடலை கைப்பற்றி விசாரணை நடததினர். இதில், ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்(34) என்பவருக்கும் இடையே தொட்டிப்பாலம் தெரு பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.
மேலும் இடப்பிரச்சினை காரணமாக, கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து ஜாகீர் உசேனை கொலை செய்தததும் தெரிய வந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் கார்த்திக், கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூருன்னிஷாவின் சகோதரர் அக்பர்ஷா ஆகியோர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதுகுறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தி, நூருன்னிஷா, கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இந்த கொலையில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நூருன்னிஷா ஆகியோரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலன், அருணாச்சாலம் உள்ளிட்டோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தலைமறைவான தம்பதியை பிடிக்க மதுரை, தென்காசி, நெல்லையின் புறநகர் பகுதிகளில் தனித்தனி குழுவாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாகீர் உசேன் பிஜிலியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இஸ்லாமிய கூட்டணி என்ற அமைப்பினை ஏற்படுத்தி மற்ற அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலினை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
- மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள் தவறான சிகிச்சை தான் வளர்மதியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.
- அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வட்டாட்சியர் ராஜராஜன், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தருமபுரி:
தருமபுரி அருகேயுள்ள பெரியாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வளர்மதி. இவருக்கு கருப்பையில் ஏற்பட்ட நோய்க்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இதையடுத்து தருமபுரி-சேலம் நேதாஜி பைபாஸ் சாலையில் மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வளர்மதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 22-ந்தேதியன்று வளர்மதிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு வளர்மதியின் மூளை செயல் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார்.
வளர்மதியை மீட்பதற்கு பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு முயற்சித்துள்ளனர்.
பல லட்ச ரூபாய் செலவழித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வளர்மதியை கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வளர்மதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதியின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு தருமபுரி வந்தனர்.
பின்னர் மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு திரண்ட அவர்கள் தவறான சிகிச்சை தான் வளர்மதியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வட்டாட்சியர் ராஜராஜன், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் மூர்த்தி (வயது 47). இவர் கடந்த 20-ந் தேதி இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது பெட்ரோல் வாசனை அடித்தது. வெளியில் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் பெட்ரோல் திருடிக் ெகாண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் ஒருவனை பிடித்தபோது அதே ஊரைச் சேர்ந்த மரியநாதன் என்பவர் மகன் ராஜா என்பது தெரிந்தது.
இது குறித்து கெடார் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த மரியநாதன், தனது மகன் ராஜாவை மூர்த்தி தாக்கிவிட்டு ஜாதியை சொல்லி திட்டியதாகவும் புகார் அளித்தார். புகாரினை பெற்ற போலீசார் மூர்த்தி மற்றும் ராஜா மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து கடும் மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா என்பவர் நேற்று இரவு அவரது ஓட்டு வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கெடார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க சூரப்பட்டு கிராமத்திற்கு வந்தனர்.
அப்போது ராஜாவின் உறவினர்கள் ராஜா தற்கொலை செய்துகொள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் வெங்கடேசன், மூர்த்தி ஆகியோர் தான் காரணம். எனவே, அவர்களை கைது செய்ய வேண்டுமென விழுப்புரம்-திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் வந்து புகார் மனு கொடுக்க அறிவுறு த்தினார். இதையடுத்து சாலை மறியலை ராஜாவின் உறவினர்கள் கைவிட்டனர். ராஜாவின் உடலை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அக்கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாவில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு
- கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை:
கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் மேக்களூர் டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.
பைக்ககள் மோதி விபத்து
நேற்று மாலை திருவண்ணாமலைக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். சோமாசிபாடி அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது இவரது பைக் மோதியது. இதில் ராஜேந்திரனுக் எதிரே வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ராஜேந்திரனை அந்த வழி யாக காரில் வந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில் காரில் வந்த வர்களுக்கும், ராஜேந்திரனுக் கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காரை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனையின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜேந்தி ரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
அப்போது பிரேத பரிசோதனை அறை அருகில் காரில் ராஜேந்திரன் உடல் இருந்ததை கண்ட அவர்கள் காரில் வந்தவர்களிடம் முன்விரோ தம் காரணமாக வேண்டும் என்றே கால தாமதமாக கொண்டுவந்து கொன்றுவிட் டதாக கூறி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
போலீசார் சம்பவ இடத் திற்கு வருவதற்குள் காரில் வந்தவர்களை அவர்கள் தாக் கியதால் பரபரப்பு ஏற்பட் டது. அப்போது வந்த போலீ சார் அவர்களை மீட்டு சிகிச் சைக்காசுமருத்து வமனையில் சேர்த்தனர். இதனிடையே ராஜேந்திரனின் உடலுடன் காரை மருதுவமனைக்கு முன்பு எடுத்து வந்து புறவழிச்சாலையில் நடு வில் நிறுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையி லான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ராஜேந்திரனில் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறினர். எழுத்து பூர்வ மாக புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்த னர்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங் கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
- வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). தம்பதியருக்கு பாண்டியன் (25), அசோக்குமார் (23) என்ற 2 மகன்களும், அபிநயா (19) என்ற மகளும் உள்ளனர்.
வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். நேற்று மதியம் 12 மணியளவில் ஆடுகளை அருகில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.
ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீட்டிற்கு தேவையான விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வளர்மதி காதில் அணிந்திருந்த 1/2 பவுன் நகைக்காக அவரது காதை கத்தியால் அறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி அங்கிருந்து தப்பி ஓடினார்.
வளர்மதியை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அவரை மடக்கி கழுத்து அறுத்து கொலை செய்தனர்.
ரத்த வெள்ளத்தில் வளர்மதி பிணமாக கிடந்தார். மாலை 4 மணிக்கு அந்த வழியாக சென்ற மலர் என்ற பெண் வளர்மதியின் பிணத்தைப் பார்த்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இதுகுறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த குடியாத்தம் டிஎஸ்பி பொறுப்பு இருதயராஜ் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சாரா சம்பவ இடத்திலிருந்து சாத்கர் கிராமம் கீழ் ரோடு வழியாக கானாற்றில் உள்ள கிணறு வரை 2 கிலோமீட்டர் தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கைரேகை நிபுணர் தமிழ்மணி, தடவியல் நிபுணர் சேதுராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வளர்மதியின் பிணைத்த மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வளர்மதியின் கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி வளர்மதியின் உறவினர்கள் மற்றும் சாத்கர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரும் தீபன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
தீபனின் பெற்றோர் ராஜேஸ்வரிடம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு ராஜேஸ்வரி ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.
இந்த நிலையில் தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
பின்னர் தீபனுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது டைரியில் கணவர் தீபன் 2-வது திருமணம் செய்து கொண்டத்தால் மன உளைச்சலில் உள்ளேன் என்று எழுதி வைத்துவிட்டு வீட்டின் அறையில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் இன்று அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் அருகே திரண்டனர்.
அரக்கோணம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ராஜேஸ்வரி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் 35, இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இவர் பட்டணத்தில் இருந்து வெண்மணி ஆத்தூ ரில் உள்ள அவரது உறவி னர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாக னத்தில் மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சென்னையில் இருந்து செஞ்சி வந்த மினி லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய மினி வேனை அடித்து நொறுக்கினர்.அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகேந்திரனை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரன் உறவினர்கள் திண்டிவனம் -திருவண்ணா மலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெகு நேரம் ஆகியும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வராததால் மகேந்திரன் உடலை ரோட்டில் ஓரமாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் திருவண்ணாமலை -திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்த வந்த ரோசனை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மகேந்திரன் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்சில் அனுப்பி வைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.மறியல் காரணமாக சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேலாக வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றது . இதுகுறித்து யோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மினி வேனின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக் குள்ளானது ெதரிய வந்தது.
- துர்கா தேவி உடல்நிலை மோசமானது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
மாதனூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி, எல். மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜய் மனைவி துர்காதேவி (வயது 26), தனியார் ஷூ கம்பெனி தொழிலாளி.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை. இதனால் நர்சுகள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது துர்கா தேவி உடல்நிலை மோசமானது. இதனால் அவர் உடனடியாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, பெண் குழந்தை பிறந்தது. இதில் துர்கா தேவிக்கு அதிகபடியான ரத்தப்போக்கு ஏற்பட்ட காரணத்தால் சேலம் மற்றும் தருமபுரி ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த துர்கா தேவியின் உறவினர்கள், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து, ஆம்பூர்-பேரணாம்பட்டு சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
- 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
- நெஞ்சு வலிப்பதாக சக பணியாளர்களிடம் கூறியுள்ளார்.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சரவண க்குமார் (வயது 29). இவர் பூனாச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல சரவணகுமார் வேலைக்கு சென்றுள்ளார்.
மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நெஞ்சு வலிப்பதாக சகப் பணியாளர்களிடம் கூறிய சரவணக்குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூனாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த போது சரவணக்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சரவணகுமாரின் பெற்றோருக்கு தனியார் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரவணகுமாரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மதியம் பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மில் முன்பு உயிரிழந்த சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் (பொ) தலைமையிலான போலீசார் சரவணகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிடப்பட்டது.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நான்கு பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
- வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் அன்பு (வயது 32). ரவுடி. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் உள்ளன.
மேலும் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடி திலீப்பின் கூட்டாளியாவார்.
இவர் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் அங்குள்ள ஜிம்முக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் தெரு சுற்றுலா வாகன பார்க்கிங் பகுதியில் வந்த போது இரு வேறு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு உயிருக்கு பயந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்திச் சென்று பார்க்கிங் பகுதியில் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் தலை, கழுத்து, கைகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது.
பின்னர் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அன்பு இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட அன்புவுக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மனைவி மற்றும் உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
மேலும் கொலை நடந்த பகுதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வெளிமாநில மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் வாகன நிறுத்தமிடமாகும்.
கொலையாளிகள் அன்புவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்வதை பார்த்து வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மேலும் அந்த வழியாக வந்த பள்ளி மாணவ மாணவிகளும் நாலா புறமும் சிதறி ஓடினர். சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அன்புவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உத்திரகுமார் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் உத்திரகுமார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.