search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223934"

    • உலக தரத்திற்கான அனைத்து இயற்கை அழகும் இருந்தும், முழுவதுமாக ரசிக்க முடியவில்லை.
    • வசதி வாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறது என்று சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    பாப்பிரெட்டி ப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளம் உலக தரத்திற்கான அனைத்து இயற்கை அழகும் இருந்தும், முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. கூடுதல் வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஒகேனக்கல் சுற்றுலாத்தலம், தென்னிந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது.

    இந்த சுற்றுலா இடத்தை காண்பதற்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலம், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பேர் தினமும் வந்து ரசித்து செல்கின்றனர்.

    இந்த ஒகேனக்கல் சுற்றுலா தலம் 2000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது.

    பெருந்தொழிற்சாலையை போல மாசுக்கட்டுப்பாடு இல்லாமல் இந்த தொழிலாளர்கள் இயற்கையை சார்ந்த வேலையை செய்து வருகின்றனர்.

    மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல், நாவிற்கு சுவையான சுட சுட மீன் சமையல் சமையல் செய்து கொடுத்தல், சுகமான சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகத்தை தரும் விசேஷ மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட பல தலைமுறை கண்ட எண்ணெய் மசாஜ் என இயற்கை சார்ந்த தொழிலை செய்து வருகின்றனர்.

    பூமியின் சொர்க்கம் சுற்றுலா தளம், மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியை பல விதத்தில் கொடுக்கக் கூடியது, அமைதியை, இயற்கையை நேசிப்ப வர்கள் விரும்புகிற வர்களுக்கு அற்புதமான இடமாக இருக்கிறது.

    ஒகேனக்கல்லில் ஒரு நதி எவ்வளவு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ? அவ்வளவு அழகையும் கொட்டி வைத்துள்ளது. எங்கும் காண முடியாத புகைப்பாறைகள், அமைதியான ஓடையாக, சிறு நதியாக, ஓங்கிய மலைகளுக்கு நடுவில், உயர்ந்த மரங்களுக்கு இடையில், உயர்ந்த பாறைகளுக்கு இடுக்கில், கொட்டி வைத்த மணல் குவியல் மீது, விளையாடும் கால்வாயாக, இமயம் போல் நிமிர்ந்து நிற்கும் மலைகளுக்கு நடுவில், பல லட்சம் தாவரங்களின் பாதுகாப்பில் இந்த காவிரி ஆற்றை நாம் ரசிக்கலாம் வேறு எந்த இடத்திலும் காணமுடியாது.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சுற்றுலாத்தலம், இன்னமும் சுற்றுலா பயணிகள் முழு அழகையும் ரசிக்க கூடிய வகையில் வசதி வாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறது என்று சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கையில்

    ஒகேனக்கல்லில் நாம் சுற்றிப் பார்ப்பதற்கு பரிசல் ஏற்பாடுகள் இருக்கிறது. அவைகளில் குறிப்பிட்ட அளவு மட்டுமே செல்லக்கூடிய நிலை உள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லை முழுவதுமாக ரசிப்பதற்கான வசதிகள் இல்லை. உயரமான கோபுரங்கள் இல்லை. தொங்கு பாலம் பாதுகாப்பு காரணம் காட்டி பயன்பாட்டில் இல்லை. பாலம் இருந்தாலும் சில மீட்டர் தூரமே செல்ல முடியும். அடிக்கடி வெள்ள பெருக்கால் பாலம் மூடப்படுகிறது. எனவே மிக உயரமாக பாதுகாப்பு மிகுந்ததாக பாலம் அமைத்தால் முழு அழகையும் ரசிக்க முடியும்.

    அதேபோல அருவி பகுதிகளை முழுவதுமாக காண்பதற்கு மறுப்பகுதியில் உள்ள கர்நாடக மாநில எல்லைக்குச் சென்று அங்கிருந்து நாம் பார்க்கும் சூழல் நிலவுகிறது. எனவே ரோப் கார் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    அப்போது முழு அழகையும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியும். இயற்கை அழகு நிறைந்த மரம் செடி கொடிகளை பார்க்க முடியவில்லை. பூமியில் மிகவும் பழமையான தெற்காசியாவில் மிகப் பழமையான கார்பனாடைட் பாறைகள் இந்த பகுதியில் மிகவும் அழகாக உள்ளது.

    அருவியில் 10 பேர் மட்டுமே குளிக்கும் நிலையிலேயே உள்ளது. கூடுதல் இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் மதம் சார்ந்த நம்பிக்கையில் இறந்தோருக்கு திதி கொடுப்பதற்கு கடவுளை வழிபடுவதற்கும் பல்லாயிரம் பொதுமக்கள் இந்த காவிரி ஆற்றுக்கு வந்து செல்கின்றனர்.

    அவர்கள் பாதுகாப்பாக சமையல் செய்து குளித்து செல்வதற்கு, பெண்கள் உடை மாற்றுவதற்கு போதிய இட வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும், சுவையானதாகவும், ஆரோக்கியம் மிகுந்த மீன்உணவு வகைகளை கொடுப்பதற்கு அங்குள்ள மீன் சமையல் செய்பவர்களுக்கு நன்றாக இட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இந்த பகுதி அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வனவிலங்குகளையும் கொண்ட உயிரியல் பூங்காக்களையும், பறவைகள் சரணாலத்தையும் இப்பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை கவருவதோடு, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவேகானந்தர்மண்டபத்துக்கு படகில் செல்ல நீண்ட வரிசையில் நின்றனர்
    • சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இaந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடு முறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயி ரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் வந்து குவிந்த னர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதி யில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணி களும் அய்யப்ப பக்தர்களும் பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.

    காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டு வந்தனர்.சுற்றுலா பயணிகளும் அய்யப்ப பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்தி ருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காம ராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள்கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாமின் திப்ருகர் வரை செல்லும்.
    • இந்த கப்பல் 3 மாடிகளை கொண்டது.

    வாரணாசி :

    உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    'கங்கா விலாஸ்' எனப்படும் சொகுசு கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த உல்லாச பயணத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல்வேறு நதிகள் வழியாக இந்த கப்பல் செல்கிறது.

    உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான பணிகளை வாரணாசி மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் மற்றும் மண்டல கமிஷனர் கவுஷல் ராஜ் சர்மா ஆகியோர் இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் கிடைக்கவில்லை. எனினும் இந்த தொடக்க விழாவுக்கான பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருவதாக உத்தரபிரதேச சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.

    வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் வங்காளதேசம் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1-ந்தேதி அடைகிறது.

    வங்காளதேசத்தில் மட்டும் 15 நாட்கள் இந்த கப்பல் பயணம் செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய 2 நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்ராவில் இந்த கப்பல் பயணம் செய்வது சிறப்பாகும்.

    50 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில் உலக பாரம்பரிய தலங்களாக அடையாளப்படுத்தப்பட்டவை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியும்.

    மேலும் சுந்தர்பன் டெல்டா மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட புகழ்பெற்ற சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்கா வழியாகவும் இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அன்டாரா மற்றும் ஜே.எம்.ராக்சி என்ற தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இயக்கும் இந்த ஆடம்பர சொகுசு கப்பலில் பல்வேறு நவீன வசதிகள் அடங்கி உள்ளன.

    குறிப்பாக, தொலைநோக்கு பார்வையுடன் தனித்துவமான வடிவமைப்புகளை கொண்டுள்ள இந்த கப்பல் 3 மாடிகளை கொண்டது. இந்த கப்பலில் 18 கேபின்கள் உள்ளன. எல்.இ.டி. டி.வி., நவீன படுக்கை வசதி, பால்கனி, உணவகம், ஸ்பா என ஏராளமான ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் ஒரு வாடகை ஆட்டோ எடுத்து மாமல்லபுரம் வந்தனர்.
    • கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர்.

    சென்னை :

    அமெரிக்கா நாட்டில் உள்ள வாஷிங்டன் நகரை சேர்ந்தவர்கள் பிரைஸ் (வயது 30), டைலர் (26). சகோதரர்களான இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் வாஷிங்டன் நகரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆண்டு தோறும் அவர்கள் வேலை செய்யும் சாப்ட்வேர் நிறுவனம் புத்தாண்டு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய ஒரு வார விடுமுறை வழங்குகிறது.

    இந்த விடுமுறை நாட்களில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் புத்தாண்டு விடுமுறை தினத்தை கழிக்க பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவார்கள்.

    இந்த நிலையில் வாஷிங்டன் நகர சகோதரர்கள் பிரைஸ், டைலர் இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை தினத்தை தமிழகத்தில் கழிக்க முடிவு செய்து சென்னை வந்தனர். பின்னர் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆட்டோ மூலம் சென்று சுற்றிபார்க்கவும், புத்தாண்டை மதுரையில் கொண்டாட முடிவு செய்தனர்.

    அமெரிக்க சகோதரர்கள் சென்னையில் ஒரு வாடகை ஆட்டோ எடுத்து மாமல்லபுரம் வந்தனர். தம்பி டைலர் ஆட்டோ ஓட்ட அண்ணன் பிரைஸ் ஆட்டோ பின் சீட்டில் அமர கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரம்மியமான இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.

    முன்னதாக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஆட்டோவில் மாமல்லபுரம் வந்த அவர்களை சுற்றுலா வழிகாட்டி சந்தோஷ் வரவேற்று, மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் சுற்றி காட்டினார்.

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை முழுவதும் சுற்றி பார்த்து மகிழ்ந்த அமெரிக்க சகோதரர்கள் பிறகு தங்கள் பயணத்தை கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர். புதுச்சேரி பயணத்தை முடித்து விட்டு வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், பிச்சாவரம், ஊட்டி, கொடைக்கானல், பூம்புகார், ஏற்காடு, கன்னியாகுமரி, மதுரை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், மதுரை, குற்றாலம், ஏலகிரி, கொள்ளிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் ஆட்டோவில் பயணிக்கும் அண்ணன்-தம்பிகளாள நாங்களே மாறி, மாறி ஆட்டோவை ஓட்டி பயணம் மேற்கொண்டு வருவதாகவும், அப்போது இயற்கை எழில்மிகுந்த காட்சிகளை பார்ப்பதற்கு வசதியாக உள்ளதாகவும், அமெரிக்காவில் உயர்தர உணவுகளை சாப்பிட்டு அலுத்துவிட்ட தங்களுக்கு, இங்கு கிராமப்புறங்களில் சாலையோர உணவகங்களில் உணவருந்தி செல்ல ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    புத்தாண்டு கொண்டாத்தை தூங்கா நகரம் மதுரையில் கொண்டாட உள்ளதாகவும், ஆட்டோ பயணம் மூலம் தமிழகத்தின் சுற்றுலா தலங்களையும், கோவில்களையும் பார்த்து ரசித்துவிட்டு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அமெரிக்க சகோதரர்கள் தெரிவித்தனர்.

    • தமிழகத்திலேயே மிகப் பெரிய அணை மேட்டூர் அைண ஆகும். இந்த அணையை பார்க்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுபோல் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடு–மு–றை– விடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக மேட்டூர், ஏற்காடு, கொல்லிமலைக்கு படையெடுக்கின்றனர்.

    சேலம்:

    தமிழகத்திலேயே மிகப் பெரிய அணை மேட்டூர் அைண ஆகும். அணையில் தண்ணீர் 120 அடி எட்டி கடல் போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அணையை சுற்றிலும் மலைகள் உள்ளது. இந்த மலைகளை ததும்பியபடி தண்ணீர் காணப்படுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    இந்த அணையை பார்க்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுபோல் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடு–மு–றை– விடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக மேட்டூர், ஏற்காடு, கொல்லிமலைக்கு படையெடுக்கின்றனர்.

    மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் கார், வேன், பஸ், இரு சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டி காணப்படுகிறது.

    ஏற்–காட்–டில் உள்ள படகு இல்–லம், ரோஜா தோட்–டம், லேடீஸ் சீட், தாவரவியல் பூங்கா, ஜென்ஸ் சீட், சேர்–வ–ரா–யன் மலைக்–கோ–வில், அண்ணா பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, மேட்டூர் அணை, மேட்டூர் பூங்கா, கொல்லிமலை தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். பூக்கள் முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அங்குள்ள ஊஞ்சல்கள், சறுக்கு விளையாட்டுகளில் விளையாடி மகிழ்ந்தனர்.

    சுற்றுலா தலங்களில் தற்போது அவ்–வப்–போது மழை பெய்–து வருவ–தால் குளிர் நில–வி– பசுமை போர்த்தியதுபோல் மேக கூட்டம் மலைகளை சூழ்ந்து காணப்படுகிறது. இத–னால் சுற்–றுலா பய–ணி–கள் சுவர்ட்–டர் அணிந்து சென்–றதை பார்க்க முடிந்–தது.

    சுற்–றுலா பய–ணி–கள் வரத்து அதி–க–ரிப்–பால் கடை–கள், ஓட்–டல்–களில் விற்–பனை படு–ஜோ–ராக நடைபெறுகிறது.

    • தீயணைக்கும் படையினர் மீட்டனர்
    • மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையானகன்னியா குமரிக்கு வரும் ஜனாதிபதி, பிரதமர், பல மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய-மாநில அமைச்சர் கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமு கர்கள் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. பொதுப்பணி துறையின் கட்டிட பிரிவு கட்டுப்பாட்டில் இந்த அரசு விருந்தினர் மாளிகை உள்ளது.

    இந்த அரசு விருந்தினர் மாளிகை முறையான பராமரிப்பு இல்லாமல், புதர்கள் நிறைந்தும், சுற்று சுவர்கள் இடிந்தும், ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் செடி, கொடிகள் வளர்ந்தும், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் குப்பை கிடங்காகவும், இரவு வேளைகளில் சமூக விரோதிகளுக்கு மது அருத்தும் கூடாரமாகவும் மாறியுள்ள பரிதாப நிலையில் காணப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் இந்த அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள முக்கிய கட்டிடத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அங்குள்ள ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் தலைமையில்தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை லாவக மாகபிடித்தனர். அந்த பாம்பு சுமார் 3 அடி நீளம் கொண்டதாக இருந்தது. மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.

    பின்னர் தீயணைக்கும் படையினர் அந்தப் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த விஷ பாம்பை பாது காப்பான காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

    • வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளது.
    • கோடியக்கரை சரணாலயம் உள்பட பல்வேறு சுற்றுலா தலம் நிறைந்த மாவட்டமாக நாகை விளங்குகிறது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் கிழக்கு எல்லையான நாகையில் புவியியல் அடிப்படையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என நாகை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது :-

    நாகை மாவட்டம், ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களும், கோடியக்கரை சரணாலயம், உள்பட பல்வேறு சுற்றுலா தலமும் நிறைந்த மாவட்டமாக நாகை மாவட்டம் விளங்குகிறது.

    இதுதவிர நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. மேலும் மீனவர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மீன் ஏற்றுமதி, உப்பு ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

    கடற்கரை நகரங்களின் மத்திய பகுதியில் நாகப்–பட்டினம் அமைந்துள்ளது. எனவே எல்லை பாது–காப்பை கணக்கில் கொண்டு விமான நிலையம் அமைத்தால் அது நாட்டிற்கே அரணாக விளங்கும் விமானப்படைக்கு ஏதுவாக இருக்கும்.

    நாகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதி என்பதால் மீட்பு பணிகளுக்கு ராணுவம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துவர வழி வகுக்கும்.

    கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள், அறந்தாங்கி வரை உள்ள மக்கள் திருச்சி விமான நிலையம் செல்வதைவிட நாகையில் விமான நிலையம் அமைந்தால் வந்து செல்வது எளிது.

    எனவே "நாகையில் விமான நிலையம் அமைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

    • குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்வது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும்.
    • குடும்ப சுற்றுலா மூலம் பல நன்மைகளை அனுபவிக்கலாம்.

    பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம்.

    அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும்.

    அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

    அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது. குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.

    குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்

    குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம். அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.

    மன அழுத்தத்தை குறைக்கும்

    பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.

    குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம்.

    உற்சாகத்தை தூண்டும்

    குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும். தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.

    • ஒருஓட்டலில் அறைஎடுத்து தங்கிஇருந்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தார்.
    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    மகாராஷ்டிரா மாநிலம் கமலா பார்க் பகர்தூர்வெஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாதவ் தேசாய். இவரது மனைவி தனுஜா தேசாய் என்ற ரோகினிமாதவ்தேசாய் (வயது57)

    இவர்தனது உறவினர்களுடன் கன்னியாகுமரிக்கு கடந்த 29-ந்தேதி சுற்றுலாவந்தார்.அவர்அங்குஉள்ள ஒருஓட்டலில் அறைஎடுத்து தங்கிஇருந்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தார்.

    இந்த நிலையில் அந்த ஓட்டலில் தங்கி இருந்த போது அவருக்கு நேற்று "திடீர்"என்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
    • கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    ஏற்காடு:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்யவில்லை.

    விடுமுறை தினமான இன்று ஏற்கட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் ஏற்காடு அண்ணா பூங்கா ,லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

    • சுற்றுலா முகவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஹோம் ஸ்டே நிறுவனங்கள், சாகச சுற்றுலா ஆபரேட்டர்கள், முகாம் ஆபரேட்டர்கள், கேரவன் டூர்- பார்க் ஆபரேட்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

    அவர்கள் www.tntourismtors.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுரை மேல வெளி வீதியில் உள்ள சுற்றுலா அலுவலகம் மற்றும் தொலைபேசி எண்: 0452-2334757 ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    • திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியவில்லை
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தின மும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி யில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலை யில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத் துடன் பயணம் செய்து விவே கானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்க ரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    ×