search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 3-ந்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 3-ந்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளதால் இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி வருகிற 7-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 1.24 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் சர்க்கரை ஆலை நேரு தொடக்கப்பள்ளி மற்றும் மங்களமேடு டி.இ.எல்.சி பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்த தாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், குறிப்பாக 1.1.2024-இல் 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் விடுமுறை நாள்களில் நடைபெறும் இம் முகாம்களை பயன் படுத்திக்கொள்ளலாம்.மாவட்டம் முழுவதும் கடந்த 25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற்ற முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,554 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 89 விண்ணப்பங்களும், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 863 விண்ணப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், இதுவரை நடைபெற்ற முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,158 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 588 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 5,247 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,23,993 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானி யத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
    • இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானி யத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிரா விடர்கள் மற்றும் பழங்கு டியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு வருகிற 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை மதுரை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கூட்டுறவு அச்சகம் மற்றும் கூட்டுறவு ஒன்றியம் ஆகிய சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந்தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்வுக்கு தகு பெற்ற விண்ணப்பதாரர்க ளிடம் இருந்து விண்ணப்பங்கள் drbmadurai.net இணையதளம் வழியாக வருகிற 1-ந்தேதி மாலை 5.45 மணி வரை சமர்பிக்கலாம்.

    இதற்கான எழுத்துத் தேர்வு டிச.24-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மதுரை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும்.

    வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீ கரிக்கப் பட்ட ஏதேனும் ஒரு பல் கலைக்கழகத்தால் வழங்கப் படும் கூட்டுறவில் முது நிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் இதற்கு விண்ணப் பிக்கலாம்.

    மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்ப வர்களும், தமிழ்நாடு கூட்டு றவு ஒன்றியத்தால் நடத்தப் படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்திய தற்கான ரசீதினை மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பின ருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எழுத்துத்தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நி மற்றும் வங்கியியல், கூட்டு றவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கி யதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்க ளுக்கானதாகவும் தேர்வுக்கான காலஅளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும்.

    வினாத்தாள் ஆங்கிலம், தமிழில் அச்சடிக்கப்பட்டி ருக்கும். எழுத்து தேர்வுக் கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப் பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப் பெண் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இன சுழற்சி முறை, தெரிவித்த முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒது க்கீடு செ ய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான காஞ்சிபுரத்தில் செயல்படும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024 ஆம் ஆண்டு 23 வது கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர புதிய பாடத்தின்படி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே 30:11.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது 044-27237699 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    திருப்பூர்:

    உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்தாண்டுக்கான நுழைவுத்தேர்வு வருகிற 2024 - 25 கல்வியாண்டுக்கு, ஜே.இ.இ., முதன்மை மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ் என இரண்டு தேர்வுகளாக நடைபெற உள்ளது. ஜனவரி 24 -ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை, ஜே.இ.இ., முதன்மை தேர்வு நடக்கிறது.

    முதன்மை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வெழுத தகுதியான மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந்தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்கள், சந்தேகங்கள் இருப்பின் அதனை 011 - 40759000 அல்லது 011 - 69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணி அனுபவம்.
    • தேர்வு செய்யப்படுபவர்களுக்கான மாத ஊதியம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் மற்றும் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஒரு கண்டிஷன். வைஷ்ண பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு கடன் சங்கங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    • மேலும் விபரங்களை விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் (vnrtrb.net) தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர் வெளியுட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட் டி ன்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர வங்கிகள், நகர கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக விருதுநகர் மாவட்ட ஆ ள் சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

    தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்ப தாரர்களிடமிருந்து vnrtrb.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற டிச.1-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கான எழுத்துத் தேர்வு டிச.24-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது.

    வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம், பல்கலை கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்ப வர்களும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்க ளில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி அஞ்சல்வழி பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ள வர்களும் இப்பணிக்கு சான்று கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பினருக் கான வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு, பட்டப் படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கணக்கியல், கணினி அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

    எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். ஒட்டுமொத்த மதிப்பெண், இட ஒதுக்கீடு, இன சுழற்சி முறை, முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் விபரங்களை விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் (vnrtrb.net) தெரிந்து கொள்ளலாம்.   

    • குடிமை வழங்கல் அதிகாரிகள் தீவிர பரிசீலனை
    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளதால் பொதுமக்களில் பலர் ஆர்வம்

    கோவை,

    கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன்கடைகள் உள்ளன. இங்கு 11.02 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. ரேஷன்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, 1200 டன் துவரம்பருப்பு, 600 டன் சர்க்கரை, 9 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டுகள் வழங்க கோரி அந்தந்த பகுதிகளில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

    மேலும் ஆன்லைன் வாயிலாகவும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இதுதவிர ரேஷன்கார்டு தாரர்களில் திருமணமான பலர் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பம் செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்கள் புதிய ரேஷன்கார்டு வழங்க க்கோரி விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து இருப்பதால் அவற்றை சரிபார்த்து ஆய்வுசெய்து பரிசீலனை செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தக வடிவில் ரேஷன்கார்டுகள் அச்சிட்டப்பட்டு தகுதியானவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.

    தமிழக அளவிலான ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் சென்னையில் மட்டுமே தயாராகி வருகிறது. தொடர்ந்து அவை மாவட்டந்தோறும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை மாவட்ட குடிமைப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் புதிய ரேஷன்கார்டுகள் கோரி இதுவரையில் 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளதால் பொதுமக்களில் பலர் ஆர்வத்துடன் புதிய கார்டுகள் வழங்க கோரி விண்ணப்பம் செய்து வருகின்றனர். அவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் தகுதியுடைய அனைவருக்கும் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு 165 வீடுகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மீனவ வீட்டு வசதி திட்டத்தில் மீனவர்க ளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார். அதை தொடர்ந்து ராமநாத புரம் மாவட்டத்திற்கு 165 வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு உறுப்பி னர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலு வலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ராமநாத புரம் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்கு நர்கள் அல்லது துணை இயக்குநர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ள லாம்.

    விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தினை அரசு வழிகாட்டு நெறி முறைகளின்படி பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவே அல்லது நேரடியாகவே 30.11.2023 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சம்மந்தப் பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி அல்லது துணை இயக்குநர் அலுவலங்களை தொடர்புகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரவித்துள்ளார்.

    • இணையதளம் வாயிலாக 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்: 

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில், பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புக்கான, பகுதி நேரம், முழு நேர பிரிவின் கீழ், சேர்க்கை விண்ணப்பம் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.

    இணையதளம் வாயிலாக 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக 1000 ரூபாய் (எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 500 ரூபாய்), இணையவழியாக செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 15ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    சேர்க்கை செயல்பாடுகள் ஜூன் 2023 பல்கலைக்கழக தரப்பில் நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், நேர்காணல் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குழந்தைகளை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மானகிரி பகுதியில் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வளனார் தத்து வள மையம் செயல்படுகிறது. இங்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் முதல் தத்தெடுப்பு கூட்டம் நடைபெற்று.

    அரசு விதிகளின்படி பதிவுபெற்ற ஒரு குடும்பத்தி னர்களில், குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்த பெற்றோருக்கு, மாவட்ட கலெக்டரால் இக்கூட்டத்தின் வாயிலாக குழந்தை வழங்கப்பட்டது.

    மேலும், சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு வயது மற்றும் ஆவணங்களுடன், வளனார் தத்து வள மையம், மானகிரி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன், வளனார் தத்து வள மைய நிர்வாகி, சகோதரி.மேரி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×