search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223986"

    • தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன.
    • மின் வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன.

    இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும். இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன.

    இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியை செலவு செய்கிறது. இதில் வீடுகளின் பங்கு மட்டும் ரூ.5,284 கோடி ஆகும்.

    மின் கட்டண சலுகையை பல பேர் தவறாக பயன் படுத்துவதை கண்டறிய வீட்டுக்கு வீடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் வாரியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அனைவரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இப்போது யார்-யார் எத்தனை வீடுகளுக்கு மானியம் பெறுகிறார்கள் என்ற விவரம் அரசின் கைவசம் உள்ளது. இதனால் எவ்வளவு பணம் வீணாகி வருகிறது என்ற விவரமும் மின் வாரியத்திடம் இருக்கிறது.

    தற்போது தமிழக மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதை சமாளிக்க அரசிடம் இருந்து மின் வாரியம் கடன் வாங்கி வருகிறது. அந்த வகையில் மின் வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் உள்ளது.

    ஆனாலும் நிலக்கரி கொள்முதல், மின் வினியோக வழித்தடம் பராமரித்தல், துணைமின் நிலையங்கள் அமைத்தல், உபகரணங்கள் வாங்குதல், ஊழியர்களின் சம்பளம் போன்றவைகளுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது.

    மின்வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்த கோரி கடந்த ஆண்டு ஜூலை 18-ந்தேதி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்த போது கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி வீடுகளுக்கு 100 யூனிட்டுக்கு மேல் ரூ.2.25 வசூலிக்கப்படுகிறது. 400 யூனிட் வரை 1 யூனிட்டுக்கு ரூ.4.60 வீதம் கணக்கிட்டு வாங்குகிறார்கள்.

    401-500 யூனிட் வரை ரூ.6-ம், 501-600 யூனிட் வரை ரூ.8-ம், 601-800 யூனிட் வரை ரூ.9-ம், 801-1000 யூனிட் வரை ரூ.10-ம் 1001 யூனிட் மேல் 1 யூனிட் ரூ.11 என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    தொழிற்சாலைகளுக்கான கட்டணம் 1 யூனிட் ரூ.6.35-ல் இருந்து ரூ.6.75 ஆக உயர்ந்தது.

    இந்த கட்டணம் உயர்த்தப்பட்ட போது மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் இனி மேல் ஆண்டு தோறும் ஜூலை 1-ந்தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டது.

    2023 ஏப்ரல் மாத நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம் இதில் எது குறைவாக உள்ளதோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பண வீக்கம் 4.70 சதவீதம் இருந்தது. இதன் அடிப்படையில் 4.70 சத வீதம் வரை உயர்த்த வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை வீடுகளுக்கு உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் குடிநீர் மோட்டார், காம்புண்டு விளக்கு போன்ற பொது பயன்பாட்டில் உள்ளவைகளுக்கு வணிக கட்டணமாக யூனிட்டுக்கு 8 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

    அடுத்த மாதம் மின் கட்டணம் அதிகரிக்கும் போது இது மேலும் 4.7 சதவீதம் அதிகமாகும்.

    அதன்படி பார்த்தால் வீட்டு பயன்பாட்டுக்கு உரிய மின் கட்டணம் யூனிட்டுக்கு 11 பைசா உயரும் என்றும் கடைகளுக்கு யூனிட் 30 பைசா உயரும் என்றும் தெரிகிறது.

    இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி கூறியதாவது:-

    மின் கட்டணத்தை ஆண்டு தோறும் உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    அதன்படி பார்த்தால் வீடுகளுக்கு யூனிட்டுக்கு 11 பைசா அதிகரிக்கும். கடைகளுக்கு 30 பைசா யூனிட்டுக்கு அதிகரிக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால்தான் மக்களுக்கு சுமை தெரியாது. இல்லையென்றால் ஒவ்வொரு ஆண்டுக்குரிய கட்டண உயர்வையும் சேர்த்துதான் வசூலிக்க வேண்டியது வரும். அப்போது பெரிய சுமையாக தெரியும்.

    எனவே இப்போது 4.70 சதவீத உயர்வு என்பது சிறிய தொகைதான். இதில் பொதுமக்களின் விமர்சனம் என்னவென்றால் 9 மாதங்களுக்கு முன்பு தானே மின் கட்டணத்தை உயர்த்தினீர்கள். அதற்குள் மறுபடியும் உயர்த்துவதா? என்று கேள்வி கேட்பார்கள் அதுதான் பிரசினை.

    எனவே ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. 2 ஆண்டுக்கு ஒருமுறை கூட உயர்த்திக் கொள்ளலாம். அது அரசின் கொள்கை முடிவை பொறுத்து அமையும். எனவே அரசு சார்பில் விரைவில் இதற்கு தெளிவான பதில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனா்.
    • வாழை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களை அதிக அளவில் பயிரிடுவது வழக்கம்.

    அவினாசி :

    சேவூா் பகுதியில் இரவு நேரத்தில் முறையற்ற முறையில் மும்முனை மின்சாரம் விநியோகத்தால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சேவூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தண்டுக்காரம்பாளையம், போத்தம்பாளையம், புலிப்பாா், தாமரைக்குளம், சாலைப்பாளையம், ராமியம்பாளையம், வையாபுரிக்கவுண்டன்புதூா், நட்டுக்கொட்டையான்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனா்.

    இந்த விவசாயிகள் வாழை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களை அதிக அளவில் பயிரிடுவது வழக்கம். இந்நிலையில், இப்பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுத்த கூடிய மும்முனை மின்சாரம் இரவு மற்றும் பகல் நேரங்களில் முறையற்று விநியோகிக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே சீரான முறையில் மின்சாரம் விநியோகிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது
    • நெல்லை மாவட்டத்தில் இடி- மின்னல் மழை, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறி யாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

    கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் நெல்லை நகர்ப்புற கோட்டம் முத்துக்குட்டி மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசியதாவது:-

    மின்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வருகிற 31-ந்தேதி கோடை காலம் முடியும் வரை தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதற்கு ஏதுவாக அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது

    நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மின்தடங்களை இரவு-பகல் பாராது உடனடியாக சரி செய்த அனைத்து மின் பொறி யாளர்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு நெறிமுறை களுடனும் பணிபுரிய வேண்டும்.

    கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடும் இடி- மின்னல் மழை பொழிவு சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணி புரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    வருகின்ற காலங்களில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் பாதையில் மின்தடங்கள் ஏற்படுத்தும் மரக்கிளைகளை அப்புறப் படுத்தவும், பீங்கான் வட்டு பதிலாக இயற்கை இடர் பாடுகளின் போது முடிந்த வரை மின் தடங்கள் ஏற்படுத்தாமல் இருக்கும் பாலிமர் வட்டு மற்றும் பாலிமர் முள் சுருள் பொருத்துவதற்கு தேவை யான மதிப்பீடு தயார் செய்து பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும்.

    மேலும் மின் நுகர் வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரி விக்க அறிவுரை வழங்கி னார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப் பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அனைத்து மின் நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சார சம்பந்தமான அனைத்து தேவைகளையும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
    • பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் மறைமலைநகர் பேரமனூர் பகுதியில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம், எம். எல். ஏ.க்கள் சுந்தர், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி,

    பாபு மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிகள் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் 16-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை புதூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    பாரதி உலா ரோடு, ஜவகர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர் சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய்ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி. ரோட்டின் ஒரு பகுதி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ரேடியோ நிலைய குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ. காலனி.

    சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு (இ.பி. குவாட்டர்ஸ் முதல் கண்ணா மருத்துவமனை வரை), ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரோஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவகர் புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு (ஐ.டிஐ. பஸ் நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை), டீன் குவாட்டர்ஸ், காமராஜர் நகர், 1,2,3,4, ஹச்சகான் ரோடு.

    கமலா முதல் மற்றும் 2-வது தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப் பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆத்திகுளம், குறிஞ்சிநகர், பாலமி குடியிருப்பு, கனக வேல்நகர், பழனிச்சாமிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    பெரியார் பஸ் நிலையம்

    மதுரை எல்லீஸ் நகர் துணைமின் நிலையத்தில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    எல்லீஸ் நகர் மெயின் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், (எம், எச், டி, ஆர்.எச். பிளாக்குகள்), குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் (ஏ முதல் எச் பிளாக்குகள்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள்.

    டி.பி. ரோடு, ெரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி. ரோடு, பைபாஸ் ரோட்டின் ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி அபார்ட் மெண்ட்ஸ், வசுதரா அபார்ட்மெண்ட்ஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட்டு வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
    • சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை அடுத்துள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது68). விவசாயியான இவர் சம்பவத்தன்று வயலுக்கு சென்றார். அப்போது கீழே அறுந்து கிடந்த மின் வயரை பெரியசாமி மிதித்ததாக தெரிகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது33). இவர் சில வருடங்களுக்கு முன்பு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது நடந்த விபத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய பாலமுருகன் மது பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவத்தன்று அவர் வீட்டின் வாசலில் மயங்கி விழுந்து படுகாயமடைந்தார். குடும்பத்தினர் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்தார். சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சசிகுமார் (வயது 50) விவசாயி.இவர் காங்கேயனூர் பகுதியிலுள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள நெல்லிற்க்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டாரை இயக்கினார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார்

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாம்பழப்பட்டு அருகே காங்கேயனூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 50) விவசாயி.இவர் அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள நெல்லிற்க்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார். அங்கு வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காளிதாஸ் என்பவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.இன்று வழக்கம் போல நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தின் மூலம் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிதாசை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இன்று வழக்கம் போல நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தின் மூலம் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிதாசை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார்.

    இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார் இன்று வழக்கம் போல நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தின் மூலம் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிதாசை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார்,
    • இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது இளவரசன் மீது மின்சாரம் தாக்கியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் இளவரசன் (வயது 25). இவர் பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார். இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது இளவரசன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் இளவரசன் மயங்கி கீழே விழுந்தார்.

    இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், இளவரசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி பலியானார்.
    • கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.புதூர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் முத்தையா (56). இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்தார். அப்போது தவறுதலாக மின்சார பெட்டியை தொட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் பீட்டர் (30). இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. எனவே அவர் சுயமாக தனக்குத்தானே ஊசி போட்டுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் பரிதாபம்
    • பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்பர் செல்வகுமார் (வயது 74).

    இவர் பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இவர் இன்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள தோப்புக்கு சென்றார். அப்போது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இந்த மின்கம்பியை அவர் மிதித்து உள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதனால் மயங்கி நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் அங்கு ஓடி வந்து அவர் கையில் இருந்த பாம்பை கைப்பற்றினர்.
    • பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்ணால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவருக்கு சமரச செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு சமர செல்விக்கு சொந்தமான இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி உள்ளார். வீட்டுக்கான மின் இணைப்பு கேட்டு 2019-ம் ஆண்டு மனு அளித்த நிலையில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

    பலமுறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி புகார் அளித்துள்ளார்.

    முருகனின் மூத்த மகள் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்து வருவதாகவும் நன்றாக படிக்கும் நிலையில் மகள் இருந்தும் படிப்பிற்கு உதவ முடியாத நிலையில் நாங்கள் இருப்பதாக வேதனையுடன் முருகன் மற்றும் மனைவி, கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.

    இந்நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறியும் கடந்த சில நாட்களாக வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் வருவதாகவும் தெரிவித்ததுடன் நேற்றைய தினம் வீட்டிற்குள் புகுந்த 3 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்புடன் சமரச செல்வி தனது மகளையும் அழைத்துக் கொண்டு இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

    இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் அங்கு ஓடி வந்து அவர் கையில் இருந்த பாம்பை கைப்பற்றினர்.

    தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவரை அழைத்து வந்து கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்ணால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    இது தொடர்பாக மின்சார துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட வீட்டுக்கு செல்வதற்கு வழிப்பாதை இல்லை. அங்கு மின்கம்பம் அமைப்பதற்கு அருகில் இருப்பவர்களிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின்கம்பம் அமைத்து மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளோம்.

    ஆனாலும் இதுவரை சான்று கிடைக்கவில்லை.இதனால் மின்சாரம் வழங்கும்பணி தாமதப்பட்டு வருகிறது என்றனர்.

    ×