search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி புன்னைந ல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    அப்போது கலெக்டர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்குசிறந்த ஒரு விற்பனை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தரும் வகையில் ஒரு இலக்குடன் உருவாக்கப்படுகிறது.

    ஏற்கனவே தஞ்சை மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து.

    கல்லணையிலும் விற்பனை அங்காடி தொடங்கப்பட்டன. இதன் மூலம் 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் 125 குழு உறுப்பினர்கள் நேரடியாகவும், மறைமுகமா கவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

    தற்போது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுயஉதவி க்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் தஞ்சை தலையாட்டி பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள், கால் மிதியடி, பொம்மை வகைகள், பைகள், மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனை க்காக வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், மகளிர் திட்ட உதவி அலுவலர் சிவா, ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் அருளானந்த சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்த 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 2 வாலிபர்களை கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குறிப்பாக பள்ளிப்பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அஜீஸ் நகரை சேர்ந்த நடராஜ் (22), நேரு மைதான பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (19) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 போதை மாத்திரைகள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • 109 கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது ஏதாவது கடையில் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கடை பூட்டி சீல் வைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக மளிகை கடை, பெட்டிக்கடைகளில் சோதனை ஏற்கனவே நடத்தப்பட்டு 109 கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் விளக்கம் அளிக்காததாலும், அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததாலும் கடைகளை பூட்டி சீல் வைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார்.

    அதன்படி இன்று தஞ்சை வடக்கு வீதியில் 2 கடைகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா ஆகியோர் மேற்பார்வையில் தாசில்தார் மணிகண்டன், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து தஞ்சை மாநகரில் 9 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சை மாநகரில் மட்டும் 11 கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் உத்தரவுபடி இன்று 109 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

    இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் கடைகளில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்று ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது.

    அதன் முடிவில் மாவட்டத்தில் 109 கடைகளில் தடையை மீறி புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதற்கு சரியான விளக்கம் இல்லாததால் இன்று அந்த 109 கடைகளையும் பூட்டி சீல் வைத்தோம்.

    தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது ஏதாவது கடையில் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கடை பூட்டி சீல் வைக்கப்படும்.

    கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் 100 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடை இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா அளித்த பேட்டியில், தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா 2.0 செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா விற்றதாக 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மாவட்டத்தில் சோதனை நடந்து வருகிறது என்றார்.

    இன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    • அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை

    நாகர்கோவில்,செப்.9-

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் மதுபா னங்கள் விற்பனை செய்ய 113 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளின் அருகில் மது அருந்துவதற்கு பார் வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.

    கடந்த ஜனவரி 1-ந்தேதி அன்று 113 டாஸ்மாக் கடைகளுக்குரிய மதுபான பார் ஏலம் விடப்பட்டதில் 53 கடைகளுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது. இதில் 25 மதுபான பார்களுக்கு மட்டுமே அரசுக்கு செலுத்த வேண்டிய ஏலத்தொகை யினை ஏலதாரர்கள் கட்டி யுள்ளனர். இந்த மதுபான பார்களிலிருந்து மட்டுமே அரசுக்கு மாதந்தோ றும் வருவாய் கிடைத்து வரு கிறது.

    இந்நிலையில் மீதமுள்ள 88 மதுபான பார்களுக்கு ஏலம் எடுக்காமல் சட்ட விரோதமாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மதுவிலக்குத் துறை, டாஸ்மாக் ஆகிய துறை சார்ந்த அதிகாரிகளின் துணையுடன் முக்கிய அரசியல் கட்சியைத் சேர்ந்த தனிநபரின் வருவாய்க்காக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை தடுத்து நிறுத்தி, தனிநபர் இந்த மதுபான பார்கள் மூலம் பயனடைந்து வருகிறார். மேலும் டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல் தர வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் டாஸ்மாக் தொழி லாளர்கள் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதனை கருத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் சம்மந்தப்பட்ட துறைகள் இதுகுறித்து ஆய்வு நடத்தி அரசுக்கு மாதந்தோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுற்கு காரணமாக இருக்கின்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட் டால் அ.தி.மு.க. சார்பில் விரைவில் டாஸ்மாக் அலுவ லகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • இக்கண்காட்ச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவி ளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார் .

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையம் உள்வளாகத்தில் "கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை" தொடங்கப்பட்டுள்ளது.

    முக்கியமான பண்டிகை களில் ஒன்றான நவராத்திரி பண்டிகை அனைவராலும், மிகவும் பக்தியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடப்படுவதாகும்.

    தமிழ்நாட்டில் இவ்விழா "நவராத்தரி" என்ற பெயரிலும் கர்நாடகத்தில் "தசரா" என்ற பெயரிலும் குஜராத்தில் "தாண்டியா" என்ற பெயரிலும்மேற்கு வங்கத்திலும் வடஇந்தி யாவின் பிறபகுதிகளிலும் "துர்கா பூஜை" என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    பூம்புகார் என்ற பெயரில் புகழ்பெற்று விளங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்தொழல்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

    இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் "கொலு பொம்மைகள் கண்காட்சி" என்றபெயரில் சிறப்பானதொரு கண்காட்சி யினை நடத்தி வருகிறது.

    இக்கண்காட்சி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை (ஞாயிறு உட்பட) தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய நடைபெற உள்ளது.

    இக்கண்காட்ச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்று கொள்ளப்படும்.

    இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

    இக்கொலு கண்காட்ச்சி யில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்ப ட்டுள்ளன.

    அந்த வகையில் கொலு ப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள், அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், அத்திவரதர் நின்ற கோலம், தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகர் செட், குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியர் செட், தர்பார் செட், மைசூர் தசரா செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூர்த்திகள் செட், கருட சேவை செட், வைகுண்டம் செட், துர்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுர்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு செட் போன்ற சிறப்பான செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் தருவிக்கப்பட்டு விற்ப னைக்கு வைக்கப்ப ட்டுள்ளன.

    சிறப்பு பொம்மைகளாக கல்கத்தா களிமண் பொம்மை கள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், டிரஷிங் டால்ஸ் போன்ற புதிய வகை பொம்மைகளும் விற்பனையில் இடம் பெற்றுள்ளன.

    எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா., தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்சரவணகுமார், பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர்சக்தி தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பறக்கை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் போலீசார் பறக்கைப் பகுதியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது பறக்கை அருகே உள்ள மாவிளை காலனி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் பறக்கை மாவிளை காலணியை சேர்ந்த அர்ஜூன் (வயது 18) என்பதும், மற்றொருவன் பறக்கை செட்டி தெருவை சேர்ந்த சத்தியா (18) என்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த 70 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது.
    • மேலும் செண்டு மல்லி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக பூக்கள் தேவை அதிகரித்து விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் வரும் 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.மேலும் கோவில்களில் தொடர்ந்து திருவிழா மற்றும் முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் பூக்களின் தேவை மேலும் அதிக ரித்துள்ளது.

    ஈரோடு பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு தினமும் அந்தியூர், சத்தியமங்கலம் ,சேலம், திண்டுக்கல், ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்து பூக்கள் வரத் ஆகி வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் ரூ.500- க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ விலை இந்த வாரம் மழை காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை பூக்களின் விலை மேலும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 2000-க்கு மேல் விற்பனையானது. மேலும் ஓணம் பண்டிகை வருவதால் இன்னும் வரும் நாட்களில் இதன் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    இதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

    முல்லை - 400, ஜாதிப்பூ - 300, ரோஜா பூ - 200, சம்மங்கி - 145, செவ்வந்தி பூ - 160, பட்டுப் பூ - 50.

    இதே போல் சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று காலை மல்லிகைப்பூ கிலோ ரூ.2400-க்கு விற்பனையானது. இங்கு இருந்து ஓணம் பண்டிகை க்காக அதிகளவு கேரளாவுக்கு மல்லிகைப்பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் செண்டு மல்லி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • 92 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரத்துக்கு காங்கேயம் இன பூச்சி வகை காளை விற்பனையானது.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 92 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் 65 மாடுகள் மொத்தம் ரூ.24 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரத்துக்கு காங்கேயம் இன பூச்சி வகை காளை விற்பனையானது. காங்கேயம் காளை என அடையாளப்படுத்தப்படும் காளை மாடுகள் இந்த பூச்சி வகையைச் சோ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ வருகை
    • பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து ரோசப்பூ வருகை

    நாகர்கோவில்:

    மலையாள மொழிபேசும் மக்கள் வாழுகின்ற இடமெல்லாம் நகரத்தை காண வரும் மாவேலி மன்னனை வரவேற்க அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சத்யா விருந்து வைத்து கொண்டாடுவது வழக்கம்.

    கேரளாவில் இன்றைக்கு 4-வது நாளாக ஓணம் கொண்டாடப்படுகிறது. அத்தப்பூ கோலம் இட பலவகை மலர்கள் தேவைப்படுவதால் கேரளா வியாபாரிகளும், பொதுமக்களும் தோவாளை சந்தையில் கூடியுள்ளனர். இன்று 100 டன்கள் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகி வருகிறது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பிச்சிபூ ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மற்ற பூக்களால் ஆன கோழிப்பூ ரூ. 70 வாடாமல்லி ரூ.200 கனகாம்பரம் ரூ.1000, முல்லை ரூ.900, சம்பங்கி ரூ.300, அரணி ரூ. 250, தாமரை ரூ. 6, கொழுந்து ரூ.120, துளசி ரூ. 30 என எல்லா பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம் மாவட்ட நாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் பிச்சி பூ, சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூவும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கம்பியூட்டர் ரோசப்பூ வாழை, செண்பகராமன்புதூர், ராஜாவூர், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து உளுந்து ,பச்சை துளசி, அருகம்புல், தாமரை, தோவாளை சந்தைக்கு வந்து மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் செல்லுகிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஓணத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இதை விட பூக்கள் வரத்து அதிகமாகவும், விலை உயர்வும் காணப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • மல்லி கிலோ ரூ.1700
    • வியாபாரிகள் குவிந்தனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. இங்கு ஆரல்வாய்மொழி, புதியம்புத்தூர், மாடன் நாடார் குடியிருப்பு, ஆவரைகுளம், குமாரபுரம், ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூவும் சங்கரன் கோவில், ராஜபாளையம், வத்தலக்குண்டு, மதுரை, மானாமதுரை, கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூவும் விற்பனைக்கு வருகிறது.

    சேலத்தில் இருந்து மஞ்சள் அரளியும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கேந்தி பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளி யங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதிகளில்இருந்து பச்சை, துளசியும் தோவாளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தாமரை, கோழிக்கொண்டை, அரளி, சம்மங்கி ஆகிய பூக்கள் சந்தைக்கு வருகிறது.

    இங்கிருந்து குமரி மாவட்டம், பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங் களுக்கு விற்பனை ஆகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வந்தது. இன்று வியாபாரிகள், பொதுமக்களும், அரசு அலுவலர்களும், தோவாளை சந்தையில் பூக்களை வாங்கி சென்றனர்.

    இன்றைக்கு பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.800, மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1700, அரளி ரூ.300, சம்பங்கி ரூ. 500 கோழிக்கொண்டை ரூ.50, பட்டர் ரோஸ் ரூ. 750, சிவப்பு கேந்தி ரூ. 55, மஞ்சள் கேந்தி ரூ.40, துளசி ரூ.30, கொழுந்து ரூ.90, பச்சை ரூ.8, முல்லை ரூ.800, கனகாம்பரம் ரூ.1600 என மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    இதுகுறித்து வியாபாரி கள் கூறும் போது விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல ஓணத்தை முன்னிட்டும் பூக்கள் விலை இதைவிட கூடும் என்றும் தெரிவித்தனர் மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 100 டன் வரை பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பூக்கள் வரத்து அதிகம் வியாபாரிகள் கூட்டத்தால் வியாபாரம் சூடு பிடித்தது.

    • மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ரகங்கள் 50 சதவீதம் மானிய விலையில் கிலோவிற்கு ரூ. 12.50-க்கு வழங்கப்படுகிறது.
    • கருடன் சம்பா ரகம் பச்சையையும் குறைவாக உள்ள அரிசி வகைகளில் ஒன்று.

    பேராவூரணி:

    சேதுபாவசத்திரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் முதன் முறையாக பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனை விவசாயிகள் வாங்கி பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சேதுவா சத்திரம் வட்டாரத்தில் உள்ள குருவிக்கரம்பை மற்றும் பெருமகளூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ராகங்கள் 50 சதவீதம் மானிய விலையில் கிலோவிற்கு ரூபாய் 12.50 க்கு வழங்கப்படுகிறது.

    மாப்பிள்ளை சம்பா 100 கிலோ, கருடன் சம்பா 100 கிலோ, கருப்பு கவுனி 200 கிலோ போன்ற ரகங்கள் இருப்பில் உள்ளது.

    தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண்மை உதவி அலுவலர் பரிந்துரையின் பேரில் வட்டார வேளாண்மை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    இதில் மாப்பிள்ளை சம்பா நீண்டகால சம்பா பருவரகம், 155 முதல் 160 நாள் வயதுடையது. இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் கொண்டது.

    சர்க்கரை நோயாளிகள், வாய் அல்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    கருப்பு கவுனி ராகம் அதிக மருத்துவ குணம் கொண்டது. 155 நாள் வயதுடையது.கருடன் சம்பா ரகம்பச்சை யையும் குறைவாகஉள்ள அரிசி வகைகளில் ஒன்று. ரத்த சோகை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்க ளுக்கு உணவாக சாப்பிட ஏற்றது. வைட்டமின், தாது க்கள் நிறைந்த அரிசி வகையாகும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து லாட்டரி தயாரித்து விற்ற கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது

    சேலம்:

    சேலம் கருப்பூர் மேட்டுப்பதி சுடுகாடு அருகே தகரக்கொட்டகை வீட்டை வாடகைக்கு எடுத்து லாட்டரி சீட்டு விற்பதாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார், நேற்று மாலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு நம்பர் லாட்டரி சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கருப்பூர் பனங்காட்டை சேர்ந்த ஏழுமலை (வயது 48), சங்ககிரி கேசவன் (35), கருப்பூர் செல்லப்பட்டி புதூர் செல்லதுரை (42) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்று வந்ததும், சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது. அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 19 ஆயிரத்து 840 ரூபாய், மடிக்கணினி, உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×